அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2017ம் ஆண்டு வெளியேறி விடும்

white-house.jpgஆப்கா னிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2017ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2001ம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்தது. இது தவிர நேட்டோ நாட்டு படைகளும் ஆப் கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது படை வீரர்களை படிப்படியாக திரும்ப பெற்று வருகின்றன. 2011ம் ஆண்டுக்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. இதனால் ஆப் கானிஸ்தான் காந்தகார் பகுதியில் பாது காப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒபாமா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக் கான அமெரிக்க படைத் தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே 35 முதல் 40 ஆயிரம் வரையிலான இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.

இது குறித்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது :-

நமது படைகள் ஏன் அங்கு இன்னும் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்காகவே தமது படைகள் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் உள்ளன. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் வரை இந்த படை இருக்கும். 2017ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும்.

அரசியல் கட்சியினர் 57 பேரை படுகொலை செய்த பிலிப்பைன்ஸ் மாகாண கவர்னர் மகன் உட்பட 21 பேர் கைது

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாகாண கவர்னர் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கிறது.  இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு குடாடாட்டு பழங்குடியின தலைவர் இஸ்மாயில்கான் ஆதரவாளர்கள் மனுதாக்கல் செய்ய சென்றனர்.

அப்போது இஸ்மாயில் மனைவி ஜெனாலின், அவரது ஆதரவாளர்கள், வக்கில்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 57 பேர் அம்பாட்டுவான் பழங்குடியின அரசியல் கட்சியினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் 22 பேர் பத்திரிகையாளர்கள் ஆவர்.

pili.bmpபிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை தொடர்பாக பலிப்பைன்ஸ் இராணுவத்தினர் 20 பேரை நேற்று கைது செய்தனர். மகுயின்டநாவ் மாகாண கவர்னராக உள்ள அண்தால் அம்பாட்டுவான் மகனும் மேயருமான ஜூனியர் அண்தால் என்பவரது தலைமையில்தான் ஆயுதம் தாங்கிய குழு குடாடாட்டு ஆதரவாளர்களை கடத்திச் சென்று படுகொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர் இராணுவத்திடம் சரண் அடைந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி – தேர்தல்கள் ஆணையாளர் இன்று அறிவிப்பு

dayananda_disanayake.jpgஇலங் கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

வேட்பு மனுக்கள் டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க் கட்சிகளிடம் எதிர்காலத் திட்டமில்லை – விமல் வீரவன்ச

vimal-veeravansa.jpgஎதிர்காலத் திட்டமெதுவும் இல்லாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் ஒரே நோக்கில்தான எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்துள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஒரே கொள்கையில் ஒன்றுபட முடியாத இவர்கள் எப்படி நாட்டை ஆளப்போகிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். விமல் வீரவன்ச அங்கு மேலும் கூறியதாவது இந்த நாட்டில் சர்வாதிகாரம் நடைபெறுவதாகக் கூறும் எதிhக்கட்சிகள் அதற்கான ஆதாரங்ளை முன்வைக்க வேண்டும். தேவையானளவு அதிகாரம் இன்றி எந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியாது. குடும்ப அரசியலால் இந்த நாட்டுக்குப் பாதகம் இல்லை. அவர்களின் செயற்பாடுகளால் நாடு நன்மையடைந்தால் அதுவே பெரும் சேவையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

புத்தளவை அண்மித்த பகுதியில் எம்.ஐ.-24 உலங்கு வானூர்தி விபத்து

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24 தாக்குதல் ரக உலங்கு வானூர்தி ஒன்று புத்தள காட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்துள்ளது. 5 வான் படையினருடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படைத்தரப்பு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என உடனடியாக அரசாங்கம் அறிவித்த போதும் விசாரணைகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்கு வானூர்தி, தற்போது எரிந்து கொண்டிருப்பதாகவும் உலங்கு வானூர்த்தியில் சென்ற 5 பேர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura.jpgநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறு பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றவே எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர், இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் முன்வருமானால் அரசாங்கமும் அதற்கு தயாராகவே உள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து இதனைச் செய்ய முடியாது.  எதிர்க் கட்சி கூறுவதைப்போல் செய்வதானால் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதனைச் செய்யவேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் எதனையும் நடத்த முடியாது.

எனவே மீண்டும் ஜனாதிபதி தலைமையில் பலமான ஓர் அரசாங்கத்தை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, பாராளுமன்றம் பலவீனமான நிலையில் ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்குப் பின்னரான செயற்பாடுகளில் இப்போது நாடு உள்ளது. உலக அரசியல் மாற்றமடைந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் செயற்படவேண்டும். இராணுவ மூலோபாயத்தினால் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது. அவ்வாறெனில் எப்போதோ வென்றிருக்கலாம்.

ஆகவே, அரசியல் மூலோபாயமும் அவசியம். அந்த இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் மேற்கொண்டதனால் தான் எம்மால் யுத்தத்தை வெல்ல முடிந்தது. அந்த வகையில் ஈடினையற்ற ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவருக்குச் சவாலாக எவருமே இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

3 ரிச்டர் அளவில் நேற்று தென் பகுதியில் நில அதிர்வு

தென் பகுதியின் சில பிரதேசங்களில் நேற்றுக்காலை சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக பூகற்பவியல் அகல்வாராய்ச்சித் திணைக்களம் தெரிவித்தது. இந்த நில அதிர்வு திஸ்ஸ மகாராம, லுணுகம் வெஹர, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அம்பலந்தொட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக திணைக்கள பணிப்பாளர் டொக்டர் ஒ. கே. திசாநாயக்க கூறினார்.

இந்த நில அதிர்வினால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், நில அதிர்வு தொடர்பாக பல்லேகலேயில் உள்ள பூமியதிர்வு உபகரணங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 ரிச்டர் அளவை விட குறைந்தளவு நில அதிர்வே ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நில அதிர்வு குறித்து திணைக்களம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

பல்லேகலே சுனாமி நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்த நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. கண்ணாடிகள், ஜன்னல்கள் என்பன ஒரு சில செக்கன்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பைத் தாக்குதல் தினமான நேற்று தமிழக கரையோரப் பாதுகாப்பு தீவிரம்

mumbai-terror-attack.jpgமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமான (நவம்பர் 26 ஆம் திகதி) நேற்று தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையில் மீண்டும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையும் கடலோர காவல்படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பாக்கு நீரினை சந்தியில் இந்திய கடற்படையினரும் கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சிபுலியில் உள்ள விமான கண்காணிப்பு நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதைகள் இனி மூடப்படாது

கொழும்பில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதைகள் இனிமேல் மூடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை சுமுக மானதையடுத்தே இத்தகைய தடைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூறிய பிரிகேடியர், இனிமேல் எம்.பிக்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதி முக்கியஸ்தர்கள் பயணம் செய்வதற்காக வீதிகள் மூடப்படமாட்டாதெனவும் தெரிவித்தார். பாராளுமன்றம் செல்லும் வீதி உட்பட அனைத்து வீதிகளிலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைக்கு ஒப்படைப்பு

gachandrasri.jpgவவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப் பட்டிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் தற்காலிகமாக வவுனியா மாவட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். சிலர் படிப்படியாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.

மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுவதால் பாடசாலைகளில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்கள் நிவாரணக் கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள 18 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகாக ஒப்படைக்கப் பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.