மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று கோலாகலமாக ஆரம்பம்

இந்த சமய கலாசார பாரம்பரியங்களை உள்ளடக்கியதான மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று 10ம் திகதி வெகு கோலாகல மாக ஆரம்பமானது. மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்- முஸ்லிம் பாட சாலைகளைச் சேர்ந்த சுமார் 2000 மாணவர்களும், மற்றும் ஆசிரியர்களும், மாத்தளை மாவட்ட பொதுமக்களும் தொடக்க விழாவில் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாத்தளை நகரெங்கும் வாழை, மா தோரணங்களால் அலங்கரிக்கப்ப ட்ட, மாத்தளை மாநகர வீதியெங் கும், சாஹித்திய விழாவை வாழ்த்தி மும்மொழிகளிலும் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

சாஹித்திய விழாவிற்கு மெருகூட்டும் வகையில் மாத்தளை பாக்கியம் மகளிர் தேசிய பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பொழுது, திருகோணமலையிலிருந்து வருகை தந்திருந்த இனிய இசை முன்னே ஊர்வலத்தில் அணி வகுத்துச் செல்ல, விழாவின் கதாநாயகனான மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் விழா பிரமுகர்களும், தமிழ் இலக்கியக் கர்த்தாக்களும், மற்றும் பொதுமக்களும் அணி வகுத்து சென்றனர்.

வீதிகள் தோறும் பட்டாசுகள் கொளுத்தி பொதுமக்கள் தமது ஆரவாரத்தினை தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *