அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாக கருதி அணுக வேண்டும் – ஒபாமா

globe-news.jpgதுருக்கியின் நிலைப்பாடானது முஸ்லிம் நாடுகளுக்கு முக்கிய சமிக்ஞையொன்றை வெளிப்படுத்துவதாகவும் ஐரோப்பாவில் அந்நாடு உறுதியாக நிலைபெற்றிருப்பதற்கு களம் அமைத்துத் தருவதாகவும் உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக அந்நாட்டுக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள பராக் ஒபாமா, துருக்கியின் ஸ்தாபகர் அதாதுருக்கின் ஞாபகார்த்த ஸ்தலத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடொன்றுக்கு ஜனாதிபதி பதவியேற்ற பின் ஒபாமா விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான துருக்கியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.  துருக்கிக்கு விஜயம் செய்வதற்கு முன்பு ஞாயிற்றுகிழமை பராகுவேயில் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.

“அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அநீதி, சகிப்புத்தன்மையின்மை, வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்காளர்களாகவும் கருதி அணுகுவதுடன் பரஸ்பர அக்கறை மற்றும் பரஸ்பர கௌரவம் என்பவற்றின் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளைக் கட்டியெழுப்ப ஊக்குவிக்கவும் வேண்டும் என ஒபாமா கூறினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *