அர்சுனாவின் பாராமன்ற ஆசனம் பறிபோக வாய்ப்பு ! சித்தார்தன் பா உ ஆக வாய்ப்பு !

அர்சுனாவின் பாராமன்ற ஆசனம் பறிபோக வாய்ப்பு ! சித்தார்தன் பா உ ஆக வாய்ப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரமை தொடர்பில் போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் தன்னுடைய வேலையை ராஜினாமாச் செய்யாமல் தேர்தலில் போட்டியிட்டமையால் அது விதிமுறைகளுக்கு முரணாணது எனக் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே அர்ச்சுனா இவ்வழக்கில் உறுப்புரிமையை இழப்பார் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அர்ச்சுனா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அது அவர் பணியிலிருந்து நீக்கப்படவில்லை.

இதற்கிடையே தான் தனது பா உ பதவியை தனக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற கௌசல்யா நரேனுக்கு வழங்கப் போவதாக ஒரு பதிவை அர்ச்சுனா வெளியிட்டார். அதனை சில ஊடகங்கள் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியிட்டு இருந்தன.

பா உ அர்ச்சுனாவுக்கு எதிரான பொதுநல வழக்கு அர்ச்சுனாவுக்கு எதிராக அமைந்தால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பது மட்டுமல்ல அவருடைய சுயேட்சைக் குழுவும் முடக்கபடும். ஏனெனல் அச்சுயேட்சைக்குழுவின் தலைவராக இராமநாதன் அர்ச்சுனாவே உள்ளார். அதனால் கௌசல்யா நரேனுக்கு அந்த உறுப்புரிமை வழங்கப்பட மாட்டாது.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு அடுத்தநிலையில் உள்ள கட்சிக்கே அந்த உறுப்புரிமை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால் ஜனநாயத் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கே அந்த உறுப்புரிமை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *