வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு 21 கோடிக்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் பீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். முதல்கட்டமாக யாழ் மாவட்டத்தில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படாத 19 பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய 9 கோடியே 85 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் யாழ் மாவட்ட கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 219.861.198 ரூபாவை ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ் பல்கலைக்கழகத்தின் வளங்களை அதிகரிக்க 43 மில்லியன் ரூபாவையும் சுகாதார மத்திய நிலையங்களை நவீனமயப்படுத்த 13 மில்லியன் ரூபாவையும் உள்ளக விiயாட்டரங்கொன்றை அமைக்க 12 மில்லியனையும் கைலாசபதி கேட்போர் கூடத்தை குளிரூட்டி வசதிகளுடன் நவீனமயப்படுத்த 10 மில்லியனையும் அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய 8 மில்லியனையும் ஒதுக்கியுள்ளதாக மேலம் தெரிவிக்கப்படுகிறது.