கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகல ஆரம்பம்

asia.jpg16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா நேற்று 12ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும் உதைபந்து போட்டிகள் கடந்த 07ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விளையாட்டுப் போட்டிகளில் நீர் விளையாட்டுகள், வீதி சைக்கிள் ஓட்டப் போட்டிகள், டன்ஸி ஸ்போட்ஸ், ஜிம்நாஸ்டிக், ஜூடோ, குறி பார்த்து சுடல், பாரம் தூக்கும் போட்டிகள் மற்றும் வூஷ¤ போட்டிகள் என்பன இன்று ஆரம்பமாகின்றன.

15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2006 ஆம் ஆண்டிலே கட்டார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டிகளில் வழமைபோல் சீனா 124 தங்கம், 70 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்றதுடன், தென் கொரியா 44 தங்கம், 39 வெள்ளியும், 70 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினையும், யப்பான் 43 தங்கம், 51 வெள்ளி மற்றும் 57 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கங்கள் இரண்டும் கிடைத்தன. 36 நாடுகள் பங்குபற்றிய இந்த போட்டியில் இலங்கைக்கு 32 ஆவது இடம் கிடைத்தது.

ஆசிய நாடுகளிடையே நடைபெறும் பிரதான விளையாட்டுப் போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 16 ஆவது முறையாக இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் சீனாவின் குவென்ஷ¤ நகரில் நடைபெறுகின்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த 42 விளையாட்டுப் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக சீனாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை சார்பாக இம்முறை 22 நிகழ்ச்சிகளில் 138 வீரர்கள் கலந்துகொள்வதுடன், 29 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிக்காக குவென்ஷ¤ நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமமானது, 2.73 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் அடங்கலாக 14000 பேருக்கு அதில் தங்குமிட வசதியுண்டென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு மேலதிகமாக 14000 பேர் அன்றாட கடமையில் ஈடுபடுவார்களென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

Douglas_Devananda”யாழ் பல்கலைக்கழகத்தை நல்ல திசைநோக்கி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் தற்போது எட்டிவரும் நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்களை ஒழுங்கு முறையில் சரிவரப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக் கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும். அவர்கள் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு இப்பல்கலைக்கழகத்தை எமது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் முன்னேற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டும்.”

Senate_Members_Meet_DD_29Oct10டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் (ஒக்ரோபர் 29, 2010 இல் யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடிய போது தெரிவிக்கப்பட்ட கருத்து.)

யாழ் பல்கலைக்கழகம் அதன் கல்வியியல் தரத்திலும் நிர்வாகத்திலும் மிகக் கீழ்நிலையை அடைந்துள்ளது மட்டுமல்ல ஒரு கல்விக் கட்டமைப்புக்கு இருக்கக் கூடிய அடிப்படைப் பண்புகளையே இழுந்துள்ளமை முன்னைய கட்டுரைகளில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தாக்கத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களே பிரதிபலித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் உபவேந்தர்களாக பொறுப்பேற்றவர்கள் அதற்குரிய பொறுப்புணர்வுடன் செயற்படாமை பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களும் அதற்கான பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்க முடியாது.

யாழ் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றுவதற்கான ஆளுமையான தலைமைத்துவத்தை தெரிவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு எட்டியுள்ளது. நவம்பர் 09 2010ல் உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுநாள். அடுத்த பல்கலைக்கழகக் கவுன்சில் கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் – வேட்பாளர்களைத் தெரிவதற்கான தேர்தல் நாள் குறிக்கப்படும். யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு உள்ளது.

உபவேந்தரிடம் யாழ் பல்கலைக்கழகத்தின் எதிர்பார்பு:

யாழ் பல்கலைக்கழகம் தனது உபவேந்தருக்கான விண்ணப்பத்தை கோரும் அறிவிப்பில் உபவேந்தராக வருபவரிடம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதனை தெளிவாகவே வரையறுத்து உள்ளது. ”யாழ் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது. -The vision of the University of Jaffna is to be a leading centre of excellence in teaching, learning, research and scholarship. அதனுடைய முதற்கடமை தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும். – Its priorities are serving the country to improve the quality of Higher Education and promote research relevant for the development of the country in general and the Northern Region in particular.”என யாழ் பல்கலைக்கழகத்தின் பார்வையும் இலக்கும் தெளிவாகவே வரையறுக்கப்பட்டு உள்ளது.

”பல்கலைக்கழகத்தினுடைய முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, சீரான நிர்வாகம் என்பவை உபவேந்தருடைய பொறுப்பு. – The Vice Chancellor shall be responsible for maintaining transparency, accountability and good governance in the management of the affairs of the University. உபவேந்தர் கல்வியியல் தலைமைத்துவத்தை வழங்குவதுடன் நிர்வாகக் கொள்கைகளை உருவாக்குவது, அறிமுகப்படுத்துவது, அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்புடையவர். – The Vice Chancellor should provide academic leadership and is responsible for formulating, introducing and carrying out a streamlined management policy.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

”உபவேந்தர் பல்கலைக்கழகத்தினுடைய இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவராக இருக்க வேண்டும். – The Vice Chancellor shall be a person with a vision to carry forward the vision and goals of the University through his/her intellectual as well as managerial brilliance. அத்துடன் தேசத்தினுடைய தேவைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே உயர்கல்விக் கொள்கைகளை வகுக்கவும் பலப்படுத்தவும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி போன்ற பல்கலைக்கழகத்தின் கல்வியியல் செயற்பாடுகளை கால வரையறை மதிப்பீடுகளுக்கு அமைய மேற்கொள்ள வேண்டும். – In addition, the Vice-Chancellor is called upon to identify needs of the nation in terms of national policies of higher education and should be able to strengthen the time tested values for the advancement of the University through academic activities including research & development.” என உபவேந்தருடைய கடமையும் பொறுப்பும் மேலும் விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

மேற்குறிப்பிட்ட கல்வியியல் முகாமைத்துவப் பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடிய ஒருவரையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைக் கல்விச் சமூகம் குறிப்பாக தமிழ் கல்விச் சமூகம் எப்போதும் எதிர்பார்க்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் நிலை:

ஆனால் துரதிஸ்ட்டவசமாக யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் உப வேந்தர் பதவிக்கு வந்தவர்கள் பல்கலைக்கழகத்தின் இலக்கான ‘தரமான உயர் கல்வியை வழங்கி பொதுவாக நாட்டுக்குரிய குறிப்பாக வடபகுதிக்குரிய தேவைசார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்து நாட்டுக்கு பணிசெய்ய வேண்டும்’ என்பதையோ அல்லது பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வையான ‘கற்பித்தல், கற்றல், ஆய்வு, நிபுணத்துவம் என்பனவற்றின் முன்னணி மையமாக விளங்குவது’ என்பதனையோ பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

கல்வியியல் தகமை, நிர்வாகம், நிதிக் கையாள்கை என யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு அம்சங்கள் மிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ளது. இதற்குக் காரணம் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமல்ல. தொண்ணூறுக்களின் நடுப்பகுதியின் பின் யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமே இடம்பெற்றது. தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ தான் யாழ் பல்கலைக்கழகத்தினை கீழ்நிலைக்கு இட்டுச்சென்றது என்பதனை முன்னைய கட்டுரையில் பார்த்துள்ளோம்.

மேலும் ”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” என ஓடிற்றர் ஜெனரல் எஸ் சுவர்னஜோதி தனது 2009ம் ஆண்டு ஓடிற் அறிக்கையில் குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது.

செப்ரம்பர் 09 2010ல் Firedrich Ebert Stifung என்ற ஜேர்மன் அமைப்பின் அணுசரணையில் இயங்கும் பருத்தித்துறை அபிவிருத்தி நிதியம், யாழ்ப்பாணத்தின் விவசாய மீன்பிடிப் பொருளாதாரத்தை அறிவியல் பொருளாதாரம் ஆக மாற்றுவது பற்றிய கலந்துரையாடலை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. இதில் யாழ்ப்பாணத்தில் உள்ள கலிவியியலாளர்களும் மாணவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றுகையில் ”அறிவு என்பது மற்றைய எல்லாத்துறைகளைக் காட்டிலும் செல்வத்தை உருவாக்கக் கூடியது” என்றார் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான HSBC வங்கியின் மதிப்பீடு – அபாய முகாமையாளார் நிரஞ்சன் நடராஜா. யாழ்ப்பாணத்தில் வடக்கில் இயற்கை வளம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மூளைவளம் நிறையவே உள்ளதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”பல்கலைக்கழகங்கள் சந்தைக்கு ஏற்ப கல்வியை வழங்கி பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமே ஒழிய, பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் பட்டதாரிகளை சந்தை உள்வாங்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் என்பது பொருளாதாரச் சந்தையின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் ஒரு கல்வி நிறுவனமல்ல. பொருளாதாரச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வது அதன் முக்கிய பாத்திரங்களில் ஒன்று. இல்லாவிட்டால் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற புள்ளிவிபரம் மட்டுமே மிஞ்சும்.

அதேசமயம் சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் சமூக இயக்கத்தில் – நாட்டின் இயக்கத்தில் பல்கலைக்கழகங்கள் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்கின்றன. இன்று அறிவியல் என்பது சமூகத்தின் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற விடயமாக உள்ளது. இந்த அறிவியலின் மையமாக பல்கலைக்கழகங்களே உள்ளன. அதனால் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம் முன்னரைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்து இருப்பதுடன் அதன் தேவை பரந்ததாகவும் உள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சமூகம் எவ்வாறு இருந்தது என்ற வரலாற்றை ஆராய்வதுடன், அடுத்த சில 10 ஆண்டுகளில் சமூகம் எவ்வாறு மாற்றமடையும் விஞ்ஞர்னம், தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் எனப் பல்வேறு அம்சங்களும் எவ்வாறான நகர்வை எடுக்கும், எவ்வாறான நகர்வை எடுக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகங்களே ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதன் அடிப்படையில் அரசியலாளர்கள் முடிவுகளை மேற்கொள்கின்றனர்.  இவற்றுக்கான தகமையை யாழ் பல்கலைக்கழகம் கொண்டுள்ளதா என்பதற்கு கீழுள்ள மதிப்பீடு சாட்சியாகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5000 மாணவர்கள் பட்டப்படிப்பையும் 600 மாணவர்கள் பட்டமேற்படிப்பையும் மேற்கொள்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிலும் பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களை தொழில் நிறுவனங்கள் கூடுதலாக விரும்புவதாக இலங்கையில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் யாழ் பல்கலைக்கழகம் போன்ற பாராம்பரிய பல்கலைக்களகங்களின் கல்வியியல் பலவீனங்கள், தலைமைத்துவம் அற்ற தன்மை, நிர்வாகச் சீர்கேடுகள் என்பன தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வருகையைத் துரிதப்படுத்தும் நிலையும் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றது.

இலங்கையில் உள்ள 15 பல்கலைக்கழகங்களில் 2010 தர வரிசைப்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 10வது இடத்தில் உள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் முதலாவது இடத்தில் உள்ளது. உலகத்தர வரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் 1903ம் இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 9309ம் இடத்தில் உள்ளது. (தகவல்: யூலை 2010: Rankings Web by the Cybermetrics Lab CSIC)

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு:

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சியின் வேகத்தை மறுபக்கம் திருப்புவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடைய ஒருவர் உபவேந்தராக வருவது முக்கியமானது.

தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு கீழ் வருவோர் தங்களை முன்நிறுத்தி உள்ளதாகத் தெரியவருகின்றது. இப்பட்டியல் இன்னமும் பல்கலைக்கழகத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் என் சண்முகலிங்கன் – B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Vice-Chancellor
பேராசிரியர் என் ஞானகுமரன் – B.A.(Kelaniya), M.A.(Jaffna), Ph.D.(India) – Dean, Faculty of Arts
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – B.A.(Peradeniya), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – Dean, Faculty of Graduate Studies
பேராசிரியர் (செல்வி) வசந்தி அரசரட்ணம் – Department of Bio Chemistry
சிரேஸ்ட விரிவுரையாளர் ஆல்வாப்பிள்ளை – Faculty of Agriculture
தனேந்திரன் – Unuion Member with 2 A/L s

யாழ் பல்கலைக்கழகத்தைச் சாராத விண்ணப்பதாரிகள்:
பேராசிரியர் ரட்ன ஜீவன்ஹூல் – D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer
ராஜரட்னம் – (இங்கிலாந்தில் இருந்து சென்றுள்ள பொறியியல் பட்டதாரி. மேலதிக விபரம் தெரியவில்லை.)

இவர்களில் இருந்து மூவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவரை ஜனாதிபதி உப வேந்தராக நியமிப்பார். பல்கலைக்கழகத்தில் இம்மூவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்படாதவர் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட மாட்டார். பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் தெரிவுக்காக நடத்தப்படும் வாக்கெடுப்பில் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இப்பல்கலைக்கழகக் கவுன்சிலில் 12 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் (12 + 1) 13 உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து, சமூகப் பொறுப்புடையவர்கள் University Grand Commission ஆல் நியமிக்கப்படுவர். இந்தப் 13 பேரினதும் நியமனத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கு உண்டு.

ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் மூன்று வெவ்வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். ஒருவருக்கு மட்டும் வாக்களித்து மற்றையவர்களுக்கு வாக்களிக்காமல் விடுவதன் மூலம் விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

கடந்த காலங்களில் வேட்பாளருக்கும் வாக்களிக்கத் தகுதி இருந்தது. இம்முறை போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை எனத் தெரியவருகின்றது.

பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்:

பேராசிரியர் என் சண்முகலிங்கம் – (Vice Chancellor),
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் – (Dean/Graduate Studies),
பேராசிரியர் கெ சிவபாலன் – (Dean/Medicine),
பேராசிரியர் கெ தேவராஜா – (Dean/Management Studies & Commerce),
கலாநிதி திருமதி சிவச்சந்திரன் – (Dean/Agriculture),
பேராசிரியர் என் ஞானகுமரன் – (Dean/Arts),
பேராசிரியர் கந்தசாமி – (Dean/ Science),
பேராசிரியர் செல்வி வி அரசரட்ணம் – (Rep of Senate),
பேராசிரியர் கெ குகபாலன் – (Rep of Senate),
கலாநிதி மங்களேஸ்வரன் (Dean/Business Studies, Vavuniya Campus),
திரு எஸ் குகனேசன் (Dean/Applied Science, Vavuniya Campus),
திரு ஆர் நந்தகுமார் – (Rector/Vavuniya Campus)

பல்கலைக்கழகத்தைச் சாராத University Grand Commission ஆல் நியமிக்கப்பட்ட செனட்சபை உறுப்பினர்கள்:

திரு கெ கணேஸ் (முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.),
அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் (அடுத்த யாழ் பிஸப் ஆகக் கருதப்படுபவர்.),
திரு கெ கேசவன் (பிரபலமான சட்டத்தரணி – சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்.),
திரு ஏ திருமுருகன் (தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர், சைவ மற்றும் சமூக வேகைகளில் ஈடுபட்டு உள்ளவர்.),
திரு ஏ தியாகராஜா (பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் இரசாயனப் பொறியியலாளராக இருந்தவர்.),
திரு ரி ராஜரட்ணம் (கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவர். பின்னர் SLIATE (Sri Lanka Institute for Advanced Technical Education) என்ற தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்.),
இன்ஜினியர் எம் ராமதாசன் (Euroville Engineers and Constructors (PVT) Ltd இன் முகாமைத்துவ இயக்குநர்.),
திருமதி என் குணபாலசிங்கம் (யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை.),
திரு கெ தேவேந்திரன் (Jaffna Multi Purpose Cooperative Society – MPCS க்கு பொறுப்பானவர்.),
திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மிகவும் அறியப்பட்ட பெண்ணிலைவாதி. சர்வதேச அரங்குகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். இலங்கைத் தேசிய சமாதான கவுன்சிலின் உறுப்பினர்.)
திரு எம் சிறிபதி (பாடசாலை அதிபர்),
சுசிலா சாரங்கபாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை. சமாதான நீதவான்),
டொக்டர் எஸ் ரவிராஜ் (யாழ் போதனா வைத்தியசாலை சிரேஸ்ட சத்திரசிகிச்சை மருத்துவர்)

கல்வியியல் ஆளுமையினதும் முகாமைத்துவத் திறமையினதும் அடிப்படையில் உபவேந்தர் தெரிவு இடம்பெற வேண்டும்:

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம்  அங்கு நீண்டகாலம் பணியாற்றிய துறைத் தலைவர்கள் என் ஞானகுமரன், எஸ் சத்தியசீலன் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவுக்கு போட்டியிடுகின்றனர். இப் பல்கலைக்கழகத்தை அமைச்சர் குறிப்பிட்டது போல் மிகச் சிறந்த முறையில் முன்னேற்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு பல ஆண்டுகளாக இருந்தது. ஆனால் அவர்கள் முன்னேற்றுவதற்கு மாறாக பல்கலைக்கழகத்தினைச் சீரழிப்பதற்கே பல்வேறு வழிகளிலும் பங்கேற்று இருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து உபவேந்தர் பதவிக்குப் போட்டியிடுகின்ற பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்களுடைய பீடங்களின் நிலையும் மோசமானதாகவே உள்ளது.

இக்கட்டான காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கற்பித்தோம் என்ற தகுதி மட்டும் பல்கலைக்கழகத்தை சிறந்தமுறையில் முன்னேற்றப் போதுமானதல்ல. இந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களுக்கு இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இவர்கள் அதிகாரத் துஸ்பிரயோகமும் பாலியல் துஸ்பிரயோகமும் நிதி, நிர்வாகத் துஸ்பிரயோகமுமே செய்துள்ளனர். வடமாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டமைக்கு இவர்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.

கடந்த காலங்களில் இருந்த வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி இறுக்கமான தடுப்பை போட்டு, அப்பல்கலைக்கழகத்திலேயே படித்து, அங்கேயே பட்டம் பெற்று, அங்கேயே வேலையையும் பெற்று விடுகின்றனர். அதற்குள் வெளியே இருந்து யாரையும் அனுமதிக்க விடாப்பிடியாக மறுத்தே வருகின்றனர். வெளியார் நுழைந்தால் தங்கள் பலவீனங்கள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளேயே சமரசம்செய்து உள்ளேயே நியமனங்களையும் மேற்கொள்கின்றனர். அதனால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கல்வியியல் தகமையும் அனுபவமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இவ்வாறான பலவீனங்களால், இப்பதவிக்காக இவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தயவை மட்டுமே நம்பி தங்கள் விசுவாசத்தை அமைச்சருக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அமைச்சர் தனக்கு விசுவாசமானவர்கள் என்ற அடிப்படையில், தனக்குக் கட்டுப்படக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் ஒரு தவறான தெரிவுக்கு செல்வது தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு செய்யப்படும் மிகப்பெரும் அநீதியாக அமையும்.

மேலும் பல்கலைக்கழகக் கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களுக்கும் தமிழ்க் கல்விச் சமூகம் பற்றிய முக்கிய பொறுப்பு உள்ளது. இந்த உப வேந்தர் தெரிவுக்கு வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள கவுன்சில் உறுப்பினர்களில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்களாகவும் 13 பேர் சமூகப் பொறுப்புடையவர்களாகவும் உள்ளனர். சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகத்தின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பெண்ணிலைவாதி என பன்முகத்தன்மையினதாக இந்தப் பல்கலைக்கழகக் கவுன்சில் உள்ளது. இவ்வாறான மதிப்புக்குரிய மிக உயர்ந்த பொறுப்புடையவர்களினால் தெரிவு செய்யப்படும் பல்கலைக்கழக உபவேந்தர் அந்த மதிப்பையும் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்க வேண்டும்.

 அறியப்பட்ட பேய்களும் அறியக் கூடிய தேவதைகளும்:

கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் சீரழிந்துள்ள சமூகத்திற்கு எஞ்சியுள்ள ஒரே நம்பிக்கை கல்வி. தமிழ் மக்களுக்கு அந்தக் கல்வியை வழங்குகின்ற உயர்ந்த ஸ்தாபனமான யாழ்பாணப் பல்கலைக்கழகம் கல்விச் சமூகத்திற்கு முன்னுதாரணமாக, தலைமை ஸ்தாபனமாக விளங்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள ஒருவரையே மீண்டும் உப வேந்தர் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் “Known devil is better than unknown angel” போன்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவகையில் இந்த கவுன்சில் உறுப்பினர்களே யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து உப வேந்தர் பதவிக்கு நிற்பவர்களை ‘அறியப்பட்ட பேய்கள்’ என ஏற்றுக்கொள்கின்றனர். இன்று இணைய வலையில் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மறுமூலையில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இணையமும் தொலைபேசியும் சரியான தொடர்புகளும் போதுமானது. அதனால் நீங்கள் அறிய விரும்பினால், ‘அறியாத தேவதைகள்’ என்பதற்கு இடமில்லை. அகவே ‘அறியப்பட்ட பேய்கள்’ என நீங்கள் அடையாளம் கண்டவர்களை – தமிழ் மக்கள் அடையாளம் கண்டவர்களை முற்றாக நிராகரியுங்கள்.

‘அறியப்பட்ட பேய்கள்’ ஆக அடையாளம் காணப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்படுவது பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பீட்டை வெகுவாகப் பாதிக்கும். சமயத் தலைவர்களும் பெண்ணிலை வாதியும், பாடசாலை அதிபர்களும், கல்வியியல் மேதைகளும், உயர் பதிவியில் உள்ளவர்களும் இணைந்து இதுவரை பல்கலைக்கழகத்தைச் சீரழித்தவர்களை, பாலியல் துஸ்பிரயோகங்களுக்காக அறியப்பட்டவர்களை, உரிய கல்வித் தகமை அற்றவர்களை, நிர்வாகத்திறன் அற்றவர்களை உப வேந்தராக வர அனுமதிப்பது ஒரு போதும் நியாயப்படுத்தப்பட முடியாது. இது தமிழ் கல்விச் சமூகத்திற்கு இழைக்கப்படும் பாரிய அநீதி. அதற்கு யாழ் பல்கலைக்கழகக் கவுன்சில் காரணமாக இருக்கக் கூடாது.

உப வேந்தருக்காக போட்டியிடுபவர்கள் கவுன்சில் உறுப்பினர்களின் நீண்ட கால நண்பர்களாக இருக்கலாம். நெருக்கமானவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களின் தெரிவு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெரிவு. அதனால் நட்புக்கும் நெருக்கத்திற்கும் அங்கு இடம்கொடாமல் தெரிவு செய்யப்படுபவர் பல்கலைக்கழகக் கவுன்சிலின் மதிப்பையும் கௌரவத்தையும் நிலைநிறுத்துபவராக இருக்க வேண்டும்.

அமைச்சர் தேவானந்தாவின் பொறுப்பு:

Douglas_Devanandaதமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு தமிழ்க் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பை யாழப்பாணப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்காமையாலேயே யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான விவாதம் பொதுத்தளத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவு பற்றிய விவாதம் இதுவரை இவ்வாறான ஒரு பொதுத் தளத்திற்கு வரவில்லை. இம்முறையே இது பரந்த பொதுத்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஒரு மூடிய சமூகமாக யாழ் பல்கலைக்கழகம் இருக்க முடியாது என்பதையே இது காட்டி நிற்கின்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டது போல், ”யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும்” என்று அவர் விரும்பினால் அதனைச் சாதிக்கக் கூடிய, பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய பரந்த கல்வியியல் தகமையும் இலங்கையிலும் சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய அனுபவமும் ஆளுமையும் உடைய ஒருவரே அப்பொறுப்பான பதவிக்குக் கொண்டு வரப்படவேண்டும்.

கல்வியை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராட ஆரம்பித்த அமைச்சரின் கைகளில் தற்போது அம்மக்களின் கல்வியின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கின்ற முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்குத் தகுதியானவர் யார் என்பதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு மிக நன்றாகவே தெரியும். இந்தத் தெரிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ‘கல்வித் தகமையினதும் நிர்வாகத் திறனினதும் அடிப்படையில்’ மிகப்பொறுப்புடன் எடுப்பார் என்று தமிழ் மக்களின் கல்வியின்பால் அக்கறை கொண்டுள்ள நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட – கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை! : இரா வி விஷ்ணு (swiss)

North_East_SLஅண்மைய சில நாட்களாக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாலர்கக்கும் மட்டும் மெல்லக்கிடைத்திருக்கும் அவல் (பழசுதான் ) வட-கிழக்கு இணைப்பு. வட-கிழக்கு இணைப்பு என்பது இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டபோதே தமிழ் தலைமைகளினால் கையில் எடுக்கப்பட்ட தீர்வு கோரிக்கையில் ஒன்று அல்லது தாயக கோரிக்கை என்பது அறிந்ததே.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்த அரசியல், ஆயுத போராட்டம் பல விடையங்களை செய்து முடித்திருக்கிறது, ஒரு சில விடங்களை புரட்டி போட்டிருக்கிறது அரசியல் ரீதியில் மக்களின் மனங்களை பக்குவமடைய செய்திருக்கிறது (புலம்பெயர் தமிழர்?? ) எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டம் தொடர்பான படிப்பினையை அனுபவ ரீதியில் கற்றுத்தந்திருக்கிறது. இன்னும் சில அரசியல் வாதிகள் கொள்கைரீதியில் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்பது எம் சமூகத்தின் பாரிய குறை என்பதே உண்மை .

வடக்கும் கிழக்கும் இணைத்திருக்க வேண்டுமா, பிரிந்திருக்க வேண்டுமா, சேர்த்து இயங்குவதா அல்லது நிர்வாக ரீதியில் செர்ந்தியகுவதா பிரிந்தியங்குவதா என்பது வடக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களும் அரசியல்வாதிகளும், கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விடையம் என்பது யதார்த்தம்.

இப்போதிருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் வட-கிழக்கு இணைப்பு என்பது பரவலாக வடமாகாணத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற பல தமிழ் தலைமைகளின் பக்கமிருந்து மட்டுமே இக்கோரிக்கை வருகின்றதே தவிர கிழக்கு தலைமைக்களும் சரி, கிழக்கு மக்களும் சரி இந்த விடையத்தை பெரிதாக கருதுவதாக இல்லை .

கிழக்கு மக்களை பொருத்தவரை விசேடமாக தமிழ் மக்களை பொறுத்தவரை தங்களுக்கென்றொரு சரியான தலைமை கிழக்கை பிரதிநித்துவப்படுத்துவதர்க்கு தேவை என கருதுகின்றனர். அதற்கு சான்றாகவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொது கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியை சார்ந்தவர்களுக்கு தமது பரவலான ஆதரவை தெருவித்திருந்தனர் . வடகிழக்கு இணைப்பை வலியுறுத்திய தமிழ் கட்சிக் கூட்டமைப்புக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைத்திருந்தது. இன்றைய நிலைமையில் வடகிழக்கு இணைப்பு என்பது வெறுமனே அரசியல் வாதிகள் முடிவு செய்ய வேண்டிய விடயமில்லை கிழக்கு மக்களும் கிழக்கு அரசியல் வாதிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்பதை பெரும்பாலும் வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.சிங்கள ஆட்சியாளர்களை போல் கடந்த கால கசப்புனர்வுக்களும், நப்பிக்கைஜீனங்க்களும் தமிழ் தலைமகள் மீதும் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதென்பது நிர்வாக ரீதியில் இரு மாகாணங்களுக்கு நன்மையே தவிர. அதிகாரங்கள் என்பதே இன்றைய பிரச்சனை இந்த அதிகாரங்களை எவ்வாறு நாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பதே நாம் இன்றைய சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய விடயம். தமிழர்களில் அரசியல், ஆயுதபோராட்டத்தில் நியாயம் இருக்கின்றது. இழப்புக்கள் நிறையவே இருக்கிறது அதனை வெறுமனே ஆயுத போராட்டம் என்றளவில் வெற்றி தோல்வி என்று கணக்கேடுத்துவிட முடியாது. தமிழர்களுக்கான பொதுவாக சொல்வதானால் சிறுபான்மையியருக்கான அரசியல் தீர்வு என்பது உடனடியாக பெற்றே ஆகவேண்டிய விடயம் . வட -கிழக்கு தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரான முஸ்லீம், மலையக தமிழர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம். அவற்றை சரியாக செய்தாலே சிறுபான்மையினருக்கான தீர்வென்பது நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிகோலுமே தவிர வட- கிழக்கு இணைப்புதான் நிரந்தர தீர்வில் முக்கியமென சொல்லுவதெல்லாம் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கட்டிக்காக்க முயலும் கடும்போக்கு தமிழ் அரசியல் வாதிகள் தொடர்தும் தமது வண்டிகளை உருட்டுவதற்க்கும் தமிழர்களை உசுப்பேத்தி தம் பதவிகளை பாதுகத்துகொள்ளவே இன்றைய சூழ்நிலையில் உதவும் .

இலங்கையின் இன்றைய நிலைமை என்பது தமிழர்களின் பிரச்சனைகளை ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம். அந்தவகையில் தமிழ் கட்சிகள் பல ஒன்றிணைந்து ”கட்சிகள் அரங்கம்” நடத்துவது வரவேற்கத்தக்க விடயம். அதிலும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க, செல்வாக்கற்ற கட்சிகள் அனைத்துமே ஒன்றிணைந்து பேச எத்தனித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதுவரை தமிழர்களிடைய ஆயுதங்களே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. இனியாவது கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தட்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வரங்கத்தில் சேர்ந்து செயட்படுவதுபோல் சமீட்சை காட்டியிருப்பது வரவேற்கத்தக்க விடயம். ஒற்றுமை என்பதே இலங்கைத் தமிழர்க்கு விதிவிலக்கு போல் இருந்தது, இனியாவது பதவி மோகத்தை விட்டு வெளிவருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

North_East_SLதமிழர்களுக்கான தீர்வென்பது வருங்காலத்தில் இப்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் வருங்காலத்தில் புதிய பிரச்சனைகளை உருவாக்காததாகவும் இருக்க வேண்டும். தீர்வென்பது தமிழ் பேசும் மக்களை மட்டுமின்றி சிங்கள மக்களையும் திருப்திபடுத்துவதாய் இருக்க வேண்டுமென்பது சிங்கள தலைமைகளின் கருத்தாக இருந்து வருகின்றது. அதேபோன்றே தமிழ் தலைமைகளும் வடமாகாண, கிழக்குமாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் திருப்திப்படுத்த கூடியவாறு தமது தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வட-கிழக்கு இணைப்பு என்பது வெறுமனே தமிழர்களின் கையில் இல்லை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் கட்சி அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில் வடக்கும் கிழக்கும் சட்டரீதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைப் போன்று விரைவில் வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்படும் நிலையில் இருக்கும் பொது வட- கிழக்கு இணைப்புபற்றி இன்றைய சூழ்நிலையில் பேசுவது சிங்கள மக்களை எமக்கெதிராக திருப்பிவிடக்கூடது.
 
வட – கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழ் தலைமைகள் ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும். வட -கிழக்கு இணைப்பென்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தற்காலிகமானதே தவிர கிழக்கு மாகாண மக்கள் விரும்பினாலே தொடர்து இணைந்திருக்க முடியுமென்பது அன்றே மாகாணங்களுக்கிடையில் கசப்புனர்வுவர வாய்புகள் இருக்கலாமென்றே பாதுகாப்புக்காக இந்த விடயம் தெருவிக்க பட்டிருந்தது. தமிழ் தலைமைகளின் மீதுள்ள நம்பிக்கையீனம், பலவீனம், பிரதேசரீதியான கசப்புணர்வுகள் என இன்றைய எமது தமிழ் சமூகத்தின் பலவீனமான நிலையில் இந்தவிடையத்த கையில் எடுத்து வெற்றி காண்பதென்பது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டுமென்பதில் பெரும்பாலானோர் நிலைபாடாக இருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் இணைப்புக்கு இணங்காதவரை சாத்தியமில்லாத விடயமே.

இந்த நிலையில் கிழக்கு மாகாண அரசியல் தலைமைகள் பலமாக உள்ளனவா என்கிற கேள்வி கிழக்குமாகாண மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இன்றைய நிலையில் சந்திரகாந்தன் , முரளிதரன், அரியநேந்திரன், சிவகீதா, துரைரெத்திணம் போன்ற தலைமைகள்தான் அல்லது அவர்களை சார்ந்தவர்கள்தான் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தப் போகின்றனரா? இன்றைய காலகட்டத்தில் இவர்கள் மீது இவர்கள் செயட்பாடுகள் மீதும் சரி பிழைகள் நிச்சயமாக இருக்கின்றன. இந்நிலையில் கிழக்கை பிரதிநிதுத்துவப்படுத்து இவர்களுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கிழக்குக்கான புதிய பல திறமையான அரசியல் வாதிகளை உருவாக்க வேண்டியதும் இனங்காட்ட வேண்டியதுமான பொறுப்பு கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும் இருக்கின்றது. இனி இலங்கையின் எதிகாலமேன்பது மாகாண சபைகளை மையப்படுத்தியதாகவே பொருளாதாரமும், நிர்வாகமும் செயட்படவேண்டி இருக்கும். அந்த நோக்கிலான கருத்துக்களே இலங்கை அரசு பக்கம் இருந்து
வந்து கொண்டிருக்கின்றன. கிழக்காக இருந்தாலும் சரி வடக்காக இருந்தாலும் சரி அவை நிர்வாக ரீதில் பிரிந்தே இன்ருப்பதே இன்றைய நிலையில் சாத்தியமானதாக தோன்றுகிறது. அதே நேரம் நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் வருங்காலத்தில் வடமாகாண சபையும் கிழக்குமாகாண சபையும் பல விடையங்களில் ஒன்றாக குரல்கொடுக்கவும், இணக்கப்படுகளுடன் பல விடயங்களில் செயற்படவும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அகவே மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடனான, இன உறவுகளை மேன்படுத்தகூடியதும், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான அதிகாரங்கள், தீர்வுகள் பற்றி பேச ஆரம்பிப்பெதேன்பது இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான தீர்வாக அமையலாம்.
 
அடுத்த வருடம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில். புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடென்ன?, யாரெல்லாம் போட்டியிட போகிறார்கலேன்று பார்க்கலாம். இதில் தற்போதைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தவா இல்ல சுரேஷ் பிரேமச்சந்திரனா, மாவை செனாதிராஜாவா, (சம்பந்தரையாவை விடுவார்களா?) , முன்னாள் வட – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாலா, இல்லை இவர்களையும் தாண்டி கே .பி எனும் குமரன் பத்மாநாதனா வட மாகாணசபையின் முதலமைசராகிராறேன்று பொறுத்திருந்து பார்போம்.

DEVELOPMENT – WHAT DEVELOPMENT IN NORTH SRI LANKA? : Victor Cherubim

Navatkuli_Rail_BridgeMy recent 10 day (25.10 – 3.11,2010) business trip to Jaffna was to take up the challenge of investment in my homeland. It was quite apart from my previous holiday visits. I returned to UK after a grueling schedule of meetings, discourses and form filling with officialdom which though daunting, was productive in that I was able to set up plans for The Consie Cherubim Centre for Women in heartland Jaffna. Everywhere I went I found delays and obstructions from bureaucrats, dissuading me, dampening my enthusiasm. But, the people whom I went to assist, encouraged me and supported me fully.

._._._._._.

The world is awaiting with abated breath to witness that justice is meted out to the Tamil peoples in the aftermath of the protracted 28 year war in Sri Lanka.

The people in Sri Lanka too and particularly those in the North are also eagerly awaiting the outcome by the Government at reconciliation.

There have been suggestions put out at reconciliation, by two processes besides the Lessons Learned Reconciliation Committee ( LLRC) : first and equal among other options is a political settlement of the minimum aspirations of the Tamil people.

What are the so called Minimum Aspirations? It is defined in equity as the legitimate hopes and wishes of a people at harmonisation within a national framework. It is not a demand but more an understanding and an appreciation of traditions, customs and values of the Tamil people to express and sustain themselves as citizens of Sri Lanka.

The war has eroded the trust of peoples over many decades, so it is foolhardy to expect an overnight settlement of these aspirations. Adequate time is deemed necessary to turn guns into plough shires. But, to coin the cliché, time is running out after 17 months of the end of the war to see any visible signs of raproachment or reciprocity.

Tamil_IDP_ReturneeFirst, there appear to be no concerted effort to arrive at a consensus of political accommodation for change, for a planned approach over the immediate, the medium and the long terms to seek not solutions, but even a level playing field of understanding and accommodation.

Secondly, Development has been suggested and explored as the “mantra” of those who know, to resolve the political stalemate.

Development for development sake is one thing, but using development as a power tool to soothe the deep seated wounds of war is another. Granting development is an immediate necessity in the North after nearly half a century of neglect, is hardly discounted or under estimated. It may take an equal period of time to put the North in par with the South, in development terms. But even to bring this development to bearable standards of life, liberty and the pursuit of happiness today, for the ordinary citizen in the North, is lacking in the extreme.

What is clearly seen in reality, is that all those who are claiming to be the champions of the “development mantra,” and particularly the International NGO’s and for that matter the local and national NGO’s, having weaned the people of the North on handouts over years, hardly want or are willing to see any” real” development.

Besides, Chambers of Commerce is sending delegations abroad to coerce the Tamil Diaspora to fund this development. As the Tamil Diaspora, is of two minds on development, without political accommodation, all this effort is seen as a charade, even in terms of development?

What development? There are innumerable hurdles to clear on the ground, should private Diaspora investment attempt to uplift the life of the private citizen in the North today.

IDP_HutFirst, there is an ingrown lethargy among the people, who appear hardly wanting to do a day’s work to earn a day’s living. The age of living off crusts of overseas aid and Diaspora remittances, meagre though it may be, in terms of any development besides sustenance, is sadly coming to an end. What is an adequate day’s work for an adequate recompense? Any real work hardly commences before 9.30 in the mornings, with one hour lunch breaks and downing tools at 5 p.m. Besides, it is not their fault to accommodate holidays, Sundays and poya days as no work days. Thus some observers feel that it will take years to shift this tendency for hard work, as monetary inducements are hardly compensatory.

Secondly, there is the encompassing bureaucracy at all levels of local and national government. Even the unrelenting admonishments and exhortations of President Rajapaksa to public service, to shift this ingrained attitude, authority or approach, call it what you may, many feel is falling on deaf ears. Serving the people is thus a prerequisite for progress, let alone development. One official told me that at the Jaffna Municipality, the staff is adept how to hinder anyone seeking assistance for development projects, hardly willing or wanting to promote initiative or enterprise. This appears deeply ingrained in their psyche. 

Thirdly, there is a serious lack of governance. This is and has been a known fact and feature of administration, over many governments in Sri Lanka, since independence. Perhaps, it is a legacy of not only colonial but also neo-colonial times.

Let us analyse the reasons for this practice or prevalence. For instance, if any private citizen in the North, or for that matter any Sri Lankan citizen from abroad, wishes, if not wants to invest in capital projects in the North,  insurmountable difficulties, antiquated  rules and red tape, mismanagement etc.etc, ad infinitum have to be encountered.

In the first instance, when investment funds are utilised the following series of hurdles prevent them from pursuing their ambition and dream to make Sri Lanka great. Allowing for culturally sensitive and sustainable development norms in investment in Sri Lanka is a necessity. However, new imposed severe restrictions in recent months instigated on past experience of unscrupulous private capital inroads and have put a damper on any ethical and sustainable investment. Anywhere and everywhere, filling all kinds of forms and applications take precedence over viability, sustainability and performance measurement of capital investment projects.

For instance, to construct a boundary wall, with neighbour’s consent within one’s own land, cannot today be approved without completion of books of forms for planning permission from the local municipality. It is thus an enormous task taking many months to submit applications, planning permission, approval to build a house, or to repair one’s dwelling. Imagine the bureaucracy involved in construction of a factory or a business premise in Jaffna, within such a setup.

Under mentioned is a list of a few hurdles at development, which will put off anyone, wanting to plough in development capital in Jaffna. Arguably, haphazard, unplanned development cannot be condoned, but without inducements, such as less bureaucracy, tax concessions, repatriation of funds, no development will take place, with or without Tamil diaspora participation. These sweeteners are becoming necessary; if not a necessary prerequisite for attracting capital development projects to the North.  Sri Lanka is no exception in having to compete with funds both from its diaspora and in attracting capital from abroad.

The Presidents Action Committee approval of Development Projects in the North is required. The following are some additional reported requirements for submission of applications for development project sanction for the North.
       
(a)The Appropriate Authority within the Ministry of Defence (MOD) to import and transport any equipment, materials from even within Sri Lanka to the North.
(b) The permission of the Government Agent of Jaffna to allow permit(s) to buy and transport “dune” sand from Nagar Kovil area for construction purposes.
(c)The Jaffna Municipality, Planning Department for submission and approval of
Building drawings, plans, purpose of use, etc. The RDA requirement is also tied up with this approval.
(d)The Local Police Station officer(s) to circumvent any breach of the peace.
(e)The Local Military Camp in the vicinity, for no previously known reason.

On clearing the above preliminary hurdle, then there is the severe shortage of construction materials, not to mention the import of labour. Skilled workmen masons, carpenters, etc are few and far between.

Of the construction materials, for instance a “landmaster” tractor load of Nagar Kovil dune sand costs Rs.9000/- (£50.00) with a permit and twice this sum if available elsewhere. Imagine the number of lorry loads of sand required to construct a house, leave aside a factory premise.

That is not all, permits are now required from the respective authorities to transport quarried limestone, ”kartu kallu.” Regardless of the above restrictions and materials shortage, life goes on in construction industry in Jaffna.

Despite the above forecast for development, there are some notable improvements seen within the limited time span of ten calendar months of 2010, in Jaffna and the North.

War_WidowsThe people of Jaffna are going about their way of life in a quiet, dignified and sustainable manner, as seen by the freedom of movement of citizens, both within the Peninsula and from other parts of Sri Lanka. Crime has reduced with most complaints at Jaffna Police, now to do with land and boundary issues, a field day for surveyors and lawyers.

Air conditioned Coaches now ply more regularly and to most destinations within Sri Lanka from Jaffna. Air Conditioned Coach travel cost to Colombo has come down considerably from Rs2200/-early this year when it was an elite monopoly. It now costs anything between Rs750/- and Rs1000/- (£5.00) one way, with competition. Minhin Air is expecting to provide regular services to Jaffna from Colombo at competitive rates, early in the New Year. The Railway line from Palai to Kankesanturai, constructed by Chinese engineers, will in the not too distant future provide safe and  easy access. It will not surprise anyone that with Government approval,the sealanes will also be open for travel from North to Hambantota  in comfort and reduce the sight of belching, unmaintained bus travel. 

Competition is driving prices down, not only in modes of travel but also for other goods and services. The facility of goods transit is keeping prices stable and in good supply. These are clearly the bonus peace dividends after the war. There is hardly any food scarcity in the North today. Exports of fish, prawns, red onions, bees honey are sent down daily to satisfy Southern gourmets. Soon palmyra “toddy” will feature in Colombo hotel menus.
 
Cement which was priced at Rs2500/-(approx £14.00) per bag during the war, has come down to Rs700/- (£4.00) or lower. Building Land however, is in great demand and premiums are being paid to secure prime land for housing in anticipation of demand at a later date. It is hoped that competition will also secure alternate sources of building materials supply.

In the due course of time, a concerted effort at establishing several Regulatory Authorities to monitor the irregularities, red tape and mal-administration of local authorities, will undoubtedly open channels of investment capital for development in Jaffna and the North. This will be the undeclared bonus for investment.

The world is our oyster, sooner rather than later, it is hoped innovative approaches at anticipated political reconciliation will not be forced upon from abroad, but will blend in with the home grown progress for nation building. The clamour by the government today, demanding the study of all three languages and business in both English and the national languages is no doubt, the fore runner for a political settlement.

இந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலும் விசேட உரை

india-obama.jpgஆசியா வுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். புதுடில்லியில் ஒபாமாவுக்கு இராஜ மரியாதை வழங்கப்பட்டது. செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இந்தியா இன்றைய உலகில் சிறிய நாடாக தோன்றவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அமைதியை நிலை நாட்டுதல் அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் என்பவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவு வைப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது என்றும் பராக் ஒபாமா உரையாற்றினார். இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுத் தருவதில் அமெரிக்காவின் அபிலாஷை என்னவென்பதையறிவதில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையாயிருந்தனர். பிரதமரின் இல்லத்தில் இராப்போசன விருந்திலும் ஒபாமா கலந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சி ஐ.நா பாதுகாப்புச் சபையில் அந்நாடு அங்கம் பெறும் சூழலை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஒபாமா வருவதையொட்டி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் முக்கியமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. அணு உலைகளை அமைப்பது, அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சம்மதிக்க வைப்பது, அயல்நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பது, போன்ற விடயங்கள் இங்கு விசேட கவனமெடுக்கப்பட்டன.

பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்ததை பாகிஸ்தான் பெரிதாக விரும்பவில்லை. ஒபாமா பாகிஸ்தான் வரவேண்டுமென்பது இஸ்லாமாபாத்தின் எதிர்பார்ப்பாகும் அத்துடன் சீனாவும் ஒபாமாவின் இந்திய விஜயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The purpose and significance of an MOU: Ravi Sundaralingam (Academic Secretary – ASATiC)

Democracy is an ideology only in the hands of those, who want to dictate. As a tool for the benefit of mankind, it is a practice based on the minimum of understandings reached (MOU) among largest number of people, who differentiate themselves as communities, societies, peoples and nations, and with many other identities, within a geographically defined region.

In this sense striving for such an understanding would be the main purpose of any democracy, which can be loosely stated as consensus building. In other words, democracy in action recognises that differences will and must exist if it to succeed. Differences will exist, as people have multi-faceted identities to suit their socio-economic and cultural needs, which some time have socio-historic basis. Differences must exist as any analysis or assumptions, idea or proposal have the inherent nature to be wrong due to the subjective nature of the subject, namely the nature and behaviour of people as individuals and collective.

If we subscribe to these observations, then democracy can only thrive when differences exist and trying to reach for an MOU is part of the process we call the social-transformation of a society. It is MOU that proposes and builds a community, nation, country, and a union such as India or European Union. It is the commitment and quality of such a search that binds these social-constructs together, and gives purpose and sustenance for human endeavour. Therefore at least in theory, no human issue can be excluded from these premises and left to some externally defined group or society.

It is our argument there cannot be a ‘unity’ among communities and peoples without MOU, defining the purpose for the unity and securing the necessary commitment towards it. Imposing an arbitrary unity on communities, largely feudal in their socio-economic and cultural activities has adverse effects as we have experienced of the Tamil communities in the recent past. The same is also true for the imposition of unity proposed under Sri Lanka, without a MOU to accept the plural nature of the peoples and the society.

Democracy as concept may be argued about, for its original ownership and about its practice within a particular political system. These have resulted in its identification with the West and the exploitation of the working masses within and outside. However, MOU need not suffer the same fate as the benign humans realised persuasion based on knowledge and understanding are superior to the strength and might of the forceful, therefore have been a feature of every society, from East to West and North to South, which had made that social transition.

MOU is also a restoring socio-cultural tool, especially among the societies where extremism and impositions of will of an individual have become the norm after a period of social attrition. Among the Tamil speaking communities it is observable, the transformation of those who conducted the most atrocious anti-humane acts as part of the LTTE or in the name of being against the LTTE, and denied all forms of democracy to others, speak the language of democracy, only among themselves in small groups. We see similar extreme transformations among some of the LTTE or one-time Tamileelam supporters, who have made the transition from being the admirers of Pirabahran to Mahinda Rajapackse in one clean sweep. This extreme oscillations like a pendulum, from one extreme end to other, is indicative that there are no equilibrium position they could recognise, a force to restore their self-confidence as ‘good-people’, who can do ‘good’, to reconcile with they said and did before and after, and the responsibilities thereof, which is for feudal societies is the failure of democracy in action, an absence of a MOU.

When Muslims were expelled from Jaffna almost all of us from the Jaffna communities kept quiet, now everyone of us have an Islamic-buddy, even to the extend of inviting Jihadies as ‘brovers’ into our bosoms. So we watch and hear the extremists renounce their past along with their own culpability or responsibility, by denouncing their past associates and leaders, and washing the consequences off their hands by loudness and abstinence from real action, except to propagate their self-interests.  With it they also renounce the fundamental causes that gave raise to the Tamil resistance movement and the peoples innate rights, without a care in the world about their positions just a few years ago.

Yet we should know, in a feudal society blaming and renouncing individuals for their indulgence would not do, when everyone can with all their problems find solace and refuge within a process of MOU.  In other words, MOU is also a cleansing process for the benefit of him or herself as well as the wider societies. The Truth Commission that sat through in sessions to receive the confessions of atrocities in South Africa was a process of MOU we can cite as an example, providing a basis for continuing social-dialogue though different avenues.

We cannot argue for the importance and purposes of having a MOU more so than we have already done and beyond many others who participate many other meetings and gatherings with this single purpose in mind. There were attempts within the Tamil movement when it was in its heady days attempts build consensus among the groups, knowing the socio-economic basis for the differences of the groups, under extraneous conditions to widen the differences. The ENLF was the product of this endeavour but, its benefits were forfeited by the LTTE by its criminal attacks on its fellow fighters, all in the name of arresting control to deny “outsider’s” penetration. Even for this betrayals those believe in the necessity of MOU persisted, and despite being confronted by adverse press proposed the possibility of achieving a result under the tutelage of Tamil Nadu CM, Kurunanithy, and even formed a discussion committee with the LTTE.

Though these efforts have nothing concrete to show for it, the relationships built and the experience shared has enabled many of those to go ahead and conduct the confidence building exercises, which materialised as the August the 2nd MOU Group. Its proclamations and resolution though are valid contributions to the process, it is only when others playing similar roles among the various other settings bringing their activities together, the real meaning of MOU can be achieved. It is to this end we must all work with a resolve as shown in the past irrespective of the obstacles.

தமிழ் நாட்டில் தொங்கும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் : விமல் குழந்தைவேல்

Vimal_Kulanthaivelஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் தனது நாவல்கள் மூலம் அறியப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இவர் தொடர்ந்தும் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். இவர் 2002 யூனில் தேசம் சஞ்சிகையின் இதழ் 8ல் எழுதிய இக்கட்டுரையை மீள்பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை மீள்பிரசுரம் செய்கிறோம். கொழும்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக தமிழக எழுத்துலகின் இலக்கியத் தசைகளாகத் தொங்கும்  புலம்பெயர் எழுத்தாளர்களின் கையெழுத்துப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் பொருத்தம் கருதி இக்கட்டுரை மீள்பதிவிடப்படுகிறது.

._._._._._.

Vimal_Kulanthaivelமருத்துவர்களாகவும் பொறியியலாளராகவும் இன்னும் பல துறை படிப்பாளிகளாகவும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுள் எழுத்தாளர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூறியவர் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

ஈழத்திலும் சரி புலம்பெயர் நாட்டிலும் சரி எப்படிப்பட்ட திறமையான எழுத்தாளனையும் அங்கீகரிக்கவோ முன்மொழியவோ தமிழ்நாட்டு இலக்கிய வாதிகளையே அன்றிலிருந்து இன்றுவரை நம்பி இருக்க வேண்டிய கட்டாய நிலையிலேயே ஈழத்து இலக்கியம் இருக்கின்றது. எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் நம் இலக்கியச் சிங்கங்களிடம் இன்னும் இல்லாததே இதற்குக் காரணம்.

டொமினிக் ஜீவா, சிவத்தம்பி போன்றோர் கூடத்தங்களை அங்கீகரித்துக் கொள்ள தமிழ் நாட்டைத் தான் நாடியிருக்கின்றார்கள். அந்த நாடல் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி, பாலுமகேந்திரா, சுந்தரராமசாமி, அனுராதா ரமணன், வைரமுத்து, மேத்தா ரகுமான், சிவசங்கரி இன்னும் இவர்களைப் போன்ற தமிழ் நாட்டில் பிரபல்யம் ஆனவர்களின் முன்னுரைகளைப் பெற்றுத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இன்று வரை அறியப்படாமலும் அறிமுகப்படுத்தப்படாமலும் அங்கீகாரம் பெறாமலும் இருக்கும் புலம் பெயர் எழுத்தாளர்களை தமிழ்நாட்டு இலக்கியம் அறியத் தேவை இல்லை. தாய் நாட்டுச் சகோதரர்களாவது கண்டு கொள்ளலாமே.

தமிழ் நாட்டில் அரசியலும், இலக்கியமும், சினிமாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிக் கொள்ளாமல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை அப்படியல்ல. எழுத்தாளனாகப் பெயர் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு தானும் ஆதரவாளனென்று ஆட்டுமந்தை பின்னால் ஓடும் குட்டி ஆடு போல ஓட வேண்டி இருக்கின்றது. வேற்று மொழி எழுத்தாளர்களின் பெயர்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளர்களை இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு வதை கண்டு ரசிக்க வேண்டி இருக்கின்றது. ஈழத்து இலக்கியத்தைக் கட்டிக்காக்க வந்த இந்த இலக்கி யக் காவலர்களை எத்தனை நாளைக்குத் தான்  ஒத்தூதிச் செல்ல முடியும்.

இலக்கியவாதிகள் போகட்டும் புலம்பெயர் சஞ்சிகைகள் மட்டுமென்ன. அவர்களுக்கும் இந்திய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தான் தேவைப்படுகின்றன. அல்லது மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கட்டுரைகளும் தான் தேவைப்படுகின்றன. இல்லையெனில் தங்களுக்குப் போட்டியான இன்னொரு சஞ்சிகையினரின் வாழ்க்கை அந்தரங்கங்களை கொஞ்சக் காலத்துக்கு விமர்சனம் செய்துவிட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம்  செய்து அவர்களை சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்வதை கொழும்புப் பத்திரி கைகள் (தமிழ்) விரும்புவதில்லையாம் என்பதே தனிச்சோகமான செய்தி. என்ன செய்வது அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அப்படி. தமிழ்நாட்டு சினிமா பற்றிய கவலையைத் தவிர அந்த வாசகனுக்கு வேறென்ன கவலை?

சரி இவைகள் தான் இப்படியென்றால் புலம்பெயர் எழுத்தாளனின் இன்னொரு புலம்பல் தன்னை சக புலம்பெயர் எழுத்தாளனே கண்டு கொள்வதில்லை என்பது தான். இதற்கு பல காரணங்கள் உண்டு. புலம்பெயர் எழுத்தாளர்களுள் மூத்த எழுத்தாளர்கள் என்றொரு வர்க்கம் உண்டு. அவர்களில் சிலர் தங்களுக்கென்றொரு வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வைத்திருக்கின்றார்கள். தாங்கள் எழுதுவதையும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதுவதையும் தவிர இவர்கள் வேறு எதுவுமே வாசிப்பதில்லை. ஜனரஞ்சக பத்திரிகைகள் வாசிப்பதில்லை என்பார்கள். தங்கள் வீட்டுமேசையில் எப்போதும் அந்தப் பத்திரிகைகள் இருக்கும். குறிப்பிட்ட சில பத்திரிகைகளில் தங்களின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கும். கேட்டால் தாங்கள் அனுப்பவேயில்லை எப்படியோ வந்திருக்கின்றது என்பார்கள். இந்தப் பின்கதவு கௌரவ இலக்கியவாதிகள் புதிய எழுத்தாளர்களிடம் நெருங்கிப் பழகுவதை கௌரவக் குறைவாக எண்ணுகின்றார்கள். இந்த நிலையில் புலம்பெயர் புதிய எழுத்தாளனின் ஆக்கத்தை இன்னொரு புதிய புலம்பெயர் எழுத்தாளன் கண்டும் காணவில்லை என்று கூறினால் இதை யாரிடம் சொல்லி அழுவது.

 ‘உன்னுடைய கதையொன்று பத்திரிகையில் வந்திருக்கே தெரியுமோ?’
 ‘ஆ……அப்பிடியே எப்பிடிக் கதை’
 ‘நேரமில்லை நான் வாசிக்கவில்லை’
 இது தான் புலம்பெயர் எழுத்தாளனுக்குரிய பண்பு.

இவைகள் எதுவும் தேவையில்லை. ஒரு எழுத்தாளன் அறியப்பட நல்ல விமர்சனம் ஒன்றே போதுமானது. அதற்குக் கூட ஆளில்லை. விமர்சனம் என்று அழைத்தால் மேடைச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாகவும் முகஸ்துதிக்காகவும் எழுத்தாளனை புகழ்ந்து தள்ளிவிட்டு மேடையில் இருந்து இறங்கி கூட்டம் சேர்த்து குறைசொல்வதற்கு என்றே நமது விமர்சகர்கள் பலர் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் பயம்.

குறைகளைச் சொல்லி விமர்சனம் செய்தால் விளம்பரமாகி சல்மான் ரூஷ்டியாகி விடுவானோ என்ற காழ்ப்புணர்ச்சிப் பயம். இந்த விதிகளைத் தாண்டியும் துணிந்து விமர்சனம் செய்பவர்கள் என்றால் லண்டனில் ஜமுனா ராஜேந்திரனையும், மு.நித்தியானந்தனையும் மட்டுமே குறிப்பிட வேண்டும். ராஜேந்திரனைப் பொறுத்தவரை சத்தியஜித்ரேயையும், பத்மா சுப்பிரமணியத்தையும் தவிர வேறு யாரையும் படைப்பாளிகள் என்றே சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்கிறார். ஆனாலும் அவரின் விமர்சனம் காத்திரமானதும், தேவையானதும் என்பது உண்மை. மு.நித்தியானந்தன் அப்படியல்ல. நல்ல படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களிடத்தில் உள்ள குறைகளை நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் சுட்டிக்காட்டிவிட்டே செல்வார். என்ன பயமோ பயமுறுத்தலோ தெரியாது. எந்தக் குளிரிலும் முகம் எல்லாம் வியர்த்துக் கொட்ட உணர்ச்சிவசப்பட்டு இவர் குறைகளைக் கூறி விமர்சனம் செய்வதே ஒரு தனி அழகு தான்.

ஒரு விமர்சனம் படைப்பாளியை வெளிக்கொணரும் விளம்பரம் என்பது உண்மையே. அதற்காக அது புகழ்ச்சி விமர்சனமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. புகழ்ச்சியை விட படைப்பாளியின் படைப்பில் உள்ள குறைகளைக் குற்றம் கூறியும் கருத்துக் கட்டுடைப்புச் செய்தும் செய்யும் விமர்சனத்துக்கு வலு அதிகம். அந்த சம்பிரதாயங்கள் கூட ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தில் மிகமிகக் குறைவு.

அரவிந்தனின் கவிதைத் தொகுதி வெளியீட்டுக் கூட்டத்தில் அரவிந்தன் கழுத்தில் விழுந்து கொண்டிருந்த புகழ்ச்சி மாலையை தடுத்தாட்கொணரவும் கவிதைத் தொகுதியின் கருத்தைக் கட்டுடைப்புச் செய்யவும் சபையிலிருந்து எழுந்த சேனன் அருகிலிருந்தவர்களால் தடுத்தாட் கொள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்தில் விமர்சனச் சுதந்திரம் இல்லை. சபைப்பேச்சுச் சுதந்திரம் இல்லை. தப்பித்தவறி சேனன் போன்றவர்கள் எழுந்தால் சபைகுழப்பி, தறுதலை என்ற பெயர்களுடன் தான் உட்காருகிறார்கள். தமிழ் இலக்கியம் என்ற வகையில் தமிழ் நாட்டைத்தான் நாம் உதாரணத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அங்கு இலக்கிய விமர்சனச் சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது. எழுத்தாளனின் படைப்பை எரிக்கவும் எதிர்க்கவும் அவனை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் கூட விமர்சனம் என்ற வழிமுறை உதவுகின்றது. புலம்பெயர் இலக்கியத்தில் அப்படியல்ல. இருந்தும் விதிவிலக்காக பிரான்ஸில் மட்டும் வருடத்துக்கு ஒரு தடவை நான்கு பெண்களாவது சந்தித்து குய்யோ முய்யோ என்று விமர்சனக் கத்தல் செய்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோசம்.

ஈழத்திலிருந்து அடிக்கடி எழுத்தாளர்களென்றும் இலக்கியவாதிகளென்றும் பலர் வருகின்றார்கள். புலம்பெயர் எழுத்தாளர்களை அவர்கள் அறிந்தவர்களும் இல்லை. அவர்களை புலம்பெயர் எழுத்தாளர் பலர் அறிந்திருப்பதும் இல்லை. அவர்கள் கூட வந்ததும் வராததுமாக

நீங்கள் எல்லாம் ஏன் இந்தியாவுக்குப் போய் எங்கள் இலக்கியத்தை விற்கின்றீர்கள் என்கிறார்கள். சரி உங்களிடமே வருகிறோம் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்றால் ஆழம் தெரியாமல் காலைவிட்டு எங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள். காரணம் அவர்களிடத்தில் அறியப்படவில்லை. அறியப்படாததற்கு காரணம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களின் காழ்ப்புணர்ச்சி.

விமர்சனம் எழுத்தையும் எழுத்தாளனையும் வெளிப்படுத்தும், தெரியப்படுத்தும். அதற்குரிய ஆட்கள் தான் நம்மிடத்தில் இல்லை. விமர்சனமும் ஓர் இலக்கியம் தான். அந்த இலக்கியம் ஈழத்தில் குறைவு. தன்னை அங்கீகரிக்காத ஒருவரை மேடையேறி பூதம் என்று சொல்லி அவரின் உருவ அமைப்பை கேலி செய்யும் விமர்சனப்பாணியை கைவிட்டுவிட்டு நல்ல விமர்சனம் மூலம் புதிய புலம்பெயர் எழுத்தாளர்களை வெளிப்படுத்தும் பரந்த மனம் வேண்டும். இல்லையேல் கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் தமிழ் நாட்டின் பிரபல்யமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டு தான் அலைய வேண்டும்.

சமூகச் சீரழிவுகளில் மௌனம் காக்கும் தமிழ் ஊடகங்கள்: ரி சோதிலிங்கம்

Social_Censorship தமிழ் சமூகம் குறிப்பாக யாழ் சமூகம் ஒரு இறுக்கமான சமூகம். இச்சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் வெளியார் மீது பழிபோடுகின்ற போக்கு காலம்காலமாக இடம்பெறுகின்றது. இந்த நிலையைப் பேணுவதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது எந்த வகையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவவில்லை. மாறாக கூடுதலான சீரழிவிற்கே வழிவகுத்தது.

பொதுவாக யாழ் சமூகத்தில் சமூகப் பிரச்சினைகள் சாதிப் பிரச்சினைகள் என்று வரும்போது எமது தமிழ் ஊடகங்கள் பிரச்சினைகளை மூடிமறைத்து விடும். அதற்கான காரணமாக எப்போதும் சொல்லப்படுவது இப்படியான சாதி சமூகப் பிரச்சிகைளை அம்பலப்படுத்துவதால் அவற்றுக்கு விளம்பரம் கொடுத்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தி பிரச்சினைகளை பெரிசு படுத்தக்கூடாது என்பதேயாகும். இப்படியான கருத்தை யாழ் சமூகம் பல சகாப்தங்களாக, இன்றும் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது.

யாழ் பத்திரிகைகளும் மற்றைய பிரதேச ஊடகங்களும் இப்படியான கருத்தை கொண்டவர்களின் கைகளால்தான் நடாத்தப்படுகின்றது. இதுவரை யுத்தம் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்குரிய அம்சமாக இருந்ததால் அனைத்து கவனங்களும் யுத்தம் சார்ந்ததாகவே இருந்தது. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் சமூகத்தின் ஏனைய பிரச்சினைகள் முன்னிலைக்கு வந்துள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பேசப்படும் சமூகச் சீரழிவுகள் சாதிப் பிரச்சினைகள், ஊர்ப் பிரச்சினைகள் என்பன பத்திரிகைகளிலும் பொது ஊடகங்களிலும் பொதுவாக வெளிவரத் தயங்குகின்றன. இது பத்திரிகைகளை நடாத்தும் நிறுவனத்தினரின் பொறுப்புணர்விலேயே தங்கியிருப்பதால் சமூகச் சீரழிவுகள் பற்றிய செய்திகளை மக்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விடுகின்றது.

ஒரு காலத்தில் யாழ் இயக்கங்களினால் சிறு களவுகளுக்கும் கூட மரண தண்டனைகள் வழங்கப்பட்டது. அதன் பின்னரான இயக்க மோதலின் போராளிகள் கொல்லப்பட்டனர். இவை எதனையும் யாழ் பத்திரிகைகள் கண்டனம் செய்யாமலும் இப்படியாக செய்யப்பட்ட கொலைகள் ஈறாக பத்திரிகைகளில் பிரசுரிக்காமலும் போயிருந்தன. அதேவேளை கொன்றுவிட்டு வந்த கிட்டு உட்பட புலிகளுக்கு கொலை செய்த களைப்புக்கு கோலா கொடுத்த செய்தி மட்டும் பெரிதாக வெளிவந்திருந்தது. இதனை புலிகளுக்கு பத்திரிகைகள் பயந்து இருந்தனர் என்றுமட்டும் சொல்லிவிட முடியாதுள்ளது. புலிகளை தமது சுயநலத்திற்கு ஆதரவளித்த தமிழ் பத்திரிகைகள் புலிகளின் தவறில் உள்ள ஆபத்துக்களை சுட்டிக்காட்டாமல் போனது பத்திரிகைகளின் தவறும் தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்களை தவறாக வழிநடாத்திய குற்றமும் இந்த பத்திரிகைகளுக்கு உண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் நடாத்தப்பட்ட பத்திரிகைகளும் இதற்கு விதிவலக்கல்ல.

அதேபோல இயக்கங்களின் பிரதேசங்களின் ஜக்கியம் பற்றியும் இந்த பத்திரிகைகள் மெளனம் காத்திருந்ததும் இன்று விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அதேகாலங்களில் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை முழுமையான எந்தவித விமர்சனங்களும் இன்றி கண்டனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் தமக்குரிய ஊடக கடமைகளை சரியாக செய்யத்தவறிவிட்டன ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் காட்ட வேண்டிய அக்கறைகளிலும் தவறியுள்ளன. புலிகளின் ஆட்சிக்காலத்தில் புலிகளினால் நடாத்தப்பட வேண்டிய ஜனநாயக நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்த மறந்து போயிருந்தன. அல்லது தவிர்த்தன.

தற்போது யாழ் சமூகத்தில் எழுந்துள்ள சமூகச் சீரழிவுகள் யாழ் சமூகத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துபவைகள் அல்ல. இப்படியான பல பிரச்சினைகள் முழு இலங்கையிலுமே எல்லா இனங்களிடையேயும் எல்லா சமயத்தவர்களிடையேயும் உருவாகியுள்ள சமூகச் சீரழிவேயாகும். போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் அனாதரவாக்கப்பட குழந்தைகள் புலிகளின் சிறுவர்கள் சேர்ப்பிற்க்கு பயந்து திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்வயதினரும் அவர்களின் குடும்ப பிரச்சினைகளும் கணவனை இழந்து விதவையானவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைத்துக் கொள்வதும் மனைவியை இழந்து குடும்பம் இழந்தவர்களும் என்பவற்றுடன் இளம்வயதுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தலும் பாடசாலை மாணவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களை பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கும் கயமைத்தனங்களும் சமூகத்தில் பல துன்பியல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன.

இவற்றுடன் தமிழ் சிங்கள முஸ்லீம் சமூகங்களிடையே போதைவஸ்து பாவனை விபச்சாரம் என்பவற்றின் அதிகரிப்பும் சமூகச் சீரழிவை மேலும் பல மடங்கு மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன. கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் இந்த சமூகச்சீரழிவின் தாக்கத்தை, சமூகச் சீரழிவின் கயவர்களை யுத்தத்திற்குள் ஒளிந்துகொள்ள உதவியுள்ளது. ஜனநாயக நடைமுறையற்று இருந்த சமூகத்தில் இவர்கள் தமது கயமைத்னங்களுக்கு இலகுவாக இடம் தேடிக்கொண்டனர். இந்த சமூகச் சீரழிவின் நாயகர்களில் பலர் தமது அயோக்கியத்தனங்களுக்கு தேடிக்கொண்ட இடம் புலி இயக்கமும் அதன் ஆதரவாளன் என்ற பெயருமேயாகும்.

இன்று புலிகளின் அழிவின் பின்னர் இந்த கயமைத்தனங்களின் இருப்பிடமாக யாழ் பல்கலைக்கழகமும் யாழ் பாடசாலை சமூகமும் இருந்துள்ளது வெளிப்படையாகின்றது. இந்த சீரழிவின் வெளிப்பாடுகளே இன்று யாழ் சமூகத்தில் யாழ் அரச அதிபர் யாழ் முற்போக்காளர்கள் இந்த சீரழிவிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்னர். பல வருடங்களாக நடைபெற்று வந்த யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சீரழிவுகளை யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகள் ஊடகங்கள் நிச்சயமாக தெரிந்தே வைத்திருந்திருக்கும். ஆனால் இப்படியான சீரழிவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் யாழ் கல்விச்சேவைகள் யாழ் சமூகத்தின் பெயர் என்ற தமது வரட்டு கெளரவத்தை பாதுகாக்கவே இவற்றை மூடிமறைத்து வெளிப்படுத்தாமல் விட்டுள்ளனர் என்றே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

அண்மையில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாசாலை மாணவர்களின் சீரழிவுகள் பற்றி வெளிப்படையாக கருத்து வைத்திருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். சமூகத்தில் உள்ள சீரழிவுகளை வெளிப்படையாக பேச ஆரம்பிக்கும்போதுதான் அந்த சீரழிவிலிருந்து அந்த சமூகத்தை பாதுகாக்க முடியும்.

இமெல்லடா சுகுமார் போன்ற தமிழ் சமூகம்பற்றி விழிப்புணர்வு கொண்ட அக்கறை கொண்ட போர்க்கால அனுபவம் கொண்ட தமிழ் குலப் பெண்ணின் கருத்துக்கு நாம் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி சமூகத்தில் உள்ள சீரழிவுகளில் இருந்து மீள பின்புலம் கொடுத்து உதவ வேண்டும். கடந்த 40 வருட கால அரச அதிபர்கள் வரிசையில் இப்போது தான் சமூக விழிப்புணர்வு கொண்ட துணிவு மிக்க அரசஅதிபர் ஒருவரை யாழ் தமிழ் சமூகம் பெற்றுள்ளது.

இந்த அரச அதிபருக்கு ஆதரவும் ஒத்தாசையும் வழங்கும் பொறுப்பு வட கிழக்கு மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் உள்ளது. போராட்டம் புரட்சி என்று கடந்த 30 வருடங்களாக பேசிய பொறுப்பு வாய்ந்தவர்களினதும்இ பொறுப்புள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் ஆதரவு தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளுக்கு அடுத்து தமிழ் பிரதேசங்களில் எழுந்து கொண்டிருக்கும் சமூகச் சீரழிவுகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் இச்சீரழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இமெல்டா சுகமார் போன்றோருக்கு முடிந்த அளவு ஆதரவினை வழங்குவதும் தேவையாக உள்ளது.

தமிழ் சமூகத்தில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டுமாயின் இந்த மேற்கூறும் சமூகச் சீரழிவுகள் சாதியப் பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். இந்த சீரழிவுகளுக்கு ஆதரவும் பின்புலமுமாக இருப்பவர்களில் சிலரின் கைகளில்இ சமூகத்தில் சில விடயங்களை முன்னெடுத்துக் கொள்ளக் கூடிய அல்லது செயற்படுத்தும் வல்லமையும் அதிகாரமும் கொண்டவர்களாக உள்ளதையும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படியானவர்கள் அரச சார் நிறுவனங்களிலும் கல்வி சார் நிறுவனங்களிலும் பொதுமக்களின் சமத்துவத்தை பேண வேண்டிய அரச அலுவலகங்களிலும் கடைமையாற்றுகின்றனர் என்பதே உண்மையாகும். இப்படியான பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளவர்களில் பலர் இன்றும் சாதிய வெறியர்களாகவும் சாதி என்ற ஒருகாரணத்திற்காக சில குறிப்பிட்டவர்களின் சலுகைகளை உதவிகளை அவர்களுக்கு கிடைக்காமல் செய்வதமாக செயறபடுவதாக பல யாழ் மக்கள் கருத்துக் கொண்டுள்ளனர். இப்பேர்ப்பட்ட பேர்வழிகளை உடனடியாக ஊடகங்கள் அம்பலப்படுத்தி இந்த அயோக்கியத்தனங்களை களைய முன்வர வேண்டும்.

வெறுமனே இப்படியான சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்பது மட்டும் போதாது. தொடர்சியாக எழும் சீர்கேடுகளையும் ஜனநாயக மீறல்களையும் சாதிவெறி அகங்காரங்களையும் கையாளப்பட்டு சமூகத்தில் இவற்றிக்கான அடிப்படைக் காரணங்களின் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடிய கல்வி முறைமையும் புதிய சட்டவரையறைகளும் சமூகத்தில் இணைக்கப்படல் வேண்டும்.

இதைவிட கடந்த 30 வருட பயங்கரவாதப் போரில் ஜனநாகத்தின் பெறுமதி புரியாமல் வளர்ந்து விட்ட ஒரு சந்ததியினரின் அறியாமையும் இந்த சீர்கேடுகளுக்கு உதவி புரிவதாகவே உள்ளது. இது முக்கியமாக எந்த பிரச்சினைகளை கையாளுவதிலும் அதற்கான நடுநிலைமையை பேணாது புலிகளின் ஆட்கள் என்றால் அது என்னவாக இருந்தாலும் சரி என்றதும் புலிகளின் தேவைக்கு என்றால் அது எப்படியாகிலும் கொடுத்துவிட வேண்டும் என்றதும் சிறு வயதினரை கட்டாய ஆட்சேர்ப்புககு உட்படுத்தியதின் விளைவுகளால் சிறுபராயத்திலே திருமணங்கள் பல நடைபெற்றதும் புலிகளின் ஆதரவாளர்களால் அரச படைகளால் வன்முறைக்குட்பட்ட குழந்தைகளில் மனநிலைகளால் பாதிக்கப்பட்டதுமாக ஒரு வன்முறை சக்கரம் தமிழ் சமூகத்தில் இன்று வரையும் சுழன்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவை சில வேளைகளில் வன்முறையாகவும் பாலியல் வக்கிரங்களாகவும் வெளிவருகின்றது.

கடந்த 30 வருட தமிழர் போராட்டத்தினிடையே வளர்ந்த தமிழ் ஊடகங்கள் இன்று வரையிலும் தமது கடைமைகளில் சமூகத்தின் தேவைகளை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவினர் சம்பந்தமாகவே சார்பாகவே இயங்கியுள்ளனர். இந்த ஊடகங்கள் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கவில்லை என்பதை கடந்த தேர்தலின்போது யாழ் ஊடகங்களின் நடத்தைகளிலிருந்து அவதானிக்க முடிந்தது.

யாழ் சமூகத்தில் நடைபெறும் சமூகச் சீர்கேடுகள் பற்றி கூறிய கருத்தை பல பத்திரிகைகள் பிரதிபலிக்க தவறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வவுனியாவில் நடைபெற்ற நகரசுத்தி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தவறியும் அம்மக்களுக்கு நீதிபெறும் வழிவகைகள் இன்று வரையில் அடையாளம் காணப்படவில்லை. தமிழ் ஊடகங்கள் ஊடகவியலை தமது ஊதியம் பெறும் தொழில் என்று மட்டும் பாராமல் இது சமூகத்தின் பாரிய கடமை என்ற உணர்வை உள்வாங்கியும் தற்போது உலக பொருளாதார சந்தைக்கு ஏற்ற சமூகத்தை எதிர்காலத்தில் எதிர்நோக்கியும் செயற்பட தயாராகிக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகளையும் சமூகப் பலவீனங்களையும் சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஆராயவேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழர்கள் கல்தோண்றி மண்தோண்றாக்காலத்தில் தேண்றிய மூத்த குடிகள் உயர்ந்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் கொண்டவர்கள் என்று மூச்சுவிடாமல் முழங்குவது தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகாது. சமூகப் பிரச்சினைகளைப் பொதுத் தளத்தறிகுக் கொண்டு வந்து விவாதிப்பதன் மூலமாக மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தையும் சமூக மாற்றத்தை நோக்கி நகர்த்த முடியும். இவ்விடயத்தில் பத்திரிகைகள் காத்திரமான ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

பராக் ஒபாமா இந்தியா வருகை

obama.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஒபாமா. இந்தியா புறப்பட்டார் வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது. மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு முதல் தொடர் வெற்றி

upul.jpgஅவுஸ் திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவை தொடரொன்றில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண் டாவது ஒருநாள் போட் டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத ஆஸி. அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கள மிறங்கினார். இந்நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க, டி. எம். டில்ஷான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இருவரும் இணைந்து 119 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் டில்ஷான் 57 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மஹேல ஜயவர்தனவினால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது. எனினும் 3ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் இணைந்த உபுல் தரங்க இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். இதன்போது இருவரும் இணைந்து 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 186 ஆக அதிகரித்தது.

இதனிடையே 34 ஆவது ஓவரில் வைத்து மழை குறுக்கிட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 41.1 ஆவது ஓவரில் வைத்து மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்போது இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டி நீண்ட நேரம் மழையால் தடைப்பட்டதால், இலங்கை அணியின் இன்னிங்ஸ் 41.1 ஓவர்களுக்கே வரையறுக்கப்பட்டது. இதில் இலங்கை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 112 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் சங்கக்கார 52 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை குவித்தார். இதன்படி டக்வர்த் – லுவிஸ் முறை அடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 39 ஓவர்களில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் முக்கியமான தருணங்களில் பறிபோயின.

இறுதியில் ஆஸி. அணி 39 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் ஆஸி. ஒரு நாள் அரங்கில் தொடர்ச்சியாக 7ஆவது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த 13 ஆண்டுகளில் ஆஸி. அணி ஒருநாள் அரங்கில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இலங்கை அணி ஆஸி. மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றை வென்று சாதித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை சார்பில் சிறப்பாக செயல்பட்ட உபுல் தரங்க போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.