மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

மாவை மரணச்சடங்கில் சர்ச்சைக்குரிய பதாகை – விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் !

 

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பாதாகை தொடர்பில் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என குறிப்பிடப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே , அது தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *