பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !
ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்
பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !
ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்
: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் !
பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீது பாய்ந்தார் அமைச்சர் சந்திரசேகர். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நேற்று மார்ச் 5இல் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அமைச்சர் சந்திரசேகர் பொறுமையை இழந்து மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பா உ அர்ச்சுனா எழுந்து குறுக்கிட்டு குறுக்கிட்டு கத்தியதைத் தொடர்ந்தே அமைச்சர் சந்திரசேகர் கொதித்தெழுந்தார்.
வடக்கில் போதைப்பொருட்கள் மிக முக்கியமான பிரச்சினையாகி பல்வேறு சமூகப் பிறள்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு சமூகக் கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றது. இது பற்றி இதுவரை மௌனமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு வந்ததும் அது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தன்னுடைய தனிநபர் பிரேரணையில் பா உ ரஜீவன் போதைப் பொருட்களே வன்முறைகளுக்கும் வாள் வெட்டுகளுக்கும் இட்டுச்செல்வதைச் சுட்டிக்காட்டினார். சமூகப் பிலதிநிதிககள் அடங்கிய குழக்களை அமைத்து முப்படையினரும் சேர்ந்து இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய பா உ அர்ச்சுனா ஐந்து மாதத்திற்கு முன்னர் ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியே வடக்கில் உள்ள போதைப் பொருட் பாவனைக்கு பொறுப்பு என்ற வகையில் எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை கத்திக் கத்தி முன்வைத்தார். அதன்போது யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையில் குறிப்பிட்ட மருதுவர் கேதீஸ்வரன் மருந்தகம் ஊடாக போதைப்பொருள் விற்பனை செய்ததாகவும், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அவரின் மகன் ஊழலில் ஈடுபட்டதாகவும் வல்வெட்டித்துறையில் வன்முறையில் ஈடுபட்டவர் தேசிய மக்கள் சக்தியில் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அதற்கு தேசிய மக்கள் சக்தியே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி இளம்செழியனை அவர் ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பொறுப்பான பதவிகள் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
யாழ் மாவட்டத்தையும் வடக்கு கிழக்கையும் பாதிக்கின்ற முக்கியமான விவாதத்தில் பா உ அர்ச்சுனா ஆரோக்கியமாக விவாதத்தை நகர்த்தாமல் காழ்ப்புணர்வைக் கொட்டி தன்னுடைய சமூக வலைப்பதிளை கிளு கிளுப்பாக வைத்திருக்கும் வகையில் நடந்து கொண்டமை பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் கிணற்றுத் தவளைபோல் தொடர்ந்தும் ஓரெ விடயத்தை கத்திக் கத்தி வருகின்றாரேயொழிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொள்கின்றார் இல்லை என பாராளுமன்ற விவாதங்களை உன்னிப்பாக பார்ப்பவர்கள் கருதுகின்றனர். மேலும் விவாதங்கள் நடக்கின்ற போது கத்திக் குளறுவது பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகின்ற போது ஆரோக்கியமான விவாதங்களுடாக தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும் தெருப்பொறுக்கி போல் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா நடந்துகொள்கின்றார் என்ற அபிப்பிராயம் ஏனை சமூக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !
பாராளுமன்றச் செயற்பாடுகளில், பாராளுமன்ற விவாதங்களில் ஈடுபடுவதில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னணியில் நிற்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி பா உ இரா சாணக்கியன் பாராளுமன்ற செயற்பாட்டில் 27வது இடத்தில் உள்ளார். ஒன்று முதல் 225 வரையான தரவரிசைப்படுத்தலில் தமிழ் தரப்பில் சாணக்கியனே முன்னணியில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பொன்னம்பலம் கஜேந்திர குமார் 41 வது இடத்தில் உள்ளார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 42வது இடத்தில் உள்ளார். பாராளுமன்றச் செயற்பாடுகளில் விவாதங்களில் பா உ எவ்வாறு வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்து மந்திர டொட் எல்கே என்ற அமைப்பு இத்தரவரிசையை மேற்கொண்டுள்ளது.
சமூக வலைத் தளங்களில் முன்னிலை வகிக்கும், தமிழ் அரசியலை கலகலப்பாக வைத்திருக்கும் பா உ இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றச் செயற்பாடுகளில் 44வது இடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து 48வது இடத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன் உள்ளார். அவரையடுத்து வன்னிப் தேசிய மக்கள் சக்தி பா உ ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் 54வது இடத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பா உ கவீந்திரன் கோடீஸ்வரன் 55வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 63வது இடத்தில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ கருணானந்தன் இளங்குமரன் பாராளுமன்றச் செயற்பாடுகளில் 79வது இடத்தில் உள்ளார். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பா உ செல்வம் அடைக்கலநாதன் 89வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ் மாவட்ட பா உ சிவஞானம் சிறிதரன் தமிழ் ஊடகங்களால் பேசப்படும் அளவுக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் தீவிரமாக இல்லை. 113 இடத்திலேயே உள்ளார். 2010 முதல் பாராளுமன்றம் செல்லும் அனுபவமிக்க பா உ பாராளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமானவராகவே உள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக பாராளுமன்றச் செயற்பாடுகளில் முன்னிலைக்கு வருவது சற்று கடனமானதே. அவர்களுடைய அரசாங்கமே ஆட்சியில் இருப்பதால் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் தங்களுடைய கருத்துக்களை வைப்பதில் தயக்கம்கொள்வார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்களாகையால் தயக்கமும் மேலோங்கி இருக்கும். மேலும் அமைச்சர்களே ஆளும்கட்சியின் பெரும்பாலான நேரத்தை எடுத்தக்கொள்வதால் சாதாரண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். எதிர்காலத்தில் அவர்கள் இதனைப் புரிந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
இத்தர வரிசையானது வெறுமனே பாராளுமன்றத்தில் உரத்துக் குரல் எழுப்புவது அல்ல. சட்டவாக்கங்களில், கொள்கை வகுப்புகளில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி சட்டங்களையும் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் செழுமைப்படுத்துவது.
கடல்தொழில் அமைச்சர் இராமரிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற செயற்பாட்டுத் தரவரிசையில் 122வது இடத்தைப் பிடித்துள்ளார். ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட நீண்ட பாராளுமன்ற அனுபவமுடைய ஐக்கிய மக்கள் சக்தி பா உ மனோ கணேசன் பாராளுமன்ற செயற்பாடுகளில் மந்தநிலையில் 148வது இடத்தில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் 225வது இடத்தில் உள்ளனர். 75 பாராளுமன்ற உறுப்பினர்களை மந்தநிலை உறுப்பினர்களாக மந்திரி.எல்கே என்ற அமைப்பு தரவரிசைப்படுத்தியுள்ளது.
அர்சுனாவின் பாராமன்ற ஆசனம் பறிபோக வாய்ப்பு ! சித்தார்தன் பா உ ஆக வாய்ப்பு !
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரமை தொடர்பில் போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் தன்னுடைய வேலையை ராஜினாமாச் செய்யாமல் தேர்தலில் போட்டியிட்டமையால் அது விதிமுறைகளுக்கு முரணாணது எனக் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே அர்ச்சுனா இவ்வழக்கில் உறுப்புரிமையை இழப்பார் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அர்ச்சுனா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அது அவர் பணியிலிருந்து நீக்கப்படவில்லை.
இதற்கிடையே தான் தனது பா உ பதவியை தனக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற கௌசல்யா நரேனுக்கு வழங்கப் போவதாக ஒரு பதிவை அர்ச்சுனா வெளியிட்டார். அதனை சில ஊடகங்கள் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியிட்டு இருந்தன.
பா உ அர்ச்சுனாவுக்கு எதிரான பொதுநல வழக்கு அர்ச்சுனாவுக்கு எதிராக அமைந்தால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பது மட்டுமல்ல அவருடைய சுயேட்சைக் குழுவும் முடக்கபடும். ஏனெனல் அச்சுயேட்சைக்குழுவின் தலைவராக இராமநாதன் அர்ச்சுனாவே உள்ளார். அதனால் கௌசல்யா நரேனுக்கு அந்த உறுப்புரிமை வழங்கப்பட மாட்டாது.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு அடுத்தநிலையில் உள்ள கட்சிக்கே அந்த உறுப்புரிமை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால் ஜனநாயத் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கே அந்த உறுப்புரிமை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
எம்பி அர்ச்சுனா கைவிடப்பட்ட ஹபரண சைவக் கோயிலுக்கு தீபம் காட்ட அழைக்கிறார்
அநுராதபுர மாவட்டத்தில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹபரண பகுதியில் உள்ள பழமையான கோயில் ஒன்றினுடைய முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளதாக பத்திரிகைகளிலும் – சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. இத்தகவல் பலவாறு திரிபுபடுத்தப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. தையிட்டி விகாரை உடைப்பை நியாயப்படுத்த ஹபரண பேரூந்து தரிப்பிடம் கையாளப்பட்டது. சைவ கோயிலை உடைத்து பேரூந்து நிலையம் கட்டியது தவறு எனவும் இது இனவாத நாடு எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்ட படங்களில் சைவக் கோயில் இடிபாடுகளுடன் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. கிட்டத்தட்ட இந்தக் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பே வழிபாடுகள் இடம்பெறாமல் கைவிடப்பட்டுள்ளதாகவே கருதமுடியும். அக்கோயில் பிள்ளையார் கோயில் எனவும் அம்மன் கோயில் எனவும் மாறுபட்ட கருத்துக்களே வெளிவருகின்றன. கோயிலின் தல வரலாறே தெரியாத நிலமை தான் காணப்படுகின்றது. அவ்வாறு அழிவடைந்துள்ள ஒரு கோயிலை இடித்து ஏன் பேரூந்து நிலையம் கட்ட வேண்டும். பகுத்தறிவுள்ளவர்கள் கேட்க வேண்டிய கேள்வி ஹபறணையில் உள்ள சைவக் கோயில் ஏன் அழிவடைந்துள்ளது. ஏன் கைவிடப்பட்டுள்ளது. இந்துசமய காவலர்கள் என கூச்சலிடும் சிவசேனா அமைப்பினர் கண்களில் இது ஏன் படவில்லை. அடிப்படைவாத இந்து அமைப்பான சிவசேனா தையிட்டியில் அரசியல் செய்து சமூகங்களில் பிளவுகளை ஏற்படுத்த விரும்புகின்றது.
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை உடைப்பது இனவாத பிரிவினைகளை ஊக்குவிக்கும் என பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள்காட்டி ஹபரண கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என அர்ச்சுனாவின் போட்டி அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்படியிருக்க பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றுமுன்தினம் ஹபரணையில் உள்ள இடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கோயிலுக்கு நேரடியாக கள விஜயம் செய்து தகவல்களை தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அப்பகுதியில் தமிழர்கள் யாருமே இல்லாமையால் கோயில் உடைக்கப்பட்டுள்ளது. எனினும் கோயில் உடைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் கட்டாயம் பாராளுமன்றத்தில் பேசுவேன். சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களையும் துணைக்கு அழைத்து கோயிலை இடித்து அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை அகற்றி மீளவும் அப்பகுதியில் கோயிலை அமைக்க என்னாலான நடவடிக்கைகளை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். வழிபாடு செய்ய யாரும் இல்லாவிடில் கோயிலை மீளக் கட்டி என்ன பலன். அதற்கு பதிலாக அந்த இடத்தில் ஒரு பாடசாலையை அல்லது ஒரு சனசமூக நிலையத்தை கட்டலாம். ஆளில்லா தேநீர்க்கடையில் தேநீர் ஆற்றி என்ன பலன்? . ஹபறணையில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் பல கோயில்கள் கைவிடப்பட்டுள்ளன.
அர்ச்சுனா கோயில் கட்ட முதல் ஹபறணயில் இந்துமக்கள் வாழ்கிறார்களா என அறிய வேண்டும். யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர்களால் கோடிகளை கொட்டி கட்டப்படும் புனருத்தாரணம் செய்யப்படும் கோயில்களில் மாடுகள் தான் படுத்துறங்குகின்றன. எம்பி அர்ச்சுனாவுக்கு இன்னுமொரு தார்மீக கடமை உண்டு. வடக்கு கிழக்கில் உள்ள சகல இந்து ஆலயங்களுக்கும் கள விஜயம் செய்து கிளீன் செய்ய வேண்டும். முக்கியமாக 25 கோடி செலவில் புங்குடுதீவில் மாடுகள் படுத்துறங்க கட்டிய இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு விஜயம் செய்ய வேண்டும் . உணர்ச்சி அரசியல் நீடித்த சமாதானத்தை கொண்டு வராது. புத்திசாலித்தனமான அரசியலே தமிழ்மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். ஹபறண கோயில் வருடக்கணக்காக யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. இப்போது அந்த இடத்தில் மக்கள் நிழலில் நின்று பயணம் செய்வது கண்ணை குத்துகிறது.
அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளே உள்ளது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா போல் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும், செல்வம் அடைக்கலநாதனும் கூட உதிரிகள் தான். இவர்களை கட்சி என்ற அடையாளத்துக்குள் கொண்டுவர முடியாது. இதே போல் ஒன்பது கட்சிக் கூட்டணியில் உள்ளவர்கள் கூட கட்சி என்று வரையறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். ஆய்வாளர் வி சிவலிங்கம்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டுமே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சியாகக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த வி சிவலிங்கம் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் கட்சிக் கட்டமைப்பை வைத்துள்ளது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு வாக்கு வங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய நலன்களை முன்னெடுப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏனைய உதிரிகளும் கட்சிகளுமல்ல அவர்கள் யாழ் மக்களின் நலன்களைக் கூட முன்னெடுக்கவில்லை, அவர்கள் சில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிர், மலையகத் தமிழர்களுக்கு எதிர், ஓடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிர் என்று இருக்கின்ற போது, இவர்கள் எப்படி தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பும் ஆய்வாளர் வி சிவலிங்கம், இவர்கள் குறும் தேசியவாத வலதுசாரிப் பிற்போக்குசக்திகள் என்றும் இவர்கள் பற்றி தமிழ் மக்கள் விழப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ளது – பாதுகாப்பு வழங்குமாறு கோருகின்றனர் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவும் நாமல் ராஜபக்சவும் !
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் செயற்படுவதற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே மாதிரியான கோரிக்கையை நாமல் ராஜபக்சவும் முன் வைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்சவை குழிக்குள் அனுப்புவோம் என்று குறியதாக பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் சாகச காரியவாசம் தெரிவித்துள்ளார். அதனால் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பில் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வலம்புரி ஹோட்டலில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தனது செயலாளர் தாக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நான் பொலிஸ் முறைப்பாட்டை அளித்திருந்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்தோடு, அண்மையில் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டதுடன் இந்த வாரமே தொடர் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இவ்வாறான சூழலில் என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர தலைமையின் கீழ், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், இந்த அறிக்கை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று சபாநாயகர் மேலும் அறிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து சபாநாயகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்வப்போது விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்தாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரை கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது ஜே.வி.பி என்கிறது எதிர்க்கட்சி’, ‘இல்லை இல்லை புலிகளே குண்டு வைத்தனர்’ என மன்னிப்பும் கோரிய பா.உ அர்ச்சுனா !
யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முன்தினம் அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று எமது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது விடயம் குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம்.
எமது பெயர் பூசப்பட்டமை குறித்து ரணில் விக்ரமசிங்க பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோரியிருந்தார். நாங்கள் கீழ்ப்படிவான முறையில் அந்த விடயத்தை மேற்கொண்டோம். ஆனால் அது குறித்து கதைக்கும் போது ஜனாதிபதிக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லையா.
அன்று ஜேவிபியினர் பௌத்தர்களின் தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போது அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்களா அவர்கள் ஏன் கவலைப்படுவதில்லை.
யாழ்ப்பாண நூலகம் குறித்து கதைப்பது சரி நீங்கள் செய்த பிழை குறித்து உங்களுக்குள் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளீர்களா.” என தெரிவித்தார்.
இதனிடையே குறுக்கிட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தலதாமாளிகையை புலிகள் அழித்திருந்தால் அதற்காக வடக்கு மக்களின் பிரதிநிதியாக நான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சி பா.உ காபீர் காசிம் நீங்கள் ஜே.வி.பிக்காக மன்னிப்பு கோருகிறீர்களா..? அல்லது தமிழ் மக்களுக்காகவா என கேட்டபோது நான் புலிகள் தலதாமாளிகையை தாக்கியதற்காக மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார்.
அர்ச்சுனா காமெடி பீஸா – என்பிபி யாழ் எம்பிக்கள் கத்தரித் தோட்ட வெருளிகளா ? தொடரும் பனிப்போர் !
பா. உ அர்ச்சுனா இராமநாதன் ஒரு காமெடி பீஸ் பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஒரு காமெடியன் குறிப்பாக சொல்லப்போனால் கவுண்டமணி செந்தில் போன்ற ஒரு காமெடியன் என யாழ்.மாவட்ட என்.பி.பி பா.உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, யாழ்ப்பாண மக்கள் மூன்று கத்தரி தோட்டத்து வெருளிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்.பி.பி பா.உக்களான இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, சிறீபவானந்தராஜா ஆகியோரை குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து என்.பி.பி யாழ்ப்பாண பா.உக்களும் வகைதொகையின்றி பா.உ அர்ச்சுனாவை ஊடகங்கள் முன்பாக விமர்சித்து வருகின்றனர். அண்மையில் பா. உ இளங்குமரன் இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் ரஜீவன் அர்ச்சுனாவை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் பா.உ ரஜீவன் மேலும் தெரிவிக்கையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு பாராளுமன்ற உயரிய சபையில் எவ்வாறு பேச வேண்டும் என்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்ற தெரியாத ஒரு நபராகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காணப்படுகின்றார்.. யாருக்கும் யாரையும் விமர்சிக்கின்ற உரிமை இருக்கின்றது ஆனால் அதனை நாகரீகமான முறையில் கையாள வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு கையாளாது தரக்குறைவாக கருத்துகளை தெரிவிப்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குறிய அடிப்படை தகுதி கூட இல்லாத ஒரு நபராகவே காணப்படுகின்றார் .
அவர் கடந்த காலங்களில் மத குருமார்களை, அமைச்சர்களை, ஜனாதிபதியை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை கேலி செய்வது அவருடைய தொழிலாக இருந்தது வருகின்றது , மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர் மக்களுக்கு சேவை எதுவும் செய்யாது இவ்வாறான விமர்சனங்களை செய்து கொண்டு தன்னை ஒரு காமெடியனாக காட்டிக் கொண்டு திரிகின்றார். எனவே அவரைப் பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என அவர் தெரிவித்திருந்தார்.