எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்

vesak.jpg
நாடெங்கிலுமுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களையும் இறைச்சி கடைகள் மற்றும் மிருகங்களை அறுக்கும் நிலையங்களையும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 8ம்,  9ம் திகதிகளில் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இத்தினங்களில் உல்லாச ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்வதையும்,  சுப்பர் மார்கெட்களில் இறைச்சி வகைகள் விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இத்தினங்களில் குதிரைப் பந்தய நிலையங்கள்,  கெஸினோ கிளப்கள்,  இரவு களியாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடிவிடுவதற்கும் அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கனடிய அமைச்சரின் போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

can-srila.jpgகனடிய அமைச்சரினால் விடுக்கப்பட்ட போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்து விட்டதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜேஒடாவே போர்நிறுத்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏ.எப்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஒடா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை நேற்றுக்காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கனடிய அமைச்சர் போர்நிறுத்தம் குறித்து விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த மாதம் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்ச மோதல் தவிர்ப்பு தோல்வியில் முடிவடைந்ததாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கனடிய அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

கனேடிய அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

canada_min.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பெவர்லி ஜே ஒடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, மஹிந்த சமரசிங்க, ஆறுமுகம் தொண்டமான்,  டக்ளஸ் தேவானந்தா,  விநாயகமூர்த்தி முரளிதரன், புத்ரசிகாமணி,  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  வெளிவிவகார அமைச்சின் செயலளார் கலாநிதி பாலித கொஹன மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அன்ஜெலா பொக்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

தேசிய வெசாக் வைபவம் மாத்தறை ரஜமகா விகாரையில்

vesak.jpgதேசிய வெசாக் வைபவம் மாத்தறை வெஹெரஹேன ரஜமகா விகாரையில் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க சமய விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க இவ்வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை,  தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு தபால் முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. முத்திரை வெளியீட்டு வைபவம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பதில் தபால் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ்வைபவத்தில் களனி பல்கலைக்கழக வேந்தர் வெலமிடியாவே குசலதம்ம, ஊவா பல்கலைக்கழக வேந்தர் அலுத்வௌ கோரத தேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன,  டளஸ் அழகப்பெரும,  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் சந்திரசிரி கஜதீர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு இதுவரை 30 லொறி மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

medical_lorry.jpg வவுனியாவுக்கு வந்துள்ள மக்களின் மருத்துவ தேவைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரை 30 லொறிகளில் மருந்து வகைகள் அனுப்பிவைக்கப் படடுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
 
வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்காக நேற்றைய தினமும்  3 லொறிகளில் மருந்து வகைகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டன. இதேவேளை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று கப்பல்  மூலம் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் அமைச்சிற்கு அறிவித்திருந்தார். இதன்படி கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு மருந்து வகைகள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் மருந்துகள் கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார். புதுமாத்தளனுக்கு கடந்த மாதத்தில் இரண்டு தடவைகள் மருந்து வகைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

sri-lanka-parliament.jpgபாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுகிறது.இன்றைய சபை அமர்வின்போது அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரனையை முன்வைக்கவுள்ளார்.

மேல் மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டதன்; பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.

மக்கள் வயிற்றுப் பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமேல் மாகாண சபைக்கான அமைச்சரவை, அலரிமாளிகையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் நேற்று அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது உறுதிமொழிகளை எதிர்பார்த்திருக்காத மக்கள்,  வயிற்றுப்பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர் என்று தெரிவித்தார்

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:  ” மக்கள் வயிற்றுப் பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர். இதன் மூலமாகவே மேல் மாகாண சபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் வழங்கிய ஆணையை பிரதிநிதிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மக்கள் உறுதிமொழிகளை எதிர்பார்க்கவில்லை. பசி, வேலை வாய்ப்பு என்பவற்றுக்கு மேலாக நாட்டை முன்நிறுத்திப் பார்த்துள்ளனர் என்பதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்காகவே யுத்த நிறுத்தம் – கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா

can-srila.jpgபொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்காகவே யுத்த நிறுத்தத்தை கோருகிறோம் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா தெரிவித்தார்.

பொதுமக்களும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் யுத்த நிறுத்தத்திற்கு செல்லுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சில் நேற்று  மதியம் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே மேற்கண்டவாறு   தெரிவித்தார். 

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த கனடிய அமைச்சர்இ 2006ஆம் ஆண்டிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தை கனடிய அரசாங்கம் தடைவிதித்திருந்தது.  கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறந்த குடிமக்களாவர். எனினும் ஒருசில விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கை தொடர்பாக இனங்கண்டு கொண்டுள்ளோம். அத்தகைய தரப்பினரின் செயற்பாடுகளை கனடா சகித்துக் கொள்ளமாட்டாது என தெரிவித்தார். 

மேற்கு நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க அரசு தீர்மானம்

sri-lankan-government.jpgமேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே அந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அடுத்து வரும் வாரங்களில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் பேர்லின் மற்றும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தாக்குதல்களுக்கிலக்காகின.

இதையடுத்தே மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நாடுகளிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கை அரசுபல்வேறு அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது.

மலையக மக்களை வழிநடத்துவதற்கு கும்பகோணத்திலிருந்து புதிதாக ஒருவர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்

may-day.jpg
கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவருக்கு உபதலைவர் பதவி வழங்கப்பட்டு மலையக மக்களை வழிநடத்த வேண்டுமென்ற பரிதாபகரமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளின் சுவடுகளைப் பிரித்தெடுத்து அதன் மூலம் முதலாளித்துவம் தொழிலாளர்களின் முதுகில் சவாரி செய்து இலாபம் தேட முற்பட்டு வருகிறது. இவ்வாறான நரித்தந்திர நடவடிக்கைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்களும் துணைபோய்க் கொண்டிருக்கின்றன.

சாதாரண தொழிலாளர்களுக்கு 500 ரூபாவுக்கு குறையாத நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால், தோட்டத்தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலதிக கொடுப்பனவு என்பது எல்லாம் வெறும் கண்துடைப்பேயாகும்.  மலையகத்தின் இளைஞர்களை வழிநடத்த தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லையா?

கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கூட உபதலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இவரையும் தலைவராக ஏற்றுக்கொள்வது மலையக மக்களின் தலைஎழுத்து. இதேபோலத்தான் மலையகத்தில் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களைக் கொழும்பில் தெருக்களிலெல்லாம் தேடித்திரிய வேண்டியநிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எமது முழுவாழ்க்கையையும் தோட்டத்தொழிலாளர்களினதும் மலையக மக்களினதும் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கொண்டு சேவை செய்து வருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளோம்.