படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்ட கொழும்புப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வடமாகாணத்தின் தலைமைச்செயலர் எல் இளங்கோவனின் வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு வாரப் பயிற்சி கொழும்பில் வழங்கப்பட்டு இருந்தது. அந்த ஒரு வாரப் பயிற்சியுடனேயே அவர்கள் களத்தில் இறங்கி இச்சாதனையைப் படைத்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் திவயன ஓயா நேவி ரோஇங் கிளப்பினால் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்துகொண்ட 42 மாணவர்களில் 32 மாணவர்கள் முதற்தடவையாக கொழும்புக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தங்களுடைய தந்தையர்களோடு பாடசாலைக்குச் செல்லுமுன் பயிற்சி பெற்ற இவர்களின் இரத்தத்தில் படகோட்டும் தறின் உள்ளதாக பார்வையாளர்கள் வியந்துள்ளனர். இவர்களுக்கு இந்த வாய்ப்பை அப்பிரதேச கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *