அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பிரதமரிடம் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டதால் சபையில் சர்ச்சை – 30 நிமிட நேரம் இருதரப்பும் வாத பிரதி வாதம்

26parliament.jpgபிரதமரால் ஏற்கனவே சபையில் பதில் அளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நேற்று (20) மீண்டும் கேள்வி எழுப்ப முற்பட்டதால் ஆளுந்தரப்பு எதிர்த் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் சுமார் 30 நிமிட நேரம் சர்ச்சை நிலவியது.

எதிர்க் கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சமர்ப்பித்திருந்த ஒரு கேள்வி ஏற்கனவே பிரதமரால் பதில் அளிக்கப்பட்டது எனவும். அதேநேரம் அந்தக் கேள்வி இரண்டு பக்கங்களுக்கு மேற்பட்டிருந்ததுடன் ஜோசப் மைக்கல் பெரேராவின் கையொப்பத்தைக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் கூறி அதனை மீண்டும் எழுப்புவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய கேள்வியை மீண்டும் கேட்பதற்கு அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் மறுத்துவிட்டார். ஜோசப் மைக்கல் பெரேரா, கட்சித் தலைவரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைச்சர் குணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.

‘கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி சபைக்கு வருகை தராததால் அவர் சார்பில் கேள்வி எழுப்ப உங்களை நியமிப்பதாகக் கூறியதால் நாம் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தினமும் சபையில் கேள்வி கேட்டு நாடகம் ஆடுகிர்கள்.

நாட்டைத் தவறாக வழிநடத்தி குழப்பப் பார்க்கிர்கள். இப்படித் தொடர்ந்தால் கட்சித் தலைவர் மாத்திரம் கேள்வி கேட்கலாம் என்ற விதியை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்குத் நாம் தள்ளப்படலாம் என்றார் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

எனினும் இதனை மறுத்த ஜோசப் மைக்கல் பெரேரா இல்லை நான் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் முழுமையான பதிலை அளிக்கவில்லை என்றார்.

அப்படியாயின் ஏன் நேருக்கு நேர் பிரதமரிடம் மறுத்துக் கேட்கவில்லை? என்று திருப்பிக் கேட்டார் சபாநாயகர்.

விவாதம் நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ளதே.

சரி மீண்டும் எஎனக்கு எழுத்து மூலம் தாருங்கள். நான் அனுமதி தருகிறேன்.’

என்ற சபாநாயகர் டபிள்யூ ஜே. எம். லொக்குபண்டார, 17வது திருத்தச் சட்டத்தைத் தவிர்த்து வேறு விடயங்கள் குறித்தும் கேள்வி கேளுங்கள். அதற்குப் பிரதமர் அன்றே பதில் அளித்துவிட்டார். அன்று (18) எழுப்பிய கேள்விகளை மீண்டும் கேட்காதீர்கள் என்று அறிவுறுத்தினார். கேள்வி கேட்கப்படாமல் இந்தச் சர்ச்சையே சுமார் 30 நிமிடம் நீடித்தது.

மாலபே மாணவன் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமை, அங்குலானவில் இரு இளைஞர்கள் கொலையுண்டமை இவற்றுக்கு காரணம் 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமை என்ற கருத்துப்பட கடந்த செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளையே ஜோசப் மைக்கல் பெரேரா மீண்டும் கேட்கவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

00jaffnabus.gif
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரைக்கு வழிபடுவதற்காகச் சென்ற நூற்றுக்கணக்கான தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  பேருந்துகளில் புறப்பட்டு வந்த இவர்கள், வவுனியாவுக்கு வடக்கே ஏ9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பயண அனுமதி மறுக்கப்பட்ட தாங்கள் தங்குமிட வசதிகளின்றி சிரமப்பட்டதாக அந்த யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வந்திருந்தவர்களில் சுமார் 400 பேர் வரையில் வவுனியா மடுக்கந்தை பெளத்த விகாரையில் நேற்றிரவு தங்கியிருந்தார்கள். ஏ9 வீதி ஊடாக பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வரலாம் என ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளையடுத்தே தாங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காகப் புறப்பட்டு வந்ததாக அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தார்கள்.

நாட்டின் தென்பகுதியில் இருந்து திருகோணமலைக்குச் சென்று அங்கிருந்து கெப்பிட்டிகொல்லாவ, ஹொரவப்பத்தானை வழியாக வவுனியாவை வந்தடைந்ததாக இந்த யாத்திரிகர்களை ஏற்றிவந்த பேருந்துகளின் சாரதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாது என ஓமந்தையில் வைத்து திருப்பிவிடப்பட்டதை அடுத்து, மடுக்கந்தை விகாரையில் நேற்று முன்தினம் இரவைக் கழித்துவிட்டு, மதவாச்சி ஊடாக அனுராதபுரத்தி்ற்குச் செல்வதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் இதனால் வவுனியாவில் இருந்து தாங்கள் மீண்டும் திருகோணமலை வீதிவழியாகவே செல்ல வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கிய குற்றசாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

rajanikanth.jpgரஜினி காந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கியதாக இலங்கையின் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணையத்தளம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இங்கிலாந்தில் உள்ள தமிழர் ஒருவரின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் ரஜினிகாந்தின் படங்களை தயாரிப்பதற்கு நிதி வழங்கியதாக அவர் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் குசேலன் மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற எந்திரன் ஆகிய படங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரிசாட் பதியுதீன் லண்டன் தமிழர் என குறிப்பிட்டிருந்த லண்டன் கருணாஸ் ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் குசேலன் திரைப்படம் கே. பாலசந்தர் அஸ்வின் டட் மற்றும் ஜீ. பீ. விஜயகுமார் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பிலேயே உருவாகியிருந்தமையை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ரோபோ என்று முன்னர் பெயரிட்பட்டு பின்னர் எந்திரன் என பெயர் மாற்றப்பட்ட ரஜினிகாந்தின் அடுத்தப் படமும் சன் டீவியினால் தயாரிக்கப்பட்டுவருகிறது. அது ஐங்கரன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவிருந்தாலும் பின்னர் அது கைமாறி தற்போது சன் டீ வி நிறுவனத்தின் கைகளில் தயாரிப்பில் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் குற்றச் சாட்டு ஆதரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா- யாழ் ரயில் மீளமைப்புக்கு 42 கோடி ரூபா நிதி கிடைத்துள்ளது

26parliament.jpgவவுனியா விற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் நிலையங்களை மீளமைப்பதற்காக 42 கோடி ரூபா உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘உதுரு மிதுரு’ திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ‘உதுருமிதுரு’ திட்டத்திற்கான பிரசாரப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டதாக ஜே.வி.பி. எம்.பி.

ஒருவர் பாராளுமன்றத்தலி பொய்யான தகவலொன்றை தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான பிரசாரப் பணிகளுக்கு ரயில் திணைக்களத்தினூடாக 10 இலட்சம் ரூபா கூட செலவிடப்படவில்லை. எனது நேரடிக் கண்காணிப்பின் கீழே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தவறான செய்திகளை பரப்பி சபையையும் மக்களையும் தவறாக வழிநடத்த வேண்டாமென கோருகிறேன்.

மோதல் காரணமாக சேதமான ரயில் நிலையங்களை மீளமைக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக நிதியமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி ரயில் பாதைகளை மீளமைக்க 42 கோடி ரூபா அனுசரணை கிடைத்துள்ளது என்றார்.

262 கோடி செலவில் ரயில் பெட்டிகள்

மற்றொரு வாய்மூல வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், 2006ம் ஆண்டு முதல் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் என்பன கொள்வனவு செய்வதற்கு 262 கோடி ரூபா செலவிடப்பட்ட தாகவும் இந்தக் காலப்பகுதியில் 100 ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் மற்றும் சிற்றுண்டி கூட பெட்டிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதில் 57 மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் 24 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் 6 சிற்றுண்டி கூட பெட்டிகளும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

வன்முறைகளுக்கு நடுவே ஆப்கான் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

vote000.jpgஆப்கானிஸ் தானில் கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்ததிருப்பதை அந்நாட்டின் அததிபர் ஹமீத் கர்சாய் பாராட்டியுள்ளார். வாக்குபதிவு தினமான வியாழனன்று மட்டும் எழுபது தாக்குதல்கள் நடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்சாய் அவர்களின் முக்கியப் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்ரஃப் கனி, நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே வந்திருப்பதாக ஆப்கானிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தபடியால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு கடைசியாக நடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது என காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் மூன்று மாதத்தினுள் மீள்குடியேற்றம்

26parliament.jpgதிருகோண மலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை மூன்று மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத், சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் கூறினார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வை.எம்.நவரட்ன பண்டா எழுப்பிய, வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் விபரங்கள் தொடர்பில் பா.உ.நவரட்ன பண்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத், இந்த ஆண்டில் 2,88,938 பேர் இடம்பெயர்ந்ததாகவும், இதுவரை 59,600 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் 98% நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மட்டக்களப்பில் 35,766 குடும்பங்களும், திருகோணமலையில் 22,068 குடும்பங்களும், மன்னாரில் 669 குடும்பங்களும் அம்பாறையில் 51 குடும்பங்களும், யாழ்ப்பாணத்தில் 1054 குடும்பங்களும் இதுவரை மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30ற்கு வழமைக்கு மாறாகப் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்னவின் தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார சபா பீடத்திற்கு வருகை தந்தார்.

அமைச்சரின் பதிலுக்குப் பின்னர், துணைக் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, ‘சம்பூரில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் வாழ்விடத்தில் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பாமல் தொடர்ந்து இரண்டு வருடமாக ஐந்து முகாம்களில் உள்ளனர்” என்றார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வேறு இடங்களில் குடியமர மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். சொந்த இடங்களுக்குச் செல்வதானால், பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நானறிந்தவரை சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை” என்றதுடன்,

அதேநேரம், எதிர்க்கட்சிகளுக்கு நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிமல் மெத்திவக்க நியமனம்

nimal_madiwaka.jpgபொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண இவருக்கான பதவி நியமனத்தை நேற்று வழங்கியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிகளுக்கு மேலதிகமாக ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இதுவரை கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர இவ்வாரம் முதல் ஓய்வுபெறுகின்றார். ஊடகப் பேச்சாளராக நீண்டகாலம் பொறுப்பிலிருந்த இவர் ஊடகத்துறைக்கு செய்தி வழங்குவதில் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபராகவும் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இலங்கையின் முதலாவது காற்றாடி மின் உற்பத்தி நிலையம் புத்தளத்தில்

wind_powerss.jpgகாற்றாடி மூலம்  மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு நிலையங்கள்  புத்தளம் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதிக்காக இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி முகாமையாளர் டட்லி பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைக்கப்படும் காற்றாடி மூலமான முதலாவது மின் உற்பத்திததிட்டம் இதுவாகும். இத்திட்டத்திற்கு 4255 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 மெகாவொட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதன் நிர்மானப்பணிகள்  இரு உள்நாட்டு நிறுவனங்கள மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் கருவிகள் ஸ்பைன் நாட்டில் இருந்து தருவிக்கப்படவுள்ளது. காற்றாடி மூலம் மின் உற்பத்தி செய்யும் 25 டேபைன்கள்  இங்கு பொருத்தப்படவுள்ளன.    

சர்வதேச தரமுடையதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுமென இலங்கை முதலீட்டுச் சபையின்  உதவி முகாமையாளர் மேலும்  தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை துறைமுக பணிகள் அடுத்த ஆண்டு பூர்த்தி

yappa.jpgஅம்பாந் தோட்டை துறைமுக நிர்மாண பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது கப்பல் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த துறைமுகத்திற்கான முதலாவது இறங்குதுறையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாக தெரிவித்த அவர் 500 மீற்றர் தூரம் வரை இறங்குதுறை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நாரஹேன்பிடியிலுள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில்,

கொழும்பைப் போன்று கிராமப் புறத்தையும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு இறுதியிலே இந்த துறைமுக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும், தமது இலக்குக்கு முன்னரே தற்பொழுது வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

39,080 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிர்மாண பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளன. இவற்றில் 33,218 மில்லியன் ரூபாவை சீன அரசு நிதியுதவியாக வழங்கி யுள்ளது என்றார். 2010ம் ஆண்டு டிசம்பரில் பணிகளை பூர்த்தி செய்து விட்டு நீரை உள்வாங்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசிற்கு எதிரான பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் கைது.

jvp-poster.jpgநாட்டில் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழியுங்கள் எனும் வாசகம் அடங்கிய பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி யை சேர்ந்த கொழும்பு நகரசபை உறுப்பினரான சுமித் ஹேவாபாசப்பெருமகே யுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.