கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

‘ஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ணம்’ செப்டம்பா; 22 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பம்

eng0000.jpgஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்தது.

எனினும் பாகிஸ்தானில் அப்போது ஏற்பட்ட உள்நாட்டு மோதல்கள் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதோடு அதனை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சீ.சீ.) தீர்மானித்தது. இதன்படி 14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.

மினி உலகக் கிண்ணம் எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி  என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா,  இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் பி குழுவில் தென்னாபிரிக்கா,  இலங்கை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் அடங்குகின்றன. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் பங்குபற்றவுள்ள 15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் விபரம் வருமாறு:- குமார் சங்கக்கார (தலைவர்), முத்தையா முரளிதரன் (உப தலைவர்), சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான்,  சாமர கபுகெதர,  எஞ்சலோ மெத்திவ்ஸ்,  திலிண கண்டம்பி,  நுவன் குலசேகர,  திலிண துஷார,  அஜந்த மெண்டிஸ், லசித் மாலிங்க, திலான் சமரவீ, உபுல் தரங்க மற்றும் தம்மிக பிரசாத்.

ஐ.பி.எல்.அணி வாங்கும் பொலிவூட் நாயகன் சல்மான் கான்

salman_khan.pngஐ.பி.எல்., அணியை வாங்க பொலிவுட் நாயகன் சல்மான் கான் ஆர்வமாக உள்ளார். இதையடுத்து சல்மான், ஷாருக்கான் அணிகளின் மோதலை ரசிகர்கள் காணலாம

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் ஏலம் மூலமாக கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் ஜுஹி சாவ்லா இணைந்து கொலகாத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கினர்.  நடிகை பிரித்தா ஜிந்தா (கிங்ஸ் இலவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி(ராஜஸ்தான் ரோயல்ஸ்) என்ற வகையில் அணிகளை வாங்கினர்.

இவர்கள் வரிசையில் சல்மான் கானும் சேருகிறார். முதலாவது ஐ.பி.எல்.,  தொடரின் நிறைவு விழாவில் நடனம் ஆடி இரசிகர்களை கிறங்கடித்த இவர், சொந்தமாக ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார்.

வரும் 2011ல் நடக்க உள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இவற்றில் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியை நேற்று மும்பையில் சந்தித்து பேசியுள்ளார்;.

2011ல் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரில் 2 அணிகளை அறிமுகப்படுத்த உளளதாகவும். அதற்கான ஏலம் 2010,  ஜனவரியில் நடக்க உள்ளது எனவும்  ஒரு அணியின் விலை  1000 கோடி ரூபா முதல் ஆயிரத்து 500 கோடி வரை இருக்கலாம என்றும் லலித் மோடி கூறியுள்ளார்.

விக்டோரியா அணியில் முரளி

murali.jpgஅவுஸ் திரேலிய முதல்தர இருபது20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்படி முரளி 2009-10 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் இருபது20 தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடவுள்ளார். ஏற்கனவே விக்டோரியா அணியில் மேற்கிந்திய சகலதுறை ஆட்டக்காரர் ட்வாயன் பிராவோ ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இலங்கை அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் இந்த தொடரில் தெற்கு அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே விக்டேõரியா அணியில் இணைக்கப்பட்டது தனக்கு கிடைத்த கௌரவம் என்று முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

2வது டெஸ்ட்: இலங்கை 416 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது -நியூஸீலாந்து 159/5

2nd-test.jpgநியூஸீ லாந்து அணிக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தது.

நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. முதல்நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி, இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

ஜெயவர்த்தனே 92 ஓட்டங்கள்  கபுகேதரா 35 ஓட்டங்கள்  பிரசன்ன ஜெயவர்த்தனே 17 ஓட்டங்கள்  தம்மிகா பிரசாத் 6 ஓட்டங்கள்  முரளிதரன் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீரா அதிகபட்சமாக 143 ஓட்டங்கள் குவித்தார்.

நியூஸீலாந்து தரப்பில் ஜீத்தன் படேல் 4 விக்கெட்டுகளும், டேனியல் வெட்டோரி 3 விக்கெட்டுகளும், ஓபிரையன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Sri Lanka 1st Innings 416 / 10 in 130.3 Overs

New Zealand 1 st Innings 159 / 5 in 47 Overs

New Zealand trail by 257 runs with 5 wickets remaining

Fall of Wickets 1-14 (TG McIntosh, 2.1 ov), 2-49 (DR Flynn, 9.2 ov), 3-63 (MJ Guptill, 15.4 ov), 4-148 (JD Ryder, 40.4 ov), 5-149 (JS Patel, 41.4 ov) 
 
Still To Come JDP Oram, DL Vettori, IE O’Brien, CS Martin 

இந்தியாவின் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 83

10092009.jpgஇந்தியா வின் பன்றிக் காய்ச்சல் எண்ணிகை 83 ஆக உயர்ந்துள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 17,777 பேரின் மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் 3273 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி: 60 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணத்தின் தலைநகர் கந்தஹாரில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற மிக மோசமான குண்டு வெடிப்பில் முப்பது பேர் பலியானதுடன் அறுபது பேர் வரை காயமடைந்தனர். பலியான அனைவரும் பொது மக்கள் என கந்தஹார் பொலிஸ் தலைமையதிகாரி கூறினார்.

புலனாய்வுத் தலைமையகம், ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியின் சகோதரர் அஹமட் வலி கார்ஸாயியின் வீடு என்பன குண்டு வெடித்த இடத்துக்கருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தஹாரின் பிரமாண்டமான கட்டடக் கம்பனியும் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகமும் இதனால் சேதமடைந்தன. அருகில் இருந்த கட்டடங்கள், வீடுகளும் இக்குண்டு வெடிப்பில் சேதமடைந்ததாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் சடலங்கள் புதைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பலியானோரின் உடல்கள் உருக்குலைந்து சிதைந்துள்ளமை பிரேதங்களை அடையாளங் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக் கப்படுகின்றனர்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான கந்தஹார் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசம். நேட்டோப் படைகள் இங்கே கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல் 2008 ஜுலை 07ல் காபூல் நகரில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் விட பயங்கரமானதெனக் கருதப்படுகின்றது.

குண்டு வெடித்தபோது பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக உணர்ந்தேன். பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்ட போது, குண்டு வெடித்ததாகக் கூறினர் என்று பிரதேச வாசியொருவர் சொன்னார்.  ஐந்து கார்களில் குண்டு பொருத்தப்பட்டு அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. எதை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை உறுதியாகக் கூறமுடியாதெனக் கூறும் பொலிஸார் இது கார் குண்டுத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல்கள் சர்வசாதாரணமாகி விட்டன. இங்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வன்முறைகள் இடம் பெறுகின்றமை பாதுகாப்புக் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

நீதி விசாரணைகள் அற்ற தமிழ்பேசும் அரசியற் கைதிகள்: சோதிலிங்கம் ரி

Prision photo

கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விசாரணை செய் அல்லது விடுதலை செய் என கோரி இலங்கை சிறைச்சாலைகளுக்குள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடாத்துகின்றனர்

வன்னி யுத்த நடவடிக்கைகளுக்கு முன்னர் வட- கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அல்லது புலிகள் என சந்தேகிக்கப்படும் அரசியற் கைதிகள் அண்ணளவாக 1200 பேர் வரையில் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குறிப்பிடத்தக்கோர் பல வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் இன்றுவரை நீதி விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படாமலேயே (ரிமான்ட் கைதிகளாக) தடுத்து வைக்கப்பட்டுள்னர். இவர்கள் தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற தமது போராட்டங்களை தமது சார்பில் எடுத்துச் சொல்ல யாரும் அக்கறை அற்றவர்களாகவும் உள்ளனர் என்றும், இப்படி சிறைகளில் உள்ள பலர் தாம் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள் என்றும் தம்மீது குற்றங்கள் இருப்பின் நிரூபித்து தண்டனை வழங்கலாம் என்றும் அதைவிடுத்து தம்மை நீதி விசாரணைகள் இன்றி தடுப்புக்காவல் சிறையில் அடைத்திருப்பது இலங்கை அரசின் மனிதாபமற்ற செயல் என்றும் கண்டிக்கின்றனர். இலங்கை அரசு தம்மை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே மனிதாபிமானமற்ற முறையில் நடாத்துவதாகவும் கருத்து கூறுகின்றனர்.

சிறைகளில் உள்ள போராளிகளில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்லது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் அடங்குவர். இச்சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட 1200 பேர்வரையில் வன்னி யுத்தத்திற்கு முன்பு கைசெய்யப்பட்டவர்கள் இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது இலங்கை இராணுவம் கைது சென்று விசாரணையின் பின்னர் கொன்றுவிட்டது இன்னும் சிலர் இவர்களில் பலர் சயனைட் உட்கொண்டு மடிந்து போயினர் என்று கருதப்படுபவர்கள் இலங்கை சிறைச்சாலையிலும் தடுப்பு முகாமிலும் இராணுவ பொலீஸ் முகாம்களிலுமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறு பகுதியினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டவர்களுமாக சிறைச்சாலைகளிலும் உள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் J வாட்டில் 68 பேரும், G செல்லில் 75 பேரும், பெண்கள் பிரிவில் பெண்கள் 53 பேரும் CRP மகசீன் சிறையில் 159 பேருமாக உள்ளனர். G செல்லில் உள்ளவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளில் பலர் 10வருடங்கள், 12வருடங்கள், 15வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்துக் கொண்டும் உள்ளனர்

இதைவிட அநுராதபுரம் சிறைச்சாலைகளில் 200க்கு மேற்ப்பட்டோரும் யாழ்ப்பாண சிறையில் 250 க்கு அதிகமானோரும், அவர்களுடன் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தோருமாக 400 பேர்வரையிலும், பூசா தடுப்பு முகாமில் 330க்கு மேற்ப்பட்டோரும் உள்ளனர். இதைவிட சிறைச்சாலை ஆணையாளரின் கட்டுப்பாடல்லாத CID, DID, NIB போன்ற இராணுவ, பொலீஸ், உளவுப்பிரிவினரின் தடுப்பு முகாம்களிலும் என பரவலாக 1500 பேர்வரையிலான தமிழ் பேசும் அரசியற் கைதிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.

(புலிகளுடனான முள்ளி வாய்க்கால் வரையில் நடைபெற்ற வன்னி இறுதி யுத்தத்தில் யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டவர்களும், பின்னர் வன்னி அகதி முகாம்களில் தெரிவு செய்து கைது செய்ப்படுபவர்களும் ,இறுதி யத்தத்தின்போது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களும், சரணடைந்தவர்களும் உட்பட IDP முகாம்களில் தம்மிடம் பதிவு செய்யும்படி கேட்டுவிட்டு புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இந்த கட்டுரையில் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.)

சிறைக் கைதிகளில் 75 சதவிகிதத்தினர் 2003ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரையிலான காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு எடுத்து வரப்பட்ட விடுதலைப்புலிகள் என்ற சந்தேக நபர்களே. இவர்களில் மீதி 25 சதவிகிதத்தினர் 7வருடங்கள், 10வருடங்கள், 20வருடங்கள் 12 வருடங்களாக நீதிவிசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களேயாவர். இந்தக் கைதிகள் பலர் சித்திரவதைகளினால் ஏற்ப்பட்ட காயங்களுடனும் மனநோயாலும் பாதிப்படைந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் தாம் இந்த சிறைகளிலேயே வாழ்ந்து மடிந்து போயிடுவோம் என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்த சிறைகளில் உள்ள பெண்கள் சிலர் கைதுசெய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தவர்கள். இவர்கள் சிறையில் இருக்கும் போதே குழந்தைகள் பிறந்தும் இக் குழந்தைகள் தற்போது 23 மாதம், 20 மாதம் மற்றும் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளாக உள்ளனர். இக்குழந்தைகள் தமது தாய்களுடன் நீதி மன்றத்திற்கு வரும் காட்சிகளை பலர பார்த்த்துள்ளனர். இந்த குழந்தைகள் ஏன் சிறைகளில் வாழவேண்டும் என்பதை பலரும் கவலையுடன் தெரிவித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சில கர்ப்பிணிப் பெண்கள் இவர்களின் கணவன்மார்களுடன் கைது செய்யப்பட்டவர்கள். கணவர்மார் சிறைச்சாலையின் ஆண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தம் குடும்பங்களுடன் சந்தித்து கலந்துரையாட ஒவ்வொரு கிழமையும் அனுதிக்கப்படுகின்றனர்.

இந்தக் குற்றமற்ற குழந்தைகள் சிறையில் அடைக்கபட்டுள்ளது சட்டவிரோதமானது தானே என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான நிஹால் ஜெயசிங்கேயிடம் கேட்டபோது ‘தாயே குழந்தையின் பாதுகாவலர் என்றும் குழந்தைகளை பிரித்தெடுத்து தனியே பராமரிக்கும் சட்டமுறைகளும், அதற்குரிய சமூக வசதிகளும் அரசிடம் இல்லை என்பதால் இந்தக் குழந்தைகள் தாயுடன் சிறையில் இருப்பது தவிர்க்க முடியாதது’ என்றும் பதிலளித்தார்.

சிறையிலுள்ள குடும்பங்களுக்கு அவர்களது உறவினர்கள் நண்பர்கள் உணவுப் பொருட்கள் பால்மாப் பொருட்கள் கொண்டுவந்து கொடுக்க சிறைச்சாலை அனுமதித்த போதிலும் யாரும் கொண்டுவந்து கொடுக்கத் துணிவதில்லை. காரணம் கொண்டுவந்து கொடுப்பவர்களும் புலிகளாக இனம் காணப்படுவர் அல்லது அவதானிக்கப்படுவர் அல்லது அவர்களும் காணாமல் போய்விடுவர் என்ற பயமேயாகும். இதற்கு உதாரணமாக சில உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் தேசம் நெற்றுக்கு தெரிவிக்கின்றனர்.

தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற அடிப்படையில் தற்போது போராட்டங்களை நடாத்தம் இந்த அரசியற் கைதிகள் முன்பும் பல தடவைகள் பல உண்ணாவிரத போராட்டங்கள் செய்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் எதுவித பலனும் அற்றுப்போயுள்ளன. இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் பற்றி தமிழ்ச்சமூகம் குறிப்பாக புலம் பெயர் சமூகம் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை என்பதையும் இச்சிறைகளில் உள்ள பல முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இப் போரட்டங்களின் பின்னர் தம்மை ஜநா மனிதஉரிமைகள் குழு 2007 டிசம்பர் மாதம் 9ம் திகதி சிறைகளுக்கு வந்து பார்வையிட்டனர் எனினும் அவர்களை விசாரணை செய்ய அல்லது விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்வதாகவும் 3 மாத காலங்களுக்குள் பதில் தருவதாக உறுதி மொழியும் கொடுத்துச் சென்றனராயினும் இதுவரையில் ஜநா மனித உரிமைகள் குழுவிடமிருந்து எந்த பதிலும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கருத்துக்களை தெரிவித்தனர்.

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல வகையான சித்திரவதைக்குள்ளாவதாகவும் இன்றும் இவர்கள் விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இது பற்றி நிஹால் ஜெயசிங்கேயிடம் விசாரித்தபோது ‘ரிமான்ட்டில் உள்ளவர்களும் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகளும் வெளியே எடுத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலங்கை சட்டவியலில் இடம் இல்லை என்றும் இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காது’ என்றும் தெரிவித்தார். நீதிமன்றம் அனுமதி வழங்காமல் சிறையிலிருந்து யாரையும் இலங்கை பாதுகாப்புப் பிரிவினர் எடுத்துச்செல்ல சிறைச்சாலை நிர்வாகம் சிறைச்சாலை ஆணையாளர் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சிறைச்சாலை நிர்வாகத்தில் உள்ள கைதிகள் தமக்கு மூன்று வேளை உணவு தரப்படுவதாகவும், மூன்று வேளையும் சோறு தரப்படுவதாகவும் கூறினர். காலையில் சோறு சம்பல் சொதியுடனும், மதியத்திலும் இரவிலும் சோறு இரண்டு அல்லது மூன்று கறிகளுடன் தரப்படுவதாகவும், இதில் கிழமையில் ஒருநாள் கோழிக்கறியும் கிழமையில் ஒருநாள் மீன்கறியும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிரியாணியும் தரப்படுவதாயும் கூறினர்.

தமது போராட்டங்களில் என்றும் எதுவுமே சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்ய முடியாது என்றும் இப்படி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்தால் தமக்கு தரப்படும் உணவுகள் வசதிகள் குறைக்கப்பட்டு விடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளதாயும் கூறினர்.

அதேவேளை இந்த தமிழ் அரசியல்கைதிகள் கடந்த தமது சிறைக்கால வரலாற்றில் தைப்பொங்கல், புதுவருடம், மாவீரர் தினம், நத்தார் போன்ற தினங்களை கொண்டாடுவதாயும் தெரிவிக்கின்றனர். இதற்கான வசதிகளை சிறைச்சாலை நிர்வாகமே செய்து தருவதாயும் கூறிய இவர்கள் தாம் வாழும் போதே இப்படியான வாழ்க்கையை தவறவிடக் கூடாது என்பதிலும் தாம் இனிமேல் தமது சாதாரண வாழ்க்கை கிடைக்குமா, என்ற ஆதங்கத்துடன் தாம் வாழும் போதே வாழ்ந்து விடவேண்டும் என்ற மனத்துடன் இந்த சிறைகளில் வாழ்வதையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சிறைச்சாலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பேசும் அரசியல் கைதிகள் தமக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் தரப்படுவதாயும் அத்துடன் ரேடியோ தொலைக்காட்சி போன்ற உபகரணங்கள் தரப்பட்டுள்ளதாயும் தாம் IBC Tamil ன் தாயகம் உறவுப்பால நிகழ்ச்சியினை அரச ஒலிபரப்பு தடை இடையூறுகளுக்கு ஊடாகவும் கேட்கக் கூடியதாக இருந்ததாயும் தெரிவித்தனர்.

இந்த சிறையிலுள்ள இன்னும் சிலர் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட முடியாத இயக்கம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர் நோக்கினாலும் ஒரு சிறிய பகுதியினரான புலிகளின் செயற்ப்பாட்டிலிருந்து அது மீண்டும் பரந்து வியாபித்து எழும் என்ற அதீத நம்பிக்கையுடன் வாழ்கின்றதையும் நான் உணர்ந்து கொண்டேன்.

பலர் சித்திரவதைகளில் ஏற்ப்பட்ட வடுக்களினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி மனித உரிமைகள் அமைப்புக்களோ சர்வதேச தமிழர் அமைப்புக்களோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்பதையும் இவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் தம்மீது வைக்கப்பட்டுள்ள குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்க அல்லது தம்மை விடுதலை செய்யவும் தம்மீது செய்யப்பட்ட சித்திரவதைகள் மனித உரிமை மீறல்கள் பற்றியும் கவனம் எடுத்து தமக்கு புலம்பெயர் தமிழர்கள் தமக்கு உதவ வேண்டும் என்றும் இந்த கைதிகள் கோருகின்றனர்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது நிலைபற்றியும் சர்வதேச அமைப்புக்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றியும் முதல் தடவையாக முன்வைக்கபபடும் இந்த பதிவை புலம் பெயர் சமூகம் கவனமெடுத்து செயற்ப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த சிறைச்சாலைகளில் உள்ள பல தமிழ் அரசியல்க்கைதிகள் பலர் தமக்கு தேவையான உடுபுடவைகள் துணிகள் போதாமையால் அவதியுறுவதாகவும் குறிப்பாக பெண்களுக்குரிய ஆடைகள் பற்றாக்குறை உள்ளதும் கவனத்தில் எடுத்து உதவிகள் அளிக்கப்பட வேண்டிய தேவையில் உள்ளனர்.

வட-கிழக்கிலுள்ள மக்களின் அன்றாட தேவைகளை இந்த யுத்தம் நாசம் செய்துள்ளதாலும் தமது சாதாரண வாழ்வையே வாழமுடியாது தவிப்பதாலும் மக்கள் வேறு விடயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே வாழ்கின்றனர். மேலும் மக்களின் பேச்சுச் சுதந்திரம் உட்பட பல சுதந்திரங்கள் விடுதலை இயக்கங்களாலும் அரசினாலும் கட்டுப் படுத்தப்பட்டிருந்தது இந்த உணர்விலிருந்து இன்று வரையில் தமிழ் மக்கள் விடுபடவில்லை அல்லது விடுபட முடியாது காரணிகள் தொடர்ந்தும் உள்ளன.

வட கிழக்கு மக்கள் புலிகளைப் பற்றி எது சரி பேசினாலே தான் புலிஎன அடையாளம் காணப்பட்டு கொல்லப்படுவேன் என எதிர்பார்க்கும் நிலை இருக்கையிலும் சிறையிலுள்ள தமது உடன் பிறப்புக்கள் உறவினர்கள் பற்றி அக்கறை காட்டினாலே தமது உயிருக்கு ஆபத்து என்ற நிலைப்பாட்டில்- அவர்கள் எப்படி சிறையிலுள்ள புலிகளுக்காக கருத்துக்களை முன்வைக்க அல்லது போராட முடியும்.

புலம் பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் முக்கியமாக நிதி சேகரிப்பு பிரச்சாரங்கள் ஆர்ப்பாட்டங்களில் காட்டும் அரசியல் அக்கறையை இக்கைது செய்யப்பட்ட புலிப்போராளிகளில் காட்டமுடியாமைக்கு புலிகளினால் உருவாக்கப்பட்ட கலாச்சாரமே முக்கிய காரணமாகும். அதாவது சிறை சென்றவர்கள் இயக்க விதிப்படி சயனைட் சாப்பிட்டு தன்னை மாய்த்துக் கொள்ளாத- எமது இரகசியங்களை அரசுக்கு கொடுத்தவர்கள் என்ற கருத்துக் கொண்ட கலாச்சாரமே.

சிறையிலுள்ள போராளிகள் தாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தாம் அக்கறையில்லாமல் கைவிடப் பட்டவர்களாகவும் தாம் என்றோ ஒருநாள் இலங்கை அரசினால் கொல்லப்படுவோம் என்ற உணர்வுடனும் வாழ்கின்றனர். இன்னும் சிலர் தாம் விடுதலை செய்யப்படின் வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்குடனும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட விருப்பமும் கொண்டுள்ளனர். அதேசமயத்தில் மற்றைய தமது சக கைதிகளுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி பேச முடியாத நிலையிலும் உள்ளனர். தாம் துரோகிகள் என்றோ அல்லது கருணா ஆதரவாளர்கள் என்றோ பார்க்கப்படும் அல்லது பிரச்சினைகள் எழுந்துவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.

அரசபடைகளின் Extra Judicial Killings – சட்டத்திற்குப் பிறம்பான கொலைகள் : த ஜெயபாலன்

ExtraJudicialKillingsஓகஸ்ட் 25ல் இலங்கை அரசுக்கு எதிரான மற்றுமொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சர்வதேசதளத்தில் விவாதத்திற்கு வந்தள்ளது. ஓகஸ்ட் 25ல் பிரித்தானியாவைச் சேர்ந்த செனல் – 4 தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய வீடியோப் பதிவு ( http://link.brightcove.com/services/player/bcpid1529573111 ) இலங்கை அரசுக்கு புதிய அழுத்தங்களைக் கொடுத்தள்ளது. சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்வது இந்த வீடியோகிளிப்பில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வீடியோப் பதிவு Journalists for Democracy in Sri Lanka என்ற ஊடக அமைப்பினரால் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு இருந்தது. அப்பதிவு நம்பகமானது என்றும் அதில் சீருடையில் வந்தவர்கள் இலங்கை அரச படையினர் என்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மனித உரிமைவாதி ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளதாக சனல் 4 தெரிவித்த உள்ளது.

ஆனால் இலங்கைப் படைவீரர்கள் தொடர்பான இந்த வீடியோக் காட்சி உண்மைக்குப் புறம்பானதென்றும் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. ‘சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது’ என்றும் ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வன்னியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல உண்மைக்குப் புறம்பான ஒளிநாடாக்களை தயார்செய்து ஒளிபரப்பிய பிரித்தானியாவை தலைமையாகக்கொண்ட செனல் – 4 என்னும் தொலைக்காட்சியாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் இலங்கை அரசுக்கு எதிரான பொய்யான பல தகவல்களையும், செய்திகளையும் அவர்கள் தொடர்ந்தும் வெளியிடுவதனை நிறுத்தவில்லை. இதன் ஒரு அங்கமாகவே உண்மைக்குப் புறம்பான வீடியோவொன்றை செனல்-4 வெளியிட்டுள்ளது.”  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அரச படைகள் சட்டத்திற்குப் பிறம்பான திட்டமிட்ட படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது இது முதற்தடவையல்ல. திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் படுகொலை, மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் உதவி நிறுவனப் பணியாளர்களின் படுகொலை என்பவை அண்மைய சில வருடங்களுக்குள் இடம்பெற்ற படுகொலைகள். இப்படுகொலைகள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது பெரும்பாலும் மனித உரிமை நிறுவனங்களால் நம்பப்பட்ட சம்பவங்கள்.

1970ற்குப் பின் இரு தடவை சிங்கள இளைஞர்களின் (ஜேவிபி) கிளர்ச்சிகள், மூன்று தசாப்தங்கள் தொடர்ந்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்பன இடம்பெற்றது. இவற்றில் 200 000ற்கும் அதிகமான தமிழ் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பெரும் உயிரிழப்பிற்கு இலங்கை அரச படைகளும் முக்கிய காரணமாக இருந்தனர் என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் 200 000 பேர்வரை கொல்லப்பட்டிருந்த போதும் அக்கொலைகளில் தொடர்புபட்டிருந்த அரச படையைச் சேர்ந்த எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் உயர்நிலையைப் பெற்றனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலப்பகுதியில் 1991ல் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸாரை படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தற்போது இலங்கை அரசில் அமைச்சராக உள்ளார். பத்திரிகையாளர் லசந்த விக்கிரமசிங்கவை படுகொலை செய்யப்படதை நியாயப்படுத்தும் இன்னுமொருவர் மேர்வின் சில்வா துப்பாக்கியுடன் ஊடகங்களுக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்பவர் இன்னமும் அமைச்சராக உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி சட்டத்தை தங்கள் கையில் எடுத்து படுகொலைகளில் ஈடுபட்டதை சர்வதேச உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. ரீஆர்ஓ படுகொலைகளுடன் தொர்புபட்டவர் கிழக்கின் முதலமைச்சராக உள்ளார். இவர்களையே சட்டத்தை உருவாக்க அந்த நாட்டின் அரசியல் தலைமை தேர்தெடுக்கிறது. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்குபவர்களின் தகமை இப்படி இருக்கும் போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி அமையும்?

சர்வதேச நாடுகள் என்று வர்ணிக்கின்ற அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளும் இரட்டைத் தன்மையான சட்ட நடைமுறையையே கைக்கொள்கின்றன. பிரித்தானியாவில் ஜேன் சார்ள்ஸ் டி மென்ஸிஸ் யூலை 22 2005ல் தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட போது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானிய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. மெனஸிஸின் கொலையை மூடிமறைக்க முயற்சித்த மெற்றோபொலிடன் பொலிஸ் தலைமை அதிகாரி சேர் இயன் பிளேயர் பின்னாளில் தனது பதவியை ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் ஆப்கானிலும் ஈராக்கிலும் பல ஆயிரம் கொலைகளுக்கும் பல நூறு சித்திரவதைகளுக்கும் பொறுப்பாக இருந்த எத்தனை இராணுவ வீரர்கள் அதிகாரிகள் தண்டனை பெற்றனர் என்பது கேள்விக்குறியே. அரச படைகள் அல்லாத தனியார் படைகள் கூட கொலைகளிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டு இருந்தனர்.

மூன்றாம் உலக நாட்டு மக்களின் உயிர்கள் உணர்வுகள் உரிமைகள் அந்த நாடுகளின் ஆளும் அரசுகளால் மட்டுமல்ல சர்வதேசம் என்று சொல்லப்படும் அரசுகளின் ஆளும் அரசுகளாலும் இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த அரசுகளை அம்பலப்படுத்துகின்ற சாட்சியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவருவது மக்களுக்கு யதார்தத்தை உணர்த்த வழிகோலும். இன்று முடியாவிட்டாலும் குற்றவாளிகள் என்றாவது ஒருநாள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். அது காலம் கடந்தது என்றாலும் அது பலருக்கும் படிப்பினையாக அமையும். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பீனசே தனது குற்றங்களுக்கான தண்டனையை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் பெற்றார். இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என யூலை 28 2009ல் கொன்வே ஹோலில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசியப் பொறுப்பாளார் பிரட் அடம்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி வீடியோப் பதிவின் நம்பகத் தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் இரு தரப்பினராலும் மிக மோசமாக மீறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சர்வதேச நாடுகளிடம் உண்டு. அதற்கான சற்லைட் புகைப்பட ஆதாரப் பதிவுகள் இரகசியமாக்கப்பட்டு உள்ளது. அவற்றை வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிலையென சர்வதேசம் எனக் கருதும் நாடுகள் நினைக்கின்றன என்பதே யதார்த்தம்.

பொய்களை உண்மையாக்குவதம் உண்மைகளைப் பொய்யாக்குவதும் அவர்களுடைய அரசியல் தேவைகளைப் பொறுத்தது. இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது அதனாலேயே.

ஆகவே அப்பாவி மக்களின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உண்மைகளை அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும்.

தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று களத்தில்

2nd-test.jpgஇலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி இரண்டாவது டெஸ்டை வெற்றிபெற்றாலோ அல்லது சமநிலையில் முடித்தாலோ தொடரை கைப்பற்றிவிடும்.

எனினும் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று ஆரம்பமாகும் போட்டியில் வெற்றிபெறுவது கட்டாயமாகும். மாறாக இலங்கை இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி சமநிலையில் முடிந்தாலோ இலங்கை அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதோடு இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். எனவே, இலங்கை அணி இரண்டாவது டெஸ்டிலும் நியூஸிலாந்தை வீழ்த்த போராடும்.

மறுபுறத்தில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றிபெறவேண்டிய இக்கட்டான நிலையில் நியூஸிலாந்து களமிறங்குகிறது. எனினும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெளிநாட்டு அணியொன்று வெற்றியீட்டுவது கடினமான காரியமாகும். கடைசியாக இங்கு 2004 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணியே டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நியூஸிலாந்து அணித்தலைவர் டானியல் விட்டோரி 11 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடவுள்ளார். 1998 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடிய விட்டோரி அப்போது தனது 50 ஆவது டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார். இன்று 300 டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார்.

இலங்கை – முதலாவது இன்னிங்ஸ் 
 
பரனவிதான  (பிடி)டயலோர் (பந்து) விட்டோரி  19  
தில்ஷன்  (பிடி) (பந்து)  IE O’Brien  29  
சங்கக்கார (பிடி)  ஓரம் பெளல்ட் (பந்து) விட்டோரி  50 
மகேல  (ஆட்டம் இழக்காது) 79 
சமரவீர  (ஆட்டம் இழக்காது)  78  

நியூசிலாந்து பந்து வீச்சு
 
மார்ட்டின்  14  – 2  –  45 –  0  
IE O’Brien    16 – 3 – 52 – 1  
விட்டோரி  30 – 11 – 65 – 2 
ஓரம்  18 – 6  -45-  0  
படேல்  9  -1  -32-  0  
ர்யதேர்  3 – 1 – 17 – 0 

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு 77வது பலி

10092009.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று வரை இந்தியாவில் 76 பேர் பலியாகியாகி இருந்தனர்.

இந்நிலையில் புனேவில் நடுத்தர வயதுடைய ஷபானா ஷேய்க் என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் பாதிப்புடன் கடந்த 22ம் தேதி சாஷூன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததை அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, வந்தது. இநநிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆகவும், இந்திய அளவில் 77 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புனேவில் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், பெற்றோர்களின் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி நீங்காததை அடுத்து பள்ளிக்கு மாணவர்கள் வருவது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில நிர்வாகம் மக்களை முடிந்தவரை அதிக கூட்டமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் சில இடங்களில் பாதிக்கப்பட்டன