தன்சானியாவில் ஷியாம்லால் கொலை செய்யப்பட்டுள்ளார்-ஐ.நா.வின் பேச்சாளர் தகவல்

தன்சானியாவின் அருஷா நகரில் அண்மையில் தமது வீட்டில் இறந்துகிடக்க காணப்பட்ட ஷியாம்லால் ராஜபக்ஷ, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பேச்சாளர் மிசேல் மொன்ராஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகனான ஷியாம்லால் இறக்கும் போது ருவாண்டாவுக்கான ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்றவியல் விசாரணை சபையில் வழக்குரைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மரணம் குறித்து, தன்சானியா, இலங்கை ஆகிய இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று மொன்ராஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இன்னமும் அறிவிக்கப்படாததால் விசாரணை முடிவுகள் பற்றிய விபரங்களை தம்மால் வெளியிட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *