எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வருட இறுதியில் 100 கோடி டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற எதிர்பார்ப்பு – அமைச்சர் அநுர

anura_priyadarshana_yapa4.jpgஇந்த வருட இறுதியில் 100 கோடி டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற இலங்கை முதலீட்டுச் சபை எதிர்பார்த்துள்ளது என தகவல்,  ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தைத் தோற்கடித்ததன் பின்னர் இலங்கைக்கு கூடுதலான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. அரசாங்கம் கடந்த வருடம் 865 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

வலதுகுறைந்த 200 படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு – ஜனாதிபதி நேற்று வழங்கிவைப்பு

treeweeler_keys.pngபாது காப்புப் படையைச் சேர்ந்த வலதுகுறைந்த 200 வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கினார்.

இது தொடர்பான வைபவம் பாதுகாப்பு அமைச்சில் நேற்று  நடைபெற்றது. இவ்வைபவத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  உதவி பாதுகாப்புச் செயலாளர் வில்லி கமகே மற்றும் ரணவிரு அதிகார சபைத் தலைவர் மேஜனர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர். 

போத்தல ஜயந்த மீதான தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு – அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

33222.jpgஊடகவி யலாளர் போத்தல ஜயந்த மீதான தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவின் வைத்தியசாலைக் கட்டணங்களை லேக்ஹவுஸ் நிறுவனம் வழங்கும். ஊடகவியலாளர்கள் எவருக்கேனும் அச்சுறுத்தல்கள் இருக்குமாயின் அதுபற்றி விசாரிக்க முடியும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை,  கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர்,  சில ஊடகவியலாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகள் முடிவடைந்த பின்னரே அதுபற்றிய தகவல்களைக் கூற முடியும் எனத் தெரிவித்தார். 

தமிழ் சிங்கள பாடசாலைகளின் தவணைக் காலத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

students1.jpgநாட்டில் உள்ள அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் மற்றும் 3ஆம் தவணைக் காலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திருத்தத்தின்படி சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் தவணைக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முடிவடைவதோடு 3ஆம் தவணைக்காக மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008.11.04 இல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின்படி இவ்வருடம் ஜுலை மாதம் 31ஆம் திகதியே இரண்டாம் தவணைக் காலம் நிறைவுபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவீர் இந்திய ஹோட்டல் நிறுவனத்துக்கு கட்டுநாயக்காவில் காணி

anura_priyadarshana_yapa4.jpgகட்டுநாயக்கா ஏற்றுமதி வலயத்துக்கு அருகில் சுவீர் இந்திய ஹோட்டல் நிறுவனத்துக்கு காணி ஒன்றை வழங்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

குத்தகை அடிப்படையில் 50 வருட காலத்துக்கு ஐந்து கோடியே 58 இலட்ச ரூபாவுக்கு இக்காணி வழங்கப்படுகிறது. காணி வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட தொகையின் 25 வீதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டும்

யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள்

north_.jpgவிசேட தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி, பாடசாலையை விட்டு வெளியேறிய ஐயாயிரம் இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு தொழில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்திருப்பதாக கல்லூரி அதிபர் எம்.யோகராஜன் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் வடமராட்சி மாணவர்களின் நன்மைகருதி யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமும் இணைந்து வடமராட்சி சுருக்கெழுத்துக்கழக தொழில் பயிற்சிக்கழகத்தில் ஐந்து கற்கை நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கற்கை நெறியில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஆறாம், ஏழாம் திகதிகளில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

பயிற்சி நெறிகள் மூன்று மாதகாலத்துக்குரியதாக நடத்தப்படுமெனவும் பகுதிநேர அலுவலக கணினிப் பயிற்சி நெறி, ஆங்கில மொழி, சிங்கள மொழி பகுதிநேர கற்கை நெறி, தமிழ் சுருக்கெழுத்து பகுதி நேரம், முழுநேரக் கற்கை நெறியாகவும் நடத்தப்படவுள்ளது.

முதலாவது அணியாக மின்தட்டு, நீர்க்குழாய் பொருத்துதல், மேசன் வேலை, கணினிகற்கை நெறி, மோட்டார் வாகனம் திருத்துதல் ஆகிய பயிற்சி நெறிக்கு 900 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி நெறிகள் ஆரம்பமாகியுள்ளன.

சுகாதார அமைச்சுக்கு 20 அம்பியுலன்ஸ் வண்டிகள்

nimal-sripala.jpgசுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சுக்கு 20 அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

நாட்டில் நிலவும் அவசரத்தேவைக்கு ஏற்ப டெண்டர் முறையின்றி குறைந்த விலையை சமர்பித்துள்ள உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான மைக்ரோ நிறுவனத்திடம் இவற்றை உடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12 வீத வற்வரி உட்பட 49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 20 அம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் என்ஜின் தடம்புரண்டு தீப்பிடிப்பு தலாவ ரயில் நிலையத்தில் நேற்று சம்பவம்

அனுராதபுரத்திற்கு எரிபொருளை எடுத்துச் சென்ற சரக்கு ரயிலின் என்ஜின் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று தடம் புரண்டு தீப்பற்றியதாக அனுராதபுரம் ரயில்வே பிரதான கட்டுப்பாட்டாளர் எம். எம். எஸ். மனதுங்க தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளும், பொலிஸாரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு எரிபொ ருளை எடுத்துச் சென்ற ரயில் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் தடம் புரண் டது.

ரயிலின் என்ஜின் உட்பட மூன்று எண்ணெய் கொள் கலன்கள் தடம்புரண்டன.  இதனால் ரயில் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.

அனுராதபுரம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீயினால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை. அத்தோடு ரயிலின் பெட்டிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இச்சம்பவம் ஏற்படும் போது ஐந்து ரயில் கொள்கலன்களில் 29 ஆயிரம் லீட்டர் டீசலும், ஒரு கொள்கலனில் பத்தாயிரம் லீட்டர் பெற்றோலும் இருந்தன. இச்சம்பவத்தினால் அவற்றுக்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை செஞ்சிலுவை தொண்டர்கள் பராமரிப்பு

medical_lorry.jpgவன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் படுகாயமடைந்து வவுனியா செட்டிகுளம் ஆஸ்பத்திரிகளிலும் பம்பைமடு மற்றும் வவுனியா திருச்சபை பாடசாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளையின் தொண்டர்கள் 24 மணி நேரமும் உதவிப்பணிகளைச் செய்து வருகின்றனர்.
இதற்காக 240 தொண்டர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் செஞ்சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை அணிந்து கடமையிலிருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தெரிவித்தார்.

வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு காரணமாகவே இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளனர். சிறு சிறு காயமடைந்தவர்கள், சத்திரசிகிச்சைக்குள்ளானவர்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரும் இவர்களில் அடங்குவார்கள்.

நலன்புரி நிலையங்களில் திடீரென சுகயீனம் ஏற்படும் நோயாளர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல செஞ்சிலுவை சங்க அம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், நலன்புரி நிலையங்களுக்கு பௌசர்கள் மூலமும் செஞ்சிலுவைச் சங்கம் நீர் விநியோகம் செய்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம்

bandula_gunawardena.jpg2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

வாத்தக விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் நுகர்வேர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.