விஸ்வா

விஸ்வா

காலம்சென்ற ரெலோ தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் காலமானார்.

Mother_of_Srisabaratnamகாலம் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி ஓகஸ்ட் 21ல் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் 23.08.2010 காலை 11 மணி அளவில் 31/11 ஸ்டேட் பேங்க் காலனி இரண்டாவது தெரு விருகம்பாக்கம் சென்னை 92 (சாலிக்கிராமம் 17ஏ 12ஸ்ரீ பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும்.

1925 செப்ரம்பர் 22ல் பிறந்த இவர் சுந்தரம்பிள்ளை அவர்களை மணந்து கொண்டார். இவர் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம், சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி ஜெ பாக்கியம் , சு. செல்வரெத்தினம், திருமதி தி ஜெயராணி ஆகியோரின் தாயாராவார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் பிள்ளைகள் பெற்றோரின் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்கும் நிலை தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் மாற்றமடைந்து பெற்றோர் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளை நடாத்தும் நிலை உருவானது. ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் உட்பட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளை அவர்களது பெற்றோரே அடக்கம் செய்யும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது.

யாழ். குற்றச் செயல்களை தடுக்க ‘பொலிஸ் கார்’

Police_Carயாழ். குடாநாட்டில் எங்காவது குற்றச்செயல்கள் நடைபெற்றால் அங்கு உடனடியாக பொலிஸ் வாகனம் வந்து நிற்கக் கூடியதான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக வசதிகள் கொண்ட ‘பொலிஸ் கார்’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுப்பாதற்காக இந்நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்   மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த இடத்தில் குற்றச்செயல் நடைபெற்றாலும் அந்த இடத்திலிருந்து பொது மக்கள் 0213210827 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் அந்த இடத்திற்கு பொலிஸ் கார் வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் மக்களை ஏமாற்றி பணம் சேகரிக்கும் தென்னிலங்கை நபர்கள்!

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிசொச்சிப் பகுதிகளில்  மக்களை ஏமாற்றி நிதி சேகரிக்கும் நபர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தென்னிலங்கையிலிருந்து வரும் சில சிங்களம் பேசும் நபர்கள் அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாக சில ஆவனங்களைக் காட்டி பணம் பெற்று வருகின்றனர்.

 வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளில் மொழி தெரியாத பெண்கள் இவர்கள் காட்டும் ஆவணங்ளை நம்பி அல்லது, பயம் காரணமாக பணத்தைக் கொடுத்து வருகின்றனர். கடந்த சிலதினங்களாக கிளிநொச்சி வீடுகளுக்கு வந்த நபரொருவர் தென்னிலங்கையிலுள்ள அநாதை விடுதி ஒன்றிற்கு நிதி சேர்ப்பதாகவும், அதற்கான அனுமதியை படையினர் தந்துள்ளதாகவும் தெரிவித்து, கையெழுத்திட்ட சில ஆவணங்களைக் காட்டி பணம் சேகரித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக யாழ்ப்பாணம் வருவதற்கு தடை!

Signpost_to_Jaffnaவெளிநாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக வடபகுதிக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி  தரைவழியாக யாழ் செல்வதற்கு தொடர்ந்தும் தடை அமுலில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வரும் சுற்றுலாப்பயணிகள், ஊடகவியலாளர்கள்  உட்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமாக மட்டுமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதியின்றி தரைவழியாக பயணிக்க அனுமதி இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரவித்துள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இரட்டைக் குடியுரிமையுள்ள இலங்கையர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தும்; எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுர் ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே வவுனியாவிற்கு அப்பால் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் பயணம் செய்வதற்கு மூன்று தினங்களுக்கு முன் பயணவிபரங்களையும் கடவுச்சீட்டு விபரங்களையும் தொலை அஞ்சல் செய்தால் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை இலங்கையில் வழங்கப்படும் தொலைஅஞ்சலுக்கு அனுப்பி வைக்கும். இல்ரலையானால் நேரடியாகச் சென்றும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். இந்நடைமுறை வெளிநாட்டவர்கள் சிலர் ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதையொட்டியே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது பற்றிக் கருத்து வெளியிட்ட மற்றுமொருவர் இவ்வாறான நடைமுறைகள் தமிழ் மக்கள் மீது தமிழ் பிரதேசங்கள் மீது அரசு நெருக்கடியை வழங்குவதையே வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

மழையினால் அவதியுறும் மீள்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள்!

Rainy_Dayவடக்கில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியமர்ந்த மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வீடுகள் அழிவுற்ற நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்களை அமைத்து வசித்து வருபவர்களும், கூரைகள் கதவுகளற்ற நிலையில் சேதங்களுடன் காணப்படும் சுவர்களுக்குள் தங்கியிருக்கும் மக்களும் இம்மழை காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இடைக்காலத்தில் பெய்யும் மழையினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் பருவ மழை பெய்யத்தொடங்கும் இப்பாதிப்புகள் அதிகமாகவிருக்கும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அழிவுற்ற வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகளை அமைக்கு பணிகளும் சேதமுற்ற வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளும் மிகவும் தாமதமாகி வருகின்றமையினால்  மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் சிறு பிள்ளைகளோடு என்ன செய்வதென்று தெரியாமலுள்ளனர்.

பலர் கடன்பட்டு அல்லது தங்கள் நகைகளை விற்று வீடுகளைப் புனரமைக்கின்ற போது அவ்வாறு புனரமைக்கப் படுகின்ற வீடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட மாட்டாது என உதவி புரியும் நிறுவன உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞன் பொலிஸாரினால் கைது!

Stop_the_War_on_Asylumபிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் (வயது 30) என்பவரே பெரிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இவரை நாடு கடத்துவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டு  தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை எனவும், இவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம் இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாம். இதனையடுத்து இவர் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல சம்மதித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தமிழ் வர்த்தகர்கள் கைது!

கடந்த 16ம் திகதி கொக்குவில் பகுதியில் முன்று சிங்கள வர்த்தகர்கள் வாள்வெட்டுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மூவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிங்கள வர்த்தகர்கள் யாழப்பாணத்திற்கு வந்து இங்குள்ள வர்த்தகர் ஒருவருக்கு மொத்தாமாக தளபாடங்களை விற்பனை செய்து விட்டு அந்த வர்த்தகருக்குத் தெரியாமல் பாவனையாளர்களுக்கும் தளபாடங்களை நேரடியாக விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்பிற்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்தே சிங்கள வாத்தகர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றது.

முன்னைய செய்தி:  யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர்!

இதே வேளை, கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதிகளில் படையினர் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் நேற்று புதன்கிழமையும் காலை தொடக்கம் இரவுவரை சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இதில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டனர். அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களும் சோதனைகளுக்குள்ளாகின.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் யாழ்.விஜயம்.

Asian_Development_Bankஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் சியாவோயூ சாவோ இன்று 19-08-2010 காலை யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருக்கும் இவர் இன்று யாழ். கோட்டை, பொது நூலகம் அகியவற்றைப் பார்வையிடுவதோடு, பிற்பகல் 4 மணிக்கு யாழ். செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்து கொள்வார்.

நாளை சாவகச்சேரியில் மின்விநியோக நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து வைப்பதுடன். கிளிநொச்சிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிதிட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

வன்னியில் பெற்றோர் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னிப் பிரதேசத்தில் பெற்றோரின் பராமரிப்பற்ற நிலையில் உள்ள 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண அளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரவித்துள்ளார். கிளிநொச்சி. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட இச்சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற நான்கு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட 1200 சிறுவர்களும் எதிர்வரும் september மாதத்திலிருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர். 12 வயதுக்கட்பட்ட இச்சிறுவர்களின் பாராமரிப்புச் செலவிற்கான நிதியை வடமாகாணசபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானித்துள்ளதாக வடமகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Vavuniya_SriAhilandeswariArulaham(படத்திலுள்ள குழந்தைகள் மார்ச் 2010ல் படம் எடுக்கப்பட்ட போது 10 மாதங்களையே கடந்திருந்தன. இக்குழந்தைகள் யுத்தத்தின் காரணமாக அனாதரவானவர்கள். தற்போது வவுனியாவில் உள்ள சிறி அகிலாண்டேஸ்வரி அருளகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான உதவிகளை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.)

இது இவ்வாறிருக்க. வன்னியில் நடைபெற்ற போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்களின் தொகை மேலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடபகுதி தமிழ் மக்கள் மீது அரசாங்கத்திற்கு அதிக பட்ச சந்தேகம் உள்ளது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

go-ra.jpgவடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்கழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளித்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். வடபகுதி மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரணடையாத விடுதலைப் புலிகள் எத்தனை பேர் உள்ளனர் என எமக்குத் தெரியாது. அடையாளம் காணப்படாமல் எத்தனைபேர் உள்ளனர் என்பதும் தெரியாது. அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக முளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் கூறினார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு கணிசமான இராணுவத்தினரை அங்கு கடமையிலீடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

கே.பி பற்றி அவர் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் மூத்த உப்பினரான கே.பியின் மனதை மாற்றுவதில் இராணுவம் வெற்றிகண்டுள்ளது எனவும்  அரசுடன் இணைந்து ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்தியதை பலரும் வரவேற்கின்றனர். இது முக்கியமானதோர் விடயம் எனவும்  குறிப்பிட்டார்.