செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் சம்பள உயர்வு இல்லை : எரிசக்தி அமைச்சர்

electricity.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு இந்த வருடத்தில் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாதென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்தம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2009ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வுகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் காரணமாக இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள நேரிட்டதாகவும் இதனால் சம்பள உயர்வுகளை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது பற்றுடையோர் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மின்சாரசபை ஊழியர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும், உரிய பதில் கிடைக்காதவிடத்து பணிப் பகிஷ்கரிப்பு காலம் நீடிக்கப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் பணிப் பகிஷ்கிரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜமால்தீனின் கொலையுடன் தொடர்பு; இரு சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை -அதிரடிப்படையுடனான மோதலில் சம்பவம்

nimal_madiwaka.jpgமட்டக் களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பணிப் பாளர் பொலிஸ் அத்தியட்ச கர் ஜமால்தீனின் படுகொலை சம்பவத்து டன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கல்முனை துறைநீலாவணை களப்புப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து களப்புப் பகுதிக்கு அண்மித்துள்ள காட்டில் மறைந்திருந்த சந்தேக நபர்களை பிடிப்பதற்காக சென்ற போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பதில் தாக்கு தல்களிலேயே இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி, மகஸின்கள் மற்றும் ரவைகளை மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் கந்தப்பிள்ளை அல்லது கந்தகுடி என்ற பெயருடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மற்றவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்-முஸ்லிம் மக்கள் உறவில் அங்காடி வியாபாரம் முக்கியத்துவமிக்கது: யு.எல்.எம்.முபீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான உறவில் அங்காடி வியாபாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் கூறினார்.  புனித ரமழானை முன்னிட்டு காத்தான்குடி அங்காடி வியாபாரிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மட்டக்களப்பு மாவட்டததைப் பொறுத்த வரை தற்போது தமிழர்களும் முஸ்லிம்களும் விரும்பிய இடங்களுக்குச் சுதந்திரமாக சென்றுவரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது குறித்து சகலரும் மகிழ்ச்சியடைய வேண்டும். இப்படியான சூழ்நிலை காரணமாக எமது மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைவதோடு இனங்களிடையே உறவும் வலுப்பெற்று வருகின்றது.

அங்காடி வியாபாரிகைளப் பொறுத்த வரை எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தற்போது தமிழ்க் கிராமங்களில் எல்லாம் சென்று வியாபாரம் செய்யும் போது அவர்களுக்கிடையிலான உறவையும் பேணி வருகின்றார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். சங்கத்தின் ஆலோசகர் ஏ.எல்.எம். பலுலுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்களான சுமார் 500 பேருக்கு பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பன்றிக்காய்ச்சலால் 90 ஆயிரம் பேர் பலியாகலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

10092009.jpgஅமெரிக் காவில் தற்போது நிலவும்  குளிர் காலத்தில், பன்றிக்காய்ச்சல் நோய்; பல பகுதிகளுக்கும் பரவி, 20 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படலாம்; என்றும் இதனால் 90 ஆயிரம் பேர் பலியாகலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா 2009-பன்றிக் காய்ச்சல் நோய்க்கான ஆயத்தம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தாண்டின் இறுதியில் ஆறு கோடி முதல் 12 கோடி வரையிலான அமெரிக்கர்களுக்கு, பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று அறிகுறிகள் போன்று தோன்றலாம். 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான அமெரிக்க மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படலாம். பன்றிக் காய்ச்சல் நோயால், 30 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை பலியாகலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பர். இவை அனைத்தும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. பிரிட்டனுடன் ஒப்பிடும் போது,  அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணக் கிராமங்களுக்கு மேலும் 100 வைத்தியர்களும் 200 தாதியர்களும் நியமனம்!

nimalsiripaladasilva.jpgவடக்கு நிவாரணக் கிராமங்களில் பணியாற்ற மேலும் 100 வைத்தியர்களும் 200 தாதியர்களும் அடுத்த மாதம் 15 ஆம் திகதி அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

வடக்கு நிவாரணக் கிராமங்களில் விசேட வைத்தியர்கள் உட்பட 75 வைத்தியர்களும் 90 தாதியர்களும் தற்பொழுது கடமையாற்றி வருகின்றனர். இங்கு தங்கியுள்ள மக்களுக்கு இப்போது சிறந்த வைத்திய வசதிகள் வழங்கப்பட்டு வருவதானால் நிவாரணக் கிராமங்களில் மரண வீதம் குறைந்துள்ளது.

இத்தாலி மற்றும் ஜெர்மன் நாடுகளின் உதவியில் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் செட்டிக்குளம் தள வைத்தியசாலை அமைச்சரவை அனுமதியுடன் அரசுடமையாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். 

தன்சானியாவில் ஷியாம்லால் கொலை செய்யப்பட்டுள்ளார்-ஐ.நா.வின் பேச்சாளர் தகவல்

தன்சானியாவின் அருஷா நகரில் அண்மையில் தமது வீட்டில் இறந்துகிடக்க காணப்பட்ட ஷியாம்லால் ராஜபக்ஷ, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பேச்சாளர் மிசேல் மொன்ராஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகனான ஷியாம்லால் இறக்கும் போது ருவாண்டாவுக்கான ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்றவியல் விசாரணை சபையில் வழக்குரைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மரணம் குறித்து, தன்சானியா, இலங்கை ஆகிய இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று மொன்ராஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இன்னமும் அறிவிக்கப்படாததால் விசாரணை முடிவுகள் பற்றிய விபரங்களை தம்மால் வெளியிட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கல்வி மேம்பாட்டுக்கு 21 கோடி – வட மாகாண ஆளுநர் தகவல்

north-governor.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு 21 கோடிக்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் பீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். முதல்கட்டமாக யாழ் மாவட்டத்தில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படாத 19 பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய 9 கோடியே 85 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் யாழ் மாவட்ட கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 219.861.198 ரூபாவை ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தின் வளங்களை அதிகரிக்க 43 மில்லியன் ரூபாவையும் சுகாதார மத்திய நிலையங்களை நவீனமயப்படுத்த 13 மில்லியன் ரூபாவையும் உள்ளக விiயாட்டரங்கொன்றை அமைக்க 12 மில்லியனையும் கைலாசபதி கேட்போர் கூடத்தை குளிரூட்டி வசதிகளுடன் நவீனமயப்படுத்த 10 மில்லியனையும் அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய 8 மில்லியனையும் ஒதுக்கியுள்ளதாக மேலம் தெரிவிக்கப்படுகிறது.

மீள்குயேற்றத்தின் பின்னரான தேர்தல்களே மக்கள் ஆணையை பெற்றவையாக அமையும்:ரவூப் ஹக்கீம்

எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதற்கிடையில் அண்மையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட பின் இத் தேர்தல்கள் இடம்பெறுமாயின் அது நீதியானதும், நேர்மையானதும் மக்கள் ஆணையைப் பெற்றதுமான தேர்தலாக அமையுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் நிவாரண கிராமங்களில் உள்ள மக்களை மிக விரைவாக சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவோம் என ஜனாதிபதியும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர். நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

யாழ் தீவகற்பத்திலிருந்து விடுதலை புலிகள் வெளியேறும் போது அவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் விரைவாக மீள்குடியேற்றப்படின் இப்பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக ஒழுங்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும். எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே இடம்பெயர்ந்த இம்மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்ட பின்னர் தேர்தல்கள் நடத்தப்படின் அது நீதியான மக்கள் ஆணையைப் பெற்ற தேர்தலாக அமையும்.

அதேவேளை சமாந்தரமாக ஏறத்தாழ 20 வருடங்களிற்கு முன் விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றத்தில் ஆர்வமாக காணப்படுகின்றனர். இவ்விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கை காட்டுவதாக நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்ததன் பின்னணியில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் 14 பஸ்களில் 450 குடும்பங்களை அழைத்துச் சென்று முஸலி பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தொட்டம் தொட்டமாக மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இது உண்மையில் அப்பகுதியை பார்த்துவருவதற்கு சென்ற மக்களை கூடாரங்களை அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ள முயற்சியானது அம்மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஸ் நடைமுறை அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை தருகிறது. அங்குள்ள பாதுகாப்பு தரப்பைச் சார்ந்த அதிகாரிகள் அம்மக்களை வெளி இடங்களிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இப் பாஸ் நடைமுறை அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிற்கு காணப்படுவதில்லை, தமக்கு மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதை விட அவர்களுக்கு இருக்கின்ற வாழ்வாதார பிரச்சினை குறிப்பாக கடற்படையினர் மீனவர்களுக்கு கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை.தற்போ மீன் பிடிப்பதற்கு உகந்த காலமாதலால் சிலாவத்துறை , முஸலி பிரதேச மீனவர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.எனினும் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

வாழ்வாதாரத்திற்காக மீள்குடியேற்றத்தை விரும்பும் ஆண்களையாவது அங்கு சென்று விவசாயம், கடற்றொழில் செய்வதற்கான உரிமைகளையும், அனுமதியையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அம்மக்கள் ஊக்கத்துடன் காணப்படுவர்.வெறும் அரசியல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெறும் அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்கின்றனர்.எனவே அதிகாரிகள் மக்களுடனான தொடர்பாடலில் நெகிழ்வு போக்கை கடைப்பிடிக்க வேணுமென நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

அதேவேளை மிகப்பெரிய முகாம்கள்,பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மீளக்குடியேறப் போகின்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது தமது சொந்த வதிவிடங்களை தாம் இழக்க நேரிடும் என அச்சத்துடன் விசனம் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக சிலாவத்துறையில் மக்கள் வாழ்ந்த இடங்களி சுற்றி வளைத்து கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று முல்லைத்தீவிற்கு அண்மையில் சென்ற பள்ளிவாசல் சம்மேளன தலைவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் தற்போது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மக்க்ளில் பூர்வீக இடங்களை எவ்வாறு விரைவாக கையளிப்பது என இடம்பெயர்ந்த மக்களிடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும் திருகோணமலை பிரதேசம் வெருகல் பகுதியில் உப்பூறல் பகுதியில் அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் 70 முஸ்லிம் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துச் சென்றார். 5 நாட்களின் பின் ஈச்சிலாம்பற்று பிரதேச செயலாளர் அங்கு சென்று அம்மக்களிடம் மீள் குடியேறுவதற்காக அனுமதிக்கப்படவில்லை,இதில் பல பிரச்சினைகள் உள்ளது எனத் தெரிவித்து மீண்டும் அழைத்து வந்தார்.இது ஓர் அடிப்படை உரிமைப் பிரச்சினை.

எனவே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவைப் பேணுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஆக்க பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றப்படுவதில் கூட பிரச்சினைகள் காணப்படுவதால் எதிர்காலம் முறித்த எதிர்பார்ப்புகளிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே இனங்களுக்கிடையேயான உறவு சம்பந்தப்பட்ட விடயத்தில் மிகக் கவனமாகவும், தூரநோக்குடனும் செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்ப்டையில் இவ்விடயத்தில் நாம் தமிழ் தலைமைகள் உணர்வு பூர்வமாகவல்லாது நியாய பூர்வமாக சிந்தித்து சொற்பமான இம் முஸ்லிம் குடுமபங்களின் மீள் குடியேற்றத்தை அணுக வேண்டும்” என அவர் தெரிவித்தார்

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி செப்டம்பர் 5 இல் ஆரம்பம்

sri-lankan-students.jpgநடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்ஹ தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 23 மாவட்டங்களில் 25 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இப்ணியில் சுமார் 10.000 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். கூடிய விரைவில் பரீட்சை பெறுபேற்றினை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று களத்தில்

2nd-test.jpgஇலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி இரண்டாவது டெஸ்டை வெற்றிபெற்றாலோ அல்லது சமநிலையில் முடித்தாலோ தொடரை கைப்பற்றிவிடும்.

எனினும் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று ஆரம்பமாகும் போட்டியில் வெற்றிபெறுவது கட்டாயமாகும். மாறாக இலங்கை இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி சமநிலையில் முடிந்தாலோ இலங்கை அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதோடு இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். எனவே, இலங்கை அணி இரண்டாவது டெஸ்டிலும் நியூஸிலாந்தை வீழ்த்த போராடும்.

மறுபுறத்தில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றிபெறவேண்டிய இக்கட்டான நிலையில் நியூஸிலாந்து களமிறங்குகிறது. எனினும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெளிநாட்டு அணியொன்று வெற்றியீட்டுவது கடினமான காரியமாகும். கடைசியாக இங்கு 2004 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணியே டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நியூஸிலாந்து அணித்தலைவர் டானியல் விட்டோரி 11 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடவுள்ளார். 1998 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடிய விட்டோரி அப்போது தனது 50 ஆவது டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார். இன்று 300 டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார்.

இலங்கை – முதலாவது இன்னிங்ஸ் 
 
பரனவிதான  (பிடி)டயலோர் (பந்து) விட்டோரி  19  
தில்ஷன்  (பிடி) (பந்து)  IE O’Brien  29  
சங்கக்கார (பிடி)  ஓரம் பெளல்ட் (பந்து) விட்டோரி  50 
மகேல  (ஆட்டம் இழக்காது) 79 
சமரவீர  (ஆட்டம் இழக்காது)  78  

நியூசிலாந்து பந்து வீச்சு
 
மார்ட்டின்  14  – 2  –  45 –  0  
IE O’Brien    16 – 3 – 52 – 1  
விட்டோரி  30 – 11 – 65 – 2 
ஓரம்  18 – 6  -45-  0  
படேல்  9  -1  -32-  0  
ர்யதேர்  3 – 1 – 17 – 0