::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

27-karuna-fast.jpgகடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 85 வயதாகும் முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்து கொண்டு நலம் பெற்றார். முழு அளவில் அவரது உடல் நலம் சரியாகாவிட்டாலும் கூட அவர் தேர்தல் பிரசாரம் செய்வதில் பிடிவாதமாக இருந்து அதைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சல் அடித்தது. அத்தோடு கடுமையான முதுகு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை -கோவை காவல்துறை

koovai.jpgராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்
 
கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகள் வந்துகொண்டிருக்கும்போது, அந்த லாரிகளை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பலர் தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். இதில் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன.

ஈழத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட்டத்தினருக்குப் படித்துக் காட்டினார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சமின்றி நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள். எங்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், நம் கைக்கெட்டிய தூரத்தில், கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாது மத்திய, மாநில அரசுகள் கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித்தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றி செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான் ஒன்றைச் சொன்னால் அதைச் செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழனம் நம்புகிறது என்று ஜெயலலிதா பேசினார்.

தேர்தலுக்கு பின் ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேச மாட்டார்: திருமாவளவன்

thirmavala.jpgராஜபக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேசவே மாட்டார் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் சுற்றி வளைத்து 11/2 லட்சம் ஈழத் தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். உணவு, உடை, மருந்து மற்றும் இருப் பிடம் இல்லாமல் கொடூரமான முறையில் அல்லலுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று ஜெயலலிதா கூறியது பற்றி கேட்டதற்கு தேர்தலுக்காக எதையும் எப்படியும் பேசுவார் ஜெயலலிதா என்பதற்கு இது சான்று. தனி ஈழத்திற்கு நேர் எதிரான கொள்கைகளை உடையவர் ஜெயலலிதா. புலிகளை பயங்கரவாதிகள் என்றும் புலிகளின் தலைவர் பிரபா கரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்றும் பேசியவர் ஜெயலலிதா. தேர்தல் நேரத் தில் வாக்குசேகரிக்க தற்போது தனி ஈழம் பற்றி பேசுகிறார். புலிகளை பற்றி தற்போதைய அவர்களின் நிலை என்ன என்பது பற்றி முதலில் விளக்க வேண்டும்.

இன்றும் புலிகளை பயங்கர வாதிகள் என்று கூறுகிறாரா? போராளிகள் என்று கூறு கிறாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். ராஜ பக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெய லலிதா பேசவே மாட்டார்.எனவே ஜெயலலிதாவின் மாய் மால ஜாலங்களில் தமிழக மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறினார்.

தமிழகத்தில் தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டதற்கு தி.மு.க.வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,ஈழத்தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனக்கே எதிரான கருத்துக்களை சொல்லி வருகி றார். ஆனால் அவருடைய கூட்டணி கட்சியினர் அடிக் கடி தங்களுடைய நிலைப் பாடுகளை மாற்றி கொள்ளக் கூடியவர்கள் என்ற உண்மை மக்களுக்கு தெரிந்துள்ளதால் யாரும் நம்ப தயாராக இல்லை.எனவே இத்தகைய அவதூறு பிரசாரங்களை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிப்படை வைக்க முடியாது என்றார்.

5 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் நாளை இலங்கை வருகை

uk-london.jpgபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று நாளை திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.

இவ் இருநாள் விஜயத்தின் போது இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பல்வேறு அரசாங்க எதிர்க்கட்சித் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயம் இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

கோவையில் 5 ராணுவ லாரிகளுக்கு தீவைப்பு – வீரர்கள் மீது தாக்குதல்

கோவை அருகே, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக பரவிய தகவலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கினர். ராணுவ லாரிகளையும் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு இன்று கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். இந்த நிலையில், அந்த வாகனங்களில் இலங்கைப் படையினருக்கான ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக தகவல் பரவியது.

இதையடுத்து பெரியார் திராவிடக் கழகத்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். ராணுவ லாரிகளில் இருந்த பொருட்களை எடுத்து கீழே வீசி சேதப்படுத்தினர். சில ராணுவ வீரர்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிலர் லாரிகளுக்குத் தீவைத்தனர். இதி்ல் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன. இதையடுத்து ராணுவ வீரர்கள் லத்திகளுடன் கீழே இறங்கி தாக்குதலில் ஈடுபட்டவர்களை மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர். சரமாரியாக கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் தடிகளால் அடித்து விரட்டினர். இதில் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பகுதியே கலவரம் நடந்த பகுதி போல காணப்பட்டது. ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

ராணுவ வாகனங்களைத் தாக்கியதும், ராணுவ வீரர்களைத் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்றிக்காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது மெக்ஸிகோ

mexican.jpgபன்றிக் காய்ச்சலால், உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை மெக்ஸிகோ அரசாங்கம், 176 இல் இருந்து 101 ஆக குறைத்துள்ளது.

மெக்ஸிகோவில் ஆரம்பித்ததாக நம்பப்படும் இந்த வைரஸ் முன்னர் அஞ்சப்பட்ட அளவுக்கு ஆபத்தானது அல்ல என்பதற்கான அறிகுறிகள் வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.

இதேவேளை, உலகெங்கிலும், சுமார் 15 வெவ்வேறான நாடுகளில், மொத்தமாக இந்த நோயினால், 600 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த தலித்துகளும் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும் : திருமாவளவன்

thirmavala.jpg“ஒட்டு மொத்த தலித்களும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும்” என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

மக்களவை தேர்தலுக்கான திமுக பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடந்தது. முதல்வர் கருணாநிதி இதற்குத் தலைமை வகித்தார்.இப்பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் தொல்.திருமாவளன் பேசுகையில்,

“ஒட்டுமொத்த தலித்களுக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். ஏன் தெரியுமா? அதிமுக, தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தலித்துகள் வளர்வதிலும் அதிமுகவுக்கு விருப்பமில்லை.

எத்தனையோ தலித் அமைப்பினர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தார்கள். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. திமுக தலைவர் கலைஞரோ தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனம் உள்ளவர். அதனால்தான் தலித் அமைப்பான விடுதலை சிறுத்தைகளுக்கு 2 சீட் கொடுத்திருக்கிறார். அதனால் திமுக கூட்டணியை ஆதரியுங்கள்; அதிமுகவைப் புறக்கணியுங்கள்” என்றார்.

ஈழப்பிரச்சனை: குறும்படம் திரையிட்ட 3 பேர் கைது

தேர்தலுக்கு புறம்பாக இலங்கை படுகொலை குறித்து பொதுமக்களுக்கு குறும்படம் திரையிட்டுக்காட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூத்தியை ஆதரித்து பீர்கங்கரணை பேரூர் அதிமுக கூட்டணிகட்சியினர் சார்பில் சீனிவாசா நகரில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசின் முன் அனுமதி பெறாமல் மத்திய அரசை அவமதிக்கும் வகையில் இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது திரையிட்டு காண்பிக்கப்பட்டது.  அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், குறும்படம் திரையிட்ட சிடி மற்றும் உபகரணங்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அதிமுக பேரூர் செயலாளரும் கவுன்சிலருமான குருநேருஜி (46). பாமக தலைவர் மனோகரன்(46) படம் திரையிட்ட சவுண்ட் சர்வீஸ் பார்த்திபன் (26) ஆகியோரை கைதுசெய்தனர். இதுகுறித்து பீர்க்கங்கரணை போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஹொங்கொங் பரவியது பன்றிக் காய்ச்சல்

swine-flue.jpg மெக்ஸிகோவில் இருந்து ஹொங்கொங்குக்கு வந்த மெக்ஸிகோ நாட்டு பிரஜை ஒருவரில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் காணப்பட்டதாக, ஹொங்கொங்குக்கான தலைமை அதிகாரி டொனால்ட் சாங் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவில் 160க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான நோய்க்கிருமி என்று சந்தேகிக்கப்படும் இந்த வைரஸ், ஆசியாவுக்கு வந்த ஒருவரிலும் காணப்பட்டமை உறுதிசெய்யப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

சாங்காய் ஊடாக வந்த அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், அவர் தங்கியிருந்த விடுதி பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டுள்ளதாகவும் சாங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய தாதிக்கும் இந்த நோய் தொற்றியுள்ளதாக, ஜேர்மனி கூறுகிறது. அவர் தற்போது உடல்நிலை தேறிவருகின்றார்.