கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura.jpgநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறு பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றவே எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர், இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் முன்வருமானால் அரசாங்கமும் அதற்கு தயாராகவே உள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து இதனைச் செய்ய முடியாது.  எதிர்க் கட்சி கூறுவதைப்போல் செய்வதானால் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதனைச் செய்யவேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் எதனையும் நடத்த முடியாது.

எனவே மீண்டும் ஜனாதிபதி தலைமையில் பலமான ஓர் அரசாங்கத்தை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, பாராளுமன்றம் பலவீனமான நிலையில் ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்குப் பின்னரான செயற்பாடுகளில் இப்போது நாடு உள்ளது. உலக அரசியல் மாற்றமடைந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் செயற்படவேண்டும். இராணுவ மூலோபாயத்தினால் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது. அவ்வாறெனில் எப்போதோ வென்றிருக்கலாம்.

ஆகவே, அரசியல் மூலோபாயமும் அவசியம். அந்த இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் மேற்கொண்டதனால் தான் எம்மால் யுத்தத்தை வெல்ல முடிந்தது. அந்த வகையில் ஈடினையற்ற ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவருக்குச் சவாலாக எவருமே இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மும்பைத் தாக்குதல் தினமான நேற்று தமிழக கரையோரப் பாதுகாப்பு தீவிரம்

mumbai-terror-attack.jpgமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமான (நவம்பர் 26 ஆம் திகதி) நேற்று தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையில் மீண்டும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையும் கடலோர காவல்படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பாக்கு நீரினை சந்தியில் இந்திய கடற்படையினரும் கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சிபுலியில் உள்ள விமான கண்காணிப்பு நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நபியவர்களின் பெயரில் பத்திரிகையில் படம் வெளியானமைக்கு ஜனாதிபதி ஆழ்ந்த கவலை! – பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura.jpgஇலங் கையின் தமிழ் தேசிய நாளிதல் ஒன்றில் கடந்த செவ்வாயன்று வெளியான முகம்மது நபி (ஸல்) அவர்களுடையதென பிரசுரிக்கப்பட்ட படம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்ததாகவும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது முஸ்லிம்களின் கலாசாரத்தில் உருவப்படத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. அதிலும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை எங்கும் காணமுடியாது.

இந்த உருவப்படம் வெளியான தகவல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள,  பிரமுகர்களினாலும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துகு கொண்டுவரப்பட்டபோதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்

அந்தப் பத்திரிகை நிறுவத்தின் தவறு காரணமாக இச்செயல் இடமபெற்றிருந்தாலும் அதனால் பாதகமான வேறு விளைவுகள் ஏற்படக்கூடாதென்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகு உத்தரவிடடுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

இசையால் புது விதி செய்யும் IBC : முகம்மது நிஸ்த்தார்.

ibc_logoநூற்றுக்கணக்கான அப்பாவி தமிழரை அங்கவீனர்களாக்கி ஆயிரக்கணக்கில் கொன்றொழித்து மூன்று இலட்சம் வரையிலான மக்களை முற்கம்பி முகாமுக்குள் அடைத்ததுடன் ‘எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி’ கண்ட திருப்தியில் ஐ.பீ.சீ வானொலி இப்போது கோமாளித்தனமாக ‘இசையால் இனியொரு புதுவிதி செய்வோம்’ என்ற கோசத்துடன் செயல்படுகின்றது.

இந்த வானொலியின் இரண்டு அண்ணாமார்கள் தங்களை ITV-1ன் Ant and Dec என்ற எண்ணத்தில் காலை வேளையில் ‘தேடிவரும் தென்றல்’ என்ற நிகழ்ச்சியில் புதிய பாடல்களை ஒலிபரப்பி உலகளாவிய ரீதியில் ஐ.பீ.சீ நேயர்களை குதூகலப்படுத்துகிறார்களாம். ஆனால் நிகழ்ச்சியை நிதானமாக அவதானிப்போருக்கு மாத்திரமே விளங்கும் இந்த இரண்டு அண்ணாமார்களும் இந்த வருடத்து ‘X – Factor’ நிகழ்ச்சியில் வரும் Jodward (John and Edward) தரத்தினர் என்ற உண்மை.

இந்த அண்ணாமார்களுடன் கொஞ்சி குலாவவரும் தம்பிகள், தங்கையர். அக்காமார் சிலவேளைகளில் மாமா, மாமிமார் எல்லாரும் தங்களுக்காகவும் தங்கள் கைக்குழந்தைகளுக்காகவும் விசேடமாக முற்கம்பி முகாமுக்குள் அடைபட்டிருக்கும் மக்களுக்காகவும் புத்தம் புதிய பாடலொன்றைக் கேட்க விரும்ப, இந்த அண்ணாமார்களும் தவறாமல் ‘புலி உறுமுது, புலி உறுமுது’ என்ற பாட்டை ஒலிபரப்பி இடையிடையே இந்த நிகழ்ச்சியுடன் சம்பந்தமில்லாத ஆனால் ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்படுத்தி ‘தமிழன் என்றால் யார்’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்து ‘இவன்தான்டா தமிழன்’ என்று முடியும் நடிகர் விஜயின் டயலொக்குடன் இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிப்பர்.

இப்படியே வானொலி அண்ணாமார்களின் கொச்சை தமிழையும் சராசரி நிலைக்கும் சற்று கீழ்நிலையிலுள்ள அவர்களின் உலக அறிவையும் பொருட்படுத்தாமல் நம் சகிப்புத்தன்மையை மிகவும் சோதிக்கும் அன்பு நேயர்களின் உரையாடல்களையும் பொறுத்துக் கொண்டு புதிய பாடல் கேட்க தயாராகும்வேளை திடீர் என்று பல்குழல் பீரங்கி தாக்குதல்போல் பலமுறை மறு ஒலிபரப்பு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொலைகாட்சியின் ‘மக்கள் அரங்கம்’ என்ற விசுவின் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பப்படும்.

இந்த மக்கள் அரங்க நிகழ்வில் நெடுந்தீவு அக்கா ஒருவரின் புலம்பல் ஐ.பீ.சீ நேயர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அந்த புலம்பலை உலகத் தமிழர் அனைவரும் கேட்க ஆவண செய்யும்படி நேயர்கள் அந்த வானொலி அண்ணாமார்களை கேட்டுக் கொண்டே இருப்பார். இது போதாதா அண்ணாமார்களும் சலிப்படையாமல் தம் காரியத்தை செவ்வனே செய்து முடிப்பர்.

அக்காவின் புலம்பில் சற்று நம்பிக்கையிழந்த விசு இரண்டு கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை முடித்துவைப்பார்.

கேள்வி ஒன்று: உங்கள் நாட்டில் ஆயுத போராட்டம் முடிந்து விட்டதாக சொல்லப்படுகின்றதே இது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: போராட்டம் இன்னும் முடியவில்லை.

கேள்வி இரண்டு: பிரபாகரன் எப்படி உள்ளார்?

பதில்: நலமே உள்ளார்.

இந்த கேள்வி இரண்டுக்கான விடைதான் இன்று அனேகரை குழப்பிக் கொண்டிருக்கும் விடயம். அதாவது ஏசுநாதர் சிலுவையில் தன்னுயிரை நீத்தாரா என்ற கேள்வியில் கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு போன்றது தான் பிரபா இருக்கின்றார் அல்லது இல்லை என்ற இந்தப் பிரச்சினை. ஆனால் ஐ.பீ.சீ யைப் பொறுத்தவரை இது ‘Tiger Wood’ன் அடியில் தங்கு தடையின்றி குறித்த குழியில் போய்விழும் கொல்ப் (golf) பந்து போன்ற விடயம். அதாவது கார்த்திகை 27க்கான நேரடி விளம்பரத்துக்கு உதவும் விடயம்.

ஆனாலும் இதிலுள்ள ஆபத்தை கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் தங்கள் நேயர்களையே ஏய்க்கும் இவர்களின் முயற்சியை பார்க்கும்போது எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் இவர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சரி இவர்கள் சொல்வது போன்று பிரபாகரன் இன்னும் உயிருடன் நலமே இருக்கிறார் என்றால் கார்த்திகை 27ல் அவர் வரவேண்டும். அவர் வரமாட்டார் என நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பினாலும் அவர் வருவார் என்று நாசுக்காக சொல்லும் ஐ.பீ.சீ அவர் ஏன் அன்று வரமாட்டார் என்ற கேள்விக்கு தயார் நிலையிலுள்ள அவர்களின் பதில், வெளியே சொல்ல முடியாத காரணத்தின் நிமித்தம் நேரடியாக காட்சியளிக்காமல் மறைந்திருந்து மக்களுடன் உரையாட விரும்புகிறார் என்பதாகவே அமையும்.

ஆகவே ஐ.பீ.சீ பிரபாகரனுக்காக குரல் தரவல்ல ஒருவரை தயார்படுத்த வேண்டும். அது அவ்வளவு கடினமான காரியமுமல்ல. இருப்பினும் ஐ.பீ.சீயின் அரசியல் ஆய்வாளர்களால் அதாவது பருவமழை அடிக்கடி பொய்ப்பதால் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் அல்லலுறும் ஒரு நாட்டில் பருவகால மழையை நம்பி ஒரு பேப்பர் ஊடாக இராணுவ வியூகம் அமைத்துக் கொடுக்கும் ஜேர்மனிய சபேசன், கனேடிய திருச்செல்வம், முஸ்லீம்களின் பலாத்கார வெளியேற்றத்துக்கு தந்திரோபாய நியாயங்கள் கற்பிக்கும் ஜப்பானிய கலாநிதி சச்சி சிறிகாந்தா ஆங்கிலத்தில் படித்த காரணமோ அல்லது ஏனோ தமிழ் திக்கும் யு. கே பற்றிமாகரன் கிரிக்கட் நேர்முக வர்ணணை பாணியில் அரசியல் விமர்சனம் செய்யும் இந்திய அப்துல் ஜப்பார் என்ற பலரும் இன்னும் தொட்டுப்பார்க்காத ‘எங்கும் பிரபா என்றும் பிரபா’ என்ற நெடுந்தீவு அக்காவின் உறுதிமொழி ஐ.பீ.சீ யின் கார்த்திகை 27ஜ நோக்கிய பயணத்திற்கு வழி சமைத்து விட்டது.

இந்த ஆய்வாலர்கள் இது பற்றி கதைக்காவிட்டாலும் பின்வரும் கேள்விகளுக்கான விடைகளையும் பிரபாகரனுக்கு குரல் தரவல்லவருக்கூடாக நேயர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் ஐ.பீ.சீ உள்ளதை மறந்துவிட முடியாது.

ஆகவே ஐ.பீ.சீ பாணியில் நாம் கேட்பது கேள்விக்கு நாங்கள் தயார், பதில்தர நீங்கள் தயாரா என்பதே. நீங்கள் தயாராயின் இதோ எமது கேள்விகள்.

1. எங்கு ஒளித்துள்ளிர்கள் என்பதை சொல்லத் தேவையில்லை, ஆனால் ஏன் ஒளித்துள்ளிர்கள் என்று சொல்ல முடியுமா?.

2. இன்று ஏன் வெளியே வந்தீர்கள் மீண்டும் ஒழித்திருக்கப் போகிறீர்களா? அப்படியானால் எவ்வளவு காலத்துக்கு, ஏன்?.

3. கிளிநொச்சி நோக்கி இராணுவம் முன்னேறும்போது கிளிநொச்சியை பிடிப்பதென்பது ராஜபக்ஸவின் பகல்கனவு என்றீர்கள். ராஜபக்ஸவோ இது எனது கனவுமாத்திரமல்ல, அனைத்து நாட்டுமக்களின் கனவு என்றாரே. அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?.

4. கிளிநொச்சியை இழக்கமாட்டீர் என உங்களை நம்பச்செய்த விடயம் எது, ஏன் அது கைகூடவில்லை?.

5. இத்தனை ஆயிரம் உமது தொப்புள்கொடி உறவுகள் செத்து மடிந்தபோது உமது சயனைற் குப்பிக்கு என்ன நடந்தது?.

6. இது ஒரு துன்பியல் சம்பவமாக கருதுகிறீரா அல்லது வரலாற்று தவறு என்கின்றீரா அல்லது இது இன்னும் சிங்களவரின் நயவஞ்சகதனம் என்கின்றீரா?.

7. நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்றீரா?.

8. குழு குழுவாக இலங்கை சென்று அரசாங்கத்துடன் கதைப்பவர்கள் பற்றி உமது நிலைப்பாடு என்ன?.

9. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது இது சிங்கள நாட்டின் பிரச்சினை இதில் தமிழர் வாக்களிக்க தேவையில்லை என்கின்றீரா. அப்படியானால் த.தே.மு சிங்கள நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறது?.

10. முற்கம்பி முகாமுக்குள் இருக்கும் 300 000 மக்களும் உமது கட்டளையை மீறி உமது படையின் சூட்டுக்கு மத்தியில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்கள் துரோகிகளா, இதில் உமது பெற்றோரும் அடங்குவரா?.

11. இந்த மக்களை சந்தித்து மன்னிப்பு கேட்பீரா. மன்னிப்பு கேட்க தயார் எனில் நீர் தவறு செய்துள்ளீர். எனவே மீண்டும் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமாயின் துப்பாக்கியை தொட முடியாது. அப்படியானால் உமது எதிர்கால போராட்ட வடிவமென்ன?.

12. பொட்டம்மான் உயிரோடிருந்தால் அதுவும் உம்மைப் போன்று ஒளிந்திருந்தால் அவருக்கான கட்டளை என்ன?.

13. இந்த கேள்விக்கு அனேகமாக உமக்கு பதில் தெரிய நியாயமில்லை ஆனாலும் தெரிந்தால் சொல்லலாம் ‘இசையால் இனி ஒரு புது விதி’ என்ற ஐ.பீ.சீ யின் உழறல் சுமார் ஒரு மில்லியன் புலம்பெயர் தமிழரை நிரந்தரமாக இலங்கைக்கு செல்லவிடாது தடுக்க எடுக்கும் முயற்சியா?.

திருப்தியான பதில் கிடைக்குமாயின் 2011 கார்த்திகை 27ல் நாமும் கலந்து கொள்ளலாம்.

குர்பானி விவகாரம்: அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாமென ஜனாதிபதி பணிப்பு

macca.jpgஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானுக்காக வேண்டி கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாத்தளை மாநகர முதல்வர், ஹில்மி கரீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

இந்திய அணி 642 ஓட்டங்கள்

greenpark.jpgஇந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை- இந்திய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் குமார் சங்கக்கார 30 ஓட்டங்களையும், பரணவிதான 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறும்.

