மட்டக் களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பணிப் பாளர் பொலிஸ் அத்தியட்ச கர் ஜமால்தீனின் படுகொலை சம்பவத்து டன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கல்முனை துறைநீலாவணை களப்புப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து களப்புப் பகுதிக்கு அண்மித்துள்ள காட்டில் மறைந்திருந்த சந்தேக நபர்களை பிடிப்பதற்காக சென்ற போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பதில் தாக்கு தல்களிலேயே இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி, மகஸின்கள் மற்றும் ரவைகளை மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் கந்தப்பிள்ளை அல்லது கந்தகுடி என்ற பெயருடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மற்றவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.