புத்தளவை அண்மித்த பகுதியில் எம்.ஐ.-24 உலங்கு வானூர்தி விபத்து

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24 தாக்குதல் ரக உலங்கு வானூர்தி ஒன்று புத்தள காட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்துள்ளது. 5 வான் படையினருடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படைத்தரப்பு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என உடனடியாக அரசாங்கம் அறிவித்த போதும் விசாரணைகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்கு வானூர்தி, தற்போது எரிந்து கொண்டிருப்பதாகவும் உலங்கு வானூர்த்தியில் சென்ற 5 பேர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *