சாவகச்சேரி நகரசபை மைதானமும் இந்து மயானமும் பொது மக்களின் பாவனைக்காக வெள்ளி முதல் திறப்பு

சாவகச்சேரி, நகர சபைக்குரிய விளையாட்டு மைதானம் மற்றும் இந்து மயானம் என்பன வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்படுவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தேவைகள் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பொதுமக்கள் நலன்கருதி அகற்றுவது தொடர்பில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்க பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் சாவகச்சேரி நகர சபைக்கு விஜயம் செய்திருந்த போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்தி மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சரும் ஆளுநரும் யாழ்.குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *