கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கையில் பால்வினைத் தொழில் : சந்தியா (யாழ்ப்பாணம்)

இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

பால்வினை தொழில் என்பது இன்று நேற்று உருவாகியதல்ல மிகப்பழமையான தொழில் என்றும் இந்தியாவில் அக்காலத்தில் பாலியல் தொழிலுக்கென கணிகையர் என்றொரு குலமே இருந்ததாகவும் கோயில்களில் கூட தேவதாசிகள் என்ற தனிக்குலத்தினர் இப்பணியை இறைபணியாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் அரபு நாடுகளில் அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக சந்தைகளில் விற்கப்பட்டதாகவும், பண்டைய கிரேக்கர்களும் மத்திய ஜப்பானியர்களும் இந்தியர்களும் கணவன்மார் இறந்ததும் அல்லது திருமண வயது பிந்தியதும் பிரபுக்கள் மட்டத்தில் பாலியல் தொழிலைச் செய்யும் நிர்ப்பந்ததுக்கு உள்ளாhனர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன.

தீபா மேத்தாவின் வோட்டர் திரைப்படத்தில் கூட காசியில் பால்வினைத்தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் கணவனையிழந்த பெண்களின் அவல வாழ்க்கையை கதைப்பொருளாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்த மட்டில் இத்தொழில் தற்போது செய்யப்பட்டதொன்று  ஆனால் சிங்கப்பூர் தாய்லாந்து பாங்கொக் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும்  இந்தியாவின் சில பகுதிகளிலும் பால்வினைத் தொழில்  தொழிலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இத்தொழில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அனுமதிக்கபட்டது போன்றே இத்தொழில் நடைபெற்று வருகின்றது. கொழும்பில் தொடங்கி கரையோரப் பகுதிகளான  கதிர்காமம் வரையிலும் இத்தொழில் வியாபித்திருக்கிறது.  அதுமட்டுமன்றி கிராமங்களில் மிக இரகசியமாகவும் இந்தத் தொழிலை செய்து வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் சட்டரீதியாக அனுமதிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியாக இலங்கை இத்தொழிலுக்கு பேர் போன இடமாகத்தான்  விளங்குகிறது. நெதர்லாந்திலிருந்து வரும் SPARTACUS என்ற சஞ்சிகை இலங்கை ஒரு பாலியல் தொழிலுக்கான தளம்  என்று எழுதியுள்ளது. சிறுவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் நாடுகளில் முக்கியநாடாக இலங்கை உள்ளதாகவும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் சுமார் 63 பால்வினை தொழில் விடுதிகள் இயங்குவதாகவும் இவற்றுள் 30 க்கும் மேலான இடங்களில் பகிரங்கமாகவே  நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் இத்தொழிலை நடத்துபவர்கள் சட்டத்தரணிகளாகவும் பொலிஸ் உத்தியோகத்திலிருப்பவர்களுமே இத்தொழிலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களனியில் ஒரு பால்வினைத் தொழிலை ஆரம்பித்து நடத்துபவர் சட்டத்தரணி  ஒருவர் என அறிய வருகிறன்றது.

அங்கு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு 8000 தொடக்கம் 18000 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் அதே போல் நுகேகொடையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் இத்தொழிலை நடத்தி வருகின்றமை பற்றியும் இவ் ஆய்வில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.  இப்படி சட்டம் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இத்தொழிலின் உரிமையாளர்கள். இவர்களுக்கு  அரசாங்கத்தின் அணுசரணையுடன்  தான் இத்தொழிலை செய்வதாகவும் அறிய வருகிறது.

இத்தொழிலில் ஆண்களும் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 3230 ஆண்கள் பால்வினைத்தொழிலில் ஈடுபடுவதாகவும் இவர்கள் பெரிய புள்ளிகளுடனேயே அதிகமாய் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும் ஆய்வின் படி தெரியவருகிறது.

அத்துடன் யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தத்தாலத்தில்  கணவனையிழந்து தொழில் வாய்ப்பு இல்லாதவர்களை தொழில் எடுத்து தருவதாக கூறி அழைத்து  வந்து பால்வினத்தொழில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் சிலர் இராணுவத்தின் உதவியுடன் கணவனையிழந்த பெண்களை வலுக்கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும்  பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் இத்தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதால் பல குற்றச் செயல்களுக்கு வழிகாட்டியாக அமையக்  கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ள அதே வேளை பால்வினைத் தொழிலை (பாலியல் தொழில்)  சட்டரீதியாக்கினால்  பல பிரச்சினைகள் தீரும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் சட்டரீதியாக்கியுள்ளதைப் போல் இலங்கையிலும் செய்தால் இத்தொழிலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அப் பெண்கள் பாதிப்படைவது கொஞ்சம் என்றாலும் குறையலாம் என்று அவ் ஆய்வில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி: ஊடறு

இலங்கைக் கிடைத்த ஒரே ஒரு தங்கமும் பறிபோகுமோ?

manju.gifஇந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியின் சுடுகாட்டில் தமிழ்க் கலாச்சார வீரநடைபோடும் ஆங்கிலத்தின் அடிமைகள். : யூட் ரட்ணசிங்கம்

Convocation_UoJ1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக தள்ளிவிடுகிறது என்று கோஷமிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார்கள் அன்றைய தமிழ் அரசியல் வாதிகள்.

அவர்களின் அன்றைய அகிம்சைப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைத்தது.

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் பல தொடக்கப் புள்ளிகளில் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப்  பல்கலைக் கழகம்.

விடுதலைப்போர் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் அந்த போராட்டங்களின் பின்புலத்தில் அந்தந்த நாட்டு பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் ஒன்று.

இது கல்விசார் வரலாற்றுத் தொடர்ச்சியை மட்டுமல்ல தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றையும் வடுக்களையும் கடந்த மே 18 வரை காவி நின்றது.

குறிப்பாக தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டும் என்ற இளைஞர்களை உசுப்பேத்தும்  அரசியல் உருவாக்கத்தின் ஒரு புள்ளியும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம்.

Convocation_UoJஇந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 26வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்ததான செய்தியும் புகைப்படங்களும்  அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

அந்த புகைப்படங்களைப் பார்த்த போது வீணடிக்கப்பட்ட அந்த உயிர்களான முத்துக்குமாரும் முருகதாசும் என் கண்முன்னேவந்து போனார்கள்.

இரண்டு இலட்சம் அப்பாவி உயிர்களை காவுகொண்ட அந்த கொடூரமான போரின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றான இந்த யாழ் பல்கலைக் கழகம் தனது 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழிலும் எழுதுவதற்கு தயங்குகிறது.

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதோ அதில் புலமை பெறுவதோ தவறில்லை. ஆங்கிலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்பதும் அனைவரும் அறிவர். பல்கலைக் கழகங்களில் அம்மொழியின் அவசியம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட.

ஆனால் தன் தாய் மொழியை பேசுவதும் பயன்படுத்துவதும் தரம் கெட்ட செயல் என்று கருதும் ஒரேயொரு இனம் அது ஈழத் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக தமிழர்களின் துறைசார் அறிவுஜீவிகள் என்று கருதக்கூடியவர்களே தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான்  தமிழினத்தின் மூளைகளாம்.

அண்மையில் இலண்டனில் தமிழர் தகவல் நடுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஓர் கருத்தரங்கிற்கு ஈழத்திலிருந்து ஓய்வுபெற்ற 4 துறைசார் அறிவுஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆங்கிலமே அங்கு ஆட்சி மொழியாக இருந்தது. வந்தவர்களோ ஈழத்தமிழர்கள். ஆங்கிலத்தில் விளாசித்தள்ளினார்கள்.

அம்பாறை மாவட்ட MP பியசேன அளித்த செவ்வியில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு கூடுகின்ற போது ஆங்கிலத்தில் பேசி ஓர் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.

அரச ஆட்சி தொட்டு பின் வந்த அந்நிய ஆட்சி வரை அடிமை வாழ்வு. இந்த அடிமைத் தனத்திலே சுகம் கண்ட இனங்களில் ஈழத் தமிழ் இனமும் ஒன்று. அந்த அடிமை வாழ்விலிருந்து மீளமுடியாது மிச்ச சொச்சங்களையும் காவி வருகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அம்பாறை மாவட்ட TNA MP  பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலண்டனில் இருந்து இயங்கும் GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம்  சிவகுரு பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சம்பவத்தை ஒரு மரபணுப் பிரச்சனை என்று கண்டு பிடித்திருந்தார்.

தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?

முஸ்லிம் சேவையை தனி அலைவரிசையாக மாற்ற நடவடிக்கை – அஸ்வர் எம்.பி. தெரிவிப்பு

aswar.jpgவானொலிக்கு வருமானத்தை அதிக மாக ஈட்டிக்கொடுக்கும் “முஸ்லிம் சேவை”யை தனி அலைவரிசையாக மாற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க விருப்பம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற கவுன்சில் உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் முஸ்லிம் இல்லங்கள் தோறும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பிரபல்யம் பெற்றுள்ளது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இந்த சேவையை விரும்பிக் கேட்கி ன்றனர். எனவே, முஸ்லிம்களுக்கென தனி அலைவரிசை உருவாக்கப்படுவது உண்மையில் வரவேற்கத்தக்கதென்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

இந்த யோசனை பற்றிய மகஜர் ஒன்றும் தலைவர் ஹட்சனிடம் கையளிக்கப்பட்டது.

ஒரே மேடையில் ஐந்து நூல்கள் அறிமுகம் – புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது! : வி. ரி. இளங்கோவன் & கலையரசன்

Book_Launchடென்மார்க் நாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும், புத்தகக் கண்காட்சியும் சிறப்புற நடைபெற்றன.

டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ்விழா டென்மார்க் வெஜன் நகரில் கடந்த ஞாயிறு (10 – 10 – 2010) சிறப்புற நடைபெற்றது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லீம்) குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.

Ilankovan_V_Tபுத்தகக் கண்காட்சியை வி. ரி. இளங்கோவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இவ்விழாவில், ஜீவகுமாரன் எழுதிய ”யாவும் கற்பனை அல்ல”, கலையரசன் எழுதிய ”ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, த. துரைசிங்கம் எழுதிய ”தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, வேதா இலங்காதிலகம் எழுதிய ”உணர்வுப் பூக்கள்”, வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுப்பான ”இளங்கோவன் கதைகள்” ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், ‘எதுவரை” ஆசிரியர் பௌசர், கரவைதாசன், ‘சஞ்சீவி” முரளிதாஸ், கொக்குவில் கோபாலன், வேதா இலங்காதிலகம், சரஸ்வதி கோபால், திருரவிச்சந்திரன், எம். சி. லோகநாதன், வேலணையூர் பொன்னண்ணா, லிங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில் உரைநிகழ்த்தினர்.

நடிக விநோதன் த. யோகராசா தலைமையில் ”மெல்லத் தமிழ் இனி…” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் வி. ரி. இளங்கோவன் ”சிறப்புக் கவிதை” வழங்கினார்.

குறிப்பிட்டபடி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 மணிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Audienceடென்மார்க் நாட்டின் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது, ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், பெண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியம்வரை கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இலக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பினும், நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற்படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட முன்னின்று அயராதுழைத்த  ஒருங்கிணைப்பாளர், ‘இனி” சஞ்சிகை – இணையத்தள ஆசிரியர் சத்தியதாஸ் (கரவைதாசன்) அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்.

 BookReviewPanel

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் – சில குறிப்புகள் : கலையரசன்

அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

Kalaiyarasanகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

Fouzerஇரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.

கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

Dark_Europeஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும் : செல்வி எம்.ஐ.எப் நபீலா

செல்வி எம்.ஐ.எப் நபீலா தமிழ்த்துறை இறுதியாண்டு
சப்பிரகமுவை பல்கலைக்கழக மாணவி மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதி கட்டுரையாகத் தரப்படுகின்றது. இப்பகுதி ”இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்” என்ற தலைப்பில் எழுதப்பட்டது.  எம்.ஐ.எப் நபீலா “தமிழ் இலக்கியத்துறையில் புன்னியாமீன்”  எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதியே மேற்படி கட்டுரையாகும்.  
த.ஜெயபாலன்

._._._._._.
 
இணையத்தள பாவனை சர்வதேச அளவில் வெகு தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும்கூட, எமது இலங்கையில் அதன் வேகம் மந்தகரமான நிலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையில் இணையத்தளம் பற்றிய அறிவு அல்லது விளக்கம் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதும் இணையத்தள சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக 20ஆம் நூற்றாண்டுகளில் இறுதிக்கட்டங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் இணையத்தள இணைப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட, டவுண்லோட் – தரவிரக்கத்திற்கேற்ப கட்டணங்கள் அறவிடப்பட்டமையினால் பாவனையாளர்களுக்குப் பெருந்தொகையான பணத்தினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புரோட்பேண்ட் இணையத்தள இணைப்பு வசதியை ஸ்ரீலங்கா டெலிகொம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரதான நகரங்களை மாத்திரம் மையப்படுத்தியிருந்த இவ்விணைப்பானது தற்போது அகில இலங்கை ரீதியில் வியாபிக்கப்பட்டு வருகின்றது. புரோட்பேண்ட் இணையத்தள சேவைக் கட்டணம் நிலையான கட்டணத்தைக் கொண்டிருப்பதினால் தரவிரக்க பரப்பளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தினால் தற்போது படிப்படியாக இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தொகை பல மடங்குகளாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். அதேநேரம், இலங்கையில் போட்டியாக செயல்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் எஸ்.எல்.ரி. சிட்டிலிங்க், மொபிடெல், மற்றும் சன்டெல், லங்காபெல், டயலொக், எடிசலாட், எயாடெல், ஹட்ச், டயலொக் சீ.டி.எம்.எ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையினை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருவதை அவதானிக்கின்றோம்.
 
மத்திய காலத்தில் உருவான அறிவியல் எழுச்சியுடன் படிப்படியாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) தோன்றியது. அதற்கு தமிழ்மொழியும் ஈடுகொடுத்தது, அதன் விளைவாகவே இன்றைய தமிழ் உயர்ந்த நிலையில் உள்ளது. தொடர்தேர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியில் 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனியுகம் (Age of Computer) ஆகும். இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.
 
இன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவைகள் முதல், விண்வெளியில் செயற்படுகிற ஏவுகணைகளை மாத்திரமல்லாமல் விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கூட பூமியிலிருந்து கட்டுப்படுத்தி, செயற்படுத்தக்கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறிவிட்டது. இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல்லது பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இருக்கட்டும் கணனியின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான தகவல்களைத் தரவுகளாகச் சேமித்துவைத்தல் (Database Development), தேவைப்படும்போது தகவல்களைத் தேடியெடுத்தல் (Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail)வினாடிகளில் உலகெங்கும் இணையத்தளம் (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்றைய காலகட்டத்தில செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.
 
இலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங்கள் இணையங்களை பயன்படுத்துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களினூடாக செய்திகளை உடனுக்குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன்னணித் தேசிய தமிழ் பத்திரிகைகளான தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற (தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும்) தத்தமது இணையத்தளங்களினூடாக செய்திகளை தரவேற்றம் செய்து வருகின்றன. இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ – பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக்கூடியதாக இருக்கும். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகங்கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.

 இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media) கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.

 ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3மூ ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை பின்வருமாறு
 
ஆண்டு பாவனையாளர்கள். சனத்தொகை வீதம்
2000           121,500           19,630,230            0.5 %
2007           428,000           19,796,874            2.2 %
2008           771,700           21,128,773            3.7 %
2009        1,163,500           21,324,791             5.5 %
2010        1,776,200           21,513,990             8.3 %
http://www.internetworldstats.com/asia/lk.htm
 
மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டின் பிறகு இணையத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான காரணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும் போது இணையத்தளப் பாவனை 30% மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
உலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனைப் பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் வருமாறு
 
WORLD INTERNET USAGE AND POPULATION STATISTICS
 
உலக வலயங்கள் சனத்தொகை டிச.31, 2000 நிகழ்காலம் வீதம்
Africa            1,013,779,050         4,514,400          110,931,700           10.9 %
Asia               3,834,792,852       114,304,000        825,094,396           21.5 %
Europe              813,319,511       105,096,093         475,069,448           58.4 %
Middle East        212,336,924          3,284,800           63,240,946           29.8 %
North America    344,124,450       108,096,800         266,224,500           77.4 %
Latin America
/Caribbean          592,556,972         18,068,919          204,689,836           34.5 %
Oceania
/ Australia             34,700,201          7,620,480            21,263,990           61.3 %
WORLD TOTAL
                      6,845,609,960        360,985,492        1,966,514,816           28.7 %
 
இங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச சனத்தொகையாகும்.
டிச.31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள்.
நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது.
http://www.internetworldstats.com/stats.htm
 
உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டெம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரணமாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் அன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு http://www.w3.org/history/19921103-hypertext/hypertext/ www/theproject.html
 
உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப்பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.

தமிழ் இணைய உலகில் தேசம்நெற் கட்டுரையாளர் புன்னியாமீன்:
 
Punniyameen_P_Mஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.
 
இத்தகைய பின்னணிகளின் மத்தியில் இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக தமது படைப்புகளை முன்வைப்பதில் இலங்கை தமிழ் எழுத்தாளர் புன்னியாமீனின் பங்களிப்பு விசாலத்துவமிக்கதாக அமைகின்றது. இதுவரை இவரின் 300க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சர்வதேச ரீதியிலான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் சர்வதேச ரீதியில் தமிழ் இணையத்தள வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெயராகவே இவரின் பெயர் பிரபல்யம் பெற்றுள்ளது. அண்மையில் புன்னியாமீன் இணையத்தளங்களில் பிரசுரமான 70 கட்டுரைகளை தொகுத்து சர்வதேச நினைவு தினங்கள் எனும் பெயரில் 03 பாகங்களை வெளியிட்டிருந்தார். இம்முயற்சி பற்றி இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “…உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் (புன்னியாமீன்) இணையத்தளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்…”. இதிலிருந்து இணையத்தளங்களில் புன்னியாமீனுக்குள்ள ஈடுபாடு பற்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
 
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் பெயர் பதிந்திருப்பதற்கு இணையத்தளங்களில் வெளிவரும் அவரது ஆக்கங்களே ஒரு பிரதான காரணியாக அமையலாம். இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், விஞ்ஞானம், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக சர்வதேச நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவரின் எழுத்துக்கள் முத்திரை பதித்து வருகின்றன. இலங்கை எழுத்தாளர்களிடையே இணையங்களில் எழுதுவதில் தற்போதைய நிலையில் இவர் முதன்மை இடத்தில் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.
 
இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டங்களில் இவரின் ஆக்கங்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. கூகூல் http://www.google.lk, யாஹ{ http://www.yahoo.com, எம்.எஸ்.என்.http://www.msn.com திரட்டிகளிலிருந்து இணையத்தள தேடல்களின் அடிப்படையில் இதுவரை 183 இணையத்தளங்களில் இவரின் ஆக்கங்களையும், இவர்பற்றிய ஆக்கங்களையும் காண முடிகின்றது. இவரின் ஆக்கங்கள் பிரசுரமான இந்த இணையத்தள முகவரிகளின் ஆங்கில அகரவரிசைப்படி கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
 
www.24dunia.com/tamil, www.360news.in, www.abc.net,www.ads.clicksor.com, www.alaai.co.cc, www.alaikal.com, www.amalathaselroy.blogspot.com, www. andamansaravanan.blogspot.com, www.anonasurf.com, www.aruvi.com, www. asafardeen.blogspot.com, www.athirady.info, www.bestestsite.info, www. Best queen12.blogspot.com, www.bit.ly, www.blogcatalog.com, www.blogcop. com, www.blogger-index.com, www.blogs.oneindia.in, www.bogy.in, www. bname.ru, www.chat.oneindia.in, www.cmr.fm, www.comedy fans.wordpress. com, www.content.usatoday.com, www.dazy.sk, www. deccannetwork.com, www.de-de.facebook.com, www.dekrizky.us, www.dillee pworld.blogspot.com, www.thedipaar.com, www.eelamtoday.com, www.eera anal.org, www.encyk. fotelikisamochodowe.net, www.engaltheaasam. com, www.en.wordpress. com,www.ethamil.blogspot.com www.facebook.com, www. faroo.com, www. fetna.org ,www.firmy24.podhale.pl, www.flexalution. com, www.freer.info, www. friendfeed.com. www.google.com, www.geotamil. com, www.groups. google.co.in, www.groups.google.com, www.groups. google.dk, www.groups. google.fr, www.groups.google.ge, www.groups. google.gr, www.groups. google.to, www.ikmahal.com, www.ilakkiyainfo.com, www.ilankainet.com, www.ilayamalar.blogspot.com, www.ilbts.org , www.india everyday.com, www. indiantoday.com, www.infokarirterkini.co.cc, www.inioru. com, www.kalai mahan.blogspot.com, www.kalanjiam.com, www.kannadi puthagam.blogspot. com, www.karuthurimai.net, www.kattankudi.info, www.kavi mathy.wordpress. com, www.kevins.nl, www.kingwebnewspaper .blogspot.com, www.komsc. com, www.koodal1.blogspot.com, www.kopi-welcomemyblog.blogspot.com, www.kulantamil.com, www.lakehouse.lk, www.lankamuslim.org, www.linux 24web.info, www.live.athirady.org, www. maatru.net, www.manitham.net, www.masdooka.wordpress.com, www.meel parvai.net, www.meettal.blogspot. com, www.mixx.com, www.mnmanas. blogspot.com, www.muelangovan. blogspot.com, www.mulaggam.com, www.mullivikkaal.com, www.mykathi ravan.com, www.mytoday.com, www.namathu.blogspot.com, www.nayanaya. mobi, www.nerudal.com, www.neruppu.com, www.newathirady.com, www. news.writeka.net, www.news.thiratti.com, www.nkl4u.in, www.noolaham.org/, www.ns3.greynium.com, www.onlineinet.com, www.oodaru.com, www.ottran. com, www.penniyam.com, www.puhali.com, www.push2check.com, www. puzha.com, www.radio.ajeevan.com, www.ragil.info, www.rammalar. wordpress.com, www.ramnadinfo.com, www.rasigancom.blogspot.com, www. rizardview.blogspot.com, www.sangamamlive.com, www.search.webdunia.com, www. singakkutti.blogspot.com, www.sitedossier.com, www.shaseevanweblog. blogspot.com, www.shakthienews.com, www.space2world.com, www.spider. com.au, www.srisagajan.blogspot.com, www.sumanasa.com, www.supperlinks. blogspot.com, www.surfblocked.net, www.sri.lanka.asia, www.ta.indli.com, www.tamil10.com, www.tamilalai.org, www.tamilauthors.com, www.tamil. bingra.com, www.tamil.com, www.tamilalai.org, www.tamilexpress. webnode.com, www.tamilkudumbam.com, www.tamilnirubar.org, www.tamil newsnetwork.com, www.tamilnews.cc, www.tamil.net, www.tamilsguide.com, www.tamilish.com, www.tamilmanam.net, www.tamilsguide.com, www.tamil velibkp.blogspot.com, www.tamil.webdunia.com, www.ta.wikipedia. org, www. taweet.com, www.ta.wordpress.com, www.techtamil.in, www. teleindia. comm, www.thakval.info, www.thatstamil.oneindia.in, www.thaynilam. com, www.thedipaar.com, www.theendlessinfo.com, www.thenee.com, www.thenee. eu, www.thesamnet.co.uk, www.thinakaran.lk, www.thinakaran. lk/vaaraman jari, www.thinakkural.com, www.thiru2050.blogspot.com, www. thoora.com, www.tmpolitics.net, www.twitter.com, www.twurl.nl, www.ubervu. com, www. udaru.blogdrive.com www.usa-learning.blogspot.com, www.ustamil. blogspot. com, www.valaipookkal.com, www.vallinam.com, www.viyapu.com, www. wap.orlingo.com, www.webjosh.com, www.webmanikandan.blogspot.com, www. worldub.blogspot.com, www.xna.no, www.yarl.com 
 
செப்டம்பர் 26. 2010இல் சுவிஸ் அரசின் கலாசார வானொலியான கனல்கா சர்வதேச வானொலி நிகழ்ச்சியில் பிரபல குறுந் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அ. ஜீவன் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது “…தான் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையத்தளத்திலும், சங்கமம் லைவ் இணையத்தளத்திலும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற், தமிழ்நிரூபர் போன்ற இணையளத்தளங்களிலும், பிரான்ஸை மையமாகக் கொண்டியங்கும் இலங்கை நெற் இணையத்தளத்திலும் மூலமாக எழுதுவதாக குறிப்பிட்டார். அதேநேரம், அதிரடி, புதிய அதிரடி, முழக்கம், எங்கள் தேசம், நெருப்பு, கண்ணாடி, ஊடரு, பெண்ணியம் போன்ற பல இணையத்தளங்களும் இவரின் ஆக்கங்களை முதன்மையாக பிரசுரித்துள்ளன.
 
இணையத்தளங்களிலுள்ள ஒரு பொதுவான பண்பு ஒரு இணையத்தளத்தில் வெளிவரக்கூடிய தரமான ஆக்கங்கள் வேறும் இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுவதனை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீனின் அண்மைக்கால சில ஆக்கங்கள் 20 தொடக்கம் 30 வரையிலான இணையத்தளங்களில் மறுபிரசுரமானதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2010 செப்டம்பரில் பிரசுரமான அன்னை தெரேசா நூற்றாண்டுவிழா எனும் கட்டுரை 24 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல 14 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த உலகிலே தரையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் எனும் கட்டுரை 20 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. 24 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் எனும் கட்டுரை மொத்தம் 16 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல சர்வதேச இளைஞர் ஆண்டைப் பற்றி இவரால் ஆகஸ்ட் 2010ல் எழுதப்பட்ட கட்டுரையும் 34 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.
 
இவ்வாறாக ஒரே ஆக்கம் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடிய பல நாடுகளை தளமாக அமைத்து இயங்கும் இணையத்தளங்களில் பிரசுரமாகும்போது எழுத்தாளரின் முக்கியத்துவம் அதிகமாகின்றது. அதேநேரம்ää மேற்குறிப்பிட்ட உதாரணப்படி மீள்பிரசுரம் செய்துள்ள இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
 
இணையத்தளங்களில் காணப்படக்கூடிய மற்றுமொரு சிறப்பம்சமாக வாசகர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். குறித்த கட்டுரை தொடர்பில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக இணையத்தளத்துக்குத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் புன்னியாமீனின் ஆக்கங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள பின்னூட்டங்களை அவதானிக்குமிடத்து இவரது எழுத்துக்குக் சர்வதேச மட்டத்தில் காணப்படும் வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது.
 
அதேநேரம், தற்போதைய நிலையில் இலங்கை எழுத்தாளர்களிடையே இணையத்தள பயன்படுத்தல்கள் குறைவாகக் காணப்பட்ட போதிலும்கூட, 2007 முதல் 2010 வரை தமிழ் மொழி மூல இணைய எழுத்துக்களை ஆராயுமிடத்து புன்னியாமீனின் பெயர் தனியிடத்தில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
உசாத்துணை:
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 1, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-43-6
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 2, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-44-3
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 3, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-45-0
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை சிறப்பு மலர் 2010. தமிழ் நாட்டு அரசு
http://www.internetworldstats.com/asia/lk.htm
http://www.internetworldstats.com/stats.htm
http://www.google.lk/
http://www.yahoo.com/
http://www.msn.com/

எனது பார்வையில் கே பி : ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு. – Be the change you want to see in the world.” மகாத்மா காந்தி : எஸ் வாசுதேவன்

NERDO_KP_Meetsமகாத்மா காந்தியின் பொன்வாக்குளில் ஒன்று. ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு.” இதன் அவசியம் இன்று நம் தமிழ் சமூகத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமூக மாற்றம் பற்றி பேசும் பலரே இன்று சமூகத்தின் பல்வேறு சிரழிவுகளுக்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள். இது தாயகத்தில் மிகவும் ஒரு மேசமான நிலையில் உள்ளது. அதற்காக புலம் பெயர் மண்ணில் உள்ளதெல்லாம் திறம் என்று கூறவரவில்லை. புலம்பெயர் மண்ணில் இன்று வேறு ஒரு வியாதி பிடித்துள்ளது. கற்பனையில் கப்பலோட்டும் தமிழனாக புலம்பெயர் தமிழன் மிகவும் மோசமான ஒரு தமிழ் சமூகத்தை புலம்பெயர் மண்ணில் உருவாக்கி வருகிறான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக 20 வருடங்களுக்கு மேலாக உழைத்து பின்னர் தகடு வைப்புகளால் ஓய்வு பெற்ற கே.பி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா பத்மநாதன் அவர்கள் புலிகளின் மறைவிற்கு பின் பரவலாக அதிகம் பேசப்பட்டு வந்த ஒருவர். இவர் நல்லவரா கெட்டவரா என்ற விவதாம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ஆனால் அண்மையில் தமிழ் பத்திரிகையாளர் டீ. பி. எஸ் ஜெயராஜ் நான்கு பகுதிகளாக கே.பியுடனான நேர்காணலை மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தார்.

நம்மவர்களுக்கு விடுப்பு பூராயம் அறிவதில் மிகுந்த அக்கறை! ஆனால் இந்த நேர்காணல் இந்த விடுப்பு பூராயங்களை விறுவிறுப்பாக்கவில்லை. யதார்த்த நிலையை விளக்கியது. கே.பி முன்னர் வெளியில் இருந்து சொன்னதைதான் மீளவும் சொல்லியிருக்கிறார். கே பி உடன் மே18க்குப் பின் பலதடவை உரையாடி இருந்தேன். விவாதித்தும் இருந்தேன். தேசம்நெற் ஆசிரியர்களும் கே பி யுடன் கதைத்ததைப் பதிவு செய்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் என்ன விடயங்களைப் பேசினாரோ அதே விடயங்களையே அவர் கைது செய்யப்பட்ட பின்னரும் பேசுகின்றார். நானும் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவன் என்பதை முன்னரே எழுதி உள்ளேன். அவ்வாறே கே பி யும் விடுதலைப் புலிகளுடன் நீண்ட காலம் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

இப்போதுள்ள நிலையில் கே பி தங்களால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் சிறைகளில் வாடுவதனாலும் தங்களை நம்பிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதால் அவர் குற்ற உணர்விற்கு உள்ளாகி இருப்பதை அவருடன் உரையாடியதில் இருந்து உணருகிறேன். அந்தக் குற்ற உணர்வு பாதிக்கப்பட்டவர்களிற்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற உந்துதலை வழங்குகின்றது.

ஆனால் இதுபற்றி உடைந்து போய் பல்வேறு அணிகளாகி உள்ள புலம்பெயர் புலிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை தம் வசதிக்கேற்ப வெளியிடத் தொடங்கினார்கள். கே.பியே அடுத்த முதல்வர்! கே.பி டீ.பி.எஸ் கூட்டில் ஒரு பத்திரிகை. கே.பி ஒரு ஆயுதக்குழுவை கட்டுகிறார். கே.பி அபிவிருத்தி என்ற பெயரில் காசு சேர்க்கிறார். கே.பி மீளவும் புலிகள் பாணியில் மாபியா நடத்த முனைகிறார். என்று தாம் விரும்பிய படி காது மூக்கு வைத்து தொடங்கிய கதைகள் இன்று கடைசியல் கே.பிக்கு அரசு 500 பரப்பு காணியை இலவசமாக வழங்கியுள்ளதில் என்பதில் வந்து நிற்கிறது.

Kumaran_PathmanathanKumaran_PathmanathanKumaran_Pathmanathanஇயக்கத்தை விட்டு கே.பியை ஓய்வெடுக்க சொன்னபோது அவரிடம் இருந்த கடைசி குண்டூசி வரை இயக்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின்னர் வெளிநாட்டு புலிகளிடமிருந்து ஒரு ஓய்வூதிய சம்பளமே அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இயக்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஓதுங்கியிருக்க கூறிய அதே இயக்கம் கே.பியை ஒரு அரசியல் ஆலோசகராக 2003இல் கொண்டுவர மீளவும் விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றதை பலர் மறந்து விட்டனர். அதை அன்று இக்பால் அத்தாஸ் ஹின்டு பத்திரிகையில் விலாவாரியாக எழுதியிருந்தார். http://www.hinduonnet.com/2003/10/15/stories/2003101511111000.htm

கே.பியை எப்படியாவது இயக்கத்தினுள் வைத்திருக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முயன்ற போதும் அதுவும் கூடிவரவில்லை. இதற்கு பின் நடந்தவைகளை தனது நேர்காணலில் கே.பி விரிவாக கூறியள்ளார். கே.பியுடன் வேலைசெய்த முன்னைநாள் இயக்க நண்பர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் தாமுண்டு, தம்பாடு உண்டு என்று இருக்கிறார்கள். இவர்கள் யாரும் கே.பியை குறை கூறவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு விலத்திய பல்வேறு பதவிகளை வகித்தவர்கள் இன்று புலம்பெயர் மண்ணில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் யாரும் கே.பியின் இந்த அறிக்கை பொய் என்று கூறவில்லை.

ஆனால் இதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்று இவர் தற்போது ஒரு சூழ்நிலைக்கைதி எனவே இவரை விட்டு விட்டு நாம் நமது வேலையான தேசியத்தை கட்டுவோம் என்று தேசிய வியாதி பிடித்த கூட்டம் அலைகிறது. இவர்களில் 99வீதமானோர் எந்த ஒரு இயக்கத்திற்கும் போகாதவர்கள். போராட்டம் தொடங்கிய மறு கணமே வெளிநாடு வந்தவர்கள். ஒரு சிலர் வெறும் சாக்கு போக்குக்காக தம் சொந்த நலனுக்காக இயக்கங்களிற்கு போனவர்கள். இவர்களில் பலர் புலம்பெயர் ஊடகங்களை தம் வசம் வைத்திருப்பவர்கள். இவர்கள் தான்  இன்று கே.பியை ஒரு துரோகியாக்கி அவரை ஏதாவது ஒரு நாட்டின் உளாவளி என்று முத்திரை குத்தமுனைபவர்கள். இவர்களில் ஒரு தரப்பு உலகப் புகழ் பெற்ற புனைபெயர் தமிழ் ஊடகவியலாளர்கள். இணைய செய்திகளை படித்து விட்டு நோரக கண்டது போல் விலாவாரியாக எழுதித் தள்ளுகிறார்கள்.

ஊடக தர்மத்திற்காக இலங்கைக்கு உயிரைப்பணயம் வைத்து சென்ற டைம்ஸ் சஞ்சிகையின் மேரி வாழும் இந்த நாட்டில் தான் இந்த கூட்டமும் வாழ்கிறது. ஒரு ஊடகவியலாளனிற்கு இருக்க வேண்டிய அடிப்படை தகமைகள் கூட இருக்க வேண்டாம்? குறைந்த பட்சம் நேர்மையாவது வேண்டாமா?

நான் கடந்த ஆவணியில் இலங்கை போய் வந்ததும் மீண்டும் எனக்கு கே.பியுடன் பேச வாய்ப்பு வந்தது. பேசிய பின் தான் அங்கு அவரைப் போய் பார்த்திருக்க வேண்டும் என்று பின்னர் கவலைப்பட்டேன். காரணம் தற்போது அவர் செய்யும் முயற்சி! அந்த முயற்சி வெறும் கண்துடைப்புக்காவோ காசு பணம் சேர்க்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் வன்னியில் நேரடியாக பார்த்து பாதிக்கப்பட்ட விடயங்களை விட அவரை பல விடயங்கள் மிகவும் மன அழுத்தத்திற்குள்ளக்கி இருந்தது. இதை அவருடனான உரையாடலில் புரிய முடிந்தது. இயக்கம் நடாத்திய காலங்களில் அதீத விசுவாசம் காட்டாது அந்த மனிசனும் சொத்து சேர்த்திருந்தல் மலேசியா போயிருக்கத் தோவையில்லை. பிடிபட்டிருக்கவும் மாட்டார்.

பத்மநாதனின் படமே அவர் பிடிபட்ட பின்னரே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. புலம்பெயர் நாட்டில் மே 18 இற்கு பின் தலைமறைவான பணக்காரப் புலிகளில் ஒருவராக கே.பியும் இருந்திருக்க முடியும். இயக்கம் முழுவதும் அழிந்ததை ஊர்ஜிதம் செய்த செல்வராசா பத்மநாதன் ஒரு பற்றிக்காக (Patrick) தென் ஆபிரிக்காவிலேயோ அல்லது டேவிட்டாக எரித்திரிவியாவிலோ ஒதுங்கியிருக்க முடியதா?

NERDO_KP_Meetsமக்கள் மீது பற்றுள்ளவர்கள் மக்களை விட்டு  ஓட மாட்டார்கள். நம்பிக்கை இழந்த மக்களிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்றுதான் சிந்திப்பார்கள். இந்த ஒரு நோக்கிற்கா தன் அடையாளத்தை வெளியில் கொண்டு வந்த கே.பியை இலங்கை அரசு கைது செய்ததையே பொய் என்று தமிழீழத்தை இதோ நெருங்கிக் கொண்டிருப்பதாக எழுதிய அதே புலம்பெயர் ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்து எழுதுகிறார்கள்.

கே.பி மலேசியவில் தங்கியிருந்த போது பல்வேறு தடவைகள் மணிக்கணக்கில் தொலைபேசியில் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்து. ”புலிகளின் ஏகப்பிரதிநிதுத்துவத்தை நீங்கள் மூட்டை கட்டிவைக்க வேண்டும்” என்று நான் தொடங்கவே, ”தம்பி இது தான் நாங்கள் விட்ட பெரிய பிழை இதை இனியும் விடக்கூடாது” என்று கூறியதோடு நிற்காது, பல்வேறு பட்ட இயக்க தோழர்களை அணுகியதுடன் அவர்களை தொடர்ந்து சந்தித்தும் வந்தார். இது தான் இங்குள்ள ஏகப்பிரதிநிதித்துவ புலிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. தமது பதவிகள் பணம் அனைத்தும் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் கே.பி எதிர்ப்பு யுத்தத்தை அவர்கள் அன்றே ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று புலிகள் செய்த அனைத்து தவறுகளிற்கும் அனைவரிடமும் பொது மன்னிப்பும் கோரியுள்ளார் கே.பி. புலிகளின் அராஜகத்தை விமர்சித்து அவர்களை விட மிக மோசமாக ஆராஜகம் செய்த கட்சிகள் கூட இன்னமும் குறைந்த பட்ச மன்னிப்பை கூட இலங்கை மக்களிடம் கோரவில்லை. ஆனால் இதைக் கூட இந்த போலி ஊடகவியலாளர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். இவர் சூழ்நிலைக் கைதியாம்.  அதுதான் மன்னிப்பு கேட்டவராம்.

”மாற்றம் என்பது உன்னுள் ஆரம்பிக் வேண்டும்” என்பதை கே.பி இன்று நிரூபித்துள்ளார்.

NERDO_Book_Donationநேர்டோ என்ற அமைப்பை கே.பி தொடங்கியதன் காரணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கஸ்டத்திற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு மட்டும் அல்ல. மாறாக மனித நேயம் கொண்ட எந்த ஒரு மனிதனுக்கும் உருவாகும் ஒரு உணர்வு. வன்னிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்த்து அந்த மக்கள் படும் அவலங்களை பார்க்கும் ஒவ்வரு மனித நேயம் கொண்டவர்களுக்கு உருவாகும் அந்த உணர்வே கே.பிக்கும் உருவாகியது.

தடுத்து வைக்கப்படுதலின் உளவியல் தாக்கத்தை தானே அனுபவித்து உணர்ந்த கே.பி, தடுத்து வைக்கபட்டிருக்கும் முன்னை நாள் போராளிகளின் வேதனையையும் தாக்கங்களையும்  நன்கே உணர்ந்தார். இவை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும் அவர் உணர்ச்சிவசப்படுவதை என்னால் புரிய முடிந்தது. ”நான் வாழ்ந்து முடிந்து விட்டேன் ஆனால் இவர்கள் வாழவேண்டும்” என்பதிலும் ”அவர்கள் நல்ல மனிதர்களாக வெளியில் வந்து தங்கள் சொந்த காலில் நிற்பதை பார்க்க வேணும்” என்பதே அவரின் விருப்பம். கே.பியும் ஒரு கொஞ்ச காலம் சிறையில் அப்பிடி இப்பிடி காலத்தை தள்ளிப்போட்டு பொது மன்னிப்பில் மயிலிட்டியில் தன் வாழ்க்கையை முடித்திருக்க முடியம். ஆனால் அதை செய்ய அவர் விரும்பவில்லை.

”அரசாங்கம் செய்யட்டும். நாங்கள் ஏன் செய்ய வேண்டும்” என்று விதண்டாவாதம் பேசவில்லை. அவர் இதை வைத்து அரசியலும் செய்யவும் விரும்பவில்லை. யுத்தத்தால் பாதிகப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை ப+ர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவே முனைகிறார். இன்று வட கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குறிப்பாக இந்த போராட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை நேரில் பார்த்த, மனச்சாட்சி உள்ள ஒரு சாதாரண மனிதன் செய்யும் ஒரு செயற்பாட்டையே இன்று நேர்டோ ஊடாக கே.பியும் செய்ய முனைகிறார்.

NERDO_KP_Meetsஅண்மையில் மிகவும் இரகசியமாக புலம்பெயர் மண்ணிலிருந்து சென்று கே.பியை சந்தித்தவர்கள் அங்குள்ள பலரிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நாடு திரும்பினர். கே.பியும் இவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க வந்த ஒருவர் போட்ட குத்துக்கரணத்தால் எல்லாமே தலைகீளாக மாறியது. உதவியை எதிர்பார்த்தவரகள் ஏமாற்றம் அடைந்தனர். இலங்கை அரசை சார்ந்தவர்களோ பார்தீர்களா புலம்பெயர் தமிழர்களை என்று ஏளனம் செய்தனர். ஆனால் நல்ல மனம் படைத்த ஒரு சிலரின் உதவியுடன் தன்னால் இயன்றதை கே.பி செய்யாமல் இருந்து விடவும் இல்லை.

இன்று அவர்களிற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. ஆழுக்கொருவர் ஒரு பவுண் மாதம் கொடுத்தாலே அது ஒரு மாற்றத்தை கொண்டுவரும். புலிகளின் பணத்தை இங்கு வைத்துள்ளவர்கள் அதை காப்பாற்ற கே.பியை துரோகியாக்குவதிலேயே கவனமாயுள்ளனர்.  இவர்களிற்கு மக்களைப் பற்றியோ அவர்கள் படும் துன்பம் பற்றியோ அக்கறை கிடையாது.  கே.பி ஏன் செய்ய வேண்டும்? எம்மை நேரடியாக செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று ஒருவர் கேட்கிறார்.

20 வருடங்களிற்குமேல்  தனது உழைப்பால் ஒரு அமைப்பை எந்தவித சுயநலமும் பாராது கட்டிக்காத்ததுடன் இன்று ஒரு சதம் காசு கூட கையில் இல்லாது வெறும் கைதியாக இருப்பதே  ஒரு முக்கிய காரணம். காசுதான் பெரிது என்றிருந்தால் கே.பி மலேசியா முதல் மயிலிட்டி வரை பினாமி பெயர்களில் முதலிட்டு விட்டு இன்று சொகுசாக வாழ்ந்திருக்க முடியும்!

இலங்கை அரசை அணுகி தாம் ஒரு அரச சார்பற்ற ஸ்தாபனத்தை நடாத்த போகிறோம் என்றதும் அரசு இணங்கியதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இந்த விடயத்தில் ஏற்கனவே பலரை நம்பி செயற்பட விட அவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதிலேயே கவனம் செலுத்த முனைந்தார்கள். ஆனால் தனது எதிர்காலம் என்ன என்று தெரியத நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாது யுத்தத்தால் பாதிக்ப்பட்ட  மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது உயர்த் வேண்டியது தனது கடமை என்று இலங்கை அரசிடம் கோரி அவர்களை இணங்க வைத்தார். அதை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்போது செய்து வருகிறார்.

School_Under_TreeNERDO_School_Supportஉடல் நலம் ஓத்துளைக்காது போதும்  வன்னிக்கு அடிக்கடி சென்று அந்த மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களின் நலனை எந்த வித அரசியல் லாபமும் பாரக்காது முழுநேரமாக  தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறார். கே.பியை பொறுத்தவரை இது சமூக சேவை மாத்திரம் அல்ல. தன் மனதில் ஏற்பட்ட வடுக்களை போக்க உதவும் ஒரு நீவாரணம். கே.பி மீதான  அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் தொடரவே போகிறது. ஆனால் அவை அனைத்துமே காலப்போக்கில் அடிபட்டுப்போகும். தனது விடா முயற்சியால் எவ்வாறு புலிகள் என்ற அமைப்பை கட்டியமைக்க உதவினாரோ அதேபோல் இந்த மக்களின் வாழ்வை கட்டிமையக்க இவரால் நிச்சயம் முடியும் என நம்புவோம்!

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்

லண்டனில் வன்னிப் போரில் மக்களை பணயம் வைத்த தமிழ் ஊடகங்களின் 2010 மாநாடு! – அருள் சகோதரர் எழிலனும் ஒரு பேச்சாளர்! : த ஜெயபாலன்

Gobi_RatnamSutha_NadarajahCheran‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பிலான மாநாடு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 23ல் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டை International Association of Tamil Journalists – சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வமைப்பின் முதலாவது மாநாடு 2008 ஏப்ரல் 26ல் இடம்பெற்றது.

இந்த ஊடக அமைப்பில் உள்ள பிரதான ஊடகங்கள் ஐபிசி, ஒரு பேப்பர், ஜிரிவி (2008ல் ரிரிஎன்), தமிழ் கார்டியன் போன்ற லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே. ஏனைய நாடுகளில் உள்ள புலிஆதரவு அமைப்புகளும் நிறுவனங்களும் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் வி பிரபாகரன் மீதும் மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் கொண்ட ஆனந்தி சூரியப்பிரகாசத்தைத் தலைவியாகக் கொண்டு இவ்வமைப்பு செயற்பட்டு வருகின்றது. பிபிசி தமிழோசையில் நீண்டகாலம் பணியாற்றிய இவருடைய சர்வதேச ஊடகவியல் முகத்தின் பின்னால் இருந்து இவ்வமைப்பை இயக்குபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே.

2008ல் நடந்த மாநாட்டை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர் ‘ஆணிவேர்’ படத்தின் தயாரிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான திலகராஜா தம்பதிகள். திலகராஜா தற்போது வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஹொட்டல்களை உருவாக்கி வருகின்றார். அந்நிகழ்வின் வரவேற்புரையை வழங்கியவர் ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி ரட்ணம். தமிழ் கார்டியன் சுதா நடராஜா, விநோதினி கணபதிப்பிள்ளை ஆகிய இருவரும் 2008 மாநாட்டில், முக்கியமாக உரையாற்றியவர்கள், 2010 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளர்களாக உள்ளனர். அதே போன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தியல் சிற்பிகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் சேரன் 2008 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளராகக் கலந்துகொண்டவர், 2010 இலும் முக்கிய பேச்சாளராக கலந்துகொள்கிறார். ரிரிஎன் தொலைக்காட்சிக்கு பிரதியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் அவுஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் ஜீரிவி யும் இம்மாநாட்டில் முக்கிய பங்கெடுக்கின்றது. ஜிரிவி இன் நிகழ்ச்சி வழங்குநர் தினேஸ் மாநாட்டின் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குகின்றார்.

 ஊடகங்களின் புலிமயமாக்கல்:

தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பெரும்பாலான பொது அமைப்புகளை புலிமயமாக்கலுக்கு உட்படுத்தி வந்தன. தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், ஊடகங்களும் இந்தப் புலிமயமாக்கலில் இருந்து தப்பவில்லை. இந்தப் புலிமயமாக்களில் புலி ஆதரவு ஊடகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் புலிமயமாக்கலின் உச்சமாக 2007 பிற்பகுதியில் தமிழ் ஊடகங்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. வன்னியில் இருந்து வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு வானொலியான ஐபிசி வானொலியின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற ரமணன் என்பவரே இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். தமிழ் சர்வதேச செய்தியாளர் ஒன்றியத்தை அமைப்பதற்கான முதலாவது சந்திப்பு ஐபிசி கலையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பை குகன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பிற்கான அழைப்பு தெரிவு செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் சிலருக்கே கொடுக்கப்பட்டது.

அவ்வழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அப்போது தீபம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக இருந்த கண்ணன் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இது புலிமயமாக்கலின் உச்சமான நிகழ்வு. இந்த ஊடக அமைப்பில் புலிகள் மீது மென்போக்குக் கொண்ட அல்லது புலிகளை விமர்சிக்கவோ அல்லது புலிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து வந்த தீபம் தொலைக்காட்சி, சன்றைஸ் வானொலி போன்ற ஊடகங்களும் அதன் ஊடகவியலாளர்களுமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதான புலி ஊடக அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வமைப்பின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் மட்டுமே இந்த அமைப்பிற்கு ஒரு ஊடகவியல் சாயத்தை வழங்கிக் கொண்டு உள்ளார்.

 ஊடகவியலின் அடிப்படை:

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களின் காவலர்களாக செயற்பட வேண்டும். ஊடகத்தின் முதலும் முக்கியமானதுமான கடமை உண்மையை வெளிக்கொணர்தல். நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு ஊடகவியலின் பங்கு மகத்தானது. இவ்வாறான ஊடகவியலின் அடிப்படை அம்சங்கள் எதனையுமே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கொண்டிருக்கவில்லை.

இந்த ஊடகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் விம்பங்களைக் கட்டி அவர்களை யதார்த்தத்தில் இருந்து அந்நியப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் போதெல்லாம் அவ்வாறான விமர்சனங்களை வைப்போர் மீது தனிமனித தாக்குதலை நடாத்தியது. ஆகவே International Association of Tamil Journalists என்பதிலும் பார்க்க International Association of Tiger Journalists என்பதே இவ்வமைப்பிற்கு பொருத்தமான பெயராக இருக்க முடியும்.

”இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்கெடும்”
                        (குறள் 448)

‘தவறுகளை இடித்து உரைக்கின்றவர்கள் இல்லாது இருந்தால், எப்படிப்பட்ட சிறப்பான மன்னனாக இருந்தாலும் அம்மன்னனுக்கு கேடு செய்பவர்களே இல்லாவிட்டாலும் அம்மன்னன் கெட்டு அழிந்து போவான்’ என்கிறது இக்குறள்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகி உள்ளது தமிழ்த் தேசிய மன்னன் வே பிரபாகரனும் International Association of Tiger Journalists ம். மே 18 வரை இந்த ஊடகங்கள் எழுதிய எவ்வித ஆதாரமோ அடிப்படையோ அற்ற செய்திகளும் ஆய்வுகளும் புகழ் மாலைகளும் வே பிரபாகரனினது தலைமையினதோ தமிழீழ விடுதலைப் புலிகளினதோ எவ்வித தவறான அணுகுமுறையையும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் சுற்றி விம்பங்களைக் கட்டமைத்தன. விளைவு…..
‘இடிப்பாரை இல்லாத ‘வே’யன்னா மன்னன்
கெடுப்பாருங் செய் கெட்டான்’

உண்மைகளை இருட்டடிப்புச் செய்தனர்:

International Association of Tiger Journalists அமைப்பில் உள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பேராசிரியர் சேரன் போன்ற மதியுரைஞர்களும் வன்னி மக்களைப் பணயம் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைக் காப்பாற்ற முற்பட்டபோது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வன்னி மக்கள் ஆயிரம் ஆயிரமாகச் செத்து மடிந்த போதும் இந்த ஊடகங்கள் மக்களை விடுவிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. மாறாக அந்த மண் வன்னி மக்களின் பூர்வீக மண் என்று கதையளந்து அம்மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக இருக்க நிர்ப்பந்தித்தன. இந்த ஊடகங்களின் சில ஊடகவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பியோடிய மக்களை எவ்வித கூச்சமும் இன்றி துரோகம் இழைப்பதாக விபரித்தனர்.

மாநாட்டில் பங்குபற்றுவோர்:

இச்சந்திப்பிற்கு முன்னர் குறிப்பிட்டவர்களுடன் ஐவன் பீதுருப்பிள்ளை போன்றவர்களும் இணைக்கப்படுவார்கள். மேலும் நோர்வேயில் இருந்து சேந்தன் என்ற இளைய தலைமுறை இளைஞரும், டென்மார்க்கில் இருந்து மற்றுமொரு இளைஞரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கையில் இருந்து வீரகேசரி ஆசிரியர் தேவராஜா கலந்துகொள்கிறார்.

இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் சார்பில் ரமேஸ் கலந்துகொள்கின்றார். தமிழகத்தில் பத்திரிகையாளராகக் கடமையாற்றிய இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவர். தனது கருத்துக்களை அனேகமாக வெளிப்படையாகவே தெரிவிக்கக்கூடியவர். பக்கம்சாராது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர். இவருடைய உரை அங்குள்ள பலருக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். இவருடன் சர்வதேச ஊடக அமைப்பைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து 2008ல் டெக்கன் ஹரல்ட் சார்பில் பகவான் சிங் கும் சுந்தரராஜன் முராய் உம் கலந்துகொண்டனர். 2010 மாநாட்டுக்கு ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையின் இலங்கைப் பிரிவில் இருந்து அம்ரித் லால் என்ற வட இந்தியர் கலந்துகொள்கிறார். இச்சந்திப்பில் கலந்து கொள்ளும் மற்றவர்…..

புலிஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் சகோதரர் அருள்எழிலன்

தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் இனியொரு இணையத்தின் முக்கிய ஊடகவியலாளருமான அருள்எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடக மாநாட்டில் கலந்துகொள்கிறார். இவர் இலங்கையில் இயங்கும் டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதன் செப்ரம்பர் 3ல் தமிழகத்தில் வைத்து கடத்தல் – கைது விவகாரத்தில் தொடர்புபட்டவர். (டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்)

இந்த மாநாட்டுக்கு இந்திய ஊடகவியலாளர் அம்ரித் லால் உடன் தமிழகத்தைச் சேர்ந்த, ‘தேசியத் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளார்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் ஊடகவியலாளரைத் தேடினர். ஜுனியர் விகடன் ஊடகவியலாளர் ஒருவரையே அழைக்க ஆரம்பத்தில் முயற்சிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றுக்கென்ன வேலி படத்தின் இயக்குநரையும் அழைக்க முயற்சிக்கப்பட்டது. இருவருக்கும் வருவதற்கான சாத்தியம் இருக்கவில்லை என்பதால், இறுதியாக ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றிய, மதியுரைஞர் காலம்சென்ற அன்ரன் பாலசிங்கத்திடம் பேட்டி காண லண்டன் வந்த அருள் சகோதரர்களின் குடும்பத்தில் ஒருவரை அழைக்க முடிவாகியது. அருள் எழிலன் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.

புலிகளின் சம்பளப் பட்டியலில் சில தமிழக ஊடகவியலாளர்கள்:

இன்று தமிழகத்தில் உள்ள சில ஊடகங்களும் ஊடகவியலாளரும் புலம்பெயர் புலி முகவர்களின் சம்பளப் பட்டியலில் உள்ளனர். அல்லது அதனூடாக லாபம் அடைகின்றனர். ஈழத் தமிழரின் அவலம் பற்றி எழுதுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி எழுதுவதும் தமிழக வியாபார ஊடகங்களின் எழுத்தாளர்களின் ஒரு வியாபாரத் தந்திரமாக மாறியுள்ளது.

நக்கீரன், நக்கீரன் கோபால் போன்ற இந்த வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களதும் வாடகை உணர்வுகள் ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்கே வித்திட்டு உள்ளது.

Pirbaharan_Still_Alive_NotPirabaharan_Still_Aliveமே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் எல்லாம் வெளிவந்த போது நக்கீரன் சஞ்சிகை தலைவர் உயிருடன் இருப்பதாக படம் காட்டியது. (உண்மையான படமும் நக்கீரன் கிராபிக்ஸ் செய்த படமும் அருகில் இணைக்கப்பட்டு உள்ளது.) இன்னுமொரு சஞ்சிகை அவர் எப்படித் தப்பிச் சென்றார் என்று தொடர் எழுதியது.

இவ்வாறான ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பணம் லண்டனில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பியவருடன் கூட இருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை கெ பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே (யூன் 14 2009ல்) தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

 பணத்திற்காக செய்திகளை உருவாக்கும் சில தமிழக ஊடகங்கள்:

டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதனைத் தவிரவும் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களை குறிவைத்து கடத்தல்கள், கப்பம் வாங்கல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஈஎன்டிஎல்டிப் அமைப்பு நக்கீரன் பத்திரிகை எவ்வாறு ஒரு கடத்தல் நாடகத்தை பின்னுகிறது என எழுதியுள்ளது.

‘‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்’ என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள்” என ஈஎன்டிஎல்எப் அறிக்கை குற்றம்சாட்டி உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக தமிழக எழுத்தாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான ஆதவன் தீட்சண்யா செப்ரம்பர் 20ல் வருமாறு தேசம்நெற் இல் பதிவிட்டுள்ளார். ”மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களை விலைபோனவர்கள் என்று அவதூறு பேசித்திரிந்த இவர்கள் (அருள் சகோதரர்கள்) எப்படி கூலிக்கு மாறடித்துக் கொண்டிருந்தனர், என்னென்ன ஆதாயங்களை அடைந்தார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஆனால் கருணாநிதி குடும்பத்துடனான தமது தொடர்புகளின் செல்வாக்கில் இப்படி எத்தனை பேரை பிடித்து வைத்து கறந்திருக்கிறார்கள் என்பது இனிதான் வெளியாக வேண்டும்” என்கிறார்.

 குகநாதன் கைது கடத்தல் வீடியோ பதிவு எங்கே:

குகநாதனை தாங்கள் கடத்தவில்லை என்றும் பொலிசாரே கைது செய்தனர் என்றும் கூறும் அருள் சகோதரர்கள் குகநாதன் தங்களுக்கு தர இருந்த சம்பளப் பாக்கியையே நீதிமன்றத்திற்கு வெளியே ஆனால் சட்டப்படி வாங்கிக் கொண்டு குகநாதனை விடுவித்ததாகக் கூறுகிறார்கள். இது தொடர்பாக தமிழ் அரங்கம் இணையத்தில் செப்ரம்பர் 03ல் டி அருள் செழியன், ”குகநாதன் கைது செய்யப்பட்ட விதம் காவல் நிலையத்தில் அவரது கெஞ்சல், இராயகரன் குறிப்பிடும் ஆட்களுடன் அவரது பேச்சுகள் ஆகியவை என்னால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்தால் நடந்தது கட்டபஞ்சாயாதா அல்லது குகநாதனுக்கு காட்டப்பட்டது கருணையா என்பது தெரியவரும். இரயாகரன் விரும்பினால் அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

தன்னைச் சட்டப்படி கடத்தியதாக தேசம்நெற்க்கு தெரிவித்த குகநாதன் அருள்செழியன் மேலே குறிப்பிட்ட வீடியோவை எவ்வித எடிற்றிங்கும் செய்யாமல் வெளியே விடும்படி சவால் விட்டார். (குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்) ஆனால் ”அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” என்ற அருள் சகோதர் இதுவரை அதனை வெளியிடவில்லை.

(மாறாக அருள் சகோதரர்களின் கடத்தல் – கைது விவகாரத்தை சட்டப்படியானது என்று வாதிடும் இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் குகநாதனின் மனைவியை இரவு நித்திரையால் எழுப்பி பதிவு செய்த ஒலிப்பதிவை இனியொருவில் பதிவிட்டார். இதுதொடர்பான கட்டுரை தேசம்நெற் இல் வெளியானதும், அதற்கு எவ்வித மனவருத்தத்தையும் வெளியிடாத இனியொரு இணையத்தளம் திருமதி குகநாதனின் ஒலிப்பதிவை சத்தமின்றி நீக்கியது. தமது தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத போதும் அதனை திருத்திக் கொண்டது வரவேற்கத்தக்கதே.)

