செய்திகள்

செய்திகள்

செய்திகள்

திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல சட்டமா அதிபர் இணக்கம்

tissa.jpgஊடக வியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்கப்படுமிடத்து அதயை தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜே.எஸ் திஸ்ஸநாயகத்து 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியமை தெரிந்ததே.

நோத்ஈஸ்ட் மாதாந்த இதழின் செம்மையாக்கல், பதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் பயங்கரவாதத்திற்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டார்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு

2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங் களில் முடிவுறுவதற்காகவுள்ள உள் ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு ள்ளதாக மாகாண சபைகள், உள்ளூ ராட்சி சபைகள் அமைச்சு அறிவித்து ள்ளது.

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள் சிலவற்றின் பதவிக் காலம் 2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் முடிவுறுகிறது. இதன்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் அமைச்சருக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அமைச்சர் ஜனக பண்டார தென்ன கோன் நீடித்துள்ளார்.

வெளிநாட்டு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட புலிகளின் பாரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

ltte-ship.jpgதேசிய புலனாய்வு துறையினரின் தகவலுக்கமைய வெளிநாட்டு கடற் பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான ‘பிரின்ஸஸ் கிரிஸான்டா’ என்ற பாரிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடற்படை கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினரால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்தக் கப்பலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸரசமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆயிரக் கணக்கான கடல் மைல்களுக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட இந்தக் கப்பல் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட இந்தக் கப்பல் இலகுரக விமானம் இறங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 5000 மெற்றிக் தொன் எடையுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும்.

புலிகளிடமிருந்த பல கப்பல்கள், கடற்படையினரால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டன. புலிகளிடமிருந்த மிகப் பெரிய கப்பல் இது என்று கடற்படைத் தளபதி சுட்டிக் காட்டி னார். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த ஆழ்கடலில் தரித்து நின்ற கப்பலை பார்வையிடுவதற்கென கொழும்பு துறைகத்திலிருந்து இரண்டு டோராக்களில் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதி தலைமையில் ஊடகவியலாளர் குழுவினர் கப்பலை சென்று பார்வையிட்டனர். வெற்றிகரமாக கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு வந்ததை பாராட்டும் வகையில் கப்டன் தஸநாயக்கவிடம் கடற்படைத் தளபதி நற்சான்று பத்திரத்தை சமர்ப்பித்தார்.

இந்தக் கப்பல் ஆயுதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுக ளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் மூலமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் கடற்படையினர் வெற்றிகரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்ததுடன் புலிகளின் கப்பல்களை இதுபோன்று கொழும்புக்கு கொண்டுவரவும் முடிந்தது என்று கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். இலங்கை கடற்படையினரின் பாவனைக்கு இந்த கப்பல் பயன்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோருகிறது ஐ.நா

_philipalston.jpgமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த 13ஆம் திகதி ‘சன்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதி விசாரணைக்குப் புறம்பான உடனடி மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் மரண தண்டனை விவகாரங்களுக்கு பொறுப்பான விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்களை சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார்.

பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17 ம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது.

தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற்குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார்.

அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள் இனிமேல் பொலிஸில் பதிவு செய்ய வேண்டியதில்லை – பசில் ராஜபக்ஷ

basil.jpgதமிழர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். பொலிஸ் மா அதிபர் இது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஹட்டனில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் தலைமையில் நேற்று முன்தினம் ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் விசேட விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து கொண்ட சந்திரசேகரன் மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும், மலையக மக்களின் இனத்துவ, தனித்துவத்தை நிலைநாட்டுவதிலும், தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

அமைச்சரவையில் இருந்து கொண்டு சந்திரசேகரனும், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அவசரகால சட்டத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இவர்களை விசாரிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

இப்படி ஒரு சங்கடமான நிலைமை எமக்கு ஏற்பட்டது. ஜனாதிபதி இது தொடர்பாக சந்திரசேகரனுடன் பேசினார். அமைச்சர் தனது நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விளக்கமளித்தார். மனசாட்சியின்படி நடக்க இடமளித்து மஹிந்த சிந்தனையில் மனசாட்சிக்கு மதிப்பளிப்பது என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உங்கள் தலைவரின் கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

அரசில் பங்குவகித்து அமைச்சராக இருந்தாலும் தமது நிலைப்பாட்டில் நின்று மனசாட்சியின்படி நடப்பதையிட்டு பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார். உங்கள் தலைவர் மலையக மக்களின் மேம்பாடு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்தும் உரத்து குரல் எழுப்புபவர். கடந்த காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டு அரசாங்கம் என்றவகையில் உங்கள் கோரிக்கைகளை ஏற்று செயற்பட்டுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களை உருவாக்குவதைப் பற்றி வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள். இதுபற்றி நடவடிக்கை எடுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து சட்டப்படியான தீர்மானங்களை எடுக்க செயற்பட்டு வருகின்றது.

தமிழர்கள் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். இனி பொலிஸ் பதிவினை தமிழர்கள் செய்யத் தேவையில்லை. பொலிஸ் மா அதிபர் இந்த பேச்சு முடிந்த பின்னர் உத்தியோகபூர்வமாக உங்களுக்கு இதனை அறிவிப்பார். 1988, 1989 கால கட்டத்தில் சிங்கள மக்களுக்கும் இந்த தொல்லை இருந்தது.

சிங்கள மக்களும் வெகுவாக சிரமப்பட்டார்கள். அப்போது மறித்து சோதனை செய்யும் போது கிளிநொச்சி அடையாள அட்டை அல்லது தமிழர்கள் என்றால் எவ்வித தடங்கலோ சோதனையோ இன்றி பயணித்தார்கள். பின்னர் இந்நிலைமை மாறி அன்று சிங்கள மக்கள் அனுபவித்த சங்கடங்களை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. அம்பாந்தோட்டை அடையாள அட்டை என்றால் இன்முகத்துடனான புன்சிரிப்பும் மேலதிகமாகவே கிடைத்தன.

ஒரு சிலர் ஜனாதிபதியின் ஊரா, உறவினரா? என்று ஒரு மரியாதையும் செலுத்தினர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பட்டியல் கிடைத்தவுடன் நீதியான விசாரணை இடம்பெற்று விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். மலையக மக்கள் முன்னணி விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் மலையக மக்களின் மேம்பாட்டிற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.

எத்தகைய தடைகள் நேரிடினும் உலகின் முன்னணி நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – ஜனாதிபதி மஹிந்த

எத்தகைய தடைகள் வந்தாலும் உலகின் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த நான்கு வருடங்க ளில் பாரிய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது என தெரி வித்த ஜனாதிபதி, எம்மை முன்னுதார ணமாகக் கொண்டு உலக நாடுகள் செயற்பட ஆரம்பித்துள்ளன எனவும் தெரிவித்தார்.

எமது மக்களைப் பற்றிய பெரும் நம்பிக்கை எனக்குண்டு. அவர்கள் இன, மத மொழி, பேதங்களுக்கப்பால் தாய் நாட்டைப் பெரிதும் நேசிப்பவர்கள் என் பதும் எனக்குத் தெரியும் எனவும் ஜனா திபதி தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் விருதுகளைப் பெற்ற இலங்கையின் புத்தாக்குனர்களைக் கெளரவிக்கும் நிகழ்வொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரத்ன ஆகியோருடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த நான்கு வருடகாலமானது முக்கியமான காலகட்டமாகும். பயங்கரவாத த்தை முற்றாக ஒழிந்த எம்மை முன்னு தாரணமாகக் கொண்டு முழு உலகமும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. நாம் எம் தாய் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எமது நாடு முழு உலகிலும் முன்னணி நாடாகத் திகழ வேண்டும். எத்தகையத் தடைகள் வந்தாலும் நாம் எமது இலக்கை அடைய வேண்டும்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் கிராமத்து இளைஞர், யுவதிகளே. புதியதைச் செய்ய புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். இலங்கையை உலகின் முன் அடையாளப்படுத்த அவர்கள் தயாராகியுள்ளனர்.

எமது நாட்டை மிகவும் நேசித்த குமாரதுங்க முனிதாச என்பவர் “புதியதைக் கண்டுபிடிக்காதவர்களை உலகம் கண்டு கொள்ளாது” என்று கடந்த காலங்களில் பட்டத்தைக்கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த யுகமொன்றிருந்தது. புதிய கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக எவரும் சிந்திக்கவில்லை.

வாடகை வீட்டில் வாழ்வது போலவே எம்மக்கள் அப்போது வாழ்ந்துள்ளனர். முடிவில்லாத பயங்கரவாத யுத்தத்தைப் போன்றே நாட்டிற்கும் எதிர்காலமில்லை என எண்ணிய புத்தாக்குனர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டனர். இத்தகைய நிலையை கடந்த நான்கு வருடங்களில் எம்மால் மாற்ற முடிந்துள்ளது.

கட்டக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

catak.jpgஇந்திய இலங்கை அணிகளுக்கு இடையே கட்டக்கில் இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கட்டக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து தமது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கட்டக் போட்டியில் அவர் அடித்த அரைசதத்துடன் இது வரை ஒரு நாள் போட்டிகளில் டெண்டூல்கர் 93 அரைசதங்களை அடித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

Sri Lanka in India ODI Series – 3rd ODI
India v Sri Lanka
India won by 7 wickets (with 44 balls remaining)
ODI no. 2934 | 2009/10 season
Played at Barabati Stadium, Cuttack
21 December 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum)
 WU Tharanga  b Jadeja  73 
 TM Dilshan  c †Karthik b Nehra  41 
 KC Sangakkara*†  st †Karthik b Sehwag  46 
 DPMD Jayawardene  c Raina b Harbhajan Singh  2 
 SHT Kandamby  b Sharma  22
 CK Kapugedera  b Jadeja  15 
 KMDN Kulasekara  lbw b Jadeja  10 
 S Randiv  c †Karthik b Sharma  0 
 SL Malinga  b Nehra  13 
 BAW Mendis  b Jadeja  6 
 UWMBCA Welegedara  not out  2  
 Extras (b 1, lb 2, w 6) 9     
      
 Total (all out; 44.2 overs; 190 mins) 239 (5.39 runs per over)
Fall of wickets1-65 (Dilshan, 6.2 ov), 2-165 (Sangakkara, 22.3 ov), 3-169 (Tharanga, 24.4 ov), 4-173 (Jayawardene, 25.6 ov), 5-204 (Kapugedera, 34.3 ov), 6-210 (Kandamby, 35.5 ov), 7-210 (Randiv, 35.6 ov), 8-218 (Kulasekara, 38.1 ov), 9-236 (Mendis, 42.6 ov), 10-239 (Malinga, 44.2 ov) 
        
 Bowling 
 Z Khan 7 0 49 0  
 I Sharma 7 0 63 2
 A Nehra 6.2 0 32 2
Harbhajan Singh 9 0 29 1
 V Sehwag 4 0 26 1 
 RA Jadeja 10 0 32 4 
 Yuvraj Singh 1 0 5 0  
       
 India innings (target: 240 runs from 50 overs)
 V Sehwag*  c Dilshan b Welegedara  44
 SR Tendulkar  not out  96  
 G Gambhir  c & b Randiv  32 
 Yuvraj Singh  c †Sangakkara b Welegedara  23 
 KD Karthik†  not out  36  
 Extras (lb 5, w 6) 11     
      
Total (3 wickets; 42.4 overs) 242 (5.67 runs per over)
Did not bat SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, I Sharma 
Fall of wickets1-55 (Sehwag, 6.6 ov), 2-127 (Gambhir, 21.3 ov), 3-169 (Yuvraj Singh, 32.5 ov) 
        
 Bowling O M R W   
 UWMBCA Welegedara 8 1 35 2
KMDN Kulasekara 8 0 47 0
 SL Malinga 9.4 1 55  
 BAW Mendis 9 0 67 0  
 S Randiv 8 1 33 1
 
Match details
Toss Sri Lanka, who chose to bat
Series India led the 5-match series 2-1

“நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 25 சதவீதம் கிழக்கில் இருந்து”

1976 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் மொத்த நெல் உற்பத் தியில் 25சத வீதம் இம்முறை கிழக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த வருட முதல் போகத்தில் ஒரு இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் மேலதிக காணியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட் டதையடுத்தே இவ்வாறான அமோக விளைச்சலை பெற முடிந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, தகவல், தொழில்நுட்ப அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண அமைச்சர் மேலும் கூறியதாவது, மோதல் காரணமாக அழிந்திருந்த கிழக்கு மாகாணம் இன்று துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. 25 ற்கும் அதிகமான பாலங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் கிழக்கு பிரதேசம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு நாளை.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மீண்டும் கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளனர் என்று தெரியவருகிறது. நாளைய குழுக் கூட்டத்திற்குச் சமுகமளிக்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித முடிவுகளையும் எடுக்காத நிலையில் அக்கட்சிக்குள் தற்போது நெருக்கடி நிலை எழுந்துள்ளதாலேயே நாளை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்தை மீறி சுயேட்சையாகப் போட்டியிடுவது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து நாளை  கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எம்.கே. சிவாஜிலிங்கம் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்

Sivajilingam M K_TNA MPஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் நேற்று (டிசம்பர் 20) லண்டன் வந்தார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை உறுதிப்படுத்திய பின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும் ஜனாதிபதி வேட்பாளரான பின்னர் முதற் தடவையாக இன்று (டிசம்பர் 21) புலம்பெயர்ந்த தமிழர்களை நேரடியாகச் சந்திக்கின்றார். கிழக்கு லண்டனில் உள்ள குவாக்கர்ஸ் ஹவுசில் இன்று மாலை எம் கெ சிவாஜிலிங்கத்துடன் கேள்வி நேரம். இச்சந்திப்பில் அரசியல் ஆர்வமுடையவர்கள் கலந்தகொண்டு தங்கள் கேள்விகளை சந்தேகங்களை நேரடியாக எம் கெ சிவாஜிலிங்கத்திடம் முன் வைக்கமுடியும். இக்கேள்விநேரத்தை தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் லண்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடாத்தப்பட்ட போராட்டங்களில் தோளோடு தோள் கொடுத்து வந்தவர் எம் கெ சிவாஜிலிங்கம். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு எதிராகத் திரும்பி உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காகவே இவர் தனித்துப் போட்டியிடுவதாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிவாஜிலிங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்றைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற அன்று வழிவகை செய்து கொடுத்தனர். அதற்கு பெரும்தொகைப் பணத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டனர். கடைசியாக நடந்த யுத்தம் பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய கதையாக நிறைவு பெற்றது. சென்றமுறைக்கு மாறாக இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரணிக் கூட்டில் நிற்கும் முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொல்லுக் கொடுக்க களம் இறங்கி உள்ளனர்.

தனது அரசியல் நடவடிக்கை ஒரு சில சக்திகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம் தனது அரசியல் நகர்வு பற்றிய விளக்கமளிக்க லண்டனுக்கும் தமிழகத்திற்கும் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தொடர்பு:
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம்: 07846 322 369
ரிகொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452