இந்திய அணியின் பெற்ற ஓட்ட விபரம் வருமாறு:-

India 1st innings
 G Gambhir  c & b Muralitharan  167 
 V Sehwag  c Dilshan b Muralitharan  131 
 R Dravid  run out (Herath)  144  
 SR Tendulkar  c Samaraweera b Mendis  40 
 VVS Laxman  c Dilshan b Herath  63  
 Yuvraj Singh  c Sangakkara b Mendis  67 
 MS Dhoni*†  b Herath  4  
 Harbhajan Singh  b Herath  5  
 Z Khan  c DPMD Jayawardene b Herath  1 
 S Sreesanth  lbw b Herath  0  
 PP Ojha  not out  1  
 Extras (b 4, lb 11, nb 4) 19     
      
 Total (all out; 154 overs) 642 (4.16 runs per over)
Fall of wickets1-233 (Sehwag, 41.2 ov), 2-370 (Gambhir, 75.1 ov), 3-464 (Tendulkar, 102.5 ov), 4-511 (Dravid, 113.2 ov), 5-613 (Laxman, 141.1 ov), 6-619 (Dhoni, 145.2 ov), 7-639 (Harbhajan Singh, 149.4 ov), 8-641 (Yuvraj Singh, 152.2 ov), 9-641 (Khan, 153.3 ov), 10-642 (Sreesanth, 153.6 ov) 
        
 Bowling O M R W  
 UWMBCA Welegedara 26 4 103 0 
 AD Mathews 17 2 49 0  
 HMRKB Herath 33 2 121 5
BAW Mendis 38 3 162 2 
M Muralitharan 37 0 175 2
TM Dilshan 3 0 17 0        

 Sri Lanka 1st innings
 TM Dilshan  c Ojha b Khan  0 
 NT Paranavitana  not out  30  
 KC Sangakkara*  not out  30  
 Extras (b 4, lb 1, nb 1) 6     
      
Total (1 wicket; 24 overs) 66 (2.75 runs per over)
To bat DPMD Jayawardene, TT Samaraweera, AD Mathews, HAPW Jayawardene†, BAW Mendis, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-0 (Dilshan, 0.1 ov) 
        
 Bowling O M R W
 Z Khan 7 3 14 1
 S Sreesanth 6 0 29 0 
 Harbhajan Singh 7 3 9 0 
 PP Ojha 4 2 9 0

ஹஜ்ஜுப் பெருநாள் 28 ஆம் திகதி

macca.jpgபுனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 28ம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜய்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை ஏகமனதாக எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கமைய ஹஜ்ஜுப் பெருநாள் 28ம் திகதி கொண்டாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா

sarathfonseka.jpgஎதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  ஜெ வி பி கூறியுள்ளது. ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.  அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.

ஊடகவியலாளர்கள், பெண்கள் உட்பட 21 பேர் பிலிப்பைன்ஸில் படுகொலை தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்றவேளை சம்பவம்

பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.

கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.

அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.

நோர்வே தமிழர் அவையில் அரை அவியல்கள் : குலன்

Aravinthan_Ki_PiBallotsBox_VKR1976சந்திரனுக்கு நாய், குரங்குகளை அனுப்பிப் பரிசோதிப்பது போல் ஈழத்தமிழர் பிரச்சனைகள் நோர்வேயில் தான் பரீட்சிக்கப்படுகின்றன. காலாவதியான வட்டுக்கோட்டையைக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு மக்களை ஏமாற்றி மாறிமாறி ஓடப்போகிறீர்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டுதிரிந்த கி.பி அரவிந்தனே அதை கிழித்து பிரித்து எறிந்துவிட்டாராம். இதற்கு அவையினரின் அவியல் என்னவென்றால் கிபியை யாரோ வாங்கிவிட்டார்கள் என்பதுதான். புலியின் காலத்தில் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களைத் துரோகிகள் என்றார்கள். இன்று விலைபோனவர்கள் என்கிறார்கள். இப்படிக் காலத்திற்குக் காலம் கடைவிரித்து நன்றாகவே புலிவியாபாரம் செய்கிறார்கள். இறுதியில் புலம்(ன்)பெயர்ந்தவர்கள் புலிகளையே வித்துவிட்டார்கள்.

நோர்வேயில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கதாசிரியர்கள் என்று பலர் இருந்தபோதிலும் சென்ற 15.11.2009 நடைபெற்ற சுத்தமாத்துத் தேர்தலை மக்கள் மத்தியில் போட்டுக் கிழிப்பதற்கு ஒருவரும் முன்வராதது வேதனைக்குரியது. ஆயுதக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த பின்பும் மௌனமாக இருக்கும் நோர்வே எழுத்தாளர்களே! உங்கள் வாய்களையும் கைகளையும் உணவுண்ண மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நாளை உங்கள் கதவுகள் தட்டப்படும், பின் உடைக்கப்படும். அப்போதும் பேசாமல் இருங்கள்.

ஈழத் தீர்மானத்தை எடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரே சிந்தனை வாதங்கள் ஜதார்த்தத்துக்கு உதவாது என்று அதைக் கைவிட்டு வேறு பல தீர்மானங்களுக்கும், ஒப்பந்தங்களுக்கும் உடன்பட்டார்கள். திம்புகூட அப்படியாக உருவான ஒன்றுதான். தமிழீழம்தான் முடிந்தமுடிவு என்று நின்ற புலிகளே திம்புத் தீர்மானத்துக்கு ஒத்துவருகிறோம் என்றார்கள். இறுதியில் தமிழர்களுக்கு தருவதைத் தாருங்கள் என்று நின்றார்கள். இதுகூடத் தெரியாமல் புலமும் புலனும் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிவாலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்களே. தமிழீழத்துக்காக ஜனநாயகவழியில் போராடிய கூட்டணியினரோ புலிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். இதன்பின் புலத்தில் என்ன புதிதாக ஜனநாயகம் வேண்டி இருக்கிறது? ஜனநாயக, ஆயத போராட்டங்கள் இரண்டுமே தோல்வியில் முடிந்த ஜதார்த்தங்கள். இதைக்கூட புரிந்துகொள்ள அறிவில்லாதவர்களை புலன்பெயர்ந்தவர்கள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. அவர்களுக்கு எதற்கு அரசியல். அரை அவியலைத்தான் தின்னப்போகிறோம் என்று அடம்பிடித்தால் நீங்கள் வாழும் நாடுகளில் ஈழம்கேளுங்கள். வன்னி மக்களை விட்டுவிடுங்கள் வன்னிப்போருக்கு என்றும் வன்னிமக்களுக்கு என்றும் திரட்டிய பணங்கள் எங்கே. அதைக் கொண்டு வாருங்கள் முதலில். அன்பின்பு பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசலாம்.

நோர்வேயில் நடைபெற்ற அரை அவியல்களின் மந்தைகளுக்கு தேசியப்பட்டியல் பிராந்தியப்பட்டியல் என்று பட்டிகட்டி விட்டார்கள். அதற்குள் நின்று சிலர் பா பா என்று கத்தினார்கள். இவர்கள்தான் தேசியபட்டியல்காரர்கள். தேசமே இல்லாத மோசமான தேசியவாதிகள். பிறதேச பிரஜாவுரிமை கொண்டவர்கள்.

NorwayElection_NCET_National_List(Photos: TamilNet)இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியதுமான தகவல்கள் தேசத்திலோ வேறு இணைத்தளங்களிலோ தொடர்ந்தும் வரலாம். இவர்கள்தானாம் நோர்வேயின் பிராந்தியக் கட்டுப்பாட்டாளர்கள். முஸ்லீம்களையும், சிங்களவரையும் வடக்கு கிழக்கில் இருந்து கலைத்துவிட்டு தமிழீழம் கேட்டு நந்திக்கடலில் குதித்தோரின் வாரிசுகள். நோர்வேயிய மக்களை கலைத்துவிட்டு நோர்வேயில் ஈழம் அமைக்கப்போகிறார்களா? நோர்வே மக்களுக்கு இனி வாழ்க்கை நோ வேதான் (No-way). இந்த நோர்வே அவையின் கூத்துக்களை நோவேயிய அரசுக்கும் நோர்வே மக்களுக்கும் சரியாக எடுத்துக் கூற ஒரு சரியான ஆள் நோர்வேயில் இல்லையா? பிரிவினைவாதிகளால் நோர்வே சட்டத்தை அனுசரித்துப் போக முடியாதாம்; மக்களிடையே ஒற்றுமை பேணவேண்டும் என்கிறதாம் சட்டம். அவையின் திட்டம் அதுவல்லவே.

இந்தத் தேர்தலை வைத்து எந்தப் பாராளுமன்றத்துக்குப் போகப்போகிறார்களோ தெரியவில்லை. இங்குள்ள மக்களையோ ஈழத்திலுள்ள தமிழர்களையோ பிரதிநிதித்துவப் படுத்த நீங்கள் யார்? இந்தச் சர்வாதிகார உரிமையை தந்தது யார்? இவர்கள் கிட்லரை விட மோசமான நாசிகள் என்பதை ஏன் நோர்வேவாழ் தமிழ் தங்கங்களால் சொல்ல முடியவில்லை. அங்குள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து அவர்களுக்காகப் போராட அங்கே மக்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் அங்கேயே உருவாகுவார்கள். பிரபாகன் என்ற தமிழ்இனஅழிப்பாளனும், கொலை வெறியனும், உங்கள் பிரதிநிதிகளும் அங்கே அம்மக்களிடையே தான் உருவானார்கள். புலம்பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழ் தொழிலாளர்களை போர், விடுதலை என்று சுரண்டி தம்மை வளர்த்த புலிகளையும், பிரபாகரனையும் அழித்ததோடு நின்றுவிடாமல் இன்று நோர்வே நாட்டு மக்களுக்குப் படங்காட்டவும் நோர்வே நாட்டை நாசம் செய்யவும் தலைமை, பிரதிநித்துவம் என்று கொடி கொண்டு கோலோச்சத் திரிகிறார்கள் இந்தக் கொடியவர்கள். இவர்களுக்குக் கொம்பு சீவுபவர்கள் இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழைதான். இவர்களின் உண்மை முகங்களை அறிந்தும் இவர்களுக்கு தூபங் காட்டுபவர்களை என்ன என்று சொல்வது? கெடப்போகிறேன் பிடி பந்தயம் என்றால் யார் இவர்களைத் தடுக்க முடியும்?

பியோனார் முக்ஸ்னெஸ்: இவர் ஒரு நோவேயியர் சிவப்புச் சட்டைக்காரர். பெரும்பாலும் இவர் சார்ந்தகட்சி கட்டுக்காசை இழந்தே வந்திருக்கிறதாம். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பிறப்பில் தமிழராகவோ, தமிழர்களுக்குப் பிறந்தவர்களாகவோ அல்லது தமிழர்களைத் திருமணம் செய்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதுதான் அவையின் அரையவியல் சட்டம். தாம் உருவாக்கிய யாப்பையே மீறி ஒரு நோவேயியரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது அரை குறை அவை. இந்த முக்ஸ்னெஸ் என்பவர் எந்தத் தமிழிச்சியையும் திருமணம் செய்ததாகத் தெரியவில்லை. காந்தர்வமணங்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டா. வாக்களிக்கவே தகுதியற்றவர் எப்படி தேர்தலில் நிற்கமுடியும்? இதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அரையவியல்கள் தேர்தல் நடத்தினார்களாம். இனி அவையின் காட்டில் பணமழைதான்.

இந்த முக்ஸ்னெஸக்குத்தான் அதிகவாக்குக்கள் (1864) பதிவாகியிருந்தன. தமிழே தெரியாத ஒருவன் தமிழர்களுக்கு தலைமை தாங்கப்போகிறானாம். இவருக்கு எம்பிரச்சனைகளைச் சொல்ல மொழிபெயர்பாளர்களை அல்லவா கொண்டு திரியவேணும். இங்கேயும் அதிகார வெறியைப் பாருங்கள்; நோர்வே மொழி தெரிந்த தமிழர்கள்தான் பிரச்சனையை கூறலாம் என்ற நிலை வந்துள்ளதா இல்லையா? இதில் இருந்து என்ன தெரிகிறது. வல்லமையுள்ளது தான் வாழவேண்டும் என்ற புலிக்குணம் தெரியவில்லையா? எம்மை ஆழ்வதற்கு வெள்ளையன் ஒருத்தன்தான் சரியானவன் என்பது தெரியவில்லையா? 500 வருடங்களுக்கு மேல் வெள்ளையர்களுக்கு கீழ் அடிமையாக இருந்து அடிமை உணர்வில் ஊறிப்போய் வெள்ளையனுக்கு அடிமையாகியே நாறிப்போன சமூகத்தின் வேடிக்கைகளை உலகமக்களே பாருங்கள். இவர்களுக்கு சுதந்திரம் விடுதலை ஒரு கேடா. சுயமாகவே தன்னுள் விடுதலையடைய முடியாதவர்களுக்கு எதற்கு விடுதலை, சுதந்திரம். இச்சொற்களையே உச்சரிக்க அருகதையற்றவர்கள் இவர்கள்.

ஆதித்தன்: இவரோ ஒரு சுதந்திரமாகத் திரியும் சுத்துமாத்து. தமிழ்முரசம் எனும் புலிகளின் பிரச்சாரப்பீரங்கில் இப்படியொரு வெடிவைத்தாராம். ”தான் போராளியும், முதன் முதலில் சயனைட் உண்டு உயிர்நீர்த்த உரும்பிராய் சிவகுமாரனின் நண்பராம்”. இந்த ஆதியெனும் பொய்யன் பிறந்தது 1967ல். சிவகுமாரன் இறந்ததோ 1974ல். சிவகுமாரன் இறக்கும்போது இவருக்கு 7வயது. சிவகுமாரன் இவருக்கு சிலவேளை தூக்கி வைத்துப் பால் குடுத்திருக்கலாம். சிவகுமாரன்தான் தனது தந்தை என்று கூறியிருந்தால் கூட நம்பியிருக்கலாம். பெயருக்கும் புகழுக்குமாக மாற்றுக்கருத்தாளிடம் இருந்து மாறிப்போன ஆதி போன்றவர்களின் பொய்களை நம்பும் மக்கள் இருக்கும் வரையும் அவர்கள் காட்டில் மழைதான். அரசியல் அறிவிலும் ஆதிக்குப் பாதியில் வந்ததால் எல்லாமே பாதிதானாம். அரசியல் என்று வந்தபின் சபையில் சொல்லும் பொய்களை அவையில் போட்டு உடைப்பது கடமையல்லவா.

ரமணன்; தர்மசீலன்: இவர்களுக்கு ஏன் வோட்டுப் போட்டார்கள் என்று பார்த்தால் அவன் டொக்டர் இவன் இஞ்சினியராம். இஞ்சினியர் டாக்குத்தர்களுக்குத்தான் எல்லாம் உண்டு என்று அவர்களுக்கு மட்டும் தான் பெண்குடுக்கும் கலாச்சார வாரிசுகள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான். இனி டாக்குத்தருக்கும் இஞ்சினியருக்கும்தான் அரசியலும் தமிழ்ஈழமும்.

இதுபோலவே ஏதோ தேர்தல் எண்டார்கள் போட்டோம்: என்ன புள்ளடிதானே போட்டால்போச்சு: அவர் எனக்கு நல்லபழக்கம், இவர் வரச்சென்னார் போய் போட்டனான்: தமிழ் மக்களுக்காக பேசப்போகிறோம் என்றார்கள் அதனாலை போட்டனான்: எனக்கு ஒரே குழப்பமாய்தான் இருந்தது. அவை எங்களோடை நல்லமாதிரி அதனாலை போனனாங்கள் என்பது போன்ற காரணங்களுக்காகவும் வோட்டு வேட்டு வைத்தார்கள். எதற்கு வோட்டுப் போடுகிறறோம் என்று தெரியாமலே வோட்டுப் போட்டவர்களை மந்தை என்று வர்ணிக்காமல் வேறு எப்படி அழைக்கமுடியும். முக்கியமாக ஜெயசிறீ என்பவரைத்தவிர அரசியல் அனுபவமுள்ளவர்கள் இப்பட்டியலில் யாரும் இல்லை என்கிறார்கள்.

அரையவியல்களின் அவை யாப்பின்படி 50 சதவீதமானவர்கள் வோட்டுப் போட்டால் மட்டுமே இந்த தேர்தல் செல்லுபடியாகும் என்றார்கள். அவையின் அவியல்படியே 18வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் சிங்களவருடன் 8772 என்பதாகும். நோர்வே அரசின் புதுப்பிக்கப்படாத கணக்குப்படி 8582 என்பது அரச அறிக்கை. புதுப்பிக்கப்பட்டால் இது 10000தைத் தாண்டும் என்பது வேறுகணக்கு. நோர்வேக்கு தமிழர்கள் வரத்தொடங்கியதே 1960ல். தொழிலுக்கு என்றும், பாடசாலை பல்கலைக்கழகம் பின் அகதி என்று தமிழர்கள் காலம் காலமாய் நோர்வேயில் கொட்டுண்டார்கள். நோர்வேயில் ஈழத்தில் பிறந்த 18வயதுக்கு மேற்பட்ட தமிழர்கள் விசா இன்றி சட்டவிரோதமாக இருப்பவர்களே 3000 மேல் என்கிறது பொலிஸ் அறிக்கை. இவர்கள் மட்டுமே வோட்டுப்போட்டிருந்தால் அவைக்கு அவித்தவர்களை விட வோட்டுக்கள் கூட விழுந்திருக்கும்.

அவையின் கணக்குப்படியே நாம் கணக்கெடுத்தாலும் 50சதவீதத்தை எட்டாது. புதுப்பிக்கப்படாத கணக்குப்படி இலங்கைத் தமிழர்கள் ஆண்கள் 4491 பெண்கள் 4101. மொத்தம் 8582. அவைக்கு வந்த வோட்டுக்கள் அவையின் கணக்குப்படியே 2767. வீதாசாரப்படி 32.2 வீதம். அவையின் அவியல்களைப் பாருங்கள் கீழே.

NorwayElection_NCET_Eastern_Region(Photos: TamilNet)இவர்கள்தான் நோர்வேயின் பிராந்திய பருந்துகள். இந்த அரசியல் சூனியங்கள்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகிறார்களாம். பணருசி கண்ட பூனைகள் சும்மாவா இருக்கப் போகின்றன. நோர்வே தமிழ்தங்கங்களே பணங்களை எடுத்துத் தயாராக வைத்திருங்கள் மாவீரர் தினத்துக்கு குலுக்கிக்கொண்டு வருவார்கள். எல்லா நாட்டிலும் குலுக்கத் தொடங்கி விட்டார்கள்.

மேலுள்ளவர்களுக்கான அவையின் பட்டியல்:
Votes polled: 2076
• Sivaganesh Vadivelu (1600)
• Rajendhrum Ponnuthurai (1597)
• Sivarajah Vallipuram (1546)
• Kannan Nagendram (1523)
• Mary Florida Judin Francis (1470)
• Rajaratnam Veluppillai (1465)

கணிதம் தெரிந்த சிறுவர்களிடம் இந்தக் தொகையைக் கூட்டச்சொல்லுங்கள் 2076 வருகிறதா என்று பார்ப்போம். ஒருவருக்கு 5 வோட்டு என்றால் சுமார் 10380வோட்டுக்கள். சரி 7 வோட்டு என்றால் 14532 வோட்டுக்கள். இங்கே களிவுகள் வந்ததாகத் தெரியவில்லை. களிவுகளுக்கு எப்படிக் கழிவு வரும் என்று கேட்கக்கூடாது. இவர்கள் பிணங்களை எண்ணி எண்ணியே கணக்குப் போடப் புலிகளால் பழக்கப்பட்டவர்கள் இப்படித்தான் போடுவார்கள். அவை சொல்வதை அப்படியே நீங்கள் கேட்க வேண்டியதுதான். ஏன் எதற்கு என்று தெரியாமல் வோட்டுகளையும் போடவேண்டியதுதான். இதுதான் புதிய ஜனநாயகம். இத்தேர்தலிலுள் பெரிய தில்லுமுல்லு என்னவென்றால் ஒருவர் பிராந்தியதுக்கு 7 வோட்டும், பிரதேசத்துக்கு 5 வோட்டும் போடலாமாம். அப்போதுதானே தொகையைப் பெரிதாகக் காட்டலாம். வோட்டுப் போடப் போனவர்களுக்கும் இந்தவிசயம் தெரியாதாம். மேலுள்ள எண்களோ கணக்குகளோ சோடிக்கப்பட்டதல்ல. அவையை ஆட்டித்திரியும் தமிழ்நெட்டில் இருந்தே எடுக்கப்பட்டது.

மேற்குப் பிராந்தியத்தில் பிராக்குப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயசங்கர் அசோகன் என்பவரும் வெள்ளிபார்த்துப் போட்டியிட்டு வென்றுள்ளாராம். வெள்ளிபார்க்கும் வெங்காயங்கள் இருக்கும் வரையும் இவர்கள் காட்டில் பணமழைதான். இனி எல்லோரும் தேர்தல் நடத்தலாம். தேர்தலில் நிற்கலாம். ஏன் எதற்கென்று தெரியாமல் வோட்டும் போடலாம்.

நோவேயிய குடியுரிமையை வைத்துக் கொண்டு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்களிடமே போராட்டம் என்று பணம் திரட்டி தம்வங்கி வைப்பகங்களை நிரப்பும் இவர்கள் வன்னி மக்களைப்பற்றிப் பேசவோ பிரதிநிதப்படுத்துவோ அருகதையற்றவர்கள். நோர்வேயில் அடித்த காசுகளைப் மனச்சாட்சிப்படி கொடுக்க வக்கில்லை, வன்னிமக்களைப் பற்றிக் பேசுவதற்குப் புறப்பட்டு விட்டார்கள். புலிக்கென்று வாங்கி தங்கள் பணமூட்டையை நிரப்பிய பணங்களை எடுத்த முதலில் வன்னிமக்களுக்கு அனுப்புங்கள். அதன்பின் அவர்களைப்பற்றிப் பேசலாம்.

இந்தியாவையும் ஒரு வெள்ளைக்காரிதான் ஆளுகிறாள்; இலங்கைத் தமிழர்களை நோர்வேயில் ஒரு வெள்ளைக்காரன் ஆட்சிப்பொறுப்பு ஏற்றிருக்கிறான். காலணித்துவம் எம்மிடையே கால்கடுக்க நிற்கிறது. உயிர் கொடுத்து உயிர் பிழைத்து நிற்கும் ஈழம்வாழ் எம்முறவுகள் புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு சரியான பாடம் புகட்டுவார்களா? இன்று இவ்வளவு மக்களையும் அனாதைகளாக்கிக் கொன்று குவித்தது துவைத்தது அவையினர் என்பதை யார் எப்போ உணரப்போகிறீர்கள். இந்த வைரசுகள் எந்தநேரம் எப்படி வருவார்கள் என்பதை யாராலும் உணரமுடியாது. வைரசுகளுக்கு மருந்தும் இல்லை. தொற்றினால் தொற்றியதுதான். முடிவு சாவுதான். நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பன்றிக்காச்சல் போல் எம்நாடுகளுக்குள்ளும் பரவும் சாத்தியங்கள் அதிகமாகவே உண்டு. இந்தச் சாத்தான்களை நாட்டுக்குள் அனுமதிப்பதே அவமானம். இந்த மனிதவிரோதிகளை ஆணிவேருடன் அறுத்து விட முயற்சியுங்கள்.

மாவீரர் தினம் வருகின்றது. புலிகளால் பலாற்காரமாக அல்லது புலிகளை இரட்சகர் என்று நம்பி ஏமாந்து தன்னுயிர் நீர்த்த வீரர்களுக்குமாய் எங்கள் கண்கள் கசியும். புலிகளால் கொன்று குதறப்பட்ட ஒவ்வொரு மாற்று இயக்கத்தவர்களுக்குமாகவும், போரில் அப்பாவிகளாய் உயர்நீர்த்த எம் உடன்பிறப்புக்களுக்காகவும், புரியாது புலிப்பாசறைக்குப் போன பிள்ளைகளுக்காகவும், ஒரு நாள், ஒரு பொதுநாள் தெரிவு செய்யப்பட்டு துக்கதினம் அனுஸ்டிப்பது முக்கியமானது.