ஆப்கா னிஸ்தானின் தலை நகர் காபூல் உட்பட 4 இடங்களில் இன்று தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் தீவிரவாதிகள் விரட்டப்பட்ட பிறகு 2ஆவது முறையாக இன்று அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.
தற்போதைய ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கடந்த 2 நாட்களாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் காபூல் நகருக்குள் புகுந்து ஜனாதிபதி மாளிகை மீது ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். நேற்றும் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் மீண்டும் வன்முறையில் இறங்கினார்கள். தலைநகரம் காபூல் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை.
தேர்தல் பாதுகாப்பு பணியில் அமெரிக்கக் கூட்டு படைகள் உட்பட 3 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கவில்லை