முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதைகள் இனி மூடப்படாது

கொழும்பில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதைகள் இனிமேல் மூடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை சுமுக மானதையடுத்தே இத்தகைய தடைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூறிய பிரிகேடியர், இனிமேல் எம்.பிக்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதி முக்கியஸ்தர்கள் பயணம் செய்வதற்காக வீதிகள் மூடப்படமாட்டாதெனவும் தெரிவித்தார். பாராளுமன்றம் செல்லும் வீதி உட்பட அனைத்து வீதிகளிலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *