அவுஸ் திரேலிய முதல்தர இருபது20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விக்டோரியா அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதன்படி முரளி 2009-10 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் இருபது20 தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடவுள்ளார். ஏற்கனவே விக்டோரியா அணியில் மேற்கிந்திய சகலதுறை ஆட்டக்காரர் ட்வாயன் பிராவோ ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர, இலங்கை அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் இந்த தொடரில் தெற்கு அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே விக்டேõரியா அணியில் இணைக்கப்பட்டது தனக்கு கிடைத்த கௌரவம் என்று முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.