சிறைச் சாலைகளைப் பார்வையிடுவதற்கான உயர்மட்ட சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட இந்த சபையை நியமித்துள்ளார்.
முன்னாள் இராஜதந்திரியான நந்தா கோடெகே தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ராஜன் ஆசீர்வாதம், அர்ஜுன் தெரணியகல, எச். ஜீ. தர்மதாச, இம்தியாஸ் இஸ்மாயில் ஆகியோர் அடங்குகின்றனர்.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறைச்சாலை திணைக்க ளத்தின் நிர்வாகத்தில் உள்ள 25 சிறைச்சாலைகளின் நிர்வாகம், கைதிகளின் நலன் மற்றும் குறைபாடுகள், பிரச்சினைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இச்சபை உறுப்பினர்கள் எந்நேரமும் சிறைச்சாலைக்குச் சென்று சுயாதீனமாக கைதிகளை பார்வையிடவும் முறைப்பாட்டு பதிவுப் புத்தகமொன்றையும் ஒவ்வொரு சிறையில் வைத்து அதில் பதியப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் சகல அதிகாரமும் இச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.