உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை கீழே இறக்கி கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியேற்றியமை நாட்டுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்க போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும்.

யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

தொடரும் தையிட்டி விகாரை அரசியல்: கட்ட விட்டு கூத்துப் போடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

தொடரும் தையிட்டி விகாரை அரசியல்: கட்ட விட்டு கூத்துப் போடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

 

தையிட்டி விகாரையை தற்போதுள்ள இடத்தில் கட்டியது சட்டவிரோதமானது என நயினாதீவு விகாராதிபதி தெரிவித்துள்ளார். விகாரைக்கு என்று ஒதுக்கப்பட்ட காணயில் விகாரை கட்டப்பட்டிருந்தால் அந்த விகாரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்பதால் இராணுவம் தற்போதுள்ள இடத்தில் விகாரையை வலிந்து கட்டியதாக நயினாதீவு விகாராதிபதி யூரியூப்பர் பவனீசனுக்கு வழங்கிய காணொலியில் தெரிவித்துள்ளார்.

விகாரை கட்ட ஆரம்பித்தது முதல் நயினாதீவு விகாராதிபதி அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார். ஆனாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ் தேசியத்தை உச்சத்தொனியில் பேசிய எவரும் அதற்கு எதிராக விகாராதிபதியோடு தோள் கொடுத்துப் போராட முன்வரவில்லை. மாறாக விகாரையின் அங்குரார்ப்பண வைபவத்துக்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் அமைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது விகாரை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதனை இடிக்கக் கோரி இனக்கலவரம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ் தேசியம். காணி உரிமையாளர்களை நிவாரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அழுத்தங்கள் வழங்கபடுகின்றது. அப்படி நிவாரணங்களை ஏற்றுக்கொள்ளும் காணி உரிமையாளர்களை துரோகிகளாகக் காட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. வல்வெட்டித்துறையில் ஜனாதிபதி அனுரவின் கூட்டத்திற்கு சென்ற மக்களைத் துரோகிகள் என்கின்றனர், பா உ அர்ச்சுனாவுக்கு வாக்களித்த மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கிட்டத்தட்ட துரோகி என்றே சொல்கின்றார். தமிழ் தேசியம் தற்போது துரோகிப்பட்டம் வழங்க ஆளில்லாமல் சொந்த மக்களுக்கே துரோகிப்பட்டம் வழங்குகின்றது.

காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வும் திணிக்கப்படாது என காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.

சந்திப்பில் கலந்து கொண்டிருந்த காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினர், ‘யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர். பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது’ என ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று தையிட்டி திஸ்ஸவிகாரை சட்டவிரோதக் கட்டடம் எனவும் விகாரைக்கு உரியதான காணியை மாற்றுக் காணியாக வழங்கினாலும் அது தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை. அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர் என்றார்.

மேலும், மாவட்டச் செயலராக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் என்றும் அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உட்பட 14 ஏக்கர் காணிகள் திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமானவை . அந்தக் காணியை ஒருபோதும் எவருக்கும் கையளிக்க முடியாது . அதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதிக்கமாட்டோம் என்று அகில இலங்கை பெளத்த மகா சம்மேளனம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்குத் ஏற்கனவே கடிதம் ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளது எனவும் அறிய முடிகிறது.

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்

 

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானாஇ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முடிந்தால் மௌளானாவை நாடுகடுத்தி இலங்கைக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். இல்லையேல் சுவிஸ்க்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தேசம்நெற்க்கு வழங்கிய செய்தியில் தெரிவித்து இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? என கேள்வியெழுப்பிய பிள்ளையான், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார். ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? என தெரிவித்தார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்மீதான குற்றச்சாட்டு பற்றி மௌனம் களைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ‘ ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவு செய்து படிக்குமாறும், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட ‘அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

 

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பாதாகை தொடர்பில் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என குறிப்பிடப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே , அது தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது

 

தமிழர் பகுதிகளில் தமிழர்கள் அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களை நியமிக்கப்படுவார்கள் !

தமிழர் பகுதிகளில் தமிழர்கள் அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களை நியமிக்கப்படுவார்கள் !

தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்களுக்கு அவர்களது தாய் மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை கவலைக்குரியதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களில் கூட இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இது குறித்த புரிதல் எமக்கிருக்கிறது. எனவே தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் பிரதேசங்களில் முடிந்தவரை தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அல்லது சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எமது முதலாவது 5 ஆண்டு ஆட்சி காலத்துக்குள் இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். அரசாங்கம் என்ற ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்தவர்கள் என்ற ரீதியில் விரைவில் உரிய தீர்வினை வழங்குவோம் என்றார்.

 

தம்பியை அடுத்து அண்ணன் நாமலுக்கும் அழைப்பாணை !

தம்பியை அடுத்து அண்ணன் நாமலுக்கும் அழைப்பாணை !

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளைப் பரிசீலித்த பின்னர்இ கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டார்.

முன்னதாக குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுஇ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை நாமல் ராஜபக்சவின் சகோதரரான யோஷித ராஜபக்ஷஇ ரத்மலானை சிறிமல் பிரதேசத்தில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கிய தொடர்பில்இ அண்மையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சாமான்யன் முப்படைகளின் தலைவனாக நின்று தேசிய கொடியை ஏற்றிய போது நான் கண்கலங்கிட்டேன் – பிரதியமைச்சர் அருண் நெகிழ்ச்சி !

சாமான்யன் முப்படைகளின் தலைவனாக நின்று தேசிய கொடியை ஏற்றிய போது நான் கண்கலங்கிட்டேன் – பிரதியமைச்சர் அருண் நெகிழ்ச்சி !

 

ஓர் சாமான்ய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஓர் குடிமகன் முப்படைகளின் தலைவராக சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றிய போது அவரின் பின் வரிசையில் நின்ற நான் கண் கலங்கிவிட்டேன் என நெகிழ்ச்சியான பேஸ்புக் பதிவொன்றை திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா பகிர்ந்துள்ளார்.

குறித்த பேஸ்புக் பதிவில், நான் சரியாக அந்த கொடிக் கம்பத்துக்குப் பின்னால் இருந்த தொகுதியில் நின்றிருந்தேன். அவர் தேசியக் கொடியை ஏற்றிய பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை.

ஒரு சாமானியன் இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார். எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் தாண்டி இன்று அரியாசனம் இருக்க வேண்டிய இடத்தில் சாமான்ய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். இரவு பகல் பாராது அயராது நாட்டிற்காக உழைக்கின்றார்.

அவரைப் பற்றி மிகவும் நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மாத்திரமே தெரியும் அவர் எவ்வளவு சாமான்யமானவர் என்று. இன்று அவர் மீது சிலர் கொண்டுள்ள வஞ்சம் ஒரு சாதாரண விடயம் அல்ல. அது ஏழை எளிய அடித்தட்டு வர்க்கத்தின் மீது கொண்டுள்ள வஞ்சம். வர்க்க வஞ்சம். இதனை நாம் சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது, கணக்கெடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கவும் முடியாது. நாம் நமது பயணத்தை மேற்கொள்வோம். இதுவொரு நீண்ட பயணம்.

என்னமோ இதுவரைக்கும் அரிசி இறக்குமதி செய்யாத நாடு போல. உப்பில் தன் நிறைவு கண்ட நாடு போல. எப்படியோ எல்லாம் வசை பாட நினைத்தவர்கள் இன்று இதில் வந்து நிற்பதே யதார்த்தம். அனுபவம் இல்லை என்றார்கள், அனுபவசாலிகள் பதுக்கிய பல விடயங்கள் வெளியே வருகின்றன.

உலக நாடுகள் உதவாது என்றார்கள். நிறுத்தி வைத்த செயல் திட்டங்கள் எல்லாம் மீள ஆரம்பிக்கின்றன. வரிசை யுகம் வரும் என்றார்கள். வரிசையில் உதவ பலர் முன் வருகின்றார்கள்.

 

இந்த சாமானியனின் ஆட்சியில், இந்த நாடு எழும், மக்கள் வெல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.

24 மணிநேர கிழமையில் 7 நாட்கள் துரித கடவுச்சீட்டு விநியோகம் !

24 மணிநேர கிழமையில் 7 நாட்கள் துரித கடவுச்சீட்டு விநியோகம் !

கடவுச்சீட்டுகள் அச்சிடுவதை விரைவுபடுத்தவும், காலதாமதத்தைக் குறைக்கவும் கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது நிலவும் பாஸ்போர்ட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1.1 மில்லியன் “P” வகை சிப் உட்பொதிக்கப்பட்ட கடவுச்சீட்டு கையேடுகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாஸ்போட் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை நீக்கும் வகையில்இ தினசரி 4000 கடவுச்சீட்டுகளை வழங்கும் வகையில் 24/7 செயல்பட குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பா.உ க்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதியை கரிநாளாக கூறி தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைக்கு தனித்தேசம் தான் தீர்வு என்ற தோரணையில் பேரணி நடாத்தியிருந்தனர் பா.உக்களான் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர். அடுத்த நாளே கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் என தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய வழி வந்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயற்பட மந்திராலோசனை நடாத்துகின்றனர் என சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்.பி.பி அரசை எதிர்கொள்ள இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் சிறையில் இருந்து 17 தமிழ் கைதிகள் விடுதலை !

யாழ் சிறையில் இருந்து 17 தமிழ் கைதிகள் விடுதலை !

சுதந்திர தினமான நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார் . 77 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .