அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை; சவால்களை எதிர்கொள்வோம்

Keheliya_Rambukwellaஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க தயாராக இருப்பதாக அமை ச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலோசனைக் குழுவுக்கு உதவியாக 8 பேர் கொண்ட மற்றொரு குழுவை ஐ.நா. செயலாளர் நியமித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம். இதே போன்று வேறு நாடுகளுக்கு எதிராகவும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அடுத்து என்ன நடக்கிறது என நாம் காத்திருக்கிறோம் என்றார். ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஐ.நா. செயலாளர் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தால் நாமும் அதற்கேற்ப செயற்படுவோம்.

ஜூலை 26வரை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் காலக்கெடு

பஸ் கட்டணங்களை தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் அதிகரிக்காத அதேவேளை, மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை போக்குவரத்துச் சேவைக்கான அனுமதிக் கட்டணங்கள் உட்பட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளதால் நாங்கள் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கவலைதெரிவிக்கப்படுகிறது.

அனுமதிக்கட்டண அதிகரிப்பை நீக்குவதாக எதிர்வரும் 26 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் எமக்கு மேல் மாகாண சபை அறிவிக்காதவிடத்து எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சேவை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாரஹென்பிட்டியிலுள்ள அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்ண பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“17 வது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரம்” ரொபேட் ஓ பிளக்கிற்கு கெஹலிய பதில்

min-meedia.jpg17 ஆவது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரமாகும். அது குறித்து ரொபேட் ஓ பிளக் பேசத் தேவையில்லை. 17 வது திருத்தம் பற்றி எமது பாராளுமன்றம் கவனிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இலங்கைக்கு விஜயம் செய்த பிளக் ஜனநாயகம் குறித்தும் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்குப் பதலளித்த அவர், இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 17 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டுமென்றார்.

17 ஆவது திருத்த விவகாரம்; ஐ.தே.க. தூதுக்குழு பீரிஸுடன் சந்திப்பு

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பான விடயங்கள் குறித்து ஐ.தே.க. தூதுக்குழு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. 17 ஆவது திருத்தம் தொடர்பாக ஐ.தே.க. முன்வைத்த யோசனைகள் குறித்து கலந்தாராய வருகை தருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பிற்கிணங்க நேற்று சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.தே.க. எம்.பி.ஜோசப்மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் சில தயக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் அந்தக்கவலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சந்திப்பை நாடியிருந்ததாகவும் ஜோசப் மைக்கேல் பெரேரா கூறியுள்ளார்.

அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவானது 17 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகளை பரிசீலனை செய்து வருகிறது. நாடு எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே தவிர்க்கமுடியாத தீர்வாக அமையும் என்று ஐ.தே.க. அண்மையில் தெரிவித்திருந்தது.

நீல் பூனே மீண்டும் திரும்பிச் சென்றார்

neel.jpgஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்குத் திரும்பி வந்திருந்த நீல் பூனே மீண்டும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சொந்த விடுமுறையில் நீல் பூனே சென்றிருப்பதாகவும் அவர் கொழும்புக்குத் திரும்பி வருவார் என்றும் ஐ.நா. வாட்டாரமொன்று தெரிவித்தது. கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்துக்கு வெளியே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கலந்தாலோசனை நடத்துவதற்காக நியூயோர்க்கிற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நீல் பூனேஅழைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பில் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. சகலரதும் பாதுகாப்புக்கும் முக்கியம் – பொலிஸ் மா அதிபர்

கொழும்பில் தங்கியிருப்பவர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்வது அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

கொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.

இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும்.

இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக குறிப்பிடப்படும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் மட்டுமன்றி அப்பிரதேசத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

எனவே தமது சொந்த பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் பெறும் இந்த பதிவு நடைமுறையை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு பொது மக்கள் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்துகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீள் குடியமர்வோரின் வாழ்வாதாரத்திற்கு ரூ. 25,000 – அமைச்சரவை அங்கீகாரம்

Check_Pointவட மாகாணத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டவுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பதிற்கும் 25 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கியின் அபிவிருத்தி நிறுவனத்தினூடாக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவசர வடக்கு புனரமைப்பு திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் 2012 டிசம்பர் வரை மேற்கொள்ளப்படும். நிரந்தர வழிவகைகள் மூலம் வருமானம் கிடைக்கும் வகையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொழி லொன்றில் ஈடுபடுவதற்காக இந்த உதவி வழங்கப்படும். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் – இலங்கை அணி பத்து விக்கெட்டால் வெற்றி

முரளிதரனின் ஓய்வுடன் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது மட்டுமல்லாமல் முரளியின் ஓய்வின் பரிசாகவும் சமர்ப்பணம் செய்துள்ளது.

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கை 95 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 2வது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 96 ஓட்டங்களைப் பெற்றது.

அதேநேரம் இலங்கை அணி தொடரை 1-0 என முன்னிலையில் உள்ளது. இப் போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்
இலங்கை முதல் இன்னிங்ஸ் 520-8
பரணவிதாரன 111, சங்கக்கார 103, ஹேரத் 80 (ஆ- இ) மலிங்க 64 மிதுன் 105-4, சர்மா 3-145

இந்தியா முதல் இன்னிங்ஸ் 276
செவாக்-109, யுவராஜ் சிங் 52, முரளிதரன் 5-63, மலிங்க 2-55
இந்தியா 2வது இன்னிங்ஸ் 228
டெண்டுல்கர் 84, லஷ்மன் 69
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் 96
பரணவிதாரன 23 (ஆ/இ), டில்சான் 68 (ஆ/இ)

இலங்கையில் அபிவிருத்தி; மீள்கட்டுமானத்தில் புலம்பெயர் தமிழர் பங்கேற்க விருப்பம் – ரொபட் ஓ பிளேக்

r-b.jpgகடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பெருவெற்றி மற்றும் அவரது கட்சிக்கு கிடைத்த அதே போன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் இலங்கை இப்போது மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறான சமாதான நிலையில் நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வது முக்கிய காரணியாக அமைகிறது என்று. கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக் தெரிவித்தார்.
 
ஊடகவியலாளர்களிடையே அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அவர்  இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி உதவி வழங்குநராக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. கண்ணிவெடி அகழ்வு, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வரைதல், மற்றும்புதிய பொருளாதார வாய்ப்புகளை வடக்கில் ஏற்படுத்துவதற்கான தனியார் துறை முதலீடுகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும். கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்கா இலங்கைக்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது என்று ரொபர்ட் பிளேக் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், வர்த்தக சமூகம், எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசியதாக கூறினார்.

ஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நல்லிணக்கம், ஆளுமை மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசியதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் திருப்தியளிப்பதாகவும் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து குறுகிய காலத்தில் அகதிகளின் எண்ணிக்கையை 37 ஆயிரமாக குறைக்க முடிந்தமை திருப்தியானது என்று பிளேக் கூறினார்.

மட்டக்குளி பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

மட்டக்குளி பொலிஸ் நிலையம் மீது கடந்த 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்று சந்தேகிக்கப்படுபவர் நேற்று சட்டத்தரணி மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.