::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயரிடுங்கள் : -வைகோ

vaiko-pira.jpgதேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டடிருந்த பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வொன்றில் பேசிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வை.கோபாலசாமி தமிழ் நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயரிடுங்கள் என வேண்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை ஆதரித்து பேசுவது குற்றம் என்பது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தேர்தலில் வன்முறை – 4 இடங்களில் குண்டுத்தாக்குதல்

ஆப்கா னிஸ்தானின் தலை நகர் காபூல் உட்பட 4 இடங்களில் இன்று தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் தீவிரவாதிகள் விரட்டப்பட்ட பிறகு 2ஆவது முறையாக இன்று அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கடந்த 2 நாட்களாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் காபூல் நகருக்குள் புகுந்து ஜனாதிபதி மாளிகை மீது ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். நேற்றும் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் மீண்டும் வன்முறையில் இறங்கினார்கள். தலைநகரம் காபூல் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணியில் அமெரிக்கக் கூட்டு படைகள் உட்பட 3 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்களில்  இன்று வாக்குப்பதிவு நடக்கவில்லை 

ஜஸ்வந்த் நீக்கப்பட்ட விதம் தவறு – பரூக் அப்துல்லா

farooq1111.jpgபாஜக விலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் சரியல்ல, முறையல்ல என்று மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இதுகுறித்து ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விதம் மோசமானது. இதுபோன்ற செயல் யாராக இருந்தாலும் பாதிக்கத்தான் செய்யும்.

ஒரு கட்சிக்காக 30 வருடங்களுக்கும் மேலாக உழைத்த ஒருவரை, மூத்த தலைவரை இப்படி அவமதித்திருக்கக் கூடாது என்றார் அப்துல்லா.

இராக் குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலி

இராக் கின் தலைநகர் பாக்தாதின் மத்திய பகுதியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாதில் இந்த ஆண்டில் நடந்த மிக மோசமான வன்செயல் இதுவேயாகும்

ஒரு சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆறு குண்டு வெடிப்புகள் இராக்கின் அரசு அமைச்சுகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே நடந்துள்ளது. தலைநகரின் பாதுகாப்பு வலயமான கீரி்ன் சோன் என்ற பகுதிக்கு சற்று வெளியேயுள்ள வெளிநாட்டு அமைச்சுக்கு அருகேதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

பாதுகாப்புச் சூழல் குறித்து இராக்கிய அரசு சமீபத்தில் வெளியிட்டு வரும் நம்பிக்கை அறிக்கைகளை இது கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு முந்தைய தாக்குதல்கள் நகரின் வறுமை மிக்க, பாதுகாப்பு குறைவான பகுதிகளில் நடைபெற்றதாகவும், இந்த வகையில் தற்போது நடைபெற்ற தாக்குதல்கள் அசாதாரணமானவை என்றும் பாக்தாதில் இருக்கும் பி பி சி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல்; அனைவரையும் வாக்களிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி உலக வங்கியின் முன்னாள் உறுப்பினர் அஷ்ரஃப் கானி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாவர்.

ஜனாதிபதியையும் 34 மாகாண சபைகளின் 420 உறுப்பினர்களையும் தெரிவு செய்யும் இத் தேர்தலில் 17 இலட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.  ஆறாயிரம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. தேர்தலைக் கண்காணிக்கவென இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தயாராகவுள்ளனர்.

மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வளவு தொகையான கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோல் வன்முறைகள் கலகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வீதிகள் பிரதான சந்திகளில் பாதுகாப்புப் படை யினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களி ப்பு நிலையங்களிலும் இராணுவம் குவிக்க ப்பட்டுள்ளது.

ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்ய ஆப்கான் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென ஐ. நா. செயலாளர் பான் கி மூன் கேட்டுள்ளார். காலை தொடங்கும் வாக்களிப்பு மாலையில் முடிவடையவுள்ளது. வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆரூடம் கூற முடியாதுள்ள நிலையில் ஹமித் அல் கார்ஸா யியும் அஷ்ரஃப்கானியும் உள்ளனர். முன்னாள் நிதியமைச்சரின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.

அஷ்ரஃப் கானியின் உரை கவர்ச்சிகரமாக அமைந்தது. உணவையும், குடி நீரையும்தான் ஹமீத் அல் கார்ஸாயியால் தரமுடியும் பல தொழில்களையும் இலட்சக்கணக்கான வீடுகளையும் பாதுகாப்பையும் தன்னால் தரமுடியும் என அஷ்ரஃப் கானி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.  வெளிநாட்டுப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்தமை தற்போதைய ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயியின் செல்வாக்கைப் பாதித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலிபான்கள் தேர்தலைக் குழப்பும் நோக்குடன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் வாக்களிப்போரின் கரங்கள் துண்டிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதியின் மாளிகை மீது தலிபான்கள் ரொக்கட் தாக்குதல்களை நடத்தினர். மற்றும் தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்கதல்களில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்குச் செல்லத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக இடைத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் தொண்டாமுத்தூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவீத வாக்குகளுக்கும் மேலாக பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. ஐந்து தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

அதிமுகவின் தேர்தல் புற்ககணிப்புக்கு இடையே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஐந்து தொகுதிகளிலும் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் எனத் தெரிகிறது.

படுக்கையில் இணங்க மறுக்கும் மனைவியை பட்டினிபோட கணவனுக்கு அனுமதி – ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில், கணவன் உடலுறவுக்கு அழைக்கும்போது மறுக்கும் மனைவியை அக்கணவன் பட்டினிபோடுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு புதிய சட்டம் அரசிதழில் (வர்த்தமானி) பிரசுரமாகியுள்ளதன் மூலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலே சிறுபான்மை இனமாக உள்ள ஷியா மக்களின் குடும்ப வாழ்க்கை சம்பந்தமானது இந்த புதிய சட்டம்.

இந்த ஆண்டில் முன்னதாக இதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தபோது சர்வதேச அளவில் எதிர்ப்பு உணர்வலைகள் தோன்றியிருந்தன. அதனால் மசோதாவை அதிபர் கர்சாய் விலக்கிக்கொள்ள வேண்டி வந்திருந்தது.

ஆனால் தற்போது அமலுக்கு வந்துள்ள இம்மசோதாவின் மாற்று வடிவமும் பெண்களை பெருமளவில் ஒடுக்குவதாகவே அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பழமைவாத ஷியா மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக ஆப்கானியப் பெண்களை விலைகொடுத்துவிட்டார் அதிபர் ஹமீத் கர்சாய் என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு கசப்பான அனுபவம்!

shahrukh_khan1.pngஅமெரிக் காவின் நியூயார்க் விமான நிலையத்தில் தன்னிடம் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான். சிகாகோவில் இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ள ஷாருக்கானிடம்,  விமான நிலையத்தில் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பிடிஐ செய்தியாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் ஷாருக்கான் மேற்கண்டவாறு கூறினார்.

தங்களிடம் நடத்தப்பட்ட சோதனைக்காக விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டதற்கு, அதெல்லாம் தேவையில்லை என்றார் அவர். விமான நிலையத்தில் என்னிடம் நடத்தப்பட்ட சோதனை வழக்கமான நடவடிக்கை என்றால் அதில் ஒன்றும் தவறில்லை. அதை பின்பற்றுவது அவசியமான ஒன்று என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  ஷாருக்கானின் பெயரில் “கான்’ என்பது முஸ்லிம் பெயர் என்பதால் அமெரிக்காவில் அந்த பெயர் பொதுவான சோதனை பட்டியலில் உள்ளது. இதனால்தான் அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதை தெளிவுபடுத்தும் வகையில் அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

விமான பயணிகளுடன் அவர்கள் கொண்டுவரும் பொருள்களையும் சோதனை நடத்துவது வழக்கம். ஷாருக்கான் விமானத்தைவிட்டு இறங்கி சோதனை செய்யும் இடத்திற்கு வந்தார். ஆனால் அவரது உடமைகள் அடங்கிய பை சற்றுத் தாமதமாகக் கொண்டுவரப்பட்டது. இதனால் அவர் காத்திருக்க வைக்கப்பட்டார். மற்றபடி அவரிடம் நீண்டநேரம் சோதனை ஏதும் நடத்தவில்லை என்றும் அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் விமான நிலையத்தில் சனிக்கிழமை ஷாருக்கானிடம் சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடந்ததாகவும்,  பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் தலையீட்டின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை ஷாருக்கானும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார். அந்தப் பேட்டியில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து கோபமாகவும் அவர் பேட்டியளித்திருந்தார்.

ஜப்பானிலும் தாய்வானிலும் இன்று பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானிலும் தாய்வானிலும் இன்று திங்கட்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோளில் 6.8 ஆக பதியப்பட்டுள்ளது.

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள இசிகாதி தீவு அருகிலும், தாய்வானின் கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி காலை 9.11 மணிக்கு பூமியின் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. எனினும் சேதங்கள் ஏற்படவில்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“விடுதலைப் புலிகளின் கதியே மாவோயிஸ்ட்டுகளுக்கு ஏற்படும்’

அரசியல் கருத்தொருமைப்பாட்டை மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்தும் கேலிக்கூத்தாக்குவார்களேயானால் இலங்கையின் விடுதலைப் புலிகள் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆகியோரின் தலைவிதியே மாவோயிஸ்ட்டுகளுக்கும் ஏற்படுமென்றும் நேபாள காங்கிரஸ் தலைவரும் 22 கட்சி கூட்டணியின் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் முன்னாள் மன்னர் கயநேந்திராவின் நிலைமையே தற்போது நேபாளத்தின் மாவோயிஸ்ட்டுகளின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் 2 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிரிஜா பிரசாத் கொய்ராலா மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.

2008 ஜனவரி 2 இல் பிரசண்டாவின் ஒலிப்பதிவு நாடா பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதன்மூலம் மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக எமது சர்வதேச நண்பர்கள் கொண்டிருந்த இணக்கப்பாட்டை மாற்றிக்கொண்டனர். நாங்கள் கருத்தொருமைப்பாட்டு அரசியலில் இணைந்து கொள்ளுமாறு மாவோயிஸ்ட்டுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவர்கள் இதுவரை அதனை நிராகரித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து செய்வார்களேயானால், துரதிர்ஷ்டவசமாக அவர்களின் தலைவிதி இலங்கை தமிழ்க் கிளர்ச்சியாளர்களின் நிலைமையை ஒத்ததாக அமையும்.

மாவோயிஸ்ட்டுகளோடு கருத்தொருமைப்பாடு , ஒத்துழைப்பு, ஐக்கியம் என்பனவற்றை உள்ளடக்கிய அரசியலைக் கொண்டுவருவதற்கு நான் காலத்திற்கு காலம் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தேன். பிரசண்டாவுடன் ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயற்சித்து வந்தேன். அவரின் இரட்டைத் தனமான பேச்சும் இரட்டைத்தனமான தன்மையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கருத்தொருமைப்பாட்டு அரசியலை உடைப்பதாக அது உள்ளது என்று கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறியதாக நேபாள ரெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.