செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கல்வி அபிவிருத்தி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் சந்திப்பு!

கல்வி அபிவிருத்தி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் சந்திப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ரக்கபுமி கண்டோனோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவை டிசம்பர் 22இல் சந்தித்தார். இலங்கையின் கல்விக் கொள்கையில் பாரிய மாற்றங்களை கொண்டுவரத்திட்டமிட்டுள்ள பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இச்சந்திப்பில், இலங்கையின் தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

தங்களுடைய அரசு கொண்டுவரவுள்ள சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கு பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் மதிப்பீட்டு பொறிமுறையை மேம்படுத்தல் தொடர்பில் இவற்றுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதே இச்சந்திப்பின் நோக்காக இருந்துள்ளது. தற்போதுள்ள பிரித்தானியாவின் காலனித்தவக் கல்வி முறையை மாற்றி அமைக்க தேசிய மக்கள் சக்தி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்ட கொழும்புப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வடமாகாணத்தின் தலைமைச்செயலர் எல் இளங்கோவனின் வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு வாரப் பயிற்சி கொழும்பில் வழங்கப்பட்டு இருந்தது. அந்த ஒரு வாரப் பயிற்சியுடனேயே அவர்கள் களத்தில் இறங்கி இச்சாதனையைப் படைத்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் திவயன ஓயா நேவி ரோஇங் கிளப்பினால் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்துகொண்ட 42 மாணவர்களில் 32 மாணவர்கள் முதற்தடவையாக கொழும்புக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தங்களுடைய தந்தையர்களோடு பாடசாலைக்குச் செல்லுமுன் பயிற்சி பெற்ற இவர்களின் இரத்தத்தில் படகோட்டும் தறின் உள்ளதாக பார்வையாளர்கள் வியந்துள்ளனர். இவர்களுக்கு இந்த வாய்ப்பை அப்பிரதேச கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் சில இடங்களில் ஆபிரிக்க பெரு நத்தைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலகுவாக இனம்பெருகும் இவை பயிர்களுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் பொன் ஐங்கரநேசன் தெரிவித்தார். டிசம்பர் 22 கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரே நத்தையில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பதால் இவை இரண்டுமே முட்டைகளை உருவாக்கக் கூடியவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

5 முதல் 6 ஆண்டுகள் உயிர்வாழும் இந்நத்தைகள் தமது ஆயுள்காலத்தில் 1000 வரையான முட்டைகளையிடும் என்றும் இவற்றை இரையாக உட்கொள்ளும் உயிரினங்கள் இலங்கையில் இல்லை என்றும் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட ஒருவர் விளையாட்டாக இங்கு கொண்டுவந்தது தற்போது வினையாகி இருப்பதாகத் தெரிவித்த ஐங்கரநேசன், இந்நத்தைகள் மனிதரைத் தாக்கும் கிருமிகளைக் காவக்கூடியவை என்றும் இவற்றை கைகளால் கையாளமால் பிடித்து உப்புநீரில் அமிழ்த்தி அழிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின்; பாதுகாப்புச் செலவீனம் – இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி திட்டத்திற்குப் போதுமானது!

முன்னாள் ஜனாதிபதிகளின்; பாதுகாப்புச் செலவீனம் – இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி திட்டத்திற்குப் போதுமானது!

 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது இது தொடர்பான அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டிருந்தார். இந்தச் செலவீனம் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி இன் திட்டத்திற்குச் சமனானது என மதிப்பிடப்படுகின்றது. இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் முறையான காரணிகளை குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக மக்கள் பணத்திலிருந்து ரூ. 1,100 மில்லியன் (வருடாந்தம் ரூ. 110 கோடி – மாதாந்தம் சுமார் ரூ. 9 கோடி) செலவிடப்பட்டமை பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மாத்திரம் வருடாந்தம் ரூ. 326 மில்லியன் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸாரின் ஒரு பகுதியின் 13ம் திகதி மீள பொலிஸ் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலையெடுக்கும் மலேரியா – கிளிநொச்சியில் ஒருவர் பாதிப்பு !

மீண்டும் தலையெடுக்கும் மலேரியா – கிளிநொச்சியில் ஒருவர் பாதிப்பு !

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து இந்த அறிவிப்புவிடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12ம் திகதி ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து நாடு திரும்பியவர், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவேளையிலே மலேரியா தொற்று இருப்பது தெரியவந்தது.

இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றியுள்ள நாடுகளால் இலங்கையில் அவ்வப்போது மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருவோர் மலேரியா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாலைதீவு தவிர்ந்த கிழக்கு மற்றும் ஆபிரிக்க, தென்னாசிய நாடுகளில் மலேரியா நோய்த் தாக்கம் இன்றும் உள்ளது.

இலங்கையில் இருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு மோகத்தினால் முகவர்களாக பயணத்தை மேற்கொள்பவர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு ஊடாகவும் பயணிக்கின்றனர். இவ்வாண்டு முற்பகுதியில், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் செல்ல முற்பட்டு கானாவில் தங்கியிருந்த போது காய்ச்சல் வந்து அங்கேயே மரணமானார். அவரோடு தங்கியிருந்த மற்றையவர் அதற்கு முன்னரே பயணம் சரிவராது எனத் தெரிந்து நாடுதிரும்பிவிட்டார்.

 

உயிர் பறிக்கும் செல்ஃபி மோகம் !

உயிர் பறிக்கும் செல்ஃபி மோகம் !

செல்ஃபி மோகத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் அனுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க இரத்தினபுரியிலிருந்து வந்த 18 வயதான மகளும், 37 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிவேக ரயிலின் முன் அநுராதபுரம் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செல்பி மோகத்தால் இலங்கையில் தொடர்ந்தும் விபத்துக்கள் பதிவாகிவருகின்றன. அண்மையில் ஓடும் ரயிலிருந்து புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் மரக்கிளை மோதி விபத்துக்குள்ளானார்.

2023ஆம் ஆண்டு கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் ரயிலிருந்து காணொலி பதிய முற்பட்டவேளையில் தவறிவிழுந்து உயிரிழந்தார். இவ்வாறான மரணங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே பதிவாகிவருகின்றன.

இதேவேளை கைத்தொலைபேசி பாவித்துக்கொண்டு, பாடல் கேட்டுக்கொண்டு ரயில் கடவையை கடக்க முற்படுதல், நீர் நிலைகள், மலைகள் போன்ற சுற்றுலாத் தளங்களில் அட்வென்ஜர் என்ற பெயரில் புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்தும் பதிவாகிவருகின்றன.

இவ்வாறான மரணங்கள் பொறுப்புணர்வுடன் நடப்பதன் மூலம் தவிர்க்கப்பட வேண்டியவை. இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் சிறுவயதிலேயே பாடசாலைப் பிள்ளைகள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில், பொது இடங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் வழிப்புணர்வு கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

தனக்குக் கீழுள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகளைக் கண்டு தான் வெட்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் டிசம்பர் 22இல் தெரிவித்துள்ளார். கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கலாச்சாரப் பெருவிழாவிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவது சவால் எனத் தெரிவித்தார். ஆளுநர் என்ன நடந்தது என்பதையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

ஆளுநர் வேதநாயகன், தொலைபேசியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒருவரை அழைத்து, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அவரிடமே அனுப்பியும் உள்ளார். குறித்த அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ஆசிரியர்களை இரவு 7 மணிக்குத் தான் சந்தித்துள்ளார். அப்போது ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசித் திருப்பி அனுப்பி இருக்கின்றார். “இவ்வாறான அலுவலர்கள் எங்களுடைய மாகாணத்தில் எனக்குக் கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய இளையோர் மற்றவர்களை மதிக்கின்ற உதவி செய்கின்ற விழுமியங்களை வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை எனக் குறைப்பட்டார், தவறுகளை தட்டிக்கேட்க முடியாத நிலை இருக்கின்றது எனத் தெரிவித்தார். வீதிகளில் குப்பை போடுகின்றோம், வெள்ள வாய்க்காலை மறித்து, கட்டிடங்களைக் கட்டுகின்றோம், ஒழுக்கமில்லாத சமூகமாக மாறிவருகின்றோம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஆளுநர் வேதநாயகன். இந்தப் பண்பாட்டு விழாவிலும் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக வந்திருப்பதையும் மக்கள் சமூகம் தராததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

நிதித் தரநிர்ணய நிறுவனமான பிச் ரேற்றிங் (Fitch Rating) இலங்கையினுடைய கடன்பெறு தகுதியை அதிகரித்துள்ளது. 2022இல் நாட்டினுடைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அதனுடைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர் கையிருப்பு இல்லாமல் ஸ்தம்பித்த நிலையிலிருந்தது.

இலங்கையைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் சர்வதேச நாணயநிதியம் கடனின் வட்டியையும் முதலையும் தங்களுக்கு சேதமில்லாமல் பெறுவதற்கான, கடன் மீள்செலுத்துகையை மீள்வரைபு செய்து அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்பாடும் எட்டப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பாதகமில்லாமல் அல்லது மக்களுக்கு வரக்கூடிய நெருக்கடிகளை கூடியவரை குறைத்து இந்த கடன் மீள்செலுத்துகையை மேற்கொள்ள பல ஆடம்பரச் செலவீனக் குறைப்புகளையும், வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் முன்னெடுத்தமைக்கு தற்போது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது. இதுவரை Issuer Default Rating (IDR), ‘RD’ (Restricted Default) இல் இருந்து ற்கு ‘CCC+’ ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கை பெரும்பாலான நாடுள் நிறுவனங்களோடு கடன் மீள்வரைபை மேற்கொண்டுவிட்டது. அதனால் கடன் மீள்செலுத்துகையில் இலங்கைக்கு அதற்கான கால அவகாசம் கிடைத்துள்ளது. 2026இல் இலங்கையின் அந்நியச்செலாவணிக் கையிருப்பு 8.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என பிச் ரெற்றிங் மதிப்பிடுகின்றது. அத்தோடு அரசின் கடனுக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 90மூ 2028இல் குறையும் என்றும் இதற்கான வட்டிக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 2021 இல் 67மூ இல் இருந்தது 42மூ ற்கு குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் சிசிசி ரேற்றிங்கில் உள்ள நாடுகளில் இவ்விகிதாசரம் 16மூ ஆக இருக்க வேண்டும். இன்னமும் இலங்கையின் இந்த விகிதம் மிக உயர்வாகவே உள்ளது.

அதேசமயம் அரசாங்கத்தின் வருமானத்திற்கும் மொத்த தேசிய உற்பத்திக்குமான விகிதாசாரம் 2023இல் 11மூ ஆக இருந்து 2026இல் 15மூ ஆக உயரும் எனவும் பிச் ரேற்றிங் மதிப்பிட்டுள்ளது. இலங்கையுடைய பொருளாதார வளர்ச்சி 2022இல் 7.4 வீதமாக இருந்து 2023 இல் 2.2 வீதமாகச் சுருங்கியது. 2025 – 26 இல் இது 3.6 முதல் 4.2 வீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விலைவீக்கம் 2022இல் 67 வீதமாக இருந்து 2025 – 26 இல் 5 வீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தரவுகளின் அடிப்படையில் புதிய அரசாங்கம் பொருளாதார நிலையில் சரியான பாதையில் இருந்தாலும் அபாயங்கள் முழுமையாகக் கடக்கப்படவில்லை. அதற்கான கால அவகாசமும் புதிய அரசுக்கு இல்லை.

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய் செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து மேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை பல்வேறு வெளி இடங்களில் நடத்தி வருமானம் ஈட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நடைமுறையை யாழ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்பள்ளி கல்விச் செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறிகளை யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் ஆரம்பிப்பதில் முன்நின்ற இவர், இலவசக் கல்வி பெயரளவில் உள்ளதேயல்லாமல் உண்மையில் மூன்று பிள்ளைகளையுடைய குடும்பம் மாதம் 50,000 ரூபாய்களை தனியார் கல்விக்குச் செலவிடவேண்டியுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இதே கருத்தை வெளியிட்ட வறணி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசன், 9ம் தரம் வரை மாணவர்கள் தனியார் கல்வியை நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வது கற்பதற்காக என்பதிலும் பார்க்க அதுவொரு கலாச்சாரமாகிவிட்டது.

நேர்காணலை மேற்கொண்ட த ஜெயபாலன், “தமிழ் மாணவர்கள் தனியார் கல்விக்கு இப்பெரும்தொகையைச் செலவழிக்க, இவர்களின் பெற்றோர்கள் செல்வந்தர்களாக வந்துவிட்டார்களா? அல்லது மாணவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னூக்கக் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தெரியாத ஒரு விடயத்தை கற்றுக்கொள்வது என்பது ஒரு பட்டனை அழுத்தும் தொலைவில் இருக்கும் இன்றைய காலத்தில் தனியார் கல்வி ஏன் அவசியம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. கல்வியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைக் கவனிக்க.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான தீர்மானங்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்படி, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு கீழப்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை உரிய முறையில் நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தபடவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் இவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகுளின் நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 10 சதவீதம் ஊழியர்களை பணி விலக்கு செய்யப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி “நிர்வாகப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யப்படும் அதேநேரம் சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படும். இதன் மூலம் கூகுளின் செயல்திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்கின்றது கூகுள்.

“கூகுளே உலகமயம்“ என்று சொல்லுமளவுக்கு எந்த விடயமாக இருந்தாலும் கூகுளில் பதில் கிடைத்துவிடும். இந்த நிறுவனத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்காண ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். கடந்த வருடம் 2023 இல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை கூகுகளை முன்மாதிரியாக கொண்டு அரச துறைகளில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்களை பணிநீக்க வேண்டும் எனபது சர்வதேச நாணய நிதியக் கடன் மீள்வரைவு உடன்பாட்டின் நிபந்தனைகளில் ஒன்று. குறிப்பாக 14 இலட்சம் அரச ஊழியர்களை 7 இலட்சமாக படிப்படியாக குறைப்பதன் மூலம் அரச இயந்திரத்தை வினைத்திறனாக செயற்பட வைக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. அதுதவிர சிலரது பணிநிலைகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றலாம். இனிவரும் காலங்களில் இலங்கை டிஜிற்ரைலைசேனை நோக்கி நகரும்போது அரசதுறையில் பணிபுரியும் ஊழியர்களை அதற்கு தயார்படுத்தலாம்.

அவர்களினுடைய கல்வித்திறனை புதிய துறைகளில் உருவாகப்போகும் வேலைகளுக்கு மேம்படுத்தலாம் (upskill). தேவைக்கதிகமாக அரச துறைகளில் ஊழியர்களை பணிக்கமர்த்தி அவர்களுக்கு செய்வதற்கு கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் இல்லாமல் வைத்திருப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் விரையமாக்கப்படுவதை தவிர்க்கலாம். அதற்காக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி 1500 அரச பணியாளர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அரச பணியாளர்கள் வேகமான மாற்றம் ஒன்றிற்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனாதிபதியின் பல்வேறு தகவல்களிலும் இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.