தாய்லாந்து பள்ளிவாசலுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் – 11 பேர் பலி; 12 பேர் காயம்

10thai-mos.jpgதாய் லாந்து பள்ளிவாசலில் சென்ற திங்கட்கிழமை இனந் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் சிலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிவாசல் தொழுகை நடாத்தும் இமாமும் இதில் பலியானார். மாலை நேரத்தொழுகையில் ஈடுபட்ட வேளையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்கள். இங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இறை வணக்கத்திலிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

ஆயுதம் தாங்கிய ஐந்து பேர் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர். பள்ளிவாசலின் முன்புறமாக சிலரும் பின்புறமாக சிலரும் நுழைந்து சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர். இவ்வேளை சுமார் ஐம்பது பேர் பள்ளிவாசலினுள் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மாதத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுவாகும். மலேசியாவை அண்மித்துள்ள தாய்லாந்துப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. தாய்லாந்தில் முகாம்களில் சுய அதிகாரம் கோரிப் போராடுகின்றனர்.

இதுவரை இப்போரில் மூவாயிரத்து எழுநூறு பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மோதல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்ற திங்கட்கிழமை வீதியோரக் குண்டு வெடிப்பில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். இதனால் ஆந்திர மடைந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரதேசத்தில் குண்டொன்று வெடித்தது. இதில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந் தன. இதன் எதிரொலியாக இப்பள்ளிவாசல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தோகிக்கப்படுகின்றது.

இதுவரை தாக்குதல்காரர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாமென தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்து. முஸ்லிம்கள் எவ்வாறாயினும் பள்ளிவாசலு க்குள் தாக்குதல் நடாத்தமாட்டார்கள்.

எனவே, இது தாய்லாந்து இராணுவ வீரர்களின் வேலை தான் என நம்பச் செய்யும் வகையில் இப்பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யார் இதைச் செய்திருந்தாலும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனே செய்துள்ளனர் என இராணுவ அதிகாரி கூறினார். தாய் லாந்தில் பெளத்தர்கள் பெரும்பான்மையினராகவுள்ளனர்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *