அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அம்பாறை மாவட்டத்தில் கடும் ‘வரட்சி’ இரு ஆதி வாசிகள் மரணம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வரட்சியால் றதுகல காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் மரணமடைந்தும், நச்சுக் கிழங்குகளை உண்டதனால் சிலர் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை- பிபிலை பிரதான வீதியில் சுமார் 15 மைல் தொலைவில் றதுகல என்ற காட்டுப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு சுமார் 50 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றன. சுது வன்னிலத்தோ என்பவர் அக்குடும்பங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

அண்மைக் காலமாக மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி றதுகலவையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் உண்பதற்காக பராமரித்து வந்த சிறுசேனைகள் நீரின்றி வரண்டுவிட்டன. அதனால் அவர்கள் வேறு பல காட்டு மரங்களின் கனிகளையும், காய்களையும் சில கிழங்கு வகைகளையும் புசித்துவந்தனராம். கடந்தவாரம் இவ்விதம் உண்ட கிழங்கில் இருந்த நச்சுத்தன்மை காரணமாக இரு ஆதிவாசிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்க் கைதிகள் விவகாரம்; அமைச்சர் மிலிந்தவுடன் புத்திரசிகாமணி பேச்சு

091009puttirasigamani.jpgசிறைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்து நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாகப் பிரதியமைச்சர் வி.புத்திர சிகாமணி தெரிவித்தார். கைதி களுக்கு எதிராக வழக்குப் புதிவு செய்வதா, அல்லது விடுதலை செய்வதா என்பதை ஆராய்ந்து வருவதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழகக் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். பின்னர் பிரதியமைச்சர் கவனம் செலுத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பல்வேறு சிறைகளிலும் சுமார் 600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று கோலாகலமாக ஆரம்பம்

இந்த சமய கலாசார பாரம்பரியங்களை உள்ளடக்கியதான மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று 10ம் திகதி வெகு கோலாகல மாக ஆரம்பமானது. மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்- முஸ்லிம் பாட சாலைகளைச் சேர்ந்த சுமார் 2000 மாணவர்களும், மற்றும் ஆசிரியர்களும், மாத்தளை மாவட்ட பொதுமக்களும் தொடக்க விழாவில் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாத்தளை நகரெங்கும் வாழை, மா தோரணங்களால் அலங்கரிக்கப்ப ட்ட, மாத்தளை மாநகர வீதியெங் கும், சாஹித்திய விழாவை வாழ்த்தி மும்மொழிகளிலும் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

சாஹித்திய விழாவிற்கு மெருகூட்டும் வகையில் மாத்தளை பாக்கியம் மகளிர் தேசிய பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பொழுது, திருகோணமலையிலிருந்து வருகை தந்திருந்த இனிய இசை முன்னே ஊர்வலத்தில் அணி வகுத்துச் செல்ல, விழாவின் கதாநாயகனான மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் விழா பிரமுகர்களும், தமிழ் இலக்கியக் கர்த்தாக்களும், மற்றும் பொதுமக்களும் அணி வகுத்து சென்றனர்.

வீதிகள் தோறும் பட்டாசுகள் கொளுத்தி பொதுமக்கள் தமது ஆரவாரத்தினை தெரிவித்தனர்.

30 வருடங்களின்; பின்னர் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு! எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில்

260909srilanka.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி ஆளுகையை விருத்தி செய்வதற்கான தளமொன்றை உருவாக்கும் நோக்குடன் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளது. உள்ளூராட்சி மாநாடு 2009 என்ற பெயரில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறும்.

18ம் திகதி யாழ். மத்திய கல்லூரியிலும் 19ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு நடைபெறும்.
மாநாடு நான்கு அம்சங்களைக் கொண்டதாக நடத்தப்படும்.
1. கருத்தரங்குகள்
2. வடமாகாண உள்ளூராட்சி,  மாகாண சபை நிர்வாகங்களினால் நடத்தப்படும் கண்காட்சிகள்
3. கலாசார நிகழ்வுகள்
4. பரிசுகளும் விருதுகளும் வழங்கல்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,  கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த சுமார்; 730 பேர் நிகழ்வில் கலந்து சிறப்பிக் கவுள்ளனர். வெளிமாவட்டங்களிலிருந்தும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் செல்லவுள்ளனர்.

இடம்பெயர்ந்தோரின் கடற்றொழில் உபகரணங்கள், படகுகள், கையளிப்பு

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மாத்தளன், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லை த்தீவுப் பகுதிகளிலிருந்து படகுகள் மூலம் முனைப்பகுதிக்குத் தப்பி வந்தவர்களில் ஒரு சிலரது படகுகளும், வெளியிணைப்பு இயந்திரங்களும் உரிமையாளர்களிடம் கடற்படையி னரால் கையளிக்கப்பட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமராட்சிப் பிரதேசக் கடற்படை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமைச்சரின் முன்னிலையில் இவை கையளிக்கப்பட்டன.

10 பேர் கொண்ட தமிழக பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகை – டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் உட்பட 10 பேர் பங்கேற்பு

baalu.jpgஇலங்கை நிலைவரம் குறித்து ஆராயவென தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழக உறுப்பி னர்களைக் கொண்ட குழுவினரே இன்று இலங்கை வரவுள்ளனர். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பணிப்பிற்கமைய குழுவினர் இலங்கை வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினரான அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் வரும் இக்குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர் டி. ஆர். பாலு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இலங்கை விவகாரம் தொடர்பாக கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜயன், கெலன் டேவிட்சன் ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் என். எஸ். வி. சித்தன், என். சுதர்ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, ஜே. எம். ஹருண் ஆகியோரும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இன்று இலங்கை வருகின்றனர். இன்று காலை இலங்கை வரும் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடன் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நாளை மேற்படி குழுவினர் யாழ். மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிவர். நாளை மறுதினம் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது-

இன்று காலை 8.50க்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இல. 1 x 621 ரக ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தமிழக குழுவினர் வருகின்றனர். அங்கிருந்து கிழக்கு மாகாணம் செல்லும் குழுவினர் வாகரையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்வையிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளனர். மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுடனான சந்திப்பு இடம்பெறுவதுடன் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில், பஸ் திட்டப் பகுதிக்கும் விஜயம் செய்வர். இன்று திருகோணமலையில் தங்கியிருக்கும் மேற்படி தமிழக குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர் செல்லவுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் தமிழக குழுவினர் சந்திக்கவுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்யும் குழுவினர், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுவர்.

தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளையும் சந்திக்கும் இக்குழுவினர் யாழ். மாநகர சபையின் புதிய மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

யாழ். பொது நூலகம், விளையாட்டரங்கு, யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளுக்கும் தமிழக குழுவினர் விஜயம் செய்வர். யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருடனான சந்திப்பின் பின்னர் நிவாரணக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இலங்கை புறப்படுவதற்கு முன்ன தாக ரி. ஆர். பாலு தலைமையிலான தமிழக குழுவினர் கலைஞர் கருணா நிதியை நேற்று மாலை சந்தித்து உரையாடினர். இலங்கைக்கு புறப்ப டுவதற்கு முன்னதாக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் ஆலோசனையை பெறுவதற்காகவே இவர்கள் முதல் வரை சந்தித்தனர். 

பிலிப்பைன்ஸில் கடும் புயல், நிலச்சரிவு! : 153 பேர் பலி

280909.jpgபிலிப் பைன்ஸ் நாட்டில் ‘பார்மா’ என்ற புயல் கடுமையாகத் தாக்கியது. இதனையடுத்துப் பலத்த மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  ஏராளமானோர் பலியானார்கள். வெள்ளம் வடிந்த பிறகும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு மலைக் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது. அப்போது மண்ணுக்குள் புதைந்துக் கிடந்த 153 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

நாடு முழுவதும் மின்துண்டிப்பு: தொழில்நுட்ப கோளாறு காரணம்

091009ecb.jpgகொலன்னாவ, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டி ப்பு ஏற்பட்டது. இம்மின் துண்டிப்பினால் நாட்டின் சில பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களும் இருளில் மூழ்கியதுடன் மக்கள் பெரும் அசெளகரிய ங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

இதேவேளை, இம் மின் துண்டிப்பிற்கு நாசகார சதி முயற்சிகள் எதுவும் காரணமில்லையெனவும் இயந்திர தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமெனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

மேற்படி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்றை நேற்று நண்பகல் மின்சார சபை ஒழுங்கு செய்திருந்தது. சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் மின்சார சபையின் தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்க பொது முகாமையாளர் திருமதி பீ. ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

இது தொடர்பில் விளக்கமளித்த மின்சார சபையின் தலைவர் எதிரிசிங்க; நேற்று அதிகாலை 1.30 மணியளவில் களனி திஸ்ஸ கொலன்னாவை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தென்மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இம் மின்நிலையத்தின் மூலம் 1,32,000 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இம் மின் துண்டிப்பினை முழுமையாக சரிசெய்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நேற்றுக் காலை 9,15 மணிக்கே இதனை சரிசெய்ய முடிந்தது. 60 வருட மின்சாரசபையின் வரலாற்றில் இத்தகைய நீண்ட மின் துண்டிப்பொன்று இடம்பெறவில்லையென தெரி வித்த அவர், நேற்று மதியமளவில் நாடு முழுவதிற்கும் 95 வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தோல்வியைச் சமாளிக்க காரணம் தேடுகிறது ஐ.தே.க சபையில் அமைச்சர் நிமல்

26parliament.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் (இன்று நடைபெறும்) படுதோல்வி அடைய விருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கான காரணங்களை முன்கூட்டியே தயாரிப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வின் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் குருநாகல் மாவட்ட ஐ.தே. க. எம். பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று நடைபெறும் தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு பெட்டிகளை வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பஸ் வண்டிகளில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் செல்லுவதற்கு அனுமதிக்கப்படாதது குறித்து எம். பி. ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, ஐ. தே. க. ஏற்கனவே ஏழு மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்திருக்கின்றது என்றார்.

41 அரச நிறுவனங்களுக்கு ரூ. 204 கோடி குறைநிரப்பு பிரேரணை – அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் சமர்ப்பிப்பு

வரவு-செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொதுக் கருத் திட்டத்தின் கீழ் 41 அரசாங்க நிறுவனங்களுக்கென 204 கோடியே 13 இலட்சத்து 95 ஆயிரத்து 532 ரூபாவுக்கு குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குறை நிரப்பு பிரேரணையை ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகரின் அனுமதியைப் பெற்று அமைச்சர் இந்தக் குறை நிரப்பு பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

அமைச்சுக்கள், மாகாண சபைகள், அரசாங்க திணைக்களங்கள் அடங்கலான 41 அரச நிறுவனங்களுக்காகவே இக்குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தைத் திருத்துவதற்கென ஒரு கோடியே பத்து லட்சத்து 81 ஆயிரத்து 882 ரூபாவும் இக்குறைநிரப்பு பிரேரணைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.