அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இரண்டு புலிகள் ஆயுதங்களுடன் கைது.

pisto.jpgதிருமலை உப்புவெளி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இரு புலிச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் நான்கு கிரனேட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் திருமலைப் பிரதேசத்தில் ஊடுருவி இருந்து ஆங்காங்கே தாக்குதல் மேற்கொள்ளும் குழுவொன்றிற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இல‌ங்கை‌க்கு இராணுவ உத‌வி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை: இ‌ந்‌திய கட‌ற்படை தளப‌தி சுரேஷ் மேத்தா

sures.bmp
இலங்கைக்கு இ‌‌ந்‌திய அரசா‌ல் இராணுவ உதவி வழங்கப்படவில்லை என்று‌ம் இதுபோ‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ஆதாரம‌‌ற்றது எ‌ன்று‌ம் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா கூறினார். செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கி இருப்பதாக தமிழ்நாட்டில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி எந்த உதவியும் வழங்கவில்லை. இது போன்ற குற்றச்சா‌ற்றுகள் ஆதாரமற்றது எ‌ன்றா‌ர்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று விவாதம்?

un-logo.jpgஇலங்கை யில் நடைபெற்று வரும் போரில், பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொது மக்கள் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர். இது குறித்து ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) விவாதம் நடைபெறுகிறது.

ஐ.நா., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் இதர பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் இந்த விவாதத்துக்கு சபையின் மனித உரிமைகள் விவகார தலைவர் ஜோன் ஹோம்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த விவாதத்துக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் இராணுவத்துக்கும், அந்த நாடு தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் ஒரு உள்நாட்டுப் போர். இந்த போரினால் உலக நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆகவே இது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கத் தேவை இல்லை என்று சீனாவும், ரஷ்யாவும் தெரிவித்ததாக அந்த அதிகாரிகள் கூறினார்கள்.

இலங்கையில் வேலையின்றி தவிக்கும் 49 ஆயிரம் தமிழ் விதவைகள்: ஐ.நா. கவலை

இலங்கையில் சுமார் 49 ஆயிரம் தமிழ் விதவைகள் வேலை ஏதும் இன்றி வாழ்க்கை நடத்த முடியாமல் பரிதவித்து வருவதாகவும், இதில் 35 ஆயிரம் பேர் 30-க்கும் குறைவான வயதை உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இத்தகவலை ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

உணவு விஷமானதென்று மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களில் 95 சதவீதமானோருக்கு எதுவித நோயும் இல்லை.

t-mala-stu.pngதிருகோண மலையில் உணவு விஷமானதென்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து திருகோணமலை மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களில் 95 சதவீதமானோருக்கு எதுவித நோயும் ஏற்படவில்லையென கிழக்கு மாகாண பொதுச் சுகாதாரத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உணவு விஷமடைந்தமை தொடர்பாக டாக்டர் இ.ஜி.ஞான குணாளனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் இவ் அறிக்கையின் பிரதி கொழும்பு சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெயலலிதா போட்ட திடீர் நிபந்தனை

jaya-ram.jpgஅதிமுக வில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.

மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸ் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டுள்ளது.

பாமக தேர்தல் அறிக்கையில் தனி ஈழம்

26-ramsoss.jpgஇலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.

கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டை சிறப்பாக ஆளும் வகையில் மாநிலங்களைப் பிரித்து சிறியதாக 50 மாநிலங்களை உருவாக்க மத்திய அரசை நெருக்குவோம். என்று கூறப்பட்டுள்ளது.

இனம்காணப்பட்ட 14 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கே சேவையில் ஈடுபட அனுமதி – சமூக சேவைகள் அமைச்சர்

இலங்கையில் நூற்றுக் கணக்கான அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றபோதும் அவற்றுள் சிறந்த சேவையாற்றுபவைகளாக இனம்காணப்பட்டுள்ள 14 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வன்னயிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்குச் சேவையாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் லயனல் பிரேமசிறி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்குள்ள மக்களுக்கு எந்த சேவையையும் வழங்கவில்லை. அவைகள் புலிகளுக்கே உதவி செய்து வந்தன. புலிகள் பங்கர் அமைப்பதற்கு உதவிய அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளன. தற்போது வன்னியில் சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 14 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, றிஷாத் பதியுதீன் மற்றும் மாவட்ட அதிபர்கள் உள்ளிட்ட விசேட குழுக்களும் இந்நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றன.

இதேவேளை,  அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் விசேட சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இச்சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கனணி மயப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் அறிமுகம் – விநியோக நடவடிக்கைகளை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

licence.jpgகனணி மயப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப் பத்திரம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சகல தகவல்களையும் உள்ளடக்கிய இப்புதிய சாரதி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகளை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கொழும்பு, வேரஹெரயிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற இது தொடர்பான வைபவம் நடைபெற்றது.

ஸ்மார்ட் கார்ட்| எனும் பெயரிடப்பட்ட இந்த சாரதி அனுமதிப் பத்திரத்தில் தேசியக் கொடி, அரசாங்க இலச்சினை,  சாரதியின் புகைப்படம்,  இரகசிய தகவல்களை சேகரிக்கும் அடையாளம்,  சாரதியின் பெயர், தொடர் இலக்கம், பிறந்த திகதி, விநியோகிக்கப்படும் திகதி,  காலாவதியாகும் திகதி, விநியோகித்த உத்தியோகத்தர்,  அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகனங்களின் வகைகள் போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் அநுராத விஜேதுங்க தெரிவித்தார். 

பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது : வெளியுறவு செயலர்

dr-palitha.jpg“பயங்கர வாதத்தைத் தோற்கடிக்கும் அரசாங்கத்தின் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் எந்த மாற்றமும் ஏற்படாது. இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கை தொடரும்” என்று வெளியுறவு செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், “அரசாங்கம் தற்போதைய நிலையில் மேற்கொண்டு வரும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. இராணுவ நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அத்துடன் மனிதாபிமான நடவடிக்கைகளும் தொடரும். வன்னிப் பகுதியிலிருந்து பொது மக்களை மீட்கும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சி நிரல் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றப்படமாட்டாது.

சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரசாங்கத்தின் பிரசார நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. அண்மையில் அமெரிக்காவில் புலம் பெயர் தமிழர்கள் 2000 பேர் (அரச ஊழியர்கள்) விடுமுறையில் இருந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் இங்கு வெளிவிவகார அமைச்சின் சில அதிகாரிகளே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் எமது பக்க செயற்பாடு குறைவானதாகும். இருந்தாலும் நாங்கள் வெற்றிபெற்றுவந்துள்ளோம்” என்றார்.