தேசிய வெசாக் வைபவம் மாத்தறை ரஜமகா விகாரையில்

vesak.jpgதேசிய வெசாக் வைபவம் மாத்தறை வெஹெரஹேன ரஜமகா விகாரையில் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க சமய விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க இவ்வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை,  தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு தபால் முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. முத்திரை வெளியீட்டு வைபவம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பதில் தபால் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ்வைபவத்தில் களனி பல்கலைக்கழக வேந்தர் வெலமிடியாவே குசலதம்ம, ஊவா பல்கலைக்கழக வேந்தர் அலுத்வௌ கோரத தேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன,  டளஸ் அழகப்பெரும,  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் சந்திரசிரி கஜதீர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *