கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்

pc-shoe.jpgமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார். அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார். ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை. இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.

ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

லண்டனில் தமிழர்கள் பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் 5வது நாளாகவும் போராட்டம்.

london-today123.jpgஇலங் கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது.

(1வது இணைப்பு)

பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறத்தக் கோரி 6 ஆயிரம் தமிழர்கள மறியல்ப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நேற்று 6ம் நாள் ஏப்ரல் 2009 பகல் 12 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை நீடித்த இந்தப் போராட்ம் இரவு லண்டன் பொலீசார் தமிழ்மக்களை பாராளுமன்ற முன்றலிருந்து வெளியேறும்படி கேட்டும் சில வன்மைத்தனமான முயற்ச்சிகளையும் செய்துள்ளனர், தமிழ் மக்கள் எல்லாவித முயற்ச்சிகளையும் சாமாளித்து இன்று பகல் வரையில் தொடர்ந்து இந்த மறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதே வேளை லண்டனில் உள்ள மற்றைய மக்ளையும் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளனர்; நேற்று இரவு ஜரோப்பாவின் இதர பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் இப் போராட்டத்திற்கு பங்கு பற்ற பஸ்கள் மூலம் வருகை தந்துள்ளனர்.

இந்த பாராளுமன்ற முன்றலில் குழந்தைகள், முதியவர்கள், பாடாசாலை மாணவர்கள் என கிட்டத்தட்ட 6ஆயிரம் பேர்கள்வரையில் பங்கு பற்றியுள்ளனர். இப்போராட்ட ஏற்ப்பாட்டாளர்கள் இந்த போராட்டம் பிரித்தானியா, இலங்கைத் தமிழர்களின் இன அழிவை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் வரையில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

(2வது இணைப்பு)

பிரித்தானிய பாராளுமன்ற முன்றல் ஆர்ப்பாட்டத்தில் மோதல்.
london-parliment-meeting2.jpgஇலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதலின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடிகள் மற்றும் சில பொருட்கள் வீசப்பட்டமையால் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் சற்று நேரம் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

(3வது இணைப்பு)

பிரித்தானியாவில் இருவர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்
 
இலங்கையில் இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

1) இலங்கையில் உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

2) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்துத் தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்துப் பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்,

3) வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்,

4) இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,

5) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் –

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி இரு இளைஞர்களும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் இளைஞர்கள் இருவர் தொடங்கியுள்ள இந்த சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் தமிழர்களின் எழுச்சி ஒரு கொந்தளிப்பு மிக்க நிலையை எட்டியிருப்பதாக இணையதள செய்தி ஒன்று கூறுகின்றது. 

(4வது இணைப்பு)

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானிய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் இடம்பெறும் போரினை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான தமிழர்களின் இப்போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 400 பேர்வரை தொடர்ந்தும் போராட்டத்தினை மேற்கொள்வதாக பிபிசி செய்திச் சேவை தெரிவிக்கின்றது.

போராட்டத்தின் போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்வாழ் தமிழர்கள் மேற்கொள்ளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரைக் கைது செய்யாது பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்களுடன் செவ்வாய்க்கிழமை தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக மெற்றோபொலிடன் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இம்முயற்சி பலனளிக்காது இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்களின் இப்போராட்டம் தொடர்கிறது.

அதேவேளை விடுதலை புலிகள் அமைப்பு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகையால் ஆர்ப்பாட்டத்தின் போது அதன் கொடிகள், இலச்சினைகளைப் பயன்படுத்த வேண்டாமென பொலிஸார் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(5வது இணைப்பு)

london-today123.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த இங்கிலாந்து அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 6ஆம் தேதி மதியம் துவங்கிய ஆர்ப்பாட்டம், தற்போது மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. ஏராளமான தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இரவும், பகலும் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் வைத்துள்ள விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை கைவிட வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை வைத்திருந்த இருவரை தீவிரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

(6வது இணைப்பு)

இலங் கையில் உடனடியானதும்இ நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிஇ பிரித்தானியா நேரப்படி இன்று 11th April 2009 பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகியது.

ceasefire.jpg

இப்பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது. இந்த ஊர்வலம் பிரித்தானிய தமிழ்ர்கள் தமது ஆதங்கத்தை பிரித்தானிய அரசக்கும் தமது எதிர்ப்பை இலங்கை அரசக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வன்னியில் யுத்த யுத்த்ததை நிரந்தரமாக நிறுத்தும்படி வற்புறுத்தியது.

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்
வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்
தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்
A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

பாகிஸ்தான் சாரதி கலீலுக்கு லேக்ஹவுஸில் நேற்று கெளரவம்

mohamed-kaleel.jpgபயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீலுக்கு நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமாரவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் இலங்கை வந்துள்ள கலீல், நேற்று பிற்பகல் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்தார்.

பிற்பகல் நான்கு மணியளவில் வருகை தந்த அவரை அதிகாரிகளும் ஊழியர்களும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து லேக்ஹவுஸ் நிறுவனத்தின் வரவேற்பு மண்டபத்தில் நடந்த நிகழ்வில் கலீல் கெளரவிக்கப்பட்டார்.

கலீல் தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோருடன் வருகை தந்திருந்தார். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து டெயிலிநியூஸ் பத்திரிகையில் வெளிவந்த சிறப்புப் பக்கத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் கலீலுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப் பத்திரிகையின் வாசகர் ஒருவரால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா பெறுமதியான காசோலை பத்திரிகை ஆசிரியரால் கலீலிடம் கையளிக்கப்பட்டது. ‘சிட்டி சைக்கிள்’ நிறுவனம் சார்பாக ஷிஹான் என்பவர் சர்வதேச தரம் வாய்ந்த சைக்கிள் ஒன்றை இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

கலீலும் குடும்பத்தாரும் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் தேவையான காப்புறுதியினை ஏசியன் எலைன்ஸ் காப்புறுதி நிறுவனம் சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரமால் ஜயசிங்க வழங்கினார். கலீலும் தான் கொண்டு வந்திருந்த அன்பளிப்புக்களை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டார். நிறுவனத்தின் பல பணிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலீல், இலங்கையில் இருக்கின்றபோதும் பாகிஸ்தானில் இருப்பது போன்றே உணர்கிறேன் என்றார். கலீல் என்னை இலங்கைக்கு அழைத்தமைக்காக லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு நன்றி கூறுகின்றேன். ஒரு இரவில் என்னை ஹீரோவாக்கினீர்கள். இதை நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு நான் இறைவனுக்கே நன்றி கூறவேண்டும். நான் இங்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீண்டும் பாகிஸ்தான் வந்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பமாகும்.

அதுபோல் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு என்றும் நிலைத்திருக்க வேண்டும். சம்பவம் இடம்பெற்றபோது எனது தாயை நினைத்தேன். எனக்குள் புதிதாய் ஒரு வேகம் பிறந்தது. கிரிக்கெட் அணியினரை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்து விட்டேன் என்றார்.பாகிஸ்தான் சாரதி கலீலுடன் அவரது மனைவி மற்றும் மைத்துனரும் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் பொது முகாமையாளர் அபய அமரதாஸ உரையாற்றும்போது, கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அறிந்ததும் எமது நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமார, கராச்சியிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எயார்மார்ஷல் ஜயலத் வீரகொடியுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தான் சாரதியை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். அவரது விருப்பத்தின் பேரிலேயே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதென கூறினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளருமான பிரேமசார எப்பாசிங்க உரையாற்றுகையில், கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டையே காப்பாற்றியுள்ளார் எனக் கூறினார். இஸ்லாமியர்களின் புனித குர்ஆன், ஹதீஸில் ஒருவருக்கு நன்றிக் கடன் செலுத்துவது இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக நினைத்தே இன்று நாம் கலீலை கெளரவிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

புலிகளின் மேலும் 4 படையணிகளின் நான்கு தலைவர்களும் உயிரிழப்பு

puthukku-05-04.jpgபுதுக் குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் மேலும் நான்கு படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

சிலம்பரசன், கோபால், மோகனா மற்றும் கீர்த்தி ஆகிய நான்கு தலைவர்களே கொல்லப்பட்டுள்ளதுடன் அன்பு மற்றும் அஸ்மி ஆகிய இரு தலைவர்களே படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நடத்திய தேடுதல்களில் மாத்திரம் கொல்லப்பட்ட புலிகளின் 284 சடலங்களையும், பெருந் தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகளின் பிடியிலிருந்த சுமார் 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை படையினர் முற்றாக விடுவித்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ள 20 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட பிரதேசம் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். புலிகளின் மேலும் நான்கு முக்கிய படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளமையும், மற்றுமிரு தலைவர்கள் படுகாயமடைந்துள்ளமையும் நேற்றைய தினம் படைத்தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட நால்வரில் புலிகளின் ‘ராதா’ படையணியின் தலைவர் சிலம்பரசன், புலிகளின் பீரங்கி படைப்பிரிவின் தலைவர் கோபால், புலிகளின் ‘சோதியா’ படைப்பிரிவின் சிரேஷ்ட தலைவர் மோகனா மற்றும் புலிகளின் ‘ஜயந்தன’ படையணியின் தலைவர் கீர்த்தி ஆகியோர் அடங்குவர்.

இதுதவிர புலிகளின் ‘ராதா’ படையணியின் பிரதித் தலைவர் அன்பு மற்றும் கண்ணிவெடி பிரிவின் பொறுப்பாளர் அஸ்மி ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

படையினரின் வெற்றிகரமான படை நடவடிக்கைகளின் மூலம் நாளுக்கு நாள் தமது முழுக் கட்டுப்பாடுகளையும் இழந்த புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்பொழுது தமது முக்கிய தலைவர்களையும் இழந்து வருவதாக தெரிவித்தார். இது அவர்களது தோல்வியை எடுத்துக் காட்டுவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திக் கொண்டு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவிய புலிகள் அங்குள்ள அப்பாவி பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திவரும் நிலையில் புலிகளின் பிடியிலிருந்து சிவிலியன்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை முற்றாகப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

2127 பேர் படையினரிடம் தஞ்சம்

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகள் பிடியிலிருந்து தப்பிவந்த 2127 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். படையினரின் பாதுகாப்பை நாடி தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய 65,189 பொதுமக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

503 குடும்பங்களைச் சேர்ந்த 2127 பொது மக்கள் வருகை தந்துள்ளனர். 429 ஆண்கள், 779 பெண்கள், 327 சிறுவர்கள் மற்றும் 592 சிறுமிகள் இவர்களில் அடங்குவதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தாலி பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் பலி

italyearthquake.jpgஇத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும் குறைந்தது 1500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ரோமுக்கு வடகிழக்கே உள்ள பழங்கால நகரான ல அக்விலா நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அருகில் இருந்த பல மலைக் கிராமங்கள் சேதங்களுக்கு உள்ளாயின.

ல அக்விலா நகரில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தில் அழிந்து போயின. அதன் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நில நடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்காணவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராகுல் டிராவிட் உலக சாதனை

_rahuldravid.jpgகிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு காட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.

திங்கட்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நடைபெற்ற போட்டியில், அந்நாட்டு ஆட்டக்காரர் டிம் மெக்கிண்டோஷ் அடித்த பந்தை காட்ச் பிடித்த போதே இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

இது டெஸ்ட் போட்டியில் அவர் பிடிக்கும் 182 வது காட்ச்சாகும். ஆஸ்த்ரேலியாவின் மார்க் வாஹ் அவர்களின் சாதனையை அவர் முறியடித்திருந்தார்.

பாதுகாப்பு வலயத்தில் ஐ.சி.ஆர்.சி. தனது பணிகளைத் தொடர்கிறது

முல்லைத் தீவில் புதுமாத்தளன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் செஞ்சிலுவைச் சர்வதேசகுழு தனது மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அந்த அமைப்பின் பேச்சாளர் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு இத்தகவலை நேற்றுத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்களுக்குமான மனிதாபிமானப் பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளை முன்னெடுக்க நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் புதுமாத்தளன் பகுதியில் இருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் எமது பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர்  என்றார் அவர்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாக கருதி அணுக வேண்டும் – ஒபாமா

globe-news.jpgதுருக்கியின் நிலைப்பாடானது முஸ்லிம் நாடுகளுக்கு முக்கிய சமிக்ஞையொன்றை வெளிப்படுத்துவதாகவும் ஐரோப்பாவில் அந்நாடு உறுதியாக நிலைபெற்றிருப்பதற்கு களம் அமைத்துத் தருவதாகவும் உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக அந்நாட்டுக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள பராக் ஒபாமா, துருக்கியின் ஸ்தாபகர் அதாதுருக்கின் ஞாபகார்த்த ஸ்தலத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடொன்றுக்கு ஜனாதிபதி பதவியேற்ற பின் ஒபாமா விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான துருக்கியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.  துருக்கிக்கு விஜயம் செய்வதற்கு முன்பு ஞாயிற்றுகிழமை பராகுவேயில் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.

“அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அநீதி, சகிப்புத்தன்மையின்மை, வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்காளர்களாகவும் கருதி அணுகுவதுடன் பரஸ்பர அக்கறை மற்றும் பரஸ்பர கௌரவம் என்பவற்றின் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளைக் கட்டியெழுப்ப ஊக்குவிக்கவும் வேண்டும் என ஒபாமா கூறினார். 

ஜனநாயக மக்கள் முன்னணி – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு மாவட்டங்களில் இணைகிறது : ரவூப் ஹக்கீம்

election_ballot_cast.jpgஜனநாயக மக்கள் முன்னணி இம்முறை மேல்மாகாண சபை தேர்தலில் இரு மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காது களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாக தம்மை நிலை நிறுத்தும் பொருட்டு ஒற்றுமையுடன் இத்தீர்மானத்தினை இரு கட்சிகளும் எடுத்ததாக ரவூப் ஹக்கீம் இன்று கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிரணியிலுள்ள பல சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நாம் பாடுபடுவோம். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்களின் உரிமை இழக்க நேரிடும் சந்தர்ப்பத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இது ஒரு ஆரம்பகட்டமே.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியுடன் 200 சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 7 ஆம் திகதி ‘சுதந்திரத்திற்கான மேடை’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளன. இந்த இயக்கத்திலும் இரு கட்சிகளும் இணைந்து செயற்படவுள்ளோம். தேர்தல் சட்டங்களை மறைமுகமாக மாற்றும் முயற்சியில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மற்றக்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களைத் தனது பக்கம் அழைத்து, பதவிகள் வழங்கி, பெரும்பான்மை பலத்தை இன்றைய அரசு தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.