தமிழகச் சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் மக்கள் பற்றிய பாராமுகம்:

இலங்கையில் வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் கடந்த ஆண்டு முதல் பட்டுவரும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை அவற்றை விபரிக்க இங்கு வார்த்தைகள் இல்லை. இதனிலும் மோசமான வாழ்வை ஈழத்தமிழர்கள் இந்தியச் சிறப்பு முகாம்களில் வாழ்கிறார்கள். இவர்களின் துயர் மிகு வாழ்வு தொடர்பாக அங்கு பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதியதுடன் அவர்களை விடுவிக்கும் படியும் குரல்கொடுத்து வருகின்றார். இதே கருத்தை தேசம்நெற் வாசகர் ஒருவரும் வெளிப்படுத்தி இருப்பதை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். (‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.)

ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றி குரல் எழுப்பும் தமிழக ஊடகங்களும் அருள் சகோதரர்கள் போன்ற ஊடகவியலாளர்களும் தங்கள் ஆளுமை எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளனர். ”இவர்களைப் பொறுத்தவரை, ஈழத்திலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் எல்லாம் களத்திலே நின்று போராடாமல் புறமுதுகிட்டு ஓடிவந்தவர்கள் (ஒன்றுமில்லாமல் வந்து இங்கு அல்லாடுகிற இவர்களை ஆதரித்து என்ன பயன்?). ஆனால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போனவர்கள் புலத்திலே இல்லாவிட்டாலும் களத்திலே இருப்பவர்கள் ( இப்படி சொன்னால் தான் டாலரும் பவுண்ட்சும் வரும்.) இந்தியாவிலுள்ள 85,000 ஏதிலிகளைப் பற்றி பேசினால் இங்குள்ள ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அட்டைக் கத்தியை ஆகாயத்தில் சுழற்றி வீரனென்று பேரெடுக்க ஆயிரம் வழிகள் இருக்க எதற்கு வம்பு?” என்று இவர்கள் அந்த சிறப்பு முகாம் அகதிகள் பற்றி கணக்கெடுப்பதே இல்லை என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

அருள் எழிலனுக்கு புரட்சிகரச் சாயம்:

தமிழக வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலை இவ்வாறிருக்க, ”அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை.” என மக்கள் கலை இலக்கியக் கழகம் – மகஇக என்ற தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி அமைப்பு அருள் எழிலனுக்கு புரட்சிகர பத்திரிகையாளர் என்று ஒக்ரோபர் 02ல் ‘ஐஎஸ்ஏ சான்றிதழ்’ வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே மகஇக வின் அரசியலை முன்னெடுத்து வந்த இரயாகரனை ‘அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம்!!’ என்று ஒக்ரோபர் 05ல் மகஇக அறிக்கை விட்டுள்ளது. மார்க்சிய லெனினிய (எம் எல்) கருத்துக்களை முன்னெடுத்து வருகின்ற தமிழரங்கம், இனியொரு, மகஇக என்பனவற்றின் இணைப்பு இரசாயனம் மாறிவிட்டது. தற்போது எம் எல் (ரயா அணி), எம் எல் (நாவலன் அணி), எம் எல் (மகஇக அணி) இடையே அருள் சகோதரர்கள் என்ற ஊக்கியால் எம் எல் நாவலன் அணியும் எம் எல் மகஇக அணியும் புதிய இணைப்பை உருவாக்கி உள்ளன. இப்பிணைப்பில் ‘மே 18’ காரணி முக்கியமானது என்கிறது தமிழரங்கம்.

அருள் எழிலனுக்கு ‘புரட்சிகர பத்திரிகையாளர்’ என்ற சான்றிதழுக்கு எழுதிய கட்டுரை தொடர்பாக ஒக்ரோபர் 4ல் சீலன் என்பவர் ”புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் (மகஇக வின்) ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அதே தளத்தில் வெளியான கட்டுரையில் வருமாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ”மகஇக வுக்கு புலிகளின் சாவின் முன் ராஜஹரனின் அரசியல் போக்கு சரியாக இருந்தது. அத்துடன் சில தேவைகளுக்கு அவர் தேவைப்பட்டார். ஆனால் இன்று மகஇக வின் இலங்கை சார்ந்த அரசியல் பார்வை மாறியுள்ளது. அதன் அடிப்படையில் ராஜாவின் நிலைப்பாட்டுடன் மகஇக வின் அரசியல் நிலைப்பாடு முரண்படுகின்றது. அதேவேளை புலியின் அழிவின் பின் அரசியலில் ஸ்டார் அந்தஸ்துடன் இலங்கை அரசியல்மேடைக்கு வந்துள்ள நாவலனின் அரசியல் நிலைப்பாடும் அவரின் “சேவையும்” மகஇக வின் அரசியல் மற்றும் பிரச்சார தேவையை பூர்த்தி செய்வதாகவுள்ளது. இந் நிலையில் அரசியல் விவாதங்கள் இல்லாமல் ராஜஹரனுடன், அவர் சார்ந்த அமைப்பு, மற்றும் தோழர்களுடன், உறவை முறித்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக் கடத்தல் கூத்தை பாவித்துள்ளது மகஇக.”

மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு ஊடகங்களின் (ரிரிஎன்) சம்பளப் பட்டியலில் இருக்கும் வரை விமர்சனமற்ற வழிபாட்டை மேற்கொண்டு வந்துவிட்டு இப்போது மார்க்சிய புலிகளின் சம்பளப் பட்டியலுக்கு மாறியதால் சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருகிறார் என மகஇக கதை புனைகிறது. புலி ஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் எழிலன் தன்னுடைய என்ன கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டார் என்பது ஓரளவுக்காவது தெரியவரும்.

ஆ மார்க்ஸ் புலிஆதரவு ரிரிஎன் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதே ஒரு சமயத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அ மார்க்ஸ் களங்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்பட்டது. புலிகளின் ஊடகவியல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட மார்க்சிய சாயம் பூசப்பட்ட தனது கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வரும் அருள் எழிலன் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறார் என்ற எண்ணம் தேன்நிலவில் உள்ள இந்த புதிய அணிசேர்க்கைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

மார்க்சிய புலிகளினதும் (எம் எல் புலிகள்) புலி மார்க்ஸிட்டுகளினதும் (புலி எம் எல்) களினதும் இரசாயணனச் சேர்கையின் விளைவு வெகுவிரைவில் தெரியவரும். இந்த இணைவை புலி அதரவு சக்திகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணிணால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும். புலி ஆதரவு சக்திகளின் ஈடுபாடு இல்லாதவரை கீபோட் மார்க்ஸிட்டுக்களால் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இல்லை.

2010 மாநாடு பற்றி இறுதியாக…..

இந்த புலி ஆதரவு ஊடகவியலாளர் மாநாடு மீண்டும் தவறான வழியிலேயே பயணத்தை தொடர முற்படுவதையே காட்டுகின்றது. ரிரிஎன் தொலைக்காட்சி புலி ஆதரவு ஊடகக் குழுமத்தால் ஆரம்பிக்கப்படவில்லை. எஸ் எஸ் குகநாதனால் உருவாக்கப்பட்ட ரிஆர்ரி தொலைக்காட்சி புலிகளின் கைக்கு மாற்றப்பட்டு ரிரிஎன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அவை வரலாறாகிய பழங்கதை. ஆனால் தற்போது டான் தமிழ் ஒளியை நடாத்திவரும் எஸ் எஸ் குகநாதனைக் கடத்தி – கைது செய்து 15 லட்சம் இந்திய ரூபாய்களைப் பெற்று பின் விடுவித்த அருள் சகோதரர்களில் ஒருவரை இம்மாநாட்டின் பேச்சாளராக அழைத்ததன் மூலம் இம்மாநாடு எதனைச் சொல்ல வருகின்றது?

இம்மாநாடு புலி ஊடகங்கள் தங்கள் இருப்பை அறிவிக்கவும் தாம் இன்றும் பலமாக உள்ளோம் என்பதையும் நிறுவுவதற்காக எடுக்கும் முயற்சியே.

ஏப்ரல் 26 2008 மாநாட்டில் ஊடகவியல் பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் புலி ஆதரவு ஊடகங்களின் போக்கில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. அந்த மாநாட்டின் பின்னரேயே மிகப்பெரும் அழிவை நோக்கி வன்னி மக்களை இப்புலி ஊடகங்கள் அழைத்துச் சென்றன.

ஆகவே வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த ஊடகங்களின் 2010 மாநாடு ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ (“Media and the Tamil question in a globalizing world”) என்ற தலைப்பிலும் பார்க்க ‘புலிமயமாகியுள்ள ஊடகங்களும் தமிழர் பிரச்சினையும்’ என்ற தலைப்பில் கடந்த காலத்தில் தங்களது ஊடகவியல் போக்குப் பற்றியும் அது பேரழிவுக்குத் துணை போனது பற்றியும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி இம்மாநாடு ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

”யாழில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் ஆவணங்களை உறுதிப்படுத்தினால் அங்கு குடியமர்த்தப்படலாம்” மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ

jaffna.jpgயாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்களவர்கள் யாழ்குடா நாட்டில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசித்ததாகவும், அதனால் அங்கு தம்மை மீளக்குடியமர்த்த வேண்டுமெனவும் கோரி யாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் உரிய ஆவணங்களை உறுதிப்படுத்தினால், மூன்றுமாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கியபின், அவர்களுடன் கலந்துரையாடிய போதே அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இங்குள்ள குடும்பமொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபா பெறுமதியான நிவாரண உதவிப் பொருட்களை 1000 ரூபாவாக உயர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் தமிழோசையிடம் கூறினார்.

1970களில் தாம் யாழ்ப்பாணத்தில் வசித்ததாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அங்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்ததாகவும் இந்த மக்கள் தன்னிடம் கூறியதாக மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்தார்.  இவர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக சுமுகமான முறையில் இவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படாதுள்ள நிலையில் 30 வருடங்களுக்கு முன்னர் வெளியேறியதாகக்கூறும் சிங்கள மக்களை குடியேற்ற முனைவது தொடர்பில் சிலர் விசனம் தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இனமத வேறுபாடின்றி மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் மில்ரோய் ஃபெர்ணாண்டோ. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போதுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் நிலைநிறுத்திவிட்டு, அந்தக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கமெனவும் அமைச்சர் கூறினார்.

நன்றி BBC.

._._._._._.

