வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைக்கு ஒப்படைப்பு

gachandrasri.jpgவவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப் பட்டிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் தற்காலிகமாக வவுனியா மாவட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். சிலர் படிப்படியாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.

மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுவதால் பாடசாலைகளில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்கள் நிவாரணக் கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள 18 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகாக ஒப்படைக்கப் பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *