இந்த வருட இறுதியில் 100 கோடி டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற இலங்கை முதலீட்டுச் சபை எதிர்பார்த்துள்ளது என தகவல், ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தைத் தோற்கடித்ததன் பின்னர் இலங்கைக்கு கூடுதலான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. அரசாங்கம் கடந்த வருடம் 865 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.