அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ளது – பாதுகாப்பு வழங்குமாறு கோருகின்றனர் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவும் நாமல் ராஜபக்சவும் !
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் செயற்படுவதற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே மாதிரியான கோரிக்கையை நாமல் ராஜபக்சவும் முன் வைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்சவை குழிக்குள் அனுப்புவோம் என்று குறியதாக பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் சாகச காரியவாசம் தெரிவித்துள்ளார். அதனால் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பில் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வலம்புரி ஹோட்டலில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தனது செயலாளர் தாக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நான் பொலிஸ் முறைப்பாட்டை அளித்திருந்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்தோடு, அண்மையில் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டதுடன் இந்த வாரமே தொடர் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இவ்வாறான சூழலில் என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.