சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

’டுவென்டி 20’ உலக‌கோப்பை: இலங்கை வெற்றி

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தில் ’டுவென்டி 20’ உலக‌கோப்பை கிரிக்கெட்‌ போட்டித்தொடரில் ‌கடைசி லீக் சுற்றின் ’சி’ பிரிவில் இலங்கை ‌வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. ஜெயசூர்யா (81) தில்சன்(74) ஓட்டங்கள் எடுத்தார்.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்மன்ஸ் 4 விக்கெட்டுகள் விழ்த்தினார்.

வெற்றி இலக்கு 193 ஓட்டங்கள் என்ற நிலையில் அடுத்து துடுப்பாடிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இலங்கை அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோ அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார்.

போர் ஓய்ந்தும் கூட ஈழத்தில் தமிழர்கள் கஷ்டம் தீரவில்லை – கனிமொழி

kani-mholi.jpgஇலங் கையில் போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அங்கு நிலையான தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி, ராஜ்யசபாவில் கோரினார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு, கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.

தாய்லாந்து பள்ளிவாசலுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் – 11 பேர் பலி; 12 பேர் காயம்

10thai-mos.jpgதாய் லாந்து பள்ளிவாசலில் சென்ற திங்கட்கிழமை இனந் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் சிலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிவாசல் தொழுகை நடாத்தும் இமாமும் இதில் பலியானார். மாலை நேரத்தொழுகையில் ஈடுபட்ட வேளையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்கள். இங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இறை வணக்கத்திலிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

ஆயுதம் தாங்கிய ஐந்து பேர் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர். பள்ளிவாசலின் முன்புறமாக சிலரும் பின்புறமாக சிலரும் நுழைந்து சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர். இவ்வேளை சுமார் ஐம்பது பேர் பள்ளிவாசலினுள் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மாதத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுவாகும். மலேசியாவை அண்மித்துள்ள தாய்லாந்துப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. தாய்லாந்தில் முகாம்களில் சுய அதிகாரம் கோரிப் போராடுகின்றனர்.

இதுவரை இப்போரில் மூவாயிரத்து எழுநூறு பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மோதல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்ற திங்கட்கிழமை வீதியோரக் குண்டு வெடிப்பில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். இதனால் ஆந்திர மடைந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரதேசத்தில் குண்டொன்று வெடித்தது. இதில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந் தன. இதன் எதிரொலியாக இப்பள்ளிவாசல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தோகிக்கப்படுகின்றது.

இதுவரை தாக்குதல்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாமென தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்து. முஸ்லிம்கள் எவ்வாறாயினும் பள்ளிவாசலு க்குள் தாக்குதல் நடாத்தமாட்டார்கள்.

எனவே, இது தாய்லாந்து இராணுவ வீரர்களின் வேலை தான் என நம்பச் செய்யும் வகையில் இப்பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யார் இதைச் செய்திருந்தாலும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனே செய்துள்ளனர் என இராணுவ அதிகாரி கூறினார். தாய் லாந்தில் பெளத்தர்கள் பெரும்பான்மையினராகவுள்ளனர்.
 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டமைச்சர் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

sheikh_abdullah_bin_zayed_al-uae.jpgஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்தின் வெளிநாட்டமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸெய்யித் அல் நஹியான் எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வருதை தரும் அல் நஹியான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவுள்ள அல் நஹியான், மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் சுற்றாடல், இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

டெங்கு அச்சுறுத்தல்: உலமா சபையின் வேண்டுகோள்

dengu_1.gifடெங்கு நாட்டின் பல பாகங்களிலும் பரவிய வண்ணமுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ண முள்ளன. இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத் துல் உலமா பின்வரும் அறிக்கையை விடுக்கிறது. இவ்வருட ஆரம்பம் முதல் இன்று வரையிலான ஐந்து மாதக் காலப் பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொடிய நோய்க்கு ஆளாகியும், நூற்றுக் கணக்கானோர் பலியாகியுமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில் மிக வேகமாகப் பரவி வரும் இந்நோயிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் நிமித்தம், நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியமென்பதை நினைவுறுத்த விரும்புகிறது. எனவே, இவ்விடயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மிக விழிப்புடன் இருக்குமாறும், சுத்தத்தை பேணுமாறும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக, சுத்தம் ஈமானின் பாதியென்ற நம்பிக்கையோடுள்ள அனைத்து முஸ்லிம்களும் அதனை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறது. இந்நோயினால் அவதியுற்றிருக்கும் சகல மக்களுக்காகவும் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுதல், தானதர்மம் செய்தல், பிரார்த்தனையில் ஈடுபடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொள்வதுடன், உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் குத்பா போன்ற சந்தர்ப்பங்களில் மக்களை விழிப்பூட்டுமாறு உலமா சபை வினயமாக வேண்டிக் கொள்கிறது.

உலக கிண்ண போட்டிக்கான புதிய கால்பந்தாட்ட விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு

new-stadium.pngதென்னா பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்  போட்டிக்காக அமைக்கப்பட்ட புதிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கு நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியை முன்னிட்டு ஐந்து புதிய கால்பந்தாட்ட விளையாட்டு  அரங்குகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட புதிய கால்பந்து அரங்கு போர்ட் எலிஸபத்தில் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. “நெல்ஸன் மண்டெலா பே” என பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கு 48,000 ஆசனங்களை கொண்டுள்ளது.

இங்கு 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் காலிறுதி மற்றும் மூன்று, நான்காம் இடங்களுக்கான அணிகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் உட்பட 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் இங்கு முதல் விளையாட்டாக பிரித்தானிய அயர்லாந்து லயன்ஸ் அணிகள் மோதும் ரக்பி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடமாகாண முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் ரவூப் ஹக்கீம் பின்னால் ஒருபோதும் செல்லமாட்டார்கள்

rizad_baduradeen1.jpgவட மாகாண முஸ்லிம்கள் மீது உண்மையான பற்றும் பாசமும் உள்ள அவர்களின் எதிர்கால வாழ்வில் அக்கறையும் தன்மானமுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லமாட்டார்களென தெரிவித்துள்ள மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன், எதிர்க் கட்சியில் இருந்து நாம் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் எமது சமூகம் எங்கு சென்றிருக்கும் எனவும் கேள்வியெழுப்பினார்.

புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்படைகளினதும் பொலிஸாரினதும் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு கூறினார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விழா, கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியாது என்று வெளிநாட்டு சக்திகளின் தயவை நாடி சில கட்சிகளும் அமைப்புகளும் செயற்பட்ட போது அதற்கு எதிராகப் பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் பணியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்று செயற்பட்டதன் பிரதிபலனை எமது மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.  மூதூரிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், கந்தளாய் பிரதேசத்தில் தஞ்சமடைந்தனர். இம் மக்கள் வெளியேறி வந்த போது பட்ட துன்ப, துயரங்களை நான் நேரடியாகக் கண்டவன்.

இம் முஸ்லிம் மக்களின் நிலையை நான் ஜனாதிபதிக்கு நேரடியாக எடுத்துக் கூறியதையடுத்து அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட போது இவர்களைக் குடியமர்த்த வேண்டாம். முதலில் சாம்பூர் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்றே ரவூப் ஹக்கீம் பேசினார். முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, உரிமைகளை உணர்ந்து கொள்ள முடியாத தலைமைத்துவமான ஸ்ரீ.ல.மு.கா. எப்படி வடமாகாண முஸ்லிம்களினதும் விடிவுக்கு செயற்படப் போகின்றது? தமது பதவியையும் அரசியல் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கும் சுயநலப் போக்குக் கொண்ட தலைமைத்துவத்தின் பின்னால் நாம் சென்றிருப்போமெனில் வடமாகாண முஸ்லிம்கள் அடிமைகளாக மாற்றப்பட்டிருப்பார்கள்.

பிரதேசவாதமும், ஊர்வாதமும், தெளிவற்ற கொள்கையும், பேசி மக்களை ஏமாற்றி, ஒற்றுமையைக் குலைத்து அதன் மூலம் சுய நலத்தைத் தக்க வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பைப் பேணி அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தும் போது தனிப்பட்ட சுயநலன்களை அடைந்து கொள்ளும் வகையில் சமூகத்தின் விடிவுக்காக பாடுபடுவதைப் போன்று முகம் காட்டுபவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய தேவை சகலருக்கும் ஏற்பட்டுள்ளது.

வடமாகாண முஸ்லிம்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும் மதிப்பிடப்படமுடியாதவை அவற்றுக்கு எதனைக் கொடுத்தாலும் ஈடாக மாறிவிடாது. எவ்வித அரசியல் அதிகாரமுமின்றி எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டு ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் சமூகத்துக்கென சாதித்தவை பெற்றுக் கொடுத்தவை, எதுவும் இல்லை.

மறைந்த தலைவர் அஷ்ரப் தமது ஆளுமையினால், இலங்கை அரசியலில் முக்கியமான நிலையில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு ஆற்றிய பணிகள் பல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோரம் போகும் தற்போதைய ஸ்ரீ.ல.மு.கா. தலைமைத்துவம் தவறான பாதையில் செல்கின்றது என்பதை அறிந்தும் அதன் பின்னால் செல்வதில் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

‘ருவன்டி-20’ கிரிக்கட் தொடரில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி – தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றம்

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. இத்தொடரில் நேற்று தனது முதலாவது போட்டியில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரின் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேவேளை, தனது முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியதீவுகளிடம் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி நேற்று இலங்கையிடமும் தோல்வியடைந்தததால் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அஜந்த மெண்டிஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

160 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றியீட்டியது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 53 ஓட்டங்களையும் அணித் தலைவர் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதுதவிர ஜெஹான் முபாரக் 11 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 சிகஸர்கள் மற்றும் ஒரு 4 ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் புதிய கப்டனாக நியமிக்கப்பட்ட குமார் சங்கக்கார தலைமையில் இலங்கை அணி பங்கேற்ற நேற்றைய முதலாவது போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும். 

பிரஞ்ச் ஓபன் டெனிஸ் சம்பியன் பட்டம் முதற்தடவையாக பெடரர் வசம்

images-rojapedaral.jpgபிரான்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கிராண்ட ஸ்லாம் போட்டியான பிரான்ஸ் பகிரங்க டெனிஸ் சம்பியன் போட்டியில் டெனிஸ் உலகில் மன்னனாகத் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் ரொபின் சொடர்லிங்கை நேர்செட் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை முதற்தடவையாக கைப்பற்றியுள்ளார்.

பெடரர் கைப்பற்றியுள்ள கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை இந்த வெற்றியுடன் 14 ஆக உயர்ந்துள்ளதுடன் இதன் மூலம் இவர் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

நான்கு கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற வரிசையில் பெடரர் ஆறாவது இடத்தை வகிக்கின்றார். ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 27 வயதுடைய பெடரர் சுவீடனின் சொடர்லிங்கை 6-1   7-6   6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.

ருவன்டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை-அவுஸ்திரேலியா களத்தில்

muralitharan-sri-lankas.jpgஐ.சீ.சீ. உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவுள்ளது.  இரண்டாவது உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமானது. இன்றைய போட்டியில் இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் முதன்முதலாகக் களமிறங்கவுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா இலங்கை அணியுடனான இன்றைய போட்டியிலும் தோல்வியுற்றால் தொடரில் இருந்து நீக்கப்படலாம் என அறிவிக்கப்படுகிறது.