அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையின் 2ஆவது சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராமயில் நிர்மானம்

இலங்கையின் இரண்டாவது  சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த உடமத்தலாவப் பகுதியில் நிர்மானிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தின் பெயர் தகஷின் லங்கா சர்வதேச விமான நிலையம்  என்பதாகும்

இதன் நிர்மானப்பணிகள் இரண்டு கட்டமாக இடம் பெறவுள்ளதுடன் 3ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  முதலாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 2000 கோடி செலவிடப்படவிருக்கிறது.

கோரம் இன்றி சபை ஒத்திவைப்பு

26parliament.jpgகோரம் இன்மையால் இன்று பிற்பகல் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுக்கான குறை மதிப்பீட்டு விவாதம் சபையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை சபையில் போதிய கோரம் இல்லை என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சபைக்கு அழைக்கும் மணி ஒலிக்கப்பட்டது.

02:05 மணி முதல் 02:10 மணிவiரை மணி ஒலித்தபோதும் மொத்தம் 8 உறுப்பினர்களே அங்கு ஒன்று கூடினர். சபையை தொடர்ந்து நடத்துவதற்கு குறைந்தது 21 உறுப்பினர்கள் தேவை என்பதால் கோரமின்றி சபை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி நிருவாகத் தலைவர் அறிவித்தார்.

கிழக்கு மாகாணக் கட்டடங்களில் புலிகளின் பெயர்கள் : உடன் அகற்றுமாறு உத்தரவு

கிழக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பெயர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே. வீரவர்தனா சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்,

“இதனை அமுல்படுத்த தவறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் தெரிவித்துள்ளார். ‘பாடசாலை மற்றும் கட்டிடங்களுக்கு தனி நபர் பெயர் சூட்டப்படல்’என்னும் தலைப்பிலான அந்த சுற்றறிக்கையில்,

“கடந்த காலங்களில் அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுக்கு பயங்கரவாத அமைப்பின் பிரதேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அண்மையில் மூதூர் மற்றும் சம்பூர் பிரதேச பாடசாலைகளுக்கு சென்றிருந்த போது அவதானிக்க முடிந்தது.

பாடசாலைகள் ஆரம்பத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டதோ அந்த பெயரே அமுல் படுத்தப்பட வேண்டும்.பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த பெயர்,வலயம் மற்றும் தற்போதைய பெயர் ஆகிய விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஒரு பாடசாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடனும் மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடனும் எனது அனுமதிக்காக முன் வைக்கப்பட வேண்டும்.

பிரதேச பயங்கரவாத தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்.வலய கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இந்தத் தவறை திருத்தம் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எனக்கு அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையால் உலகையே ஆட்டிப் படைத்த மைக்கல் ஜாக்ஸன் இன்று காலமானார்!

25michael_jackson.jpg
பிரபல பொப் இசை நட்சத்திரமான மைக்கேல் ஜக்சன் லொஸ் ஏஞ்சலில் இன்று தனது 50வது வயதில் காலமானார்.

ஜக்சனின் சுவாசம் நிறுத்தப்பட்டவிட்டதாக வியாழன் நள்ளிரவு அவசர மருத்துவப்பிரிவினர் லொஸ் ஏஞ்சலில் உள்ள அவருடைய பெவர்ல் கில் இல்லத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரு மணித்தியாலங்களின் பின்னர் இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் தொடர் இசைநிகழ்வுகளை நடத்ததுவதற்காக யூலை 13ல் லண்டனுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்ததது.

Michael Jackson’s Website/Blog:
http://www.michaeljackson.com/

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட பதவியாக்க முடிவு – பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க

parliament-of-sri-lanka.jpgகூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டபூர்வ பதவியாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை காலமும் இப்பதவி நிலை சம்பிரதாயபூர்வமாகவே இருந்தது என்று பிரதமர் தெரிவித்ததுடன் இதற்கான சட்டமூலத்தையும் சபையில் சமர்ப்பித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு சட்டபூர்வமான அந்தஸ்து வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சபையில் நேற்று சமர்ப்பித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையினை அடுத்து பிரதமர் மேற்படி சட்டமூலத்தை சமர்ப்பித்துப் பேசினார்.

இதுவரை காலம் இருந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலைக்கு திறைசேரியிலிருந்து செலவுக்காக நிதிகூட பெற முடியாத நிலை இருந்தது. இச்சட்டமூலத்தினூடாக இப்பதவி நிலைக்கு சட்டரீதியான அந்தஸ்தும் பொறுப்புகளும் எல்லைகளும் வகுக்கப்படுகின்றன. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு படையணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஆலோசனைச் சபை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுபவர் நான்கு வருடங்களுக்கு பதவியை வகிப்பார். இப்பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும் அடுத்து இரண்டு வருடங்களாகவும் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும், அதன் பின்னர் தலா ஒவ்வொரு வருடங்களாகவும் வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு – பக்ரியாவை பயன்படுத்தி நுளம்பை அழிக்கும் சாத்தியத்தை ஆராய ஜனாதிபதி பணிப்பு

he_president.jpgடெங்கு ஒழிப்பு சம்பந்தமாக எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமாக நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜயரத்ன ஹேரத், அமைச்சின் செயலாளர் அதுல கணந்த லியனகே, மாகாண சபை, உள்ளூராட்சிச் சபை அமைச்சின் செயலாளர் கெஷின் ஹேரத், கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ஹத்தானி விஜேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

பல உள்ளூராட்சிச் சபைகளுக்குப் பைகளைப் போடுவதற்கு உரிய இடமில்லையானால் அவசரகால சட்ட விதிகளுக்கமைய தற்போது உள்ளூராட்சி நிறுவனங்கள் குப்பை போடும் இடங்களை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

குப்பை கூளங்களினால் சகல உள்ளூராட்சி நிறுவனங்களிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்கும் வகையில் குப்பைகளை மீள்சுழற்சிக்குட்படுத்த விரும்பும் முதலீட்டாளர்க ளுடன் கலந்துரையாடி அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக குறிப்பாக சிவில் பாதுகாப்புப் பிரிவு, கல்வியமைச்சு, சமுர்த்தி நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தி இது தொடர்பில் தொடர்ச்சியான செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதைக் கவனத்திற் கொண்டு வீட்டுத் தோட்டம், வேலைத் தளங்கள் மற்றும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

கியூபாவில் டெங்கு நுளம்பு ஒழிப்பதற்காக உபயோகப் படுத்தப்படும் பக்aரியாவை இலங்கைக்குக் கொண்டு வந்து அதன் சாத்தியத் தன்மையை பரீட்சிக்குமாறு தெரி வித்த ஜனாதிபதி, இங்கு அந்த பக்aரியாவை உருவாக்க விரும்புபவர்களை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் இத்தகைய தொற்று நோய்களை கட்டுப்படுத்த சட்டத்தினால் மட்டும் இயலாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சகலரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவது மிக முக்கியமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளோர் தொகை நேற்று வரை 11,968 ஆக அதிகரித்துள்ளதுடன் 146 பேர் இதுவரை பலியாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இருபது வருடங்களில் அழித்ததை இரு வருடங்களில் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgகடந்த இருபது வருடங்களில் அழிவடைந்த எமது பிரதேசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரு வருடங்களில் கட்டியெழுப்புவோமென யாழ். வர்த்தகர்களுடன் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புதன் மாலை யாழ். வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பொது சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறக்குறைய ஐநூறிற்கும் மேற்பட்ட யாழ். வர்த்தகர்கள் பங்குகொண்ட இச்சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘நாங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆள்வதற்காக அல்ல, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வர்த்தகர்களாகிய நீங்கள் சுதந்திர மாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்வதற்குமே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை நாம் ஏற்றிருக்கின்றோம். மகிழ்ச்சி தரும் மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம்.

இதில் ஏமாற்றங்கள் நிகழுமாயின் அதற்கான அனைத்து பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டு எமது தீர்மானங்களைத் திருத்தி எழுதவும் நாம் என்றும் தயாராக இருப்போம். ஆனாலும், நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் ஒரு போதும் தோற்றுப் போகாது’ என்றும் தெரிவித்தார்.

ஈ. பி. டி. பி. யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரேயொரு தனித்துவமான அரசியல் கட்சி என்ற ரீதியில் எமது தனித்துவங்களோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு தோழமை கட்சியாக இணைந்து எமது மக்களின் இலட்சியக் கனவுகளை விரைவாகவும், இலகுவாகவும் எட்டுவதற்காக இந்தத் தீர்மானத்தை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் அனைத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக விளக்கமளித்தார்.

சொகுசு வாகன வரி அறவீடு

25dallas_alahapperuma.jpgசொகுசு வாகனங்கள் மற்றும் அரைச்சொகுசு வாகனங்களுக்கான வரி அறவீட்டை பிரதேச செயலகங்கள் ஊடாக அறவிடுவது குறித்து ஆராய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட வரி தனியார் காப்புறுதி நிறுவனங்களாலேயே அறவிடப்பட்டு வந்தது. இதனை வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது பிரதேச செயலகங்கள் மூலம் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலகப்பெரும இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

த.வி.கூ, மு.கா, சுயேச்சை வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

images-elc.jpgயாழ்.  மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக ஏழு அரசியல் கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றினதும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா ந. சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக நான்கு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சைக் குழுக்கள் இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் மற்றுமொரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன் சுயேட்சைக் குழு இலக்கம் ஒன்றிற்கு கப்பல் சின்னமும் இரண்டாம் குழுவிற்குப் பூட்டுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

500 ரயில்வே ஊழியர்களுக்கு நாளை நிரந்தர நியமனம்

25dallas_alahapperuma.jpgஒப்பந்த அடிப்படையிலான மற்றும் தற்காலிக ரயில் ஊழி யர்கள் 500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (27) வழங்கப்ப டவுள்ளன. இது தொடர்பான வைபவம் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழஹப்பெருமவின் தலைமையில் நாரஹேன் பிட்ட சாலிகா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர் லசந்த அழகியவன்ன, ரயில்வே பொதுமுகாமையாளர் பீ. பீ. விஜேசேகர உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.