 ”சிங்களக் குடியேற்றங்களை விமர்சிப்பதாலேயே அபிவிருத்திக் கூட்டங்களுக்குகூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை” கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

Sritharan_SivagnamTNA_MPவடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றதாலேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு கூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துவிட்டு தற்போது வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை அரசாங்கம் நடத்துகின்றது. கூட்டமைப்பின் ஆதரவின்றி அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான அபிவிருத்தியும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை ஜனாதிபதி உணரும் காலம் விரைவில் வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எதனையும் அது முன்வைக்காமல் காலத்தைக் கடத்தி வருகின்றது. எனவும் அவர் தெரிவித்தார். 

 ._._._._._.

October 15 2010

 ”யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீள்குடியமர்த்தப்படுவது போல தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களும் தெற்கில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்”  தமிழர் விடுதலைக் கூட்டணி

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதென்பது நியாயமானதே. அதே போல் இனக்கலவரங்களினால் தென்னிலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களும் மீண்டும் அங்கு குடியேறி வாழ வழிவகை செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா இவ்விடயம் தொடர்பாக  அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அரசியல் நோக்கம். சரி பிழைகளுக்கு அப்பால் தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் குடியிருந்திருந்தால் அவர்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிப்பதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் யாழப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் தங்களுக்கு சொந்தக் காணிகள் வேண்டும் என்று கேட்பதில் எவ்வித நியாயமம் இல்லை.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தென்னிலங்கை மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதற்கு எந்தளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை 1956, 1958, 1977, 1983 ஆகிய வருடங்களில் நடந்தேறிய இனக்கலவரங்களின் போது தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிவந்த தமிழ் மக்களுக்கும் உள்ளது. குறிப்பாக அனுராதபுரம், கெக்கிராவ, தம்புள்ள, கலேவெல, திஸ்ஸமகராம போன்ற பகுதிகளிலில்  தங்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறவோ, அல்லது தங்களது சொத்துக்களை விற்பனை செய்யவோ வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் மீள்குடியேற வேண்டும் என அக்கறைக்காட்டும் தரப்பினர் தமிழ் மக்களின் விடயத்திலும் அக்கறை காட்டவேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் தமிழர் விடுதலைக்கூட்டணி பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

._._._._._.

11 Oct 2010 

”யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளை ஆராய மூன்று மாதகால அவகாசம் தேவை” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas Devanandaயாழ்ப்பாணத்தில் மீள்குடியேற வந்துள்ள சிங்கள மக்களின் ஆவணங்களை ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைக்க மூன்று மாதகால அவகாசம் தேவை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வந்து, யாழ்.புகையிரத நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்த போதே அவர் இவ்வாறு அவர்களிடம் தெரிவித்தார்.

“நீங்கள் மீண்டும் அனுராதபுரத்திற்குச் செல்லப் போகின்றீர்களா?” என அமைச்சர் அவர்களிடம் கேட்டபோது முடிவு தெரியாமல் போக மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

அம்மக்களுக்கான குடிநீர்ப்பிரச்சினை, சுகாதார வசதிகளை மாநகரசபை கவனிக்கும் எனவும், அரிசி மற்றும் சமையல் பொருட்களைத் தமது கட்சி நிதியிலிருந்து வழங்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களிடம் தெரிவித்தார்.

தினசரி இரண்டு மூன்று குடும்பங்கள் என மீள்குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருப்பதாகவும், முன்னர் வந்தவர்களில் பாட்சாலை மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் சில மீண்டும் தாங்கள் இருந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை, யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்து வந்த சிங்கள மக்கள் மீள்குடியமர அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும என ஐக்கியதேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

._._._._._.

10 Oct 2010

மீளக்குடியேற யாழ் வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசஅதிபர் பசில் ராஜபக்சவிற்கு கடிதம்.

Imelda_Sugumar_GA_JaffnaBasil_Rajaparksaயாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பசில் ராஜபக்சவிற்கு யாழ். அரச அதிபர் அவசர கடிதம் ஒன்றை நேற்று சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு கோரி யாழ். புகையிரத நிலையத்தில் இவர்கள் தங்கியுள்ளனர் இவர்களில் சிலர் முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு சொந்தக் காணிகளோ சொந்த வீடுகளோ இருக்கவில்லை. இந்நிலையில், எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு வந்திருக்கும் இம்மக்களால் யாழ். மாவட்ட அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரும் இவர்களுக்கு உதவிகளைச் செய்யும் அரசாங்க திட்டங்கள் எதுவுமில்லை. எனவே, இங்கு வந்துள்ள சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உடனடியாக சாத்தியமில்லை. அத்துடன் இவர்கள் தொடர்ந்து புகையிரத நிலையத்தில் தங்கியிருப்பது அவர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என அரச அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போன்ற கடிதமொன்றை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்திற்கும் யாழ். அரச அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.

._._._._._.

Oct 09 2010 

யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு வருகை.

Jaffna_Mapதெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமுக்தி அதிகார சபையின் பணிப்பிற்கு இணங்க அதிகாரசபையின் அதிகாரியான கே.ஜி.குணதிலக்க தலைமையில் இக்குழுவினர் வருகை தந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள குறிப்பிட்ட சிங்களக் குடும்பங்களிடம் சில படிவங்களை வழங்கி விபரங்களைச் சேகரித்தனர்.

இதே வேளை, இம்மக்களுக்கு யாழ்.மாநகர சபையினால் குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்சாரம் என்பன எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் 500 குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 10 குடும்பங்கள் மட்டும் வந்ததாகவும், அடுத்த சில நாட்களில் மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._._._._._.

Oct 08 2010

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தகவல்: விஸ்வா

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்காக மேலும் பல சிங்களக் குடும்பங்கள் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 180 சிங்களக் குடும்பங்கள் யாழப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் (Oct 08 2010)  500 குடும்பங்களைச் சொந்த 1500 பேர் வரவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். அனுதாரபுரம், மிகிந்தலை, பிரதேசங்களிலிருந்து இவர்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.

இதேவேளை, இவ்வாறு மீள்குடியேறும் நோக்கத்துடன் வந்திருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு யாழ்.செயலக அதிகாரிகளுக்கு உயர்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

._._._._._.

Oct 07 2010

1980ல் யாழில் இருந்து வெளியேறிய 180 சிங்களக் குடும்பங்கள் யாழில் மீளக் குடியிருக்க வந்துள்ளனர்!

Jaffna_Welcome1980ஆம் அண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த வந்ததாகக் கூறப்படும் 180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 180 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் இதிலடங்குகின்றனர். சிறுவர்கள் குழந்தைகளோடு வந்துள்ள இவர்கள் யாழ்ப்பணத்தில் குடியேறி நிரந்தரமாக வசிக்க விரும்புவதாகவும், தங்களுக்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ். அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போதும், இவர்களுக்கு சொந்தமான காணிகள் எதுவும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு தமிழர்களோடு திருமண பந்தம் உள்ளது. தமிழிலும் பேசக் கூடிவர்களாகவுள்ளனர்.

நேற்று புதன்கிழமை அரசாங்க அதிபரைச் சந்தித்த இவர்கள் தங்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இது குறித்து அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், இவர்களின் பிரச்சினை தொடர்பாக உடனடி தீர்வு காணும் திட்டம் எதுவும் இல்லை எனத் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இவர்களின் வருகை குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இச்சிங்களக் குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையக் கட்டடத்திலும், விடுதிகளிலும் தங்கியுள்ளனர். தங்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கப் போவதாக யாழ். புகையிரத நிலையக்கட்டத்தில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றனர்.

1980க்களில் யாழ்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர்கள் அனுராதபுரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல், ஆகிய இடங்களில் இவர்கள் வருகின்றனர். இனி நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் வசிக்க விரும்பவதாக  தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கு தங்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என கோருகின்றனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி, நாவற்குழி, ஆகிய இடங்களில் தங்களுக்கு காணிகள் ஒதுக்கப்பட்டதெனவும். அதற்கான கடிதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அக்காணிகளைத் திரும்பத்தரத் தேவையில்லை வேறு இடங்களிலாவது காணிகள் ஒதுக்கித்தர வேண்டும் எனக் கூறுகின்றனர்.

தெற்கின் பல பகுதிகளில் வசித்து வந்த இவர்கள் திடீரென ஒன்றிணைந்து  யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதற்கு தெற்கில் சிங்கள கட்சிகள் அல்லது அமைப்புகளின் பின்னணிகள், தூண்டுதல்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று வவுனியாவில் ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

Welcome_to_Vavuniyaவட மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வட மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வட மாகாணத்தில் நடைபெறும் முதலாவது அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இதுவாகும். யுத்தத்திற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு பாரிய அபி விருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், வடக்கின் வசந்தத்தின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளன.

October 18 2010

”வடமாகாண அபிவிருத்திக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை” ததேகூ பிரேமச்சந்திரன் – ”முரண்பாடுகளை ஏற்படுத்தி மக்களுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்யவிடமாட்டார்கள். அதனால் அழைப்பில்லை” அமைச்சர் பதியுதீன்

Suresh_Premachandran_TNARisath_Bathiyutheen_Ministerஜனாதிபதி தலைமையில் நாளை செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாங்கள் அழைக்கப்படாமைக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு அழைப்பு விடுக்காதது தமிழ் மக்களை புறக்கணிப்பதற்கு ஒப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை செவ்வாய் கிழமை வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை என தெரியவருகின்றது. இந்தக் கூட்டம் வவனியாவில் நடைபெற்ற போதும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பும் பொறுப்பு தமக்கில்லை எனவும், அந்தப் பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க் கருத்துக்களைக் கூறி முரண்பாடுகளை ஏற்படுத்துவார்கள். இதனால் மக்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படமாட்டாது என்பதாலேயே அபிவிருத்தி தொடர்பான இவ்வாறான கூட்டங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை என வர்த்தக மற்றும். கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் உதவிகளின்றி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை வவுனியா மாவட்டத்திற்கான இணைப்புக்கூட்டம் வவுனியா செயலகத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அழைக்கப்படாமை குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

October 17 2010

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி உட்பட 800 பேர் வவுனியாவில் கூடுகின்றனர்

Charles_Mrs_GA_Vavuniyaஎதிர்வரும் செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் வட மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் அதிகாரிகள் என 800 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கூட்டத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விடயங்கள், உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுதல் முதலான விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.