அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட நபர் கைது – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சம்பவம்

police_man.jpgசட்ட விரோதமான முறையில் இந்தியாவுக்கு 38இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகைத் தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபரொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

குறித்த நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து விமான நிலைய சுங்கப் பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே அவரது பயணப் பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி தங்கம் கைப்பற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்திலேயே மேற்படி சந்தேக நபர் பயணிக்கவிருந்தார். இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்துக்கு வந்த அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தொடர்பில் அவதானம் செலுத்திய விமான நிலைய சுங்கப் பிரிவினர் அவரை அழைத்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி தொகை தங்கம் கைப்பற்றப்பட்டது. 

தனக்கு அன்பளிப்பாக வழங்கிய நகைகளை ஏழைக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரி

தென் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.டபிள்யூ. பிரதாப் சிங்க ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு தென் பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் காலியில் பிரிவுசார நிகழ்வை நடத்தினார்கள்.
38 வருடகாலம் பொலிஸ் சேவையில் அவர் ஆற்றிய பணிகளை பலரும் பாராட்டினார்கள். நிகழ்வின் முடிவில் அவருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த குலதிலக அதனை அவருக்கு வழங்கினார்.  இவற்றை பெற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப்சிங்க, அதற்கு நன்றி தெரிவித்ததுடன் அந்தப் பகுதியில் வறுமையில் வாழும் வீடில்லாத ஒரு குடும்பத்துக்கு அவற்றை வழங்குமாறும், அதன்மூலம் அக்குடும்பம் புதிய வீடு ஒன்றை பெற முடியுமென்றும் கூறினார்.

அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பொலிஸ் குடும்பத்தினருக்கு அதனை வழங்குமாறும் கூறினார்.  காலி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அங்குலானை கொலைச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை

angulana.jpgஅங்கு லானையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணை ஒன்று மனித உரிமை ஆணைக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அங்குலானையில் கொலைசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.  இதற்காக சிரேஷ்ட விசாரணை அதிகாரிகள் அங்குலானைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடுமாதா உற்சவத்தில் அமைச்சர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

madhush_2.jpgமடு தேவாலய உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 9 மணிக்கு இடம்பெறும் திருசொரூபபவனியுடன் நிறைவுபெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;  உற்சவம் கொழும்பு புதிய அதிமேற் ராணியார் பேரருள் திரு மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறவுள்ளது. அவருடன் இணைந்து யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் நேற்று வெள்ளிக்கிழமை வரை வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 200 குடும்பங்கள் ஆலய விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நற்கருணை விழா இளைப்பாறிய கொழும்பு அதிமேற்ராணியார் பேரருள் திரு ஒஸ்வேல்ட் கோமிஸ் தலைமையில் நடைபெற்றது.  இதில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான சரத் குணரட்ன மற்றும் நியோமல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர் என்றார்.

டெங்கு நுளம்பை அழிக்கும் (B.T. I) பக்ரியாக்கள் – கியூபா நிபுணத்துவ குழுவின் ஆய்வு அறிக்கை நேற்று சுகாதார அமைச்சில் கையளிப்பு

nimal_siripala_de_silva.jpgடெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பீ. ரி. ஐ. பக்aரியா நுண்ணங்கிகளை இலங்கை உபயோகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை நேற்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது.

கியூபாவிலிருந்து வந்த நிபுணத்துவ குழுவினர் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை நேற்று சுகாதார அமைச்சில் கையளித்தனர்.

சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால, சுகாதார அமைச்சின் செயலர் டொக்டர் கஹந்த லியனகேயிடம் நேற்று கையளித்தார்.

சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் விசேட அழைப்பை ஏற்று டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான கியூபா பீ.ரி.ஐ. (B.T.I)  பக்aரியா நுண்ணங்கிகளை உபயோகிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்வதற்கு கியூபா விலிருந்து இரண்டு நிபுணர்கள் வருகை தந்தி ருந்தனர்.

இவர்கள் இருவரும் மேற்படி நுண்ணங்கிகளை உபயோகிப்பது தொடர்பாக பல இடங்களில் தமது ஆய்வுகளை நடத்தினர். இதன்படி, அம் பாந்தோட்டை, கண்டி, கொழும்பு மாவட்டங் களிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நுண்ணங்கிகளை பயன்படுத் தக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. மேற்படி சிபாரிசுகளடங்கிய அறிக்கை அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் ஒப்படைக்கப்படும்.

வெளிநாட்டில் நடபெறும் இரண்டு மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார். அதன்பின்னரே அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சாவகச்சேரி நகரசபை மைதானமும் இந்து மயானமும் பொது மக்களின் பாவனைக்காக வெள்ளி முதல் திறப்பு

சாவகச்சேரி, நகர சபைக்குரிய விளையாட்டு மைதானம் மற்றும் இந்து மயானம் என்பன வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்படுவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தேவைகள் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பொதுமக்கள் நலன்கருதி அகற்றுவது தொடர்பில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்க பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் சாவகச்சேரி நகர சபைக்கு விஜயம் செய்திருந்த போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்தி மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சரும் ஆளுநரும் யாழ்.குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளை பார்வையிட உயர்மட்ட சபை நியமனம்

சிறைச் சாலைகளைப் பார்வையிடுவதற்கான உயர்மட்ட சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட இந்த சபையை நியமித்துள்ளார்.

முன்னாள் இராஜதந்திரியான நந்தா கோடெகே தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ராஜன் ஆசீர்வாதம், அர்ஜுன் தெரணியகல, எச். ஜீ. தர்மதாச, இம்தியாஸ் இஸ்மாயில் ஆகியோர் அடங்குகின்றனர்.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறைச்சாலை திணைக்க ளத்தின் நிர்வாகத்தில் உள்ள 25 சிறைச்சாலைகளின் நிர்வாகம், கைதிகளின் நலன் மற்றும் குறைபாடுகள், பிரச்சினைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இச்சபை உறுப்பினர்கள் எந்நேரமும் சிறைச்சாலைக்குச் சென்று சுயாதீனமாக கைதிகளை பார்வையிடவும் முறைப்பாட்டு பதிவுப் புத்தகமொன்றையும் ஒவ்வொரு சிறையில் வைத்து அதில் பதியப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் சகல அதிகாரமும் இச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இடம்பெயர் மக்களுக்காக ஜப்பான் அரசு 117 மில் நன்கொடை

இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி கிராமங்களில் வாழும் மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும்; இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குரியோ ரகஹாசி ஜப்பான் அரசாங்கத்தின் சார்பிலும்; இதற்கான ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

ஜப்பான் அரசாங்கம் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் சுகாதார மற்றும் மலசல கூட வசதிகளை செய்து கொடுக்கவென 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு இத்திட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளதுடன், செப்டெம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளது. 

மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை மீட்க புலி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு – இராணுவத் தளபதி தகவல்

jagath_jayasuriyas000.jpgபுலிகளி னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை அவர்கள் காட்டி வருவதாகவும் இராணுவத்தளபதி ஜகத் ஜயசுரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்கள்  மறுவாழ்வு பெற்றுவருகின்றனர். இவர்கள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட  விசாரணைகளின் போது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனால் எதிர்வரும் காலங்களில் பாரியளவு ஆயுதங்கள் மீட்கப்பட உள்ளதாகவும்  இராணுவத்தளபதி மேலும்  தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காவலரண்களை நீக்கி போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை – நவீன நகருக்கான நகல்வரைவு 18இல் சமர்ப்பிப்பு

வவுனியா பிரதேசத்தில் கைவிடப்பட்ட பொலிஸ் காவலரண்களை நீக்கி நகரைச் சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தினகரனுக்குத் தெரிவித்தார். இதற்கென வடமாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

வவுனியா பிரதேசத்தில் வீதிச் சோதனைக்காக சுமார் 40 முதல் 50 வரையான பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை யாவும், இறுதிக்கட்ட யுத்தத்துக்குப் பின்னர் கைவிட்டப்பட்டன. எனினும் காவலரண்கள் அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை நிவர்த்திக்கு முகமாக, கைவிடப்பட்ட அனைத்துப் பொலிஸ் காவலரண்களையும் நீக்கிவிட்டு, நகரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை, வவுனியா நகரை நவீனமயப்படுத்துவதற்கான இறுதி நகல் வரைவுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். முக்கிய அரச நிறுவனங்களின் கட்டடங்களை ஒரு புறமாக நிர்மாணிப்பதுடன், நகரை வர்த்தக மையப் பகுதியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

செட்டிக்குளம் – மனிக்ஃபாம் நிவாரண இடைநிலை கிராமங்களில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வலயங்களுக்குப் பொறுப்பான தளபதிகள், முகாமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை நேற்று (14) வவுனியா அழைத்து அரச அதிபர் இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார். மழையின் காரணமாக கூடாரங்கள், மலசல கூடங்கள் மற்றும் சமையல் நட வடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணித்துள்ளார். இது தொடர்பில், வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடை பெற்ற சந்திப்பில் விரிவாக ஆராய்ந்து அறி வுறுத்தல்களை வழங்கியதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ்  தெரிவித்தார்.

நிவாரண இடைநிலை கிராமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தற்போது இடைக்கிடை மழைபெய்து வருகிறது. இதனால் அங்கு சிறு சிறு இடை யூறுகள் ஏற்பட்டுள்ளனன. எனவே, இந்தச் சிறு பாதிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு பாரிய மழை பெய்தால், ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அரச அதிபர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அங்கவீனர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், பல்கலைக் கழகங்களுக்குப் புதிதாகத் தெரிவான மாணவர்கள் ஆகியோரை முகாம்களிலிருந்து விடுவிப்பது தொடர்பில் விபரங்களைத் திரட்டி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் பூர்த்திசெய்ய எதிர்பார்ப் பதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.