வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் சில இடங்களில் ஆபிரிக்க பெரு நத்தைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலகுவாக இனம்பெருகும் இவை பயிர்களுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் பொன் ஐங்கரநேசன் தெரிவித்தார். டிசம்பர் 22 கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரே நத்தையில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பதால் இவை இரண்டுமே முட்டைகளை உருவாக்கக் கூடியவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

5 முதல் 6 ஆண்டுகள் உயிர்வாழும் இந்நத்தைகள் தமது ஆயுள்காலத்தில் 1000 வரையான முட்டைகளையிடும் என்றும் இவற்றை இரையாக உட்கொள்ளும் உயிரினங்கள் இலங்கையில் இல்லை என்றும் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட ஒருவர் விளையாட்டாக இங்கு கொண்டுவந்தது தற்போது வினையாகி இருப்பதாகத் தெரிவித்த ஐங்கரநேசன், இந்நத்தைகள் மனிதரைத் தாக்கும் கிருமிகளைக் காவக்கூடியவை என்றும் இவற்றை கைகளால் கையாளமால் பிடித்து உப்புநீரில் அமிழ்த்தி அழிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *