கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 03 – புன்னியாமீன் –

sri-lanka.jpg(கடந்த வாரத் தொடர்ச்சி….)

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

திரு. ஜே.ஆர். ஜயவர்தன  (ஐக்கிய தேசியக் கட்சி)  
திரு. ஹெக்டர் கொப்பேகடுவ  (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
திரு. ரோஹன விஜயவீர   (மக்கள் விடுதலை முன்னணி)
திரு. கொல்வின் ஆர்.டி. சில்வா (லங்கா சமசமாஜக் கட்சி)
திரு. வாசுதேவ நாணயக்கார  (நவ சமசமாஜக் கட்சி)
திரு. குமார் பொன்னம்பலம்   (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)

இத்தேர்தலில் 1) ஹேவாலயாகே கீர்த்திரத்தின 2) முதியான்சே தென்னகோன் 3) திருமதி நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.
1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவியபோதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது.

காரணம்:
1) இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பரிச்சயமற்றவராகவே இவர் இருந்தமை.

2) 1970-77க் கிடைப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோஸலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும்,  1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற மக்களின் பய உயர்வும்,  (1982 ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கைகளை திட்டவட்டமான முறையில் முன்வைக்காமையும் ஒரு குறையாகவே கூறல் வேண்டும்)

1982-10-20ம் திகதி நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 995 ஆகும். (ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட,  6, 522, 147 (79.84  %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். திரு. ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1982 ஜனாதிபதித் தேர்தலில் 50சதவீதமான வாக்குகளை விட (3, 261, 074) மேலதிகமான 189, 737 வாக்குகளையும்,  தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற திரு. ஹெக்டர் கொப்பேகடுவையை விட 902, 373 மேலதிக வாக்குகளையும் திரு. ஜயவர்தனா அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மாகாண ரீதியில் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  436,290   (57.71%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  276,476   (36.57%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,580     (3.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     3,022    (0.40%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    9,655    (1.28%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,008    (0.26%)

பதியப்பட்ட வாக்குகள்  972,196
செல்லுபடியான வாக்குகள்  756,031  (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,990    (1.04%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 764,021  (78.59%)

கம்பஹா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  365,838   (52.50%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  301,808   (43.31%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   23,701   (3.40%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     534      (0.88%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,835   (0.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    1,122   (0.16%)

பதியப்பட்ட வாக்குகள்  835,265
செல்லுபடியான வாக்குகள்  696,838  (99.15 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,992   (0.85 %)
அளிக்கப்பட்ட வாக்குகள் 702,830  (84.14 %)

களுத்துறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,592   (50.15%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  185,874   (44.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   14,499    (3.44%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     443   (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    8,613   (2.04%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    871   (0.20%)

பதியப்பட்ட வாக்குகள்  499,215
செல்லுபடியான வாக்குகள்  421,892  (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,548   (1.07%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,440  (85.42%)

கண்டி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  289,621    (59.82%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  178,493    (36.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   12,493    (2.58%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     562       (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,256    (1.46%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    718       (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  564,767
செல்லுபடியான வாக்குகள்  484,143    (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,702   (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,845    (86.6%)

மாத்தளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  94,031   (58.11%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  59,299   (36.66%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,169    (4.43%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     253   (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    866   (0.54%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    196   (0.12%)

பதியப்பட்ட வாக்குகள்  187,276
செல்லுபடியான வாக்குகள்  161,814    (99.13 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,414   (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,228    (87.1%)

நுவரெலியா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  109,017   (63.10%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  57,093   (33.05%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   4,069    (2.35%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     558   (0.32%)
கொல்வின் ஆர்.டி. சில்வா   (L.S.S.P)    1,201   (0.70%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    831   (0.48%)

பதியப்பட்ட வாக்குகள்  201,878
செல்லுபடியான வாக்குகள்  172,769    (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,048   (1.17%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 174,817    (86.6%)

காலி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,544   (50.23%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  180,925   (42.96%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   20,962    (4.98%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     425      (0.10%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,301   (1.50%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    981      (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  512,489
செல்லுபடியான வாக்குகள்  421,138    (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,198   (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,336    (83.19%)

மாத்தறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  164,725  (49.32%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  144,587  (43.29%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   22,117  (6.63%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     474     (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,571  (0.47%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    509     (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  399,888
செல்லுபடியான வாக்குகள்  333,983 (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,091 (0.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 337,074 (84.29%)

அம்பாந்தோட்டை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,545       (45.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  76,402       (38.73%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,835     (14.62%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     275        (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    877        (0.44%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    344        (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  241,956
செல்லுபடியான வாக்குகள்  197,278    (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,804   (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 199,082    (82.28%)

யாழ்ப்பாண மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  44,780   (20.54%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  77,300   (35.46%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   3,098   (1.42%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   87,263   (40.03%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,376  (1.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,186  (1.00%)
 
பதியப்பட்ட வாக்குகள்  493,705
செல்லுபடியான வாக்குகள்  218,003    (95.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,610  (4.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 228,613    (46.30%)

வன்னி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  32,834      (46.42%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  23,221      (32.83%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   2,286      (3.23%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   11,521      (16.29%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    584       (0.82%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    292       (0.41%)

பதியப்பட்ட வாக்குகள்  119,093
செல்லுபடியான வாக்குகள்  70,739     (96.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,447  (3.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 73,186     (61.5%)

மட்டக்களப்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  48,094   (40.05%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  21,688  (18.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   1,287  (1.07%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     47,095 (39.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,294 (1.08%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    618  (0.52%)

பதியப்பட்ட வாக்குகள்  172,480
செல்லுபடியான வாக்குகள்  120,076 (97.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,876 (2.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 122,955 (71.29%)

திகாமடுல்லை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,772  (56.39%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  53,096  (32.98%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,679  (4.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     8,079 (5.02%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    967  (0.60%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    377  (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  204,268
செல்லுபடியான வாக்குகள்  160,970 (98.71%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,101 (1.29%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,071 (79.83%)

திருகோணமலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  45,522  (48.63%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  31,700  (33.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   5,395  (5.76%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     10,068 (10.76%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    635  (0.69%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    276  (0.29%)

பதியப்பட்ட வாக்குகள்  133,646
செல்லுபடியான வாக்குகள்  93,596  (98.12%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,795 (1.88%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 95,391  (71.37%)

குருனாகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  345,769 (55.77%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  248,479 (40.08%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   21,835 (3.52%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     509  (0.08%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,594 (0.42%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    792  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  717,505
செல்லுபடியான வாக்குகள்  619,978 (99.13%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,431 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 625,409 (87.16%)

புத்தளம் மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  128,877 (59.12%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  80,006  (36.70%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,001  (3.22%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     817  (0.37%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,040 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    239  (0.11%)

பதியப்பட்ட வாக்குகள்  267,675
செல்லுபடியான வாக்குகள்  217,980 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,995 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 219,975 (82.18%)

அனுராதபுர மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  117,873 (49.84%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  102,973 (43.54%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,911 (5.88%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     222  (0.09%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,148 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    396  (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  278,594
செல்லுபடியான வாக்குகள்  236,523 (99.04%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,294 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 238,817 (85.72%)

பொலநறுவை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  59,414  (56.24%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  37,243  (35.26%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   8,138  (7.70%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     228  (0.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    451  (0.43%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    141  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  127,624
செல்லுபடியான வாக்குகள்  105,615 (99.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,064 (1.00%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 106,679 (83.59%)

பதுளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  141,062 (58.62%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  88,642  (36.84%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,713  (3.20%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     625  (0.26%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,115 (0.89%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    463  (0.19%)

பதியப்பட்ட வாக்குகள்  280,187
செல்லுபடியான வாக்குகள்  240,620 (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,802 (1.15%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 (86.88%)

மொனராகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  51,264  (49.38%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  44,115  (42.49%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,171  (6.91%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     163  (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    882  (0.84%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    226  (0.22%)

பதியப்பட்ட வாக்குகள்  126,558
செல்லுபடியான வாக்குகள்  103,821 (98.53%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,553 (1.47%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 105,374 (83.26%)

இரத்தினபுரி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  175,903 (50.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  152,506 (44.13%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   11,283 (3.26%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     422  (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,996 (0.58%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    3,494 (1.01%)

பதியப்பட்ட வாக்குகள்  402,202
செல்லுபடியான வாக்குகள்  345,604 (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,407 (0.98%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 (86.8%)

கேகாலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  195,444 (57.02%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  126,538 (36.92%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,706 (4.00%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     376  (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,184 (1.80%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    514  (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  406,548
செல்லுபடியான வாக்குகள்  342,762 (98.69%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,537 (1.31%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 347,299 (85.4%)

முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982; இறுதித் தேர்தல் முடிவுகள்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  3,450,811 (52.91%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  2,548,438 (39.07%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   273,428 (4.19%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     173, 934 (2.67%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    58,531 (0.90%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    17,005 (0.26%)
பதியப்பட்ட வாக்குகள்  8, 144,995
செல்லுபடியான வாக்குகள்  6, 522,147 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   80,470 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,602,617 (81.06%)

இம்முடிவின்படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளின் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

3,261,074

குறைந்த பட்ச வாக்குகளை விட ஜே. ஆர். ஜயவர்தனா அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

189,737

இரண்டாம் இடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களைவிட திரு ஜே. ஆர் அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

902,373

தொடரும்……..

இலங்கைத் தமிழரது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

mahinda1.jpgsarath2.jpgsivaji.jpgபாகம் 7
சுயஅறிவே தற்பாதுகாப்பு, தெளிவாக்கமே அதன் வழி.

உள்ளடக்கம்
•கடந்த ஆறு கட்டுரைகளின் சாரம்:
மாதிரிவடிவத்தின் அவசியம்
•தமிழ் பேசுவோரும் மூன்று தேர்தல்களும்: வாக்குகளும், வாக்குரிமைகளும்,
வட்டுக்கோட்டை, நாடுகடந்த தமிழீழ, ஜனாதிபதித் தேர்தல்கள்.

கடந்த ஆறுமாதங்களில் “இலங்கைத் தமிழரது எதிர்காலம்” என்ற தலைப்புடன் ஆறு பாகங்களில் {வன்னியன் பிரபாகரன்: புலிகளின் ஆட்சிக் காலம் (20ஆனி 2009, பாகம் 1), நேற்றைய போராட்டம் நாளைய போராட்டம் (20 ஆடி 2009, பாகம் 2), பழசுகள் புதியவை தரா (16 ஆவணி 2009, பாகம் 3), எங்கிருந்து, யாரைப்பற்றி, எக்காலத்தில் (25 ஆவணி 2009, பாகம் 4), ஜனநாயகமயப்படுத்தல் (10 புரட்டாசி 2009, பாகம் 5), தேர்தலும் வாக்களிப்பும் (12 மார்கழி 2009, பாகம் 6) எனும்} உப-தலையங்களுடன், எமது சில ஆய்விலான கருத்துக்களையும் அவற்றினை நாம் வந்தடைவதற்கான சித்தாந்த நிலைப்பாடுகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் மாதிரி வடிவங்கள் பற்றியும் சில விளக்கங்களை தேசம்-இணையத்தள வாசகர் சிலருடன் பகிர்ந்திருந்தோம்.

இவை எமது ஆய்வு-ஸ்தாபனத்தின் கருத்துகாளாக அல்லது முன்மொழிவுகளாக தந்திருந்தோமே அன்றி, மக்களை வழி நடத்திச் செல்வது போன்ற தோரணையிலோ அல்லது ஏதாவது ஒரு கட்சியின் நிலைப்பாடுகளாகவோ முன்வைக்கப் படவில்லை என்பதில் நாம் மிகத் தெளிவாக இருப்பது போல, கரிசனமான வாசகர்களும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் எமக்கு அக்கறை.

இதற்கு முதற் காரணம், ஆய்வுக்-கருத்துச் சொல்வதற்கும் (considered opinion) நிலைப்பாடுகளைச் முன்வைப்பதற்கும் (advocacy) உள்ள வேறுபாடுகளை, அதற்கான பொறுப்புகளை, உணர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பது எமக்கு நாம் கொடுத்துள்ள வரையறுப்பாகும். மேலும், கட்சிகள் அற்றவர்கள் என்பதிலும் பார்க்க, தற்காலத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டே எமது மக்களது பிரச்சனைகளை ஒழுங்காக ஆராய முடியும் என நாம் கொண்டுள்ள முடிவு இரண்டாவது காரணமாகும்.

‘சொல்லிச் செய்ய வைப்பதற்கும்’ ‘புரிந்து கருமம் ஆற்றுவதற்கும்’ இடையே பாரிய வேறுபாடுகளை நாம் யாவரும் அநுபவத்தால் அறிந்துள்ளோம். இவற்றினை புரிந்து கொள்வதற்கான வளர்ச்சி தமிழ் பேசும் சமுதாயங்களது பெரும் திரளானவரிடம் சுயஇயல்பாகிக் கொண்டுள்ளது என்பதும் எமது அவதானிப்பு. ஆதலால், ‘உரையாடல்’ அல்லது ‘ஆய்வு’ ரீதிகளில் சில தகவல்களை முன்வைக்கும்போது, அவற்றின் உள்ளார்த்தங்களையும் தமது தேவைகளின் நியாயப்படுத்தல்களையும் தொடர்புபடுத்தி, தமது முடிவுகளை சுயமாகவே வந்தடையும் இயல்பின் வளர்ச்சியை தூண்டியபடி இருப்பதே, எமது முதற் கடமையென நாம் கருதுகின்றோம்.

ஆனால், இவ்வாறு வளர்ச்சி காணும் அவர்களது இயல்புகளை, நிலத்தில் அவர்களது இருப்பை, தம் உடமைகள் மீதான தன்நம்பிக்கையை, உடைத்திட பேரினவாதிகளும் அவர்களது ஊடுருவிகளும் நடத்தும் சதிகள் ஒரு புறமாகவும், குழப்பமான நிலைமைகளுள் தாண்டு முடிவுகளை எடுக்கும் சுயஇயல்புகளை இழந்து சிலவேளைகளில் தம்மை அறியாதே பேரினவாதிகளது மறைமுகத் திட்டங்களுக்கு சாதகமாகிடும் ‘தலைவர்களது’ நிலைமைகளும் உள்ளன என்பதை நாம் அறியாமல் இல்லை. இவற்றின் எடுத்துக்காட்டலாக, புனைபெயர்களின் பின் ஒளிந்திருந்து ஏதோ நகைச்சுவை நாயகர்களாகவும் அல்லது பலதையும் புரிந்த பொதுப்-புத்திவாதிகளாகவும் காட்டி ஏற்கனவே குழம்பியுள்ள ஏரியை குட்டையாக்கிடும் சிலரது முயற்சிகளிலும் கண்டு கொள்ளலாம். இவர்களது ஊடுருவல் மிகவும் ஆழமானதால் நாம் வெறும் எச்சரிக்கையாக இருந்திடுவது மட்டும் ஒவ்வாது.

எமது தனிப்பட்ட சுயமுற்சியாலான நிலைப்பாடுகளையும் முடிவுகளையும் எடுத்துக்கொள்ளும் தெளிவைப் பெற்றுக் கொள்வதே என்றும் இவற்றிற்கான தகுந்த பதில் நடவடிக்கை என நாம் கருதுகிறோம். இதன்பேரிலும்தான் நாம் கூறுபவற்றைக்கூட வெறும் கருத்தாக, தங்களது சிந்தனைப்போக்கில் ஒரு உந்தலாக மட்டுமே, கருதிக் கொள்ளவேண்டும் என்கிறோம்.

“யாரையும் நம்பிடுதலாகாது” எனும்போது “சுயமான முடிவுகளைக் கொள்ளுங்கள்” என்கிறோமே அன்றி “எம்மை மட்டும் நம்பிடுங்கள்” என்று கூப்பாடு போடும் பேதைகளோ அதற்கான தேவைகள் கொண்டவரோ நாம் இல்லை.

இவை ஒருபுறமிருக்க, எமது ஆறு பாகங்களின் முக்கிய உள்ளடக்கம் பற்றிய தெளிவு காத்திரமான வாசகர்களிடம் ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதும் எமது அவா. எனவே, இன்று இடம்பெறும் சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுடன் ஈடுபடுத்தி அவற்றினை மீளாக்கம் செய்திடவேண்டியது எமது கடமை ஆகிறது. இவற்றினை காத்திரமான வாசர்கள், குழப்பவாதிகளிடமிருந்து எழுந்த சில விடயங்களுடாக அணுகுவதே பொருத்தமானது.

எம்மைப் பொறுத்தவரை வெறுமனே அன்றாட விடயங்களுக்கு running commentry சொல்வதற்கும் அன்றாட விடயங்களைக் கொண்டு கருத்துச் சொல்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. எனவே, நடந்தவையை விட்டு இனிமேல் நடக்கப் போபவை குறித்து எம்மால் இதுவரை முன்வைக்கப் பட்டவையில் அதிமுக்கியமான விடயம் என்றால் அது மாதிரி வடிவம் பற்றியதாகும் என்கிறோம்.

அதாவது, ஆய்வு தேடல் என்பவற்கு எப்போதும் ஒரு மாதிரி வடிவம் (modal) அவசியம் என்ற எமது கருத்தாகும்.

மக்களது சமூக-அரசியல் விடயங்களில், மாதிரி வடிவம் எனும்போது அவர்களது,

(i) பிரச்சனைகளையும் அவர்கள் கைவசம் உள்ளவற்றையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்தறிய உதவும் கருவிகள், tools of investigation,
(ii) பிரச்சனைகள், basic problems
(iii) உறவுகளை பிறிதுபடுத்தும் அல்லது சுற்றாருடன் ஒன்றுபடுத்தும் காரணிகள், defining variables,
(iv) தொகுதியின் வரைவு, definition of the set/group
(v) தொகுதியுள் இருக்கும் உபதொகுதிகள், definition of subsets/subgroups
(vi) சுற்றாடலுடனும் தன்னுள்ளேயும் கொண்டுள்ள இயங்கியல் உறவுகள், dynamics within and outside the set/group,
என்பவற்றை உள்ளடக்கியவை என்கிறோம்.

இவ்வகையில், இலங்கையில் இடம்பெற்றுவரும் அடிப்படைப் பிரச்சனைகள்பற்றி:

(i) ஆய்வதற்கான தகுந்த கருவி சமூக-பொருளாதாரத்தை அவற்றின் செயற்பாடுகளை தெளிவாக்கும் தத்துவார்த்த சிந்தனைகள் எனவும், அதுவே தர்க்கீகம் என்றும் தேர்ச்சி செய்கிறோம்.

(ii) இலங்கைவாழ் சகல மக்களது பிரச்சனைகளுள் அவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின்தங்கலை பிரதானமானதாகவும், அதனுள்ளே கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசத்திற்கும் எஞ்சியவற்றிக்கும் உள்ள பாரிய ஏற்றத்தாழ்வை அதனடி தொடரும் இரண்டாவதாகவும் காண்கிறோம்.

இப்பாகுபாட்டினை வறண்ட-ஈரவலய பிரதேச வேறுபாடுகளின் தேர்ச்சி எடுத்துக் காட்டுவதாகவும் அவதானிக்கின்றோம்.

இவ்வகையில் பிரதேச சமூக-பொருளாதார-ஜனநாயகங்களை மட்டுப்படுத்தும் போக்கிற்கு சிங்களப் பேரினவாதமும் அதற்கு மறுத்தால் போலான தமிழ் தேசியவாதமும் தாங்கிச் செல்பனவாகவும், நடைமுறையில் அவற்றினை ஊர்ஜிதம் செய்பனவாகவும் காண்கிறோம்.

(iii) இப்பிரச்சனைகளின் அடிக் காரணிகளாக வேலைவாய்ப்பு (gainful employment), ஊதியத்-தொழில் (waged-labour), தகுந்த வாழ்க்கைத் தாராதரம் (basic standard of living), சனத் தொகை (population growth) என்பவைற்றை யாரும்தான் கணிப்பார்கள்.

ஆனால், தேசியவாதச் சக்திகளோ சமூக-பொருளாதார வளர்ச்சியின் பற்றாக்குறையை இலங்கையின் அடித்தளப் பிரச்சனையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், வளங்கள் குறித்த சர்ச்சைகளே (problem of resources) அடித்தளக் காரணிகள் என அவற்றினால் உருவாக்கப் பட்டுள்ளன.

எனவே பேரினவாதிகளும் தேசியவாதிகளும் அவ்வளங்களை மட்டும் தமதாக்கிடுவதால் தமது மக்களது பிரச்சனைகள் போய்விடும் என்ற போலி வாதத்துடனான போட்டியில் ஈடுபட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். பொருளாதார வளர்ச்சி பிரதேசங்களை, குறிப்பாக வறண்ட பிரதேசங்களை வந்தடையும்வரை இந்நிலைமை தொடரப்போகும் விடயம் என்பதோ மறுக்கப்பட முடியாத விடயம்.

(iv) வறண்ட பிரதேச மக்கள், புவியியற் காரணிகளாலும் இனவாதத்தாலும் பிறிதுபடுத்தப்பட்டு, பிரதேசக் காரணிகளை தமக்கே உரிய தேசியவாதங்கள் தேசியமயமான-இடதுசாரி வாதங்களுடாகப் பிரதிபலித்து, அவற்றின் பேரில் தமது உடமைகளை ஊர்ஜிதம் செய்து கொள்ள எடுத்த முயற்சிகள் இன்றுவரை தோல்விகளையே கண்டுள்ளன.

இவற்றுள் இலங்கை முழுவதையுமே கைப்பற்றுவது அல்லது அதனைத் துண்டாடுவது என்ற வழிமுறைகளால், தமது சமுதாயங்களுக்கு கைவசம் இல்லாத சமூக-பொருளாதார ஜனநாயகப் பலத்தை இராணுவ ரீதியில் ஈடுசெய்யலாம் என்ற முயற்சிகளே இதுவரை இடம்பெற்றன என்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

எனவே மக்கள் எனும்போது ஒரே சமூக-பொருளாதார நிலைப்பாட்டுள் அமைந்துள்ள இவர்கள் அனைவரையும் ஒரே கண்ணுடன் பார்க்க வேண்டியதும் ஒன்றாகக் கணிக்க வேண்டியதும், சித்தாந்த ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும், மேலும், தமிழ் பேசும் மக்கள் பேரில் கேந்திர ரீதியிலும் அவசியமானதாகிறது.

இவ்வகையில், வடண்ட பிரதேச மக்கள் யாவருமே சமூக-பொருளாதார அரசியல்-அதிகார ரீதிகளில் ஒரு தொகுதியாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்கிறோம்.

(v) தமிழ் பேசும் சமுதாயங்களே பிறம்பான அடையாளங்களைத் தேடும்போது, ஈழவர் போன்ற பொதுமைப்படுத்தும் முயற்சிகளோ தோல்வி கண்டுள்ளபோது, சிங்களம் பேசும் சமுதாயங்களையும் உட்படுத்தும் சமூகக் கருத்துக்கள் பகற் கனவே என சிலர் கூறுவது நியாயமானதாகப் பட்டாலும், அது தர்க்கீகம் அற்ற முரட்டுவாதமேயன்றி வேறல்ல.

முதலாவதாக, இவ் வாதங்கள் நாம் காணும் மக்கள் தொகுதியின் உபதொகுதிகளை வரைவு செய்ய உதவுகின்றனவேயன்றி பெரும் தொகுதியின் வரைவை நிராகரிப்பவை அல்ல.

இலங்கைவாழ் தமிழ் சமுதாயங்கள் யாவும் சிறீலங்கா அரச அமைப்பினால் பொதுப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதால் அவர்களை ஒரு தொகுதியாகக் காண்பது தவறல்ல. அவர்களை இவ்வாறு ஒரு தொகுதியாகக் கண்டபின் அவர்களிடையே உள்ள வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்ப்பதும் தவறல்ல. எனவே, ஒரு பெரும் தொகுதியுள் வேறுபாடுகள் இல்லை என்பதற்கல்ல. வலுக்கட்டாயமாக ஒற்றுமையை உருவாக்க முற்பட்ட புலிகளின் முயற்சியின் எதிர் விளைவுகளையும் கண்டவர் நாம்.

தமிழீழப் போராட்டம் இராணுவரீதியில் தோல்வி கண்டதிலிருந்து “சிங்கள மக்களுடன் சேர்ந்ததே எமது வாழ்வு” என்பதை தமிழ்தேசியவாதிகளும் ஏன் தமிழீழவாதிகளும்தான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை நடைமுறையில் எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதுதான் அவர்களது பிரச்சனை என்பது எமது நிலைப்பாட்டிலிருந்து வேறுபாடுகள் கொண்டதில்லை. தோல்வியின் பின்னடியில் இவ்வாறான மனோநிலை ஏற்படுமாயின், எவ்வாறான சமூக-மனோவியல் ரீதியில் எமது கருத்தை நிர்ணையம் செய்வது என்பது பலத்த கேள்வியே என்பதை நாம் அறியாமலும் இல்லை.

சிறீலங்காவின் அரசமைப்பு சிறுபான்மை இனத்தவரது ஜனநாயக உடமைகளை நிராகரிக்கிறது என்பதில் ஐயமில்லை. அது முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதிலும் ஐயம் இருக்க முடியாது. தமிழ் பேசும் சமூகங்கள் சிங்கள அரசின் அப்புறப்படுத்தலால் ஒருமைப்படுத்தப் படுபவர்கள் என்பதால் அவர்கள் ஒரு தேசத்தவர் என்றிட முடியாது.

அதுபோலவே, எமது பொதுமைப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டத்திடையே தமிழ்பேசும் சமுதாயங்களோ மற்றைய சமூகங்களோ தமது உடமைப் பிரச்சனைகளைக் கைவிடவோ அடகு வைத்திடவோ வேண்டியதில்லை என்கிறோம்.

எனவே, வறண்ட பிரதேச மக்களிடையே சிங்களம் பேசும் தமிழ் பேசும் சமூகங்கள் இரண்டாகவும், அவ்விரு சமூகங்களிடையே உள்ள சாதி சமய பிரதேச ரீதியிலான வேறுபட்ட சமுதாயங்கள் உபசமூகக்-குழுக்களாகவும் ஏற்கப்பட வேண்டியவை என்கிறோம்.

(vi) இயங்கியல் உறவுகள் என எவற்றை நாம் பார்ப்பது?

எமது இதுபற்றிய வரைவாக சமூக-பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் விளைவிக்கும் சகல சமுதாய சக்திகளும் இயங்கில் உறவு தருபவை என்பதை முன்வைக்கிறோம். கடந்த 30 வருட இன ரீதியிலான உள்நாட்டு யுத்த காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே உற்பத்தி, அதன் உறவுகள் என்பவை பாரிய மாற்றம் கண்டுள்ளன என்பது எமது அவதானிப்பு.

தமிழரிடையே, தேசியவாதம் சக்தியாக (energy) அமைய, புலிகள் அதன் அதிஉயர் இயங்கியல் விசை (force) ஆனார்கள்.
இவற்றினால் தம்முள்ளேயும் வெளியோருடனும் உள்ள சமூக உறவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் அவதானிப்பு.

தேசியவாதம் என்ற சக்தியால் வறண்ட பிரதேசங்களில் வாழும் எந்தச் சமுதாயங்களும் பலனடையாது போகினும் அவற்றின் விசைகளால் தாக்கம் காணத சமுதாயங்கள் எங்கும் இல்லை. அமைப்புகள் தேசியவாதங்களின் விசைகளாக இருப்பது இன்று இரு இனங்களிடையேயும் மட்டுக் கண்டுள்ளது போன்ற காட்சி இருந்தாலும் இலங்கைத் தீவில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் மாற்றுச் சக்திகள் இன்னமும் நிலை கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது. எனவே, மாற்றுச் சக்திகளுக்கான சுற்றாடல் உருவாகும்வரை தேசியவாதங்களே பின்/முன்னேற்ற மாற்றங்களை கொண்டு செல்வனவாக அமையும் என்கிறோம்.

தமிழ் பேசும் சமுதாயங்களும் தேர்தல்களும்

இலங்கையில் தேர்தல்கள் என்பவை தமிழ் பேசுவோரைப் பொறுத்தவரை அவர்களது உடமைப் பிரச்சனைகளுடனேயே எப்போதும் தொடர்புபட்டவை. ஆயினும், ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் மக்களாக பல தொகுதிகளில் பிரதிநிதிகள் ஆனபோது, மூன்றாம் உலகநாட்டு நியதிகளுள்ளே மக்கள் இருந்த போதிலும், ஓரளவு தன்உணர்வுடன் தமது தேவைகள் நிமிர்த்தமும் வாக்களிக்கும் நிலையில் மக்கள் இருந்தனர். தமிழ் பேசும் பிரதிநிதிகளது தொகை அரசாங்கத்தை நிர்ணயம் செய்யக் கூடியதாகவும் அச் சிறுகாலம் இருந்தமையும் அந்நிலைக்கு உதவியாக அமைந்தது.

எனவே, தமிழ் பேசுவோர் தமது அரசாங்கங்களை நிர்ணயம் செய்யும் நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியமும், மலையகத்தவரை நாடற்றவர் ஆக்குவதற்கு, பேரினவாதிகளின் முக்கியமானதொரு காரணமாகிற்று. அதன் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்களது வாக்குகள் முற்றாக அவர்களது ‘உரிமைகள்’ என்ற ஒரேஒரு நிலைப்பாட்டைக் குறித்த கணிதப் பரீட்சையுமாகிற்று.

இந்த ‘உரிமைகள்’ கொழும்பு அதிகாரத்திலும் அதனைச் சார்ந்த அரசியல் வாழ்வினிலும் பங்கு கோருபவையாக இருந்தனயே அன்றி, தமிழ் பேசும் மக்களது உடமைகள் பற்றியதாகவோ, பிரதேச சமூக-ஜனநாயகம் குறித்தவையாகவோ அவற்றை பெறுவதற்கான தீர்மானங்களுடனோ ஒருபோதும் இருந்ததில்லை. இல்லாவிடில் டட்லி-செல்வா உடன்பாடுவரை பூர்வீகப் பிரதேசம் பற்றிய கோரிக்கை எப்படி எழும்பாது இருந்திருக்கும்?

தேர்தல் 1: வட்டுக்கோட்டைக் கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு

தீர்மானம் என்ற வகையில் வட்டுக்கோட்டை விடயம் முன்னேற்றமாகினும், அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த என்ன திட்டங்கள்தான் அங்கே முன்வைக்கப்பட்டன? என்றால் வெறும் ஏமாற்றமே எஞ்சும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் இடம்பெற்ற தேர்தலை வெகுசன வாக்கெடுப்பாக பிரதிபலித்த த.வி.கூட்டணியினர், தேர்தலின் பின்னர் அத்தீர்தானங்களுக்கு மிகவும் குறைவான மாவட்டசபைத் தீர்வினை ஏற்கத் தயாராக இருந்தமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எப்படியான முடிவை தந்தது என்பது முக்கியமான கேள்வியே.

எனவே, அக்காலத்து அரசியல் சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடை போடுவோமாயின் அது வெற்றுக் கோஷம் என்பதையும் கட்சிகளுடன் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு உதவியாக bargaining position தரும் மிரட்டலாக முன்வைக்கப்பட்டது என்பதையும் அறிவோம்.

ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் பற்றிய ஆய்வோ அதுபற்றிய விமர்சனமோ இங்கே அவசியமற்றவை.

ஏனெனில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின் இடம்பெற்ற தேர்தல் வெகுசன வாக்கெடுப்போ இல்லையோ, அத்தேர்தலுடன் த.வி.கூட்டணியினர் அதனைக் கைவிட்டதால் அதன் அதிகாரம் அற்றுப்போனதோ இல்லையோ, விடுதலைப் புலிகளது MOU ஏற்பாடு அவற்றிலும் மேலானவை என்பதும், சர்வதேசிய ரீதியில் அங்கீகாரம் பெற்றதும் வட்டுக்கோட்டைத் தீர்மானங்களை நடைமுறையில் மேலோங்கியவை (superceeded) என்ற விடயமே முக்கியமானது.
வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களேயன்றி, தேர்தலின் பின்னர் வெற்றி பெற்றவர்களால் கைவிடப்பட்டவை என்பதுமன்றி, MOU போல சிறீலங்கா அரசுடனான சர்வதேசிய ரீதியிலான உடன்பாடல்ல.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானம்பற்றிய வாக்கெடுப்பு, தமிழ் பேசும் மக்கள் அனைவரது தீர்வுக்கான வழியல்ல என்ற அதிமுக்கிய விடயத்தை மனக்கண்ணிலிருந்து அப்புறப்படுத்தி, வெறும் தமிழர்களது தீர்வாகப் கொண்டாலும் தமிழர்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயலாகவே இருக்கிறது.

தேர்தல் 2: நாடு கடந்த தமிழீழ வாக்கெடுப்பு

தமிழீழத்திற்கு யார் வாக்களிப்பது என்பது சர்ச்சையான விடயம். (வாக்குரிமை பற்றிய எமது சில கருத்துகள் பின் தரப்பட்டுள்ளன.)

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கென பாராளுமன்றம் ஒன்றினை உருவாக்குவதில் தப்பில்லை. இங்கிலாந்தில் வாழும் இஸ்லாமியரும் தமக்கென ஒரு பாராளுமன்றத்தை நடத்துகிறார்கள். அதற்கு அதிகாரம் இல்லை என்றபோதிலும், பிரித்தானியா வாழ் இஸ்லாமியருடைய பிரச்சனைகளைப் பிரதிபலிக்கவாவது அது உதவும் எனவாதிடலாம்.

ஆனால், அது ஈராக்கிய அல்லது அவ்கனிஸ்தானிய அல்லது பாலஸ்தீனிய இஸ்லாமிய பாராளுமன்றம் என்று தன்னை அழைக்கவில்லை. அதன் பிரதிநிதிகள் பிரித்தானிய இஸ்லாமியரது வெளிவிவகார விடயமாகவே தமது ஈராக்கிய, மற்றும் ‘சகோதரர்களது’ பிரச்சனைகளை அணுகுகிறார்கள். எனவே, தமிழீழம் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தமிழர்களையா, புகலிகளையா, இல்லை அனைவரையுமே அது பிரதிநிதித்துவம் செய்யுமா? என்பது ஒரு கேள்வி. இவ்வாறான முரண்பாடுகள் பல ஒருபுறம்.

அதனைவிட, அது ஒரு வெளியேற்றப்பட்டவரின் அரசாங்கமாக (government in exile) இயங்குவதாயின் ‘வன்னி அரசின்’ அதிகாரங்களை பராமரித்த உறவுகளை ஏற்கனவே உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில், எந்த வழக்கில் (presedent) இப்பாரளுமன்றம் இலங்கைத் தமிழரது உடமைகளின் பொறுப்பாளர்களாக முடியும்? என்பது அடுத்த கேள்வி. (இவை தொடர்பான விளக்கங்களும் சில பின்னே.)

இதற்கு இஸ்லாமிய தமிழ் பேசும் சமுதாயங்களது பங்கு இல்லாத தறுவாயில் தமிழீழம் என்பது முன்னர் போல புலிகளது ISGA பிரேரணைத் திட்டங்களுள் அமைந்தது போலாகுமா? இல்லாவிடில் அவர்களது உடமைப் பிரச்சனைகளை எவ்வாறு பிரதிபலிக்கப் போகிறது? என்பவையும் முக்கிய கேள்விகளாகின்றன.

இந்தப் பாராளுமன்றம் தமிழ் பேசும் சமுதாயங்கள் யாவுமே சிங்கள அரசினால் பொதுமைப்படுத்தி ஒடுக்கப்படுகின்றன என்பதை எவ்வாறு கையாளும்? ஏற்கனவே உள்ள மாகாண சபைகளுடன் எவ்வாறான உறவுகளை ஏற்படுத்தப் போகிறது? என்பவையும் பிரதான கேள்விகளாகும். இவற்றுடன், இப்பாராளுமன்ற ஏற்பாட்டால், இலங்கைத் தமிழரது இனத்தீர்வுக்கான நிலைப்பாடுகளை முன்னெடுக்க எவ்வகையில் உதவப்போகிறது என்பதே முக்கிய கேள்வியாகும்.

எனவே, முரண்பாடுகள் குழப்பங்கள் விளக்கமற்ற நிலையுள் நாடுகடந்த தமிழீழ வாக்கெடுப்பு புலிகளது பழைய ஆதரவாளர்களால், தமது சித்தாந்தத்திற்கு, சிதைந்து இறந்து போய்கொண்டுள்ள அதன் உடலுக்கு, உயிர்வாய்வு கொடுத்து வாழ்வு கொடுப்பதற்கான முயற்சி என்பதிலும், தத்தமது அரசியல் வாழ்வுகளுக்கு புகலிடம் தேடும் இன்னுமொரு போலி நடத்தை என்ற விசமமான கருத்துகள் நியாயமாகப் படுவதில் வியப்பில்லை.

வாக்குரிமை/வாக்கெடுப்பு

இவற்றிக்கெல்லாம் முக்கியமான விடயம், வாக்களிக்கும் உரிமை யாருக்கு என்பதாகும். 05/09 வரை புலம் பெயர்ந்தவர்களது கருத்துக்கள் எவையாகினும் அவை செல்லாதவை என்றும், நிலத்தில் இடம்பெறுவதே முக்கியமானது என்ற யாதார்த்த வாதங்களே எமது அரசியலை ஆட்கொண்டிருந்தது. அதனை புலிகளது ஆதரவாளர்கள் முன்வைத்திருந்தாலும் அதற்கென்ற தத்துவார்த்தம் இருந்தது.

புலிகளோ, புலிப்-புகலிகளைக்கூட தமது அதிகார அமைப்பு வடிவத்தில் பார்வையாளராகக்கூட அநுமதித்து இருக்கவில்லை. அப்படியான அமைப்பு வடிவம் அவர்களது வன்னி அரசகாலத்தில் இருந்திருந்தால், அது வன்முறையால் ஒழிக்கப்பட்டபோது அதன் வெளிநாட்டு அங்கம் முழுப் பொறுப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கான உரிமை கொண்டது என்று வாதிடுவதற்கு சாதகமாக இருந்திருக்கும்.

அவ்வாறு வன்னி அரசின் அங்கமென இல்லாது போகினும், காலாகாலத்தில் தாம் எடுத்த முடிவுகளை புகலிகளிடம் வாக்கெடுப்பிற்கு விட்டிருந்தால், அது நடைமுறை ரீதியிலாவது ஒரு அதிகார வழக்கை (presedent) உருவாக்க உதவி இருக்கும். அவ்வழக்கைக் கொண்டு வன்னி அரசு இல்லாத தறுவாயில், புகலிகள் வாக்களிப்பை அதிகாரபூர்வமான விடயமாக பிரதிபலிக்க முயன்றிருக்கலாம்.

புகலிகள் தம் இச்சையில் தமது பூர்வீகப் பிரதேசங்களிலிருந்து வெளியேறி இருந்தாலும், அங்கே கடந்த 30 வருடங்களாக உக்கிர போர் நடந்தது என்பதும், சிங்கள அரசின் கொலைகார ஒடுக்குமுறைகளுடன் தமிழ் அமைப்புகளது அராஜாங்கப் போக்கும் ஒத்தாசையாக, மக்கள் விரோத நிலைமையே நிலவியது என்பது உண்மை. எனவே, எவ்வாறான தனிப்பட்ட காரணத்தைக் கொண்டு மனிதர் வெளியேறியிருந்தாலும் ‘போர்’ என்ற நிலமையே அவர்களது வெளியேற்றப் போகிற்கு அடிப்படைக் காரணி என்பது மறுக்க முடியாதது. ஆகவே, புகலிகளை வெளியேறியவர்களாகக் கொள்ளாது, வெளியேற்றப் பட்டவர்களாக கணிப்பதும், அவர்களுக்கு இலங்கைத் தீவில் ஜனநாயக உடமைகள் உண்டெனக் கருதுவதும் சர்வதேசிய வழக்கில் தவறான வாதமல்ல. இவ்வகையில் புகலிகளுக்கு வாக்குரிமை உண்டு என்பது தவறல்ல.

ஆனால், அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாக மாறியபின், பலகாலம் தமது வாழ்க்கையை இருத்தியபின், நிரந்தரமாக நாடு திரும்பும் நோக்கம் அற்றபின், அந்த உரிமையை எவ்வாறான மனோநிலையிலிருந்து, நாட்டில் இருப்பவரது வாக்குரிமைகளுக்கும் மேலாக நியாயப்படுத்த முடியும் என்பது தனிப்பட்ட மனிதர்கள் தம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இவ்வகையில், இலங்கையில் வாழும் எமது சகோதரங்களது வாக்குகளின் பெறுமதியும், பங்கும், உரிமையும் இவ்வாறான புகலிகளிடம் மட்டுமே இடம்பெறும் வாக்கெடுப்புகளில் என்ன? என்பது வேறு ஒரு பிரச்சனை ஆகிறது.

இந்நிலையை மன ரீதியிலாவது சீர்செய்திட, தமிழ் பேசுவோரது அரசியற் கட்சிகள், குறைந்தபட்சம் TNAயினர் இவ்வாக்கெடுப்புகள் பற்றி ஆதரித்து கருத்துக்களைக் கூறினால் இவற்றினை நிலத்தில் வாழ்பவர்களிடமும் உலகத்திடமும் நியாயப்படுத்த ஒருவேளே உதவலாம்.

இந்நிலை இல்லாதபோது, புகலிகள் தமிழர்களது இலட்சியங்கள் குறித்தும், இலங்கையில் வாழ்பவர்கள் தமது அன்றாட வாழ்க்கை குறித்தும், வேறுபட்ட வாக்கெடுப்புகளில் ஈடுபடும்போது எது முக்கியம் என்ற கேள்வி எழுவதும், புகலிகளது முயற்சிகள் விரையமாகப் போவதும் எதிர்பார்க்க வேண்டியதே.

ஆனால், இம்முயற்சிகளின் விரையங்களிலும் பார்க்க, நடைமுறையில் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடிய MOU பற்றி சாரரம்சங்கள் கவனமற்று கழித்து வைக்கப்பட்டு விரையமாக்கப்படுவதே பாரிய நஸ்டமாகும்.

தேர்தல் 3: சிறீலங்காவின் ஜனாதிபதி

புலிகளது இராணுவம் மிகைப்படுத்திக் காட்டப்பட்டதால் அது தோல்விகண்டபோது பலருக்கு பலத்த அதிரடி போன்ற ஏமாற்றம். அதனால், அத் தோல்வியின் பின்னணியை உற்று நோக்காது விட்டுவிடுகிறார்கள் பலர். எமக்கோ அத் தோல்வியின் தாக்கத்திலும் பார்க்க அதனை நோக்கிய முடிவுகளே முக்கியமானவையாகும். அவையே எமது மக்களது மட்டுமின்றி இலங்கைத் தீவில் வாழும் சகலரதும் அண்மித்த எதிர்காலத்தை சுட்டிக் காட்டுவனவாகும்.

புலிகள் தமது ஆயுதங்களை வெளியாரின் பொது ஸ்தாபனம் ஒன்றிடம் கையளிக்க வேண்டும் என நாம் எப்போதோ கூறியிருந்தோம். அதற்கு தமிழ் பேசும் மக்களது எதிர்காலத் தலைமை பற்றி நாம் கொண்டிருந்த அக்கறையே அடிப்படைக் காரணமாகும். நாமோ புலிகளை தமிழரது சமுதாயங்களது தலைவர்களாகக்கூட ஏற்றிருக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், வலுக்கட்டாயமாக அத்தலைமைப் பீடத்தை கைப்பற்றிக் கொண்ட புலிகள் மற்றைய அரசியல் தலைமைகளை எல்லாம் அழித்தொழிப்பதால் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்பதுடன் வெளியார் ஊடுருவலையும் தடுத்திடலாம் என நினைத்துக் காரியமாற்றினர்.

எஞ்சியோர், சிறீலங்காவசம் தள்ளப்பட்டனர், சிறீலங்கா வசமானமையால் தலைமைத்துவத்திற்கான சுயஇயல்பையும் தகமையையும் இழந்தனர். தமிழ் பேசும் இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களது நிலைமைகள் சற்று வேறுபட்டாலும் அவர்களும்தான் புலிகள் எதிர்ப்பு அரசியல் நடத்த வேண்டியவர்களாகவும் சிறீலங்கா சார்படைய வேண்டியவர்களும் ஆனார்கள்.

இந்நிலையில் புலிகள் அழிவது, neutron குண்டு வெடிக்கும்போது உயிர்கள்போக கட்டிடங்கள் தப்பிடும் நிலைபோல, வடகிழக்கு அரசியலில் மக்கள் சடப் பொருட்களாகிட, தலையில்லாத பாரிய வெற்றிடம் உருவாகும் என்பது நாம் புரிந்து கொண்ட விடயம். எனவே, இவ்விடத்தில் புலிகளை அழிப்பது தமிழர்களது அரசியல் தலைமையை முற்றாக நிராகரிப்பது என்பதற்கு ஒப்பானது என்பது உண்மை. அதனைத் தவிர்திருக்க முடியுமா? என்பது பாரிய, இன்றோ வெறும் ஆய்வுக்கான கேள்வி. ஆனால், தமிழ் பேசும் சமுதாயங்கள், குறிப்பாக தமிழர்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை தாமாக தமது பலத்துடன் எடுத்துக் கொள்ளும் நிலமையை அற்றுப் போகச் செய்வதற்கான முடிவே இது என்பது மட்டும் தெளிவு.

இந்நிலையை உருவாக்கிடும் முடிவை, சிறீலங்கா எப்போதோ எடுத்திருக்க முடியும், ஆனால் நடை முறைப்படுத்த முடியவில்லை என்பது சரித்திரப் பாடம்.

புலிகள் வெளிக்காட்டிக் கொண்டதிலும் பலவீனமானவர்கள், இராணுவ தளபாடங்களது கொள்வனவு உள்வரவுகளை தம் இச்சைப்படி செய்ய முடியாது போனவர்கள், மக்களது உலகநாடுகளது ஆதரவுகளை இழந்து கொண்டு போனவர்கள், மாறாக அவர்களுடன் நிற்பதாகக் காட்டிக் கொண்ட நோர்வே தொடக்கம் தென் ஆபிரிக்காவரை சகல நாடுகளும் ஆயுதங்களை சிறீலங்காவிற்கு வழங்கின, என்பவை ‘புலிகளது அதிகாரத்தை முற்றுக்குக் கொண்டு வருவது’ என்ற முடிவு சர்வதேசிய அரசுகளிடம் இருந்தன என்பதற்கு அத்தாட்சி. இருந்தும் இவையாவும், நாம் இறுதியில் கண்ட இலகுடன், புலிகள் இராணுவத்தை முறியடித்துவிடும் நிலையை உருக்கின என்பதற்கில்லை.

அதற்கு (1) மக்களுக்கு என்னதான் அநியாயம் நடந்தாலும் முகம்பார்ப்பதில்லை (2) எவ்வாறான ஆயுதங்களைப் பாவித்தாலென்ன புலிகள் ஒழிந்தால் சரி என்ற அரசியல் முடிவுகளும், அவற்றிலும் மேலாக, (3) புலிகளது நடமாட்டங்களை விண்ணிலிருந்து கண்டு சிறீலங்காவை தயார்ப்படுத்தும் நிலமையைத் தந்தமை இராணுவ ரீதியில் அதிமுக்கிய முடிவாகும்.

இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை வாய்பாட்டாக சொல்லிக் கொண்டிருந்த இந்தியா சரி, மேற்கத்திய நாடுகள் சரி, தென் ஆபிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சரி, ஏன் சிறீலங்கா பக்கமாகின? ஏன் ஆயுத உதவிகள் வழங்கின? ஏன் multiple barrel rocket launchers போன்ற ஆயுதங்களை புலிகளுக்கு கேடயமாக கட்டி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரயோகித்த போதும் வெறும் வார்த்தைகளுடன் தம்மை நிறுத்திக் கொண்டன?

இவற்றிக்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். புலிகள் பயங்கரவாதிகள் அல்-குவேடாவுடன் கூட தொடர்பு கொண்டவர்கள், இந்தியாவிற்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், என பலவிதமான நிலைமைகள் இருக்கக் கூடும்.
ஆனால், 2008 வரை பேச்சு வார்த்தைகளை புலிகளுடன் பிரத்தியேகமாக, மிக இரகசியமாக நடத்தியவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் சிறீலங்காவினது கட்டுக்கு அப்பாலிருந்து சுய இயல்புடன் முடிவுகள் எடுக்கக் கூடிய காலத்தை வாங்கித் தர முயலாதவர்கள், இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வே இல்லை என அடித்துச் சொன்னவர்கள், சடுதியாக மனம் மாறும்போது காரணங்கள் என்ன என ஆராய்வது எம்மை நாமே ஏமாற்றும் செயலாகும்.

இதனிலும், எம்பால் விளைவுகள் என்ன என்பதே எமக்கு முக்கியமான விடயம். இதற்கு ஒரேஒரு பதில்: தலைமைத்துவம் இழந்த தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் என்ற நிலையே என்பதுதான். இந்நிலையை உணர்ந்தவர்கள் தமக்குத் தாமே ஆறுதல் காணச் சொல்வது, “புலிகளை அழிக்க அநுமதி கொடுக்கமுதல் வெளிநாட்டுச் சக்திகளுக்கும் சிறீலங்கா அதிகார வர்கங்களுக்கும் இடையே ஏதோ ஒரு deal இருக்க வேண்டும்” என்பதே.

இதில் ஒரு logic இருக்கும் போதிலும், அப்படியான ஒரு dealதனை காரியம் முடிந்தபின் சிறீலங்கா சரி வெளிச்சக்திகள் சரி ஏன் நிறைவேற்ற வேண்டும்? என்பதே எமது கேள்வி.

இவற்றைப் பின்னணியாகக் கொண்டே 27 தை, 2010 நடைபெறவுள்ள சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலை நாம் கணிப்பிடுகிறோம்.

பிரதான வேட்பாளர்கள்
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ஷாவும் பொன்சேகாவும் ஒரே சோழன் செடியில் பிறந்த இரு பொத்திகள்.
இலங்கை சிங்கள மக்களது சொத்து என்பதில் அசைவிலா நம்பிக்கை கொண்டவர்கள். அதன்பின்னர், தமிழ் பேசுவோரை எவ்வாறான கரிசனக் கண்ணுடன் அணுகுகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள் என்பதால் நாமும் குதூகலமடைய வேண்டும் என கருதுபவர்கள் தம்மை ஏமாற்றும் தன்நம்பிக்கை அற்றவர்கள்.

இவர்களே முள்ளிவாய்காலில் என்ன தமிழரது இரத்தக் களரிக்கு முற்றாகப் (புலிகளது பங்கு வேறு) பொறுப்பானவர்கள். ஒரே கரையில் நின்று சிங்கள அரசுக்கு எதிரான தமிழர்களது போராட்டத்தை முறியடித்தவர்கள்.

இவர்களிடையே தமிழ் பேசுவோர் குறித்து வேறுபாடுகாண விளைவது ஒரு பாறாங் கல்லின் வெடிப்பிடையே நாக்கால் நீராவியைத் தேடுவது போலாகும். இந்த எமது அநுபவங்களைவிட இவர்கள்பற்றி வேறேதாவது நல்ல விடயங்கள் மறைந்து கிடக்கின்றனவா?

ஒருவேளை, ஜனாதிபதி ஆட்சி முறையை (ஆறு மாதத்தில்) மாற்றி அமைப்பது என்ற பொன்சேகாவின் வாக்குறுதி கண்ணை ஈர்க்கக் கூடும். ஆனால், கடந்த தேர்தலின் முன்னர் ராஜபக்ஷா ஜேவிபி அமைப்புடன் எழுத்தில் கொண்ட ஏற்பாடும்தான் இதனை வாக்குறுதியாகத் தந்திருந்தது. எனவே, தேர்தலின் முன்னர் தரும் வாக்குறுதிகள் எல்லாம் நடப்பவை என்பதற்கல்ல.

மேலும், மூன்றில் இரண்டு பாராளுமன்ற அதிகாரமின்றி இதனைச் சாதிக்க, அதாவது அரச சாசனத்தை மாற்றிட, வெகுசன வாக்கெடுப்பு அவசியம். பொன்சேகாவோ பாராளுமன்ற அரசியற் காலச்சாரம் அறியாதவர், கட்சித் தளம் இல்லாதவர். இவ் இரண்டு வழியுமோ, வெற்றியை நிச்சயமாகத் தரும் என்று கூற முடியாது. எனவே, ஆறு மாதத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையையே மாற்றுவதாக யாரும் கூறுவதை எவ்வாறு கணிப்பது என்பது கேள்வியே. ஆறு மாதத்தில் இது குறித்த வெகுஜன வாக்கெடுப்பை நடத்துவேன் என்று கூறுவதே சாத்தியமான வாக்குறுதியாகும். எனவே, இது தொடர்பாக இவ்விரு வேட்பாளர்களுக்கும் இடையே வேறுபாடு காண்பவர்கள் இரகசிய தகவல்களைப் பெற்றவர்களாகவே இருக்க முடியும்.

இவற்றைத் தாண்டிய ஜனநாயகவாதம் கொண்டு வேறுபாடுகள் காண்பவர்களும் உண்டு. ராஜபக்ஷா சிறீலங்காவிற்கு ‘பரம்பரை’ ஆட்சிமுறையை கொண்டு வந்துள்ளார் அதனை மாற்றிட பொன்சேகா உதவுவார் என்பது இவர்களது சொத்தி வாதம்.

மூன்றாம் உலக நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் சில குடும்பங்களையே சார்ந்திருக்கும் என்பது புதிய விடயமல்ல. பண்டாரநாயக்காகளும் ஜெயவர்த்தன செனிவரத்னா குடும்பங்கள் தொடர்புகள் கொண்டவை என்பதும் அவர்களது கூட்டத்தினரே சிறீலங்காவை சுதந்திர காலம் தொட்டு ஆண்டுவருகிறார்கள் என்பதும் புதிய கதையல்ல. ராஜபக்ஸா குடும்பம் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் அரசேறியமைதான் சற்று வேறுபட்ட விடயம். ஆனால், குடியானவர்-ஜனநாயகத்தில் (feudal-democracy) ஆழும் குடும்பத்தை (clan) மாற்றிவிடுவதால் மக்களது விடயங்களில் பாரிய மாற்றம் ஏற்படக் கூடும் எனக் கூறும் புரட்சிவாதிகளைப் பார்த்து என்ன சொல்வது என்பது புரியாத விடயம். இதனை இவர்கள் ஏதோ கணித-விஞ்ஞான ஆய்வு போல சூத்திரங்கள் பீடிகைகளுடன் சொல்லும்போது எமக்குள்ளே நாம் தாண்டு போவதைத் தவிர வேறு வழிதான் ஏது?

சிறீலங்காவின் அரசியலிலை வன்முறை பலாத்காரமாகச் சூழ்ந்ததில் இருந்து தமிழர்களது போலவே சிங்களவரிடையேயும் சில சமூக-மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். வன்முறைச் சூழல் மத்திய வர்க்கங்களை நாலு திக்கும் ஓடவைப்பது என்பதை நாம் அறிவோம். தமது வசதியான, உயிருக்கு உத்தரவாதமான சூழுல்களில் இருந்தபடி வன்முறையை ஆதரிப்பது அவர்களது பொழுதுபோக்கான அரசியல் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். இதே நிலைமையையே சிங்களச் சமுதாயங்களும் சந்தித்துள்ளதையும், அதனால் கரையோரச் சிங்களச் சமுதாயங்கள் அரசியல் அதிகாரம்பெற முனைவதையும் நாம் அவதானிக்கலாம்.

இதனை ஒரு நிலையான ஸ்தாபனமாக உருவாக்கப்பட்டுள்ள இராணுவதினூடாகவும், ராஜபக்ஷா குடும்பத்தினரை பராமரிப்பதூடாகவும், ஜேவிபி ஜேஏச்யு போன்ற அமைப்புகளுடாகவும் அரசியலாக்கம் செய்ய முயல்வதையும் நாம் காண்கிறோம். இவ்வழியில், இவர்களுக்கும் சிங்கள பண்டைய தலைக்-குடும்பங்கள் சார்ந்த சமுதாயங்களுக்கும் அரசியற் போட்டி உருவாகுவது எதிர்பார்க்க வேண்டியதே.

சரி, பொன்சேகாவின் தளம் எது? அவர் பழைய தலைக் குடும்பங்களது அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டிய வர்க்க உந்தல்கள் ஒரு புறமாகவும், நம்பத்தகுந்த தேசிய-ஸ்தாபனமாக உருவாகி வரும் அரசபடையின் அபிலாசைகளது சார்பாக மறுபுறமாகவும் அவரது தளம் சற்றே பரவலானது. இன்று பல மாகாணங்களது ஆளுனர்கள் (governers), அரச-ஸ்தாபனங்களது தலைவர்கள், மேலும் பல விதமான சமுதாயப் பொறுப்பாளர்கள் அரச படையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், இராணுவமயப் படுத்தப்பட்டுள்ள இலங்கைச் சமுதாயங்களிடையே கட்சிகளது குண்டர் படைகளைத் தவிர, அரசியற் பலத்தைக் கொண்டதும் தன்னிச்சையில் கொலைகளைச் செய்யக் கூடியதும் இராணுவம்தான். இவற்றைவிட, இரத்தத்தால் தொடுத்த clanக்கும், இராணுவ-அமைப்பு விசுவாசத்தால் தொடுத்த clanக்கும் மூன்றாம் நாடுகளின் குடியானவர்-ஜனநாயகத்தில் என்னதான் வேற்றுமைகள் என்பது எமது கேள்வி.

நாம் தொடக்கத்திலே ஞாபகப்படுத்தியது போல அவர் இவர் என்றெல்லாம் அலையாது, ஒரு மாதிரி வடிவத்துளிருந்து இந்தச் circusதனைப் அவதானிப்பவர்க்கு அதன் முடிவுகள் என்வாகும் என்பது புதிருமல்ல, புதினமுமல்ல.

எம்மைப் பொறுத்தவரை, தமிழ் பேசுவோர்களதும் உழைக்கும் வர்க்கங்களுக்கும் இவ்விருவராலும் வேறுபட்ட பயன்கள் கிட்டும் என பெரிதுபடுத்திப் பார்ப்பது கானல்நீர் கதையாகும். தமிழ் பேசுவோரைப் பொறுத்தவரை ஜனதிபதி அரசோ, பாராளுமன்ற அரசோ, அரசியல் பலமற்ற அவர்களது நிலையை மாற்றப் போவதில்லை. எனவே, இந்தப் “பாரிய ஜனநாயக விவாதத்தில்” எமக்கும் கருத்துண்டு என்பதற்காக ஏதாவது பங்கு பெறலாம் என நினைப்பது பகற்கனவே.

ஆனால், புலிகளது சரித்திரத்தின் எச்ச சொச்சங்களுக்கு முடிச்சுகள் போடவேண்டிய கருமங்கள் உண்டென அவர்களுடன் அரசியற் காலம் கழித்தவர்கள் சிந்திக்கலாம்.

இன்று வாக்குரிமை அற்று, அன்று இலங்கை பிரஜா உரிமை பறிக்கப்பட்ட மலையகத்தவர் போல இலட்சக் கணக்கில் உள்ள தமிழர்களது பிரச்சனையும், பொதுப்பணி செய்யப் புறப்பட்டு போராளிகளாகி, இன்று அரச தடுப்பு முகாங்களில் அனாதரவாக மனோவியல் தாக்கங்களுடன் வாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பிரச்சனையும் தம்மால் உதவக்கூடியவை என இவர்கள் கருதலாம்.

எனவே, இவைபற்றிய dealகளை தலைவர்களெனக் கூறியபடி யார் செய்தாலும் வரவேற்கப்பட வேண்டும் என்ற வாதம் எமக்கு எட்டாமல் இல்லை. ஆனால், தடுப்பு முகாங்களிலிருந்து இதுவரை மக்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதாவது dealகளா, அல்லது வெளியாரின் தலையீடுகளா காரணம்? என்ற கேள்வியே பதில் சொல்கின்றது. காகமிருக்க விழும் பழத்தை நாம் பறித்துத் தந்தோம் என்று சொல்வதால் எதுவித பயனும் மக்களுக்கு இல்லை. ஆகவேதான் அர்த்தமற்ற பிரத்தியேக இரகசிய dealகள் பற்றி எப்போதுமே எமக்கு ஐயப்பாடே எழுகின்றன.

இதனைவிட, இவற்றினைத் தொடர்ந்து இனப்பிரச்சனைக்கும் தீர்வு பெற்றுத்தருவோம் என்ற dealகளைப் பற்றி யாராவது கதைப்பார்களேயாயின் அதற்கு வெளியார் தரும் தெம்பு இருப்பதாகவும், இல்லாவிடில் வெறும் பிதற்றல் என்றுமே நாம் கருத வேண்டும். இவற்றைவிட, வியாபார வர்த்தக வர்க்கத்தினர் அல்லது கட்சி நலம் தனியார் உயிர் நலம் என தனிப்பட்ட ரீதிகளில் ஏதாவது dealகள் போடுவதையே நாம் ஆச்சரியமின்றி எதிர்பார்க்க முடியும்.

தமிழர்களது வாக்குகள்

இந்தத் தேர்தலில் தமிழர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பது பலராலும் எழுப்பப்படும் கேள்வியே. எம்மைப் பொறுத்தவரை,

1.அவர்களில் பலர் வாக்குரிமையற்று, தடுப்பு முகாங்களுள் இருக்கும்போது வாக்களிப்பு என்பதே போலியான விடயம்.
2.அரசியல் பலத்தையும் அதை நிரப்ப உருவான இராணுவப் பலத்தையும் இழந்து நிற்கும் அவர்கள் வாக்குப் பலத்தால் எதையும் பெறலாம் என்று கருதுவதும் போலியான விடயம்.
3.இரு வேட்பாளர்களிடையே ஏதாவது வேறுபாடுகள் உள்ளன எனக் கருதுவது பகற் கனவான விடயம்.
4.அரசமைப்பையே மாற்றி அமைக்காது, அதன் உயர் பீடத்தின் வகையை மாற்றிடுவதால் தமிழருக்கோ, தமிழ் பேசும் சமுதாயங்களுக்கோ அல்லது ஒட்டு மொத்தமாக உழைக்கும் மக்களுக்கோ பயன் கிட்டும் என்று கூறுவது மக்கள் விரோதமான விடயம்.
5. தமிழரது வாக்குகளைப் பயன்படுத்தி பெரும்பான்மையோரது அரசாங்கத்தை நிர்ணையம் செய்ய முற்படுவது, இனப் பிரச்சனையின் தீர்வுக்கு எதிர்காலத்தில் குந்தகம் தரும் என்பதால், தவறான விடயம்.
6. தமிழரை அவர் அல்லது இவருக்கு வாக்களியுங்கள் என தலைமைத்துவத்தையே அற்று இருப்பவர்கள், வழிகாட்ட முனைவது மக்களது ஜனநாயகத் தன்மைக்கு குரோதமான விடயம்.

இவற்றின் அடிப்படையிலேயே, TELO தலைவர்களில் ஒருவரும் அண்மையில் சிறீலங்கா மீண்டவருமான திரு. சிவாஜிலிங்கத்தின் தேர்தற்களப் பிரவேசத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். “யாருமே துணிவில்லாத போது தமிழரது பிரச்சனைகளை நாம் பேசுகிறோம்” என்பது மனோவியல் ரீதியில் இதமானதாக சிலருக்கு இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாகும்? என்ற கேள்வியும் அவர்களுடன் கூடவே இருக்க வேண்டும்.

பிரதேச ஜனநாயகம் வேண்டிப் போராடும் நாம் மத்திய அரச அதிகாரப் போட்டியில் ஈடுபடுவது மூடத்தனம் என்பதிலும் பார்க்க, அதிலிருந்து நேரடிப் பலனை எதிர்பார்ப்பது போலியானது என்பதைத் தெரிந்து கொண்டே அதில் ஈடுபடுவது மாற்றாரது வேடிக்கைக்கும், சூட்சுமங்களுக்குமாகவே இருக்கும் எனச் சந்தேகப்பது தவிர்க்க முடியாதே போய்விடுகிறது.

தமது அரசியல் அபிலாசைகளுக்கு தடங்கலாக இருந்தமையாலேயே முதலில் மலையகத்தவரையும், பின்னர் தமிழ் பேசுவோரையும் சிங்களத் தேசியவாதிகளும், குறிப்பாக பேரினவாதிகளும் கவனிக்க வேண்டியதானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்கொத்லாந்து தேசத்தின் சுயநிர்ணைய உரிமையை கோரியபடி பிரித்தானியாவின் மத்திய அரசில் அவர்களது அதிகாரம் என்ன? என்றவாறான West Lothian வாதத்தை புரிந்தவர்களுக்கு நாம் கூறுவதின் நாசூக்கான கருத்துகள் புலனாகும்.

பெரும்பான்மைத்துவத்தை பாவித்து சிறுபான்மையினரது உடமைகளை, உரிமைகளை, மறுப்பதும் சிறுபான்மையினரின் குறைவான வாக்குகளால் பெரும்பான்மையினரின் அரசை நிர்ணயம் செய்வதும் ஜனநாயகத்திற்கு ஒவ்வாத செயல்களாகும். இதற்கு அதிகாரப் பரவலாக்கம் தரும் பிரதேச-ஜனநாயகமே பதிலன்றி பிரதேசவாதத்துடன் பொதுத் தேர்தலில்களில் தலையீடு செய்வது பொருத்தமானதல்ல.

எனவே தமிழ் பேசும் மக்கள் யாவரும், தலைமைத்துவம் என்பதை இழந்துவிட்ட கட்சிகளது அடிப்படைத் தீர்வுகளை நோக்கி அமையாத dealகளைப்பற்றிச் சிந்தியாது, தத்தமது நலன்களைக் கருதி சுயமாகவே தமது வாக்குகளை பிரயோகிப்பதா இல்லையா என்ற முடிவுகளுக்கு வர வேண்டும், அவர்களை வரவிட வேண்டும் என்பதே எமது ஒரேஒரு வேண்டுதல்.

அப்படியானால் சிவாஜிலிங்கத்தின் வேட்புமனு என்னாவது, தமிழ் பேசுவோரது உரிமைகள் பற்றி தவறான விடயமா?

சிறுபான்மையோரது உரிமைகளை முன்வைத்து பொதுத் தேர்தல்களில் போட்டிடுவது பற்றிய எமது விளக்கங்கள் சில மேலே தந்தோம், இங்கே சரி/பிழை என்பதல்ல எமது விவாதம்: விளைவுகள் என்ன என்பதே அவற்றை நிச்சயம் செய்பவை.

வெளியாரின் தலையீடுகள் இராது போகின், பொன்சேகாவோ மகிந்தாவோ தன்பாட்டிலேயே இனப்பிரச்சனைக்கு உடமைகளின் நீதியுடன் தீர்வுகளை வைக்கும் நிலைமைகளுள் இருக்கப்போவதில்லை. பேரினவாதிகளதும், தேசியவாதிகளதும் வர்க்க நோக்குக்காக அவர்கள் மனத்தால் விரும்பினாலும் நடத்தையில் அநுமதிக்கப் போவதில்லை.

அரசியற் பலமோ அதனைத் தரும் பொருளாதாரப் பலமோ இல்லாதமையாலேயே பிரதேசங்களில் ஆயுதக் கிளர்ச்சிகள் உருவாகுகின்றன. இன்று புலிகளது அழிப்புடன் அந்த இராணுவப்பலத்தை மட்டுமின்றி அவர்கள் உறுஞ்சிக் கைவசம் வைத்திருந்த தலைமைத்துவம், தன்நம்பிக்கை என பல பலங்களையும் தமிழ்மக்கள் இழந்து நிற்கிறார்கள். இவர்களை வழிநடத்திச் சென்ற தேசியவாதமோ இன்று நிலைகுலைந்து கிடக்கிறது.

இன்று அவர்களுக்கு மிக்க அவசியமான விடயங்கள்:
1.தனிமனிதர் குடும்பங்களது மீள் இணைப்பு,
2.நிலத்தில் இருப்பு,
3.வாழ்க்கைச் சுமூகம்,
4.அதற்கான பொருளாதார, பாதுகாப்பு காத்திரங்கள்,
5.மனோவியல், பொருளாதார, உயிர் இழப்புகள் குறித்த நஸ்டஈடுகள்,
6.இவற்றை உள்ளடக்கும் அரசில் நிலைப்பாடுகள் செயற் திட்டங்கள்,
என்பவையும், மேலாக
7.இவற்றைப் தரக்கூடிய ஒருமைப்பட்ட தலைமைத்துவமுமே.

ஒருமைப்பட்ட தலைமைத்துவம் என்றதும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்போ, ஒற்றுமையான அணியோ அல்ல. தமிழ் பேசும் மக்களது தலைவர்கள் என்பவரிடையே, குறைந்தபட்ச புரிந்துணர்வுணர்வினை ஏற்படுத்திக் கொள்வதையே தற்காலத்தில் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதலாவது செயற்திட்டமாகக் கருதுகிறோம். இதனை ஒரு அமைப்பு மற்றதன் மீது திணிப்பதாலோ, பலத்தால் தம்வசம் இழுக்கலாம் என்ற நினைப்பாலோ, துரோகி-தியாகிப் பட்டங்களை மற்றவர்க்கு தகுந்தவண்ணம் சாதிக்க முடியாது.

இன்று தேசியவாதிகளாக வெளிநாடுகளில் வாழ்பவர்களும், வடகிழக்கில் தேசியவாதிகளாக புலிகளடியில் மடிந்து கிடந்தவர்களும் தமிழரது தலைமைத்துவம் இல்லாத நிலையை அறியாதவர்கள் அல்லர். இவர்கள் ஒருவரை ஒருவர் தேடாதே கண்டு கொள்வதும் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் நியாயமானதே.

தமது தயவில் தமது பணத்தில் அரசியல் நடத்தும் தமிழ் அமைப்புகளுடன் இனப் பிரச்சனையின் தீர்வுக்கு ஒப்பந்தம் போடவேண்டிய அவசியமோ, அவர்களை தொடர்ந்தும் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தமோ சிறீலங்கா அரசுக்கு இல்லாத காலம் நெருங்கியபடி உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெளியாரது விருப்பும் அவ்வழியே என்பதும் முற்கூறக் கூடியது. எனவே, கைது செய்யப்பட்ட சரணடைந்த புலித் தலைவர்கள் உட்பட்ட அரசியற் தளம் ஒன்றினை அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின் ஆச்சரியமில்லை.

இவ்வாறு, அரசியல் வரம்புகளும் உறவுகளும் மீளாக்கத்திற்கு உள்ளான நிலையில், யாருமே தலைமைத்துவமும் தரும் பலங்கள் அற்று, வெளியாரின் தலையீட்டிலேயே தமிழரதும், தமிழ் பேசுவோரது எதிர்காலமே தங்கி உள்ள நிலையில், TELO அமைப்பினரே TNAனைப் பிளவுபடுத்தினார்கள், தமிழரது உடமைகளை தட்டில் வைத்து மகிந்தாவிற்கோ பொன்சேகாவிற்கோ கப்பமாக வழங்கினார்கள் என்ற போலியான வெற்றுப் பழியை தோளில் சுமந்திட வேண்டிய அவசியம் TELOவிற்கோ, ஏன் இரகசிய dealகள் போடும் வேறு எந்த அமைப்புகளுக்கோ ஏன் என்பது புரியவில்லை.

இராணுவத் தீர்வை நடத்தி முடித்த வெளியார் அரசுடன் தமிழ் பேசும் சமுதாயங்களுக்கும் உள்ள சர்ச்சையை தெரியாதவர்கள் அல்லர், இந்த ஜனாதிபதித் தேர்தலூடாக யாராவது மீணடும் சுட்டிக்காட்டுவர் என்று எதிர்பார்த்ததும் இல்லை. எனவே அதற்கான பொறுப்புகளையும் அவற்றின் சுமைகளையும் தலைமைத்துவம் ஒன்று உருவாகும்வரை அவர்களிடம் விட்டுவிடுவதே சமயோகிதம்.

எனவே, சிவாஜிலிங்கத்தின் தேர்தற் பிரவேசத்தை மீள் பரிசீலித்தால், அது அவசரக் குடுக்கைத் தனத்தால், தம்முடன் உள்ள மற்றைய அமைப்புகளுடன் கூட ஆலோசிக்காது, உட் போட்டிகளாலும் தவறான அரசியற் கணிப்புகளாலும் ஆலோசனைகளாலும் எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவு. எனவே, தகுந்த தருணத்தில் ஏதாவது அர்த்தமில்லா dealகளைச் சாட்டுச் சொல்லியபடி அவரது தேர்தல் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதே TELO சார்பிலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் சார்பிலும் செய்யக் கூடிய தகுந்த முடிவாகும்.

நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
28 மார்கழி. 2009

இரா சம்பந்தரின் அரசியல் ஆளுமைக்கு மற்றுமொரு நெருக்கடி. தமிழ் கொங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிக்க முடிவு!!!

gajendrakumar_ponnampalamதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக்கட்சியான தமிழ் கொங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பதாக முடிவெடுத்தள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுக் குழு யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 27ல் வெளியிட்டு இருந்தது. அக்கட்சியின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி அதனைத் தெரிவித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த பிரேரணையை ஏற்று அக்கட்சி இம்முடிவுக்கு வந்துள்ளது.

டிசம்பர் முற்பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தால் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவை எடுப்பதாகவும் அங்கு தெரிவித்து இருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் கட்சியினதும் முடிவு ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. எம்கெ சிவாஜிலிங்கம் வாக்குகளைப் போடுபவர்கள் தமக்கு வாக்களின்னாவிட்டாலும் பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத் பொன்சேகா பக்கம் சாய்கையில் தமிழ் கொங்கிரஸின் முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிளவு இரா சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. அத்துடன் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா சம்பந்தனின் திருகோணமலை மாவட்ட நகரசபை உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் துப்பாக்கி முனையில் இணைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் சந்தர்ப்பவாதத்தினாலும் இரா சம்பந்தனின் அரசியல் ஆளுமையின் பலவீனத்தாலும் பிளவுபடுகின்றது.

ஊடகங்களின் ஊகங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : பி எம் புன்னியாமீன்

Commissioner of Elections Dayananda Dissanayakeஇலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 6ஆவது ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆந் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும்கூட,  பிரதான வேட்பாளர்கள் இருவரே மக்கள் முன் சோபிக்கின்றனர். ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும்,  தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அடுத்தவர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா. இவர்கள் இருவரும் தவிர ஏனைய 20 வேட்பாளர்களும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 5%  வாக்குகளையாவது பெறுவார்களா என்பது சந்தேகத்திக்கிடமானதே.

இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களை பிரதானப்படுத்தியே தமது செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எந்தவொரு ஊடகமாவது ஏனைய 20 வேட்பாளர்களுள் ஒருவருக்காவது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது பிரதான வேட்பாளர்களை மையப்படுத்திய முக்கியத்துவமாகவே அமைந்திருக்கும். மறுபுறமாக இத்தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுள் சிலர் பிரதான வேட்பாளர்களுக்கு சார்பாளர்களாக போட்டியிடுவதும் இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும். எனவேதான் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேர்தல் ஆணையாளரின் உரையில் “ஒவ்வொரு வேட்பாளர்களும் தமக்காகவே பிரசாரம் செய்ய வேண்டு”மென்பதை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும்,  இந்த வேட்பாளர்கள் சிலர் மறைமுகமாக பிரதான வேட்பாளர்களுக்கு சார்பான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியமுடிகின்றது.

இன்று இலங்கையில் அச்சு ஊடகங்களை எடுத்து நோக்கும்போது 100க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நாளிதழ்களாகவும்,  வார இதழ்களாகவும் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமடைந்துள்ளன. தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சிங்கள மொழியில் இதன் தாக்கம் மிகமிக அதிகம். குறிப்பாக 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் சிங்கள ஊடகங்களின் பங்களிப்பு விசாலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருந்தன. இலங்கையில் சிங்கள மொழி மூலமாக லங்காதீப, திவயின,  லக்பிம,  தினமின போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் ராவய,  இருதின,  சிலுமின, சத்தின,  மவ்பிம,  ரிவிர, லங்கா போன்ற வாரப் பத்திரிகைகளும் தமிழ்மொழி மூலமாக தினகரன்,  தினக்குரல், சுடரொளி, வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களும்,  நவமணி போன்ற வாரப் பத்திரிகைகளும் ஆங்கில மொழி மூலம் டெய்லி நிவுஸ்,  த. ஐலன்ட், டெயிலி மிரர் போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் சன்டே ஒப்ஸேவர், சன்டே டைம்ஸ், சன்டே லீடர்  போன்ற வாரப் பத்திரிகைகளும் காணப்படுகின்றன. இந்த பத்திரிகைகளில் அனேகமானவை தாம் நடுநிலைமைப் போக்குடன் ஜனாதிபதி தேர்தலில் செயல்படுகின்றோம் என்று கூறிக் கொண்டாலும்கூட,  உண்மையான நடுநிலைமைப் போக்கினை அவதானிக்க முடிகின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளில் சில பத்திரிகைகள் அரசாங்கப் பத்திரிகைகளாகும். பெரும்பாலான பத்திரிகைகள் தனியாருக்கு சொந்தமானவையாகும்.   ஏதோவொரு வகையில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்~வுக்கு அல்லது சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு சேர்க்கும் பத்திரிகைகளாகவே இவைகள் காணப்படுகின்றன. அதேபோல வானொலியை எடுத்துக் கொண்டாலும் இன்று 70க்கு மேற்பட்ட வானொலி சேவைகள் மும்மொழியிலும் உள்ளன. இவைகள் செய்திகளை ஒலிபரப்புபவை. 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றன. இவைகளிலும் சில அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளாகவும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சிகளாகவும் இருக்கின்றன.

இவ்விடத்தில் தனியார் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அவை தத்தமது உரிமையாளர்களின் கொள்கைகளுக்கிணங்க நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக்கட்சியினால் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நேரடியாக நடத்தப்பட்டு வருபவை. அல்லது பிரதான கட்சியான முக்கியஸ்தர்களினால் மறைமுகமாக வழிநடத்தப்படுபவை. எனவே எவ்வளவு தான் நடுநிலைமைப் போக்கு எனக் காட்டினாலும்கூட அவற்றின் சார்பு நிலை ஏதோவொரு பக்கம் சரிந்திருப்பதை பொதுப்படையாகக் காணமுடிகின்றது. எனவே அரசாங்க ஊடகங்களில் மாத்திரமல்லாமல் தனியார் ஊடகங்களிலும் பக்க சார்பு நிலையிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்குமிடத்து அரசாங்க ஊடகங்களைவிட தனியார் ஊடகங்களில் மக்கள் மயமாக்கல் மிகைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஊடகங்கள் மக்கள் ஈர்க்கத்தக்க வகையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கியிருப்பதினால் இத்தகைய பிரபல்யம் தவிர்க்க முடியாது ஆகிவிடுகின்றது. மேலும் தனியார் ஊடகங்கள் சர்வதேச ஊடகப் பின்னலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்திருப்பதினால் சர்வதேச சக்திகளுக்கும் உட்பட்டேவிடுகின்றன.

இத்தகைய பின்னணியை வைத்துக் கொண்டே இலங்கை ஊடகங்களை நோக்க வேண்டியுள்ளது.

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ஆழமாக ஆராயுமிடத்தும்,  பல ஆய்வு அறிக்கைகளிலிருந்தும் பின்வரும் முடிவு வெளிப்படுகின்றது. அதாவது,  இலங்கையிலுள்ள வாக்காளர்களுள் சுமார் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் யார் போட்டியிட்டாலும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள். அதேபோல 20 தொடக்கம் 23 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள். நிச்சயமாக இந்த வீதத்தினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமே செல்லக்கூடியவை. இதனைக் கிராமிய மட்டத்தில் பின்வருமாறு எளிமையாகச் சொல்வார்கள் “என் உடலில் ஓடுவது பச்சை இரத்தம்,  என் உடலில் ஓடுவது நீல இரத்தம்.” என்று. இந்த அளவிற்கு அந்த நிலை வலுவடைந்துள்ளது.

இவ்வாறே கட்சியுடன் ஐக்கியமானவர்களின் வாக்கு எத்தகைய நிலையிலும் அக்கட்சியையே சார்ந்திருக்கும். இதில் எத்தகைய மாற்றங்களும் ஏற்பட இடமில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்ப்பதோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதோ சுமார் 40 தொடக்கம் 50 வரையிலான இடைப்பட்ட வாக்காளர்களே. பொதுவாக இவை மிதக்கும் வாக்குகள் எனக் கொள்ளப்படுகின்றன. ஒரு பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய அரசாங்கத்தின் கொள்கைகளிலோ அன்றேல் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனாதிபதியின் கொள்கைகளையோ விளங்கி வாக்களிக்கக்கூடிய இந்த மிதக்கும் வாக்காளர்கள் உள்ளனர். எனவே,  போட்டியிடும் பிரதானக் கட்சிகள் போட்டியின் பிரதான வேட்பாளர்களின் கொள்கையாக்கங்களை விளக்க வேண்டியர்களாக இத்தகைய மிதக்கும் வாக்கினரே உள்ளனர். எனவே இவர்கள் தான் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி.

தேர்தல் காலத்தில் ஊடகங்களின் பணியென்றுக் கூறும்போது இந்த மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று ‘வாக்காளரின் மூளையை மழுங்கடிக்கும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக்கூடாது” என  தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்ததை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

அந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் “சட்டத்தின் பிரகாரம் அரச ஊடகங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அதிகாரங்களே தனக்கிருப்பதாகவும் இன்று பெருமளவில் தனியார் ஊடகங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சில ஊடகங்கள் வாக்காளர்களின் அறிவுத் திறனை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்தார். அரச ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் தான் சட்டத்தின் பிரகாரம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட பெயர் குறிப்பிடாமல் பொதுப்படையான நிலையில் இலங்கையில் அச்சு,  இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையை பிரதான வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கரிபூசிக்கொள்ளும் நிகழ்வுகளை மிகைப்படுத்தி பிரசுரிப்பதையும்,  ஒலி / ஒளிபரப்புவதையுமே காணமுடிகின்றது. ஆனால், ஒருவருக்கொருவர் குறைகூறும் செய்திகளை மக்கள் கவரும் வகையில் வெளியிட்டு வாசகர்களை கவர விளையும் அதேநேரத்தில் பிரதான வேட்பாளர்களை கொள்கையாக்கங்கள் குறித்து இவைகள் முக்கியத்துவப்படுத்த மறந்துவிடுகின்றன.

பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தான் பதவிக்கு வரும் பட்சத்தில் தனது கொள்கையாக மஹிந்த சிந்தனை 02 அமைந்திருக்கும் என்றும் மஹிந்த சிந்தனை 02 தற்போதைய செயற்பாட்டின் தொடர்ச்சியாக அமையும் என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால்,  இதுவரை தாம் பதவிக்கு வரும் ஆறாண்டுகளைக் கொண்ட காலத்தில் தனது பொருளாதாரத் திட்டம் என்ன? தற்போதைய இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகள் மேற்கொள்ளப்படப் போகின்றன? என்ற விளக்கங்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தோன்றவில்லை.

அதேபோல பிரதான எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக சரத்பொன்சேக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எத்தகைய உறுதிப்பாடுகளையும் வெளிப்படுத்தியதாகக் காணமுடியவில்லை. இது தொடர்பாக அவரிடம் நிலையான கொள்கைகள் இருப்பதாக தோன்றவுமில்லை. தான் பதவிக்கு வருமிடத்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக 10 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றினை 2009 டிசம்பர் 18ஆம் திகதி கண்டியில் வைத்து அவர் வெளியிட்டார். ஆனால்,  ஐக்கியத் தேசியக் கட்சியோ அன்றேல் சரத்பொன்சேக்காவை வேட்பாளராக அமர்த்தியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியோ சரத்பொன்சேக்காவின் ஆறாண்டு பதவிக்காலத்துக்கான நிலையான திட்டமொன்றை வெளிப்படுத்த தவறி வருகின்றது. தான் பதவிக்கு வருமிடத்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இல்லாமலாக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புச் சொல்லும் மந்திரிசபை ஆட்சிமுறை மீண்டும் அமைக்கப்படும் என்றும் இதில் பிரதம மந்திரி நிறைவேற்று அதிகாரமிக்கவராக காணப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாம் கேட்கும் முக்கியமான வாக்குறுதி தான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவோம் என்பதாகும். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதிகாரத்தில் வரக்கூடிய எவரும் தனது அதிகாரத்தை இலகுவாக விட்டுக் கொடுத்ததற்கான வரலாறு உலகளாவிய ரீதியிலே உதாரணப்படுத்துவது கடினம். இத்தகைய நிலையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு அதிகாரம் கிடைக்குமிடத்து அவ்வதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கோருவதைப் போல இலகுவில் விட்டுக் கொடுத்துவிடுவாரா எனும் கேள்வியும் எழுகின்றது. தற்போதைய அரசியல் நிலைகளின் பிரகாரம் ஒரு பிரதான கட்சியற்ற பொன்சேகாவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எவ்வாறு பெற முடியும் என்பது மிதக்கும் வாக்காளர்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே,  இலங்கையில் காணப்படக்கூடிய அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியான மிதக்கும் வாக்காளர்களின் மனத்தெளிவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்தால் மாத்திரமே ஊடக தர்மம் நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மேலே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஐக்கியத் தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் நிலையான வாக்காளர்களை வைத்து ஊடகங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமிடத்து அதனால் பலன் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால்ää இரண்டு பிரதான வேட்பாளர்களையும் மையப்படுத்தி நடைபெறும் பொதுக்கூட்டங்கள் கட்சியின் நிலையான ஆதரவாளர்களைக் கொண்டே நிரம்புகின்றன.

மிதக்கும் வாக்காளரின் நிலை தேர்தல் நடைபெறும் வரை வெளிப்பட மாட்டாது. மிதக்கும் வாக்காளர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவுள்ளோர். எனவே, படிப்பறிவோருக்கும் விளக்கமளிக்கக்கூடிய விதத்தில் இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பு இடம்பெறுதல் அவசியமானதாகும். இலங்கைத் தேர்தல்களில் ஊடகங்களின் பங்களிப்பு என்று கூறும்போது நிலையான கட்சி ஆதரவாளர்களின் காட்சிப்படுத்தலைவிட மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பே தீர்மான சக்தியாக அமையும். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள இத்தருணத்தில் பிரதம வேட்பாளர்கள் தமது நிலையான திட்டத்தை தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும்ää யதார்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இந்த தன்மையை 2010 ஜனவரி 26ஆந் திகதி தேர்தல் முடிவினை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். 

 ஊடகங்கள் பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகக் கொள்ளலாம். கருத்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம்,  கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவிக்கவும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. எனவே ஊடகமானது சுதந்திரமாகவும் நடு நிலைமையுடனும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரத்தைக் குறிக்கும். சட்டமன்றம்,  நிர்வாகம்,  நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திர ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அதே நேரம் நடு நிலைமை எனும் போது பக்க சார்பற்ற பொது நிலையை பொருள் படுத்துகின்றது.

ஒரு சம்பவம் அல்லது செய்தியை சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அல்லது சம்பவம் அல்லது செய்தியை சான்றுகளுடன் உறுதிப்படுத்திக்கொண்டு அதை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதே ஊடகத் தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் அனைத்துத் தகவல்களையும் செய்தித்தாள்,  வானொலி,  தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்கின்றனர். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரப்பூர்வமாக அறியத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொறுப்பை சரிவரச் செய்வதே ஊடகத் தர்மமாகும். அவ்வாறான நிலை காணப்படின் மாத்திரமே ஜனநாயக பண்பினை வெளிப்படுத்துவதாக அமையும்.

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அச்சு ஊடகங்கள் வளர்ச்சியடையலாயிற்று. இக்காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவிப்போரும்,  அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களை அறிந்து கொள்ளவிளைவோரும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நிலவிய வாசிப்பறிவின்மை காரணமாக அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் நிலை மிகமிக குறுகிய வட்டத்துக்குள் மாத்திரமே முடக்கப்பட்டிருந்தது.

20ஆம் நூற்றாண்டில் ஊடகத்துறையின் வளர்ச்சியானது ஓர் உயரிய நிலையை அடைகின்றது. அச்சு ஊடகத்துடன் வானொலியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகமும் கருத்துப் பரிமாற்றத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்கட்டத்தில் மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாமல் தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் வானொலிப் பாவனை அதிகரித்தது. இங்கெல்லாம் ஆரம்பத்தில் அரசாங்கத்தினாலேயே வானொலி ஒலிபரப்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், கட்டுப்படுத்தவும்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை “இலங்கை வானொலி” வானொலித் துறையில் முன்னோடியாக திகழ்கின்றது.

வானொலியின் பரவலான அறிமுகத்துடன் தகவல்களை “ஒலி” வடிவில் மக்களால் கேட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவானதினால் வானொலியைக் கேட்பதற்கு வாசிப்பறிவற்றநிலை தடையாக அமையவில்லை. தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது பொழுதுபோக்கு அம்சமாக இசையினையும் இது தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதினால் படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்பு “இலங்கையில் வானொலி” பிரதான ஊடகமாக மாறியதுடன், பாமர மக்களிடையேயும் பாவனைப்படுத்தப்படும் நிலை உருவெடுத்தது.

1926ஆம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி என்பது ஒரு கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி,  ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது. பின்னர் இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும்,  கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தருகின்றன. இது கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆனால்,  தொலைக்காட்சிப் பாவனை 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பரவலாக்கம் அடையவில்லை. இதன் தாக்கம் வானொலியை விட பயன்மிக்கதாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் பாவனை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிகரிக்கலாயிற்று.

மூன்றாம் உலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகம் 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களிலே ஏற்படுத்தப்பட்டன. அநேகமான மூன்றாம் உலக நாடுகளில் தொலைக் காட்சியின் அறிமுகத்தை அந்நாடுகளின் அரசாங்கங்களே ஏற்படுத்தின. இலங்கையில் 1978ஆம் ஆண்டு சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவை முதல் தொலைக்காட்சிச் சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூபவாஹினி தேசிய ரீதியில் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் காணப்படுகின்றன. இவைகளுள் அநேகமானவை தனியாருக்குச் சொந்தமானவை. தொலைக்காட்சியிலும் தகவல்கள், செய்திகளை அறிவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் மிகைத்திருப்பதினால் வானொலிப் பாவனையைவிட 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொலைக்காட்சிப் பாவனை கூடிய செல்வாக்கினை செலுத்த ஆரம்பித்தது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுடன் இன்னும் பலவிதமான தொடர்பாடல் ஊடகங்கள் மக்கள் முன் அறிமுகமாகின. குறிப்பாக மேற்குறிப்பிடப்பட்ட சேவைகள் பல வடிவங்களில் நவீனத்துவப்படுத்தப்பட்டதுடன்,  இணையத்தின் அறிமுகத்துடன் இணையத்தளங்களும் ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மாறலாயிற்று. இந்த இணைய ஊடகங்கள் 21ஆம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தம் நிறைவடையும் இக்காலகட்டத்தில் மேற்குலக நாடுகளில் வளர்ச்சி கண்ட அளவிற்கு மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சி காணாவிடினும்கூட தற்போதைய நிலையில் அவைகளும் வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து கொண்டே வருகின்றன.

எனவே, ஆரம்ப காலகட்டங்களை விட மிலேனியத்தில் வாழும் எமக்கு ஊடகங்களின் தாக்கம் பல வழிகளிலும் மிகைத்ததாகவே உள்ளன. இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் மாத்திமல்லாமல் வளர்முக நாடுகளிலும்கூட ஊடகங்கள் பாரிய தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மறுப்பதற்கு இயலாது. எனவேதான் ஜனநாயக விழுமியங்களை மக்கள் முன் வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு பிரதான இடத்தைப் பெறுகின்றன எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை,  வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து ஒன்றில் அவை அரசாங்க ஊடகமாக இருப்பின் அதிகார வர்க்கத்தின் தாக்கங்கள் காணப்படலாம். அன்றேல் தனியார் ஊடகமாக இருப்பின் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான உரிமையாளர் அல்லது அந்த ஊடகத்துக்கு நிதியுதவியை வழங்கும் தனிப்பட்டவர் அல்லது குழுவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கலாம். மறுபுறமாக தனியார் ஊடகங்கள் வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதனால் செய்திகளையோ,  தகவல்களையோ தான் முந்தி ஒலி / ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் அவசரத்தன்மையுடன் ஒலி / ஒளிபரப்புவதுடன் சிலநேரங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு விடுகின்றன. இத்தகைய நிலைகளினால் ஊடக தர்மம் செயலிழந்து வருவதை பல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மேற்குல நாடுகளின் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அந்த ஊடகங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கருத்துக்களை திணிப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகின்றன. அதுமாத்திரமல்ல மூன்றாம் உலக நாடுகளிலும் முதலாளித்துவம் சார்ந்த தனது மேலைத்தேய பண்புகளை நியாயப்படுத்தி அவற்றை ஏதோ ஒரு வகையில் திணிக்க உடந்தையாக இருந்து கொண்டிருக்கின்றன. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் அமெரிக்கவாதத்தின் ஏகாதிபத்தியத்தை உலகில் நிலைநிறுத்தி உலகில் உயர்ந்த நிர்வாகமும், சட்டவாக்கமும்,  நீதித்துறையும் அமெரிக்காவிடமே உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சர்வதேச ஊடகங்கள் முனைகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகத்தை உள்ளங் கைக்குள் சுருக்கிவிட்ட இந்த சக்திகளால் இவற்றை இலகுவாக கையாள முடிகின்றன.

இதே பின்னணியில் தான் 3ஆம் உலக ஊடகங்களும் இன்று மாறிவிட்டன. குறிப்பாக 3ஆம் உலக நாடுகளின் ஊடகங்களும் அதிகார வர்க்கத்தின் முகவர்களாக அன்றேல் அதிகாரத்துக்காகப் போராடுபவர்களின் முகவர்களாக மாறிவிட்டன. இதனால் ஜனநாயகம் எனும் போது அதிகார வர்த்தக்திற்குரிய ஒரு முகப்பூச்சாகவே உள்ளதே அன்றி உண்மை நிலையினை பிரதிபலிப்பதாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை.

புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்

Sethuruban with SLFP senior member Rajeeva Wijeyasingaஎஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்  பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.

கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.

1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.

அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.

நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.

சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.

எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.

மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.

இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.

Sethuruban with TELO Selvam and EPRLF Sureshபுலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?

2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.

Tsunami Donation_to_Veerakesari_Journalistபாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.

வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.

Sethuruban with Rathika Kumarasamy3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?

Sethuruban with British Parlimentarians and Councilor4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.

அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.

ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.

5. ”Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?” என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.

Sethuruban with UNP politician Jeyalath Jeyawardana6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.

7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.

அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.

கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை – புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.

சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்

 ._._._._._.

விமர்சனக் கட்டுரைகள் சொந்தப் பெயரில் எழுதுவதற்கே தேசம்நெற் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இருப்பினும் இக்கட்டுரையை எழுதியுள்ள எஸ் சிவரூபன் என்பது புனைப்பெயர். கட்டுரையாளரது விமர்சனம் தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவர் தொடர்பாக உள்ளதால் இவ்விமர்சனக் கட்டுரையை தேசம்நெற்றின் விதிமுறைகளுக்கு விலக்காக புனைபெயரிலேயே பிரசுரிக்கின்றோம். கட்டுரையின் இறுதியில் த ஜெயபாலனின் விளக்கக் குறிப்பும் இணைக்கப்பட்டு உள்ளது.

தேசம்நெற்

._._._._._.

டிசம்பர் 17 ம் திகதி இலண்டன் நேரத்துக்கு தேசம்நெற்றில் முன்னைநாள் நிதர்சனம் டொட் கொம் என்ற புலிகளின் இணையத்தள நிர்வாகி ஆகிய சேது என அழைக்கப்படும் நடராசா சேதுரூபன் மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொழும்புக்குச் செல்வதாக செய்திக்கட்டுரையை எழுதிய தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அக்கட்டுரையில் (http://thesamnet.co.uk/?p=18265)   பின்வருமாறு எழுதுகிறார்.

“நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.”

நடராசா சேதுரூபன் 1978 ம் ஆண்டு இலங்கையில்  பிறந்தவர். துன்னாலையைச் சேர்ந்தவர். இப்பொதைய வயது 31 மட்டுமே. மேற்கூறிய விடயங்களை நாங்கள் சேதுவுடன் ஹாட்லிக்கல்லூரியில் படித்தவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்திலும் சேதுவின் தகவலை (http://www.hartleycollege.com/cgi-bin/hweb/form/more/all_info.cgi?SERIAL=2136) பார்க்கலாம். அன்ரன் பாலசிங்கம் அடேலை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டது 1978 இல். (ஆதாரம் அடேல் பாலசிங்கத்தின் நூல் – த வில் ரு பிறீடொம்) 1978 ம் ஆண்டுக்குமுதலே முதல் மனைவி நோய் காரணமாக மரணமடைந்துவிட்டார். அதாவது முதல் மனைவி சேது பிறப்பதற்கு முதலே இறந்துவிட்டார். பிறகெப்படி சேது முதல் மனைவியுடன் பணியாற்றியிருக்க முடியும்? இது மிகப்பெரிய பொய். தகவல்களின் நம்பகத்தன்மை பற்றியும் இலங்கையில் அவர் ஊடகவியலாளராக பணியாற்றியதையும் பின்னூட்டத்தில் வாசகர்கள் கேள்வி எழுப்பியபின்னரும் ஜெயபாலன் தானும் பின்னூட்டத்தில் வந்து பின்வருமாறு எழுதுகிறார்.

“சேது இலங்கையில் வீரகேசரியின் தினசரிப் பதிப்பிலும் குறிப்பாக ரிபிசி யில் இருந்து பிரியும்வரை ரிபிசி யிலும் பணியாற்றியவர். சேதுவுடன் சமகாலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்னமும் இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளனர். அவர்கள் அதனை உறுதிப்படுத்தியும் உள்ளனர். சேது வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அன்ரன் பாலசிங்த்தின் முதல் மனைவியும் அங்கு பணிபுரிந்திருந்தார். அந்த உறவும் அன்ரன் பாலசிங்கத்தின் ஒரே ஊரவன் என்ற பிடிப்பும் ஒஸ்லோவில் சேதுவின் ரையை பாலா அண்ணை சரி செய்துவிடத் தூண்டியது.”

பத்தாண்டுகளுக்கு மேலாக தரமான பத்திரிகைத்துறையில் இருப்பவர் ஜெயபாலன். புலிகள் மாற்று இயக்கங்கள் இலங்கை அரசு எல்லாவற்றினதும் அரசியலை நன்கறிந்தவர். அப்படியானவர் புலிகளின் ஏஜண்டாக இருந்த தன்னைவிட ஏறத்தாள எட்டு வயதுகள் குறைந்த ஒரு மூன்றாந்தரமான கோமாளியான போலிப் பத்திரிகையாளனிடம் இலகுவாக ஏமாந்து போனது எவ்வாறு?
பாலசிங்கத்தின் வயது என்ன? சேதுவின் வயது என்ன.? முதல் மனைவியுடன தான் வேலைசெய்தேன் என்று சேது ஜெயபாலனிடம் சொன்ன புழுகை உறுதிப்படுத்தாமலும் தகவலின் மூலத்தை வாசகர்களிடம் சொல்லாமலும் CNN fox news மற்றும் நிதர்சனம் டொட் கொம் பாணியில் ஜெயபாலன் ஒப்புவிப்பதன் மர்மம் என்ன? என்ன சுலபமாக ஊத்தை சேது ஜெயபாலனின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டுப்போகிறான்.

பத்திரிகையாளர்கள் தவறு செய்யாதவர்கள் அல்ல. நல்ல பத்திரிகையாளன் தான் தவறு செய்ததும் தவறைத்திருத்தி மன்னிப்புக் கேட்பான். இங்கோ ஜெயபாலன் தன்னுடைய தவறைத் தெரிந்த பின்னரும் தன்னுடைய மிக மோசமான தகவல் மூலத்தை(சேது) யும் தன்னுடைய மிகப்பலவீனமான செய்திக் கட்டுரையாக்கத்தையும் மறைப்பதற்காக பிடிவாதக்காரனாக இருப்பதைப் போலுள்ளது.

இலங்கையின் முக்கிய பத்திரிகையாளர்களாகிய இக்பால் அத்தாஸ் க்கும் டீ.பீ.எஸ். ஜெயராஜ் க்குமிடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இக்பால் அத்தாஸ் வேணுமென்றே பிழையான தகவலை எழுதுவதில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அவர் அடுத்தவாரத்தில் தன்னுடைய தகவல் தவறை சுட்டிக்காட்டி திருத்துவார். டீ.பீ.எஸ். ஜெயராஜ் வேண்டுமென்றும் தவறுதலாகவும் பல தகவல் மற்றும் வாதப்பிழைகளைச் செய்வார். அவர் தவறு சுட்டிக்காட்டப்பட்டாலும் அதனை சரி செய்துகொள்ளமாட்டார். இதன் காரணமாகவே அத்தாஸ் சர்வதேச ரீதியிலும் மதிப்புக்குரிய பத்திரிகையாளராக இருக்கிறார்.

சேதுரூபனைப் பற்றிய ஜெயபாலனின் கட்டுரையானது ஜெயபாலன் என்ற பத்திரிகையாளனின் நம்பகத்தன்மை சுயாதீனம் மற்றும் பத்திரிகைசார் அறங்கள் சம்பந்தமான மிக வலுவான கேள்விகளை எழுப்புகிறது.

என்ன காரணங்களுக்காக நடராசா சேதுரூபன் இலண்டனைவிட்டு வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி வந்தது? பன்னர் ஒரு ஆயசசயைபந Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்? இத்தகைய முக்கியமான விடயங்கள் ஜெயபாலனின் கட்டுரையில் வேணுமென்றே தவிர்க்கப்பட்டு விட்டன.

நிதர்சனம் டொட் கொம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் மிரட்டிப்பணிய வைப்பதற்காகவும் விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்படப் போகிறவர்களின் “குற்றப் பத்திரிகையை” முன்கூட்டியே அறிவிக்கவும் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. இதனை நிர்வகித்தவர் சேது என்பதோடு சேதுவுக்கும் பொட்டம்மானுக்கும் நேரடித்தொடர்புகள் இருந்தது. அல்கைடா சம்பந்தப்பட்டு ஒரு இணையத்தை சேது நடாத்தி வந்திருந்தாரானால் இன்னேரம் அவர் சிறைக்குள்தான் இருப்பார். சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடந்தையாக இருந்தவர். மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரை கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே கொலைத்தண்டனை அறிக்கை நிதர்சனத்தில் வந்தது.

இப்படிப்பட்ட சேதுவையும் ஜெயபாலன் கூறுகின்ற “ஜனநாயகவாதிகள்” மற்றும் ரயாகரன் ஆகியோரையும் ஜெயபாலன் ஒரே தளத்தில் வைத்து விமர்சிப்பது ஏளனத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. ரயாகரனின் கட்டுரை மொழி மட்டுமே கண்டனத்துக்குரியது என்றால் சேதுவின் இணையம் Psychological warfare செய்ததோடு நிஜத்தில் பல கொலைகளுக்கும் உடந்தைபோனது.

சேதுவிற்கு தமிழில் ஒழுங்காக எழுத வாசிக்கத் தெரியுமா என்பதே கேள்விக்குரியது. நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதக்கூடிய பகுப்பாய்வுத்திறனுள்ள ஜெயபாலன் சென்ற ஆண்டிலிருந்து குழு அரசியலின் இயங்கியல் காரணமாக தன்னுடைய நடுநிலைத்தன்மையை விரைவாக இழந்து வருகிறாரோ என்ற ஐயம் எழுகிறது. நிர்மலா ராஜசிங்கம் இராகவன் முதலியோர் மீது தனிப்பட்ட கவனமெடுத்து அவர்கள் மீது நடுநிலமையற்ற புலி அடிவருடிகளான தமிழ்நதி போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளை பிரசுரித்ததும் மீள்பிரசுரித்ததும் ஆனது குழு அரசியலுக்குப் பலியாகியமையாலா? மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளித்து அவை பிரசுரிக்கப்பட வேண்டியவை என்பது நியாயமானதுதான். ஆனால் நிர்மலா ராகவன் போன்ற சிலருடன் சச்சரவு ஏற்பட்ட பின்னர் மட்டும் அச்சிலர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி குறுகிய காலத்துக்குள் அவர்களைப்பற்றி வெளிவந்த “மாற்றுக்கருத்துக்” கட்டுரைகளை எழுதுவதற்கும் மீள்பிரசுரிப்பதற்கும் பின்னால் ஒரு குழு அரசியல் இருப்பதற்கான சாத்தியம் நிறையவுள்ளது.  இப்போது ஜெயபாலன் ஊத்தை சேதுவை மிக மென்போக்கோடு அணுகியம் தற்பாதுகாக்கிற அளவுக்கு அரவணைத்தும் ஓரளவுக்கு நியாயப்படுத்தியும் செல்வதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஜெயபாலனின் அளவுகோல்களில் இரட்டைத்தன்மை மேலோங்கிவருகிறதா? சேதுரூபனுடையதோடு ஒப்பிடுகிறபோது நிர்மலாவினதும் ராகவனினதும் நேர்மை எவ்வளவோ மேலானது. ஆனால் நிர்மலா முதலியாரையும் அவர்தம் ஜனநாயக இயக்க காரரையும் விமர்சிக்கிறபோது ஜெயபாலன் மிகக்கடுமையான அளவுகோல்களையும் கடுமையான மொழியையும் பயன்படுத்துகிறார். ஊத்தை சேது புலிகள் அழிந்த இப்போது மிகப்பரிதாபகரமாக வேண்டுகிற பிரபல்யத்தையும் ஏன் நம்பகத்தன்மையையும் கூட தன்னை அழித்தும் ஊத்தை சேதுவுக்குத் தருகிறார் ஜெயபாலன்.

குறித்த கட்டுரையில் ஜெயபாலன் தனது பெயரில் பின்வரும் பின்னூட்டமூடாக சேதுவை நியாயப்படுத்த முயல்கிறார்.

“படித்தவன் எல்லாம் பண்பாணவன் பண்பாணவன் எல்லாம் படித்தவன் என்ற இந்தச் சிந்தகனயே சேதுவினை ஒரு ஊடகவியலாளனாக பொறுப்பான தொழில் செய்பவனாக பார்க்க முடியாமல் தடுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சேது ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை.

ஆனால் இங்கு பின்னூட்டங்கள் சொல்லும் ஊடக நேர்மையை எப்படி மதிப்பிடுவது. ஜனநாயம் மார்க்ஸியம் புரட்சி பேசுகின்ற ஊடகங்களுக்கும் சேதுவின் அன்றைய எழுத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்சேர்க்கிள் இணையத்தளத்தின் இத்தொடுப்பில் உள்ள கருத்துக்களை ஒரு தடவை பார்க்கவும். (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6223:2009-09-11-10-49-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50

சேது பின்னணியில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் நிதர்சனம் இணையத்தில் அல்லது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணையங்களில் எழுதப்பட்டவைக்கும் தமிழ் சேர்க்கிளில் உள்ள கருத்துக்கும் என்ன வித்தியாசம். தமிழ்சேர்க்கிளில் மே 18க்குப் பின் அதன் மொழியில் ஓரளவு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன் இரயாகரனனின் கட்டுரைக்கும் நிதர்சனம் கட்டுரைகளுக்கும் என்ன வேறுபாடு? நிதர்சனம் கட்டுரையில் மார்க்சியம் சோசலிசம் லெனின் மாஓ போன்ற சொற்கள் காணப்படமாட்டாது. மற்றுப்படி இரு இணையங்களிலும் தமிழில் உள்ள அத்தனை வன்மம் கொண்ட சொற்களையும் பார்க்கலாம்.

லண்டனில் பத்திரிகை நடத்தியவர் தலைமறைவாக இருந்து நடத்திய பின்னூட்டம்.கொம் இணையத்தளம் அதில் கருத்துக்கள் மொட்டைக் கடிதங்கள் எழுதிய ஜனநாயகவாதிகள், மாவோயிஸ்ட்டுக்கள் இவர்களையெல்லாம் எப்படி மதிப்பிடுவது. இவர்கள் எழுதியதற்கும் சேது எழுதியதற்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை.

சேது முக்காடு போடாமல் அவற்றைச் செய்ய மற்றையவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு அதனைச் செய்கிறார்கள். இந்த ஊத்தைக் கனவான்கள் ஒரு இயக்கத்திற்கு அல்லது ஒருசாராருக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. இவர்கள் ஜனநாயகம் மார்க்ஸியம் படித்தவன் பொறுப்பான தொழில் செய்பவன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சமூகத்தை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். சேது போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்.” – த ஜெயபாலன்.

ஜெயபாலனின் கட்டுரைக்கூடாக மட்டும் சேது தனக்கு பிரபலம் தேடாமல் பின்னூட்டங்கள் ஊடாகவும் தேடுகிறார். இதனையும் ஜெயபாலன் அனுமதித்துள்ளார். 

சேது என்கிற சந்தர்ப்பவாத பச்சோந்தியின் இப்போதைய strategy பின்வருமாறு. நிதர்சனம் டொட் கொம் இயக்குனராக இருந்தபோது தனக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்குமிருந்த தொடர்பை பகீரதப்பிரயத்தனம் செய்து மறைப்பது. தனக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்குமிடையிலேயே அதிலும் குறிப்பாக அன்ரன் பாலசிங்கத்துக்குமிடையிலேயே தொடர்பு இருந்ததான புதிய மாயப்புனைவை ஊடகங்கள் ஊடாக கட்டமைப்பது. புலிகள் அழிந்த இக்காலத்தில் மகிந்த ஆட்சியோடு தொடர்பு எடுப்பது. மீண்டும் புதிய எஜமானர்களுக்கு ஊடக ரவுடியாகி (எப்போதும் போலவே வேலை வெட்டிக்குப்போகாது) செல்வாக்கையும் செல்வங்களையும் அனுபவிப்பது.

ஐரோப்பாவில் criminal recordஐ உடைய ஒரு பச்சோந்தியும் கோமாளியுமானவரை மகிந்தவோ அல்லது சரத் பொன்சேகாவோ தங்களது பிரச்சாரத்துக்கு உபயோகிப்பார்களாயின் அவர்களிக்கு கிடைக்கவிருக்கும் தமிழ் வாக்குகளும் கிடைக்காமலே போகும்.

தேசம் நெற் போன்ற பொறுப்பான பத்திரிகைகள் சேது போன்றவர்களின் வேலைத் திட்டங்களுக்குப் பலியாகமல் இருக்க வேண்டும்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.//

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார். முதல் மனைவி பற்றிய எஸ் சிவரூபனின் குறிப்புச் சரியானதே. ஏனையவை எஸ் சிவரூபனுடைய ஊகம் அல்லது விமர்சனம்.

தவறுக்கு வருந்துகிறேன். முன்னைய கட்டுரையிலும் இத்திருத்தத்தை மேற்கொள்கிறேன்.

த ஜெயபாலன்

ஆடுகளத்தின் எகிறும் தன்மை மோசமடைந்ததன் காரணமாக இந்தியா இலங்கை இடையிலான கிரிக்கெட் ஆட்டம் கைவிடப்பட்டது

catak.jpgஇந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் ஆட்டத் தொடரின் இறுதியாட்டம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம் விளையாட்டைத் தொடருவதற்குரிய நிலையில் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

dilshan.bmpகளத்தின் மோசமான எகிறும் தன்மையால் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடலாம் என்பதன் காரணமாக இந்த ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்வதாக இந்த ஆட்டத்திற்கான ஐ.சி.சி. பிரதிநிதியான ஆஸ்திரேலியாவின் அலன் ஹர்ஸ்ட் அறிவித்துள்ளார்.

ஆட்டம் கைவிடப்படவேண்டி வந்தது குறித்து தில்லி கிரிக்கெட் சங்கத்தினர் பார்வையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தி ஆட்டத்தைக் காணவந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி வழங்கினர்.

தில்லி மைதானத்தின் விக்கெட் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின்போதும், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின்போதும் இந்தக் களத்தில் பந்து போதிய அளவு எகிறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் எதிரொலியாக பனிக்காலத்து புற்கள் இந்த ஆட்டத்திற்காக ஆடுகளத்தில் பதியப்பட்டிருந்தன. ஆனால் அது களத்தின் எகிறும் தன்மையை மேலும் மோசமாக்கிவிட்டுள்ளது.

Sri Lanka in India ODI Series – 5th ODI
India v Sri Lanka
No result

ODI no. 2936 | 2009/10 season
Played at Feroz Shah Kotla, Delhi
27 December 2009 (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum) 
 WU Tharanga  b Khan  0
TM Dilshan  c †Dhoni b Khan  20 
 ST Jayasuriya  lbw b Harbhajan Singh  31 
 KC Sangakkara*†  c Raina b Tyagi  1 
 TT Samaraweera  run out (Raina)  2 
 SHT Kandamby  not out  12  
 M Pushpakumara  not out  7  
 Extras (lb 1, w 8, nb 1) 10     
      
 Total (5 wickets; 23.3 overs; 125 mins) 83 (3.53 runs per over)
Did not bat NLTC Perera, S Randiv, RAS Lakmal, UWMBCA Welegedara 
Fall of wickets1-0 (Tharanga, 0.1 ov), 2-39 (Dilshan, 10.5 ov), 3-58 (Sangakkara, 15.1 ov), 4-60 (Jayasuriya, 16.4 ov), 5-63 (Samaraweera, 17.6 ov) 
        
 Bowling
 Z Khan 8 1 31 2
A Nehra 5 0 24 0 
 S Tyagi 6.3 1 15 1
 Harbhajan Singh 4 0 12 1
 
India team    
V Sehwag, G Gambhir, KD Karthik, V Kohli, MS Dhoni*†, SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, S Tyagi 
Match details
Toss India, who chose to field
Series India won the 5-match series 3-1

புலி ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனடாவில் பொதுக் கூட்டம் : த ஜெயபாலன்

Nadarajah_Muralitharan‘நடைபெற இருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது’ என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நாட்டின் பொறுப்பாளராக அறியப்பட்ட நடராஜா முரளீதரன் நீண்டகாலமாக கனடாவில் வாழந்து வருகின்றார். கலை இலக்கியச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வரும் இவர் தற்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் மறைமுகமாக எதிர்க் கட்சி கூட்டின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்தா நடராஜா முரளீதரன் இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல எனத் தெரிவித்தார்.

ஜனவரி மூன்றில் இப்பொதுக்கூட்டம் ரொறன்ரோவில் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.

பின்வரும் நான்கு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கின்ற முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாக நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
1. மகிந்த ராஜபக்சவின் இனவாதத் தலைமையைப் பலவீனப்படுத்துவது. பொன் சேகாவிற்று வாக்களிப்பதன் மூலம் சிங்கள இனவாதத் தலைமைகளைப் பிரித்தாள முடியும்.
2. சர்வதேச அமைப்புகளால் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது அக்குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தும்.
3. நடந்து முடிந்த யுத்தத்தை நடாத்தியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் தலைமையே. இராணுவம் ஒரு கருவி மட்டுமே. அதனால் சரத் பொன்சேகா முதல் குற்றவாளியல்ல.
4. தமிழ் பிழைப்புவாதக் குழுக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் போது அதே அரசியல் தலைமையை ஆதரிக்க முடியாது.

போன்ற காரணங்களுக்காக இந்த அரசியல் சதுரங்கத்தில் தந்திரோபாய அடிப்படையில் தாங்கள் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக நடராஜா முரளீதரன் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட நான்கு காரணங்களுடன் கடந்த காலத்தில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலோடு இணங்கிச் செயற்பட்ட, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கின்ற வேட்பாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்ட போது, அவர்களைத் தங்களது ‘நட்பு சக்திகள்’ எனக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத்பொன்சேகாவே ஜனதிபதியாக வரப் போகின்றார் என்றும் இதில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வந்துவிட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

2005 தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தான் அப்போதே விமர்சித்து எழுதியதாகக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

நடராஜா முரளீதரன் இக்கருத்தை வெளியிடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ‘இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகளை வழங்கியவர்கள் அரசியல் ராஜதந்திரம் தந்திரோபாயம் என்ற பதங்களுக்குள் ஒழிந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின் அணிவகுத்து நின்றதே வரலாறு. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்களைப் பலப்படுத்தவோ அணிசேரவோ தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் முன்வரவில்லை. இன்றும் முன்வரவில்லை. எறிந்தவரை நோக்கியே திரும்பி வருகின்ற பூமராங் போலவே தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகள் கடந்த 60 வருடங்களாக உள்ளது. இப்பொழுது இந்த பூமராங் விளையாட்டில் இரா சம்பந்தனும் நடராஜா முரளீதரனும் களம் இறங்கி உள்ளனர்.

ஈராக்கின் கர்பலா நகரில் பலத்த பாதுகாப்பு!

iran_mosq.jpgஈராக்கின் தலைநகர் கர்பலாவில் ஆஷ{ரா தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் குவிந்து வருகின்றனர். இங்கு ஆயுத்தாரிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காக சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண் தற்கொலைத்தாரிகளை தடுத்து நிறுத்துவதற்காக நூற்றுக்கணக்கான பெண் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சோதனை சாவடிகளில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. சமீப நாட்களில் ஈராக்கில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

5வது ஒரு நாள் போட்டி: ஆட்டம் நிறுத்தம்?

இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

delhi.bmpஇந்நிலையில் ஆடுகளம் மோசமாக இருப்பதால் இலங்ணை அணியினர் ஆட்டத்தை நிறுத்தினர். ஆடுகளம் பற்றி போட்டி நடுவர்களிடம் இலங்கை அணி கேப்டன் சங்கக்கரா புகார் கொடுத்துள்ளார். சங்கக்கரா புகார் செய்ததையடுத்து, போட்டி நடுவர்களும் ஆடுகளத்தை பார்வையிட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணி 23.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.