பாது காப்புப் படையைச் சேர்ந்த வலதுகுறைந்த 200 வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
இது தொடர்பான வைபவம் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, உதவி பாதுகாப்புச் செயலாளர் வில்லி கமகே மற்றும் ரணவிரு அதிகார சபைத் தலைவர் மேஜனர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.