வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மாத்தளன், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லை த்தீவுப் பகுதிகளிலிருந்து படகுகள் மூலம் முனைப்பகுதிக்குத் தப்பி வந்தவர்களில் ஒரு சிலரது படகுகளும், வெளியிணைப்பு இயந்திரங்களும் உரிமையாளர்களிடம் கடற்படையி னரால் கையளிக்கப்பட்டன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமராட்சிப் பிரதேசக் கடற்படை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமைச்சரின் முன்னிலையில் இவை கையளிக்கப்பட்டன.