கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தமிழ் வாக்காளரின் மின் அதிர்ச்சி வைத்தியத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்; இரு அமைச்சர்கள் உட்பட 11 பேர் அகற்றப்பட்டுள்ளனர்!

 

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட சித்தி!!!

சென்ற பாராளுமன்றத்திற்கு தெரிவான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா, பிள்ளையான், ராமநாதன் அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, செல்வராஜா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன் இத்தேர்தலில் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். விக்கினேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருவரும் பார்பெமிட் விவகாரம் வெளியானதும் தாங்களாகவே தோல்வியை எதிர்பாரத்து தேர்தலில் இருந்து விலகினர். இரா சம்பந்தன் மரணத்தை தழுவினார். இப்படியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருந்து 11 பழைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவவையாகும். ஒரு இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்துள்ளது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய நல்லிணக்கத்தில் நின்று போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா மட்டுமே தமிழர்கள் மத்தியிலிருந்து சென்றும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் வாக்குகளையும் பெற்று மூவின மக்களின் செல்வாக்கோடும் பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழ் வேட்பாளராக உள்ளார். திருகோணமலையில் என்பிபி திசைகாட்டி இரு ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி யாழில் மூன்று ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி வீடு, தமிழ் காங்கிரஸ் சைக்கிள், ஊசி சுயேட்சைக் குழு தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வீடு மூன்று ஆசனங்களையும் என்பிபி ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ்தேசிய அரசியலானது கிழக்கை நோக்கி நகரத்தப்பட்டுள்ளதையே இது காட்டுவதாக பலரும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசு வீடு எம் ஏ சுமந்திரன் அல்லது சிறிதரன் தங்கள் வீட்டுக்கே அனுப்பப்பட்டுள்ளார்க்ள். ஈபிடிபி வீணை டக்ளஸ் தேவானந்தா, ரஎம்விபி பிள்ளையான் ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். சங்கு இத்தேர்தலில் தன்னுடைய அத்தனை பாராளுமன்ற ஆசனங்களையும் இழந்துள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டும் தன்னுடைய ஆசனத்தை தக்க வைத்துள்ளார். வன்னியில் திசைகாட்டிக்கு இரண்டு ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் சங்குக்கு ஒரு ஆசனமும் கங்காருவுக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது. வீட்டிலிருந்து வெளியேறி சங்கில் போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்தனர். வீட்டிலிருந்து வெளியேறி வெவ்வேறு கட்சிகளிலும் போட்டியிட்ட அனைவரும் தேர்தலில் மண் கவ்வினர். வீட்டிலிருந்து பிரிந்து சென்ற சைக்கிளில் சவாரி செய்து அதிலிருந்து பிரிந்து மானில் நின்றவர்கள் யாவரும் தோல்வியடைந்தனர். சைக்கிளில் டபிள்ஸ் போனவர்கள் இப்போது சிங்கிளாகத்தான் போகவேண்டியுள்ளது. இதில் இனி யார் போறது என்ற சண்டை உருவாகி சைக்கிள் திருப்பியும் உடையலாம் எனவும் தகவல்கள் கசிகின்றது. சைக்கிளில் டபிள்ஸ் சென்ற செல்வராஜா கஜேந்திரன் ஆசனங்களை இழந்துள்ளர். தபால் பெட்டி கட்சியில் நின்ற ராமநாதன் அங்கஜன் முகவரியற்றுப்போனார்.

பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை கிலுகிலுப்பாக சுவாரஸ்யமாக வைத்திருந்த ஊசிக்குழு இத்தேர்தலில் ஒரு ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளது. அண்மைய வரலாற்றில் சுயேட்சைக் குழவில் ஒருவர் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருப்பது இதுவே முதற்தடவை. நேற்று மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையத்துக்குச் சென்றும் அர்ச்சுனா பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார். ஒரு ‘கொமடிப்பீஸ்’ ஆக மாறிவரும் அர்ச்சுனா தனது சொந்தக் குடும்ப விவகாரங்களையும் சமூக வலைத்தளத்திலேயே பதிவேற்றி வருகின்றார். அவருடைய படுக்கையறையும் கழிவறையும் மட்டுமே இன்னமும் சமூகவலைத் தளங்களில் வரவில்லையெனப் பலரும் நகைக்குமளவுக்கு அவர் ஒரு சமூகவலைத்தளப் பிரியராக உள்ளார். மருத்துவ மாபியாக்களை எல்லாம்விட்டுவிட்டு இப்போது அவர் மாப்பிளை மாபியாவாக பாராளுமன்றம் செல்ல உள்ளார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறாரோ இல்லையோ அரசியலை சுவாரஸ்யமாக்கி தமிழ் மக்களை முட்டாள்களாக்கிவிடுவரோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழவதும் சராசரியாக மூன்றில் ஒரு மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தேசிய மக்கள் சக்தி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்பதால் சிலர் தங்களுடைய வாக்குகள் அவசியமில்லை எனக் கருதியிருக்கலாம். இன்னும் சிலர் வயோதிபம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு போய்வருவதற்கான வசதிகள் இல்லாததால் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது விட்டுள்ளனர். மேலும் கணிசமான வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கட்சிகள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க செல்லாத வாக்குகள் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் என்பிபி அலையை முடக்கிவிட்டதில் அதன் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்களிப்பு கணிசமானது. ஒரு குறுகியகாலத்தில் தெற்கில் இருந்த என்பிபி அலையை வடக்குக்கும் மடைமாற்றி விட்டவர் இராமலிங்கம் சந்திரசேகர் என்பதை ஜனாதிபதி அனுராவும் யாழ் வந்திருந்த போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ் மற்றும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த வீதிகளைத் திறப்பது, காணிகளை விடுவிப்பது, மாகாணசபையை அமுல்படுத்துவது போன்ற தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை கட்சியின் மேல்மட்டங்களுக்கு கொண்டு சென்றதில் வடக்கில் ராமலிங்கம் சந்திரசேகரும் கிழக்கில் அருண் ஹேமசந்திராவும் குறிப்பிடத்தக்கவர்கள். இராமலிங்கம் சந்திரசேகர் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றம் செல்லவுள்ளார். அருண் ஹேமச்சத்திரா திருகோணமலையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருவரும் நவம்பர் 21 இல் கூடும் புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருண் ஹேமச்சந்திரா ஜேவிபி – என்பிபி க்குள் வளர்ந்து வருகின்ற மூவின மக்களாலும் வரவேற்கப்படுகின்ற ஒரு தலைவராக வளர்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சிபீடத்திற்கும் அவர் வரலாம் என சிலர் கட்டியம் கூறுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றத் தேர்தல் அது நேற்று முடிவடைந்துவிட்டது. அடுத்து பிரதேச சபைத்தெர்தலுக்கு நாடு தயாராகப் போகின்றது. ”வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் மக்களைச் சேரும்” என்ற களிப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி ஜனவரியில் பிரதேச சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த உள்ளது. பாரானுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதால் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கள்ள ஒரே தடை பொருளாதாரமே. ஆனால் அதற்கான மாற்றுவழிகளை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். நவம்பர் 21 முதல் பாரிய முன்னேற்றகரமான மாற்றங்களை நோக்கி நாடு நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசம்நெற் எதிர்வு கூறிய பல்வேறு அம்சங்களும் இத்தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட விசேட சித்தி!!!

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையை வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்து வருகின்றது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்நலையே காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தேசிய மக்கள் சக்தி யாழில் இரண்டு முதல் மூன்று ஆசனங்களையும் தமிழரவுக் கட்சி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக் ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி இரண்டு முதல் மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்ககு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி வருகின்றது. சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக வடக்குக் கிழக்கும் தெற்கும் இணைந்து இனவாதத்தை புறம் தள்ளி ஒரு தேர்தலைச் சந்திக்கின்றனர். இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர். 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட உள்ளனர். 113 ஆசனங்களை வெற்றிகொள்ளும் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை அமைக்கும். தற்போது என்பிபி அனுதிப் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

பாரிஸ் லாகுர்னே சிவன் கோவிலை முற்றுகையிட்ட பொலிஸார்! கோயில் உரிமையாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் அமைப்பாளரான குடும்பி ஜெயந்திரன்!

12.11.2024 ஆம் திகதி காலை10 மணியளவில் 20 பேர் அடங்கிய பொலிஸ்ஸார் உட்பட்ட வருமான வரிச் சோதனை செய்யும் அதிகாரிகள் குழுவால் சிவன் கோயில் முற்றுகையிடப்பட்டது. பல மணிநேரங்கள் நீடித்த இந்தச் சோதனை முடிவில் அர்ச்சனை சீட்டுக்க்கள் விற்பனைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த கணக்காளர் மற்றும் விற்பனையாளர் திரு என்றழைக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேற்படி ஆலயத்தில் திரட்டப்படும் நிதி யாழில் லக்ஸ்ஹொட்டல் நடத்தவும் அங்கு நடைபெறுகின்ற காமக் களியாட்டங்களுக்கும் யாழில் அரசியல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை தேசம்நெற் பல தடவை சுட்டிக்காட்டி வந்தது.

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் வயோதிப ஆண்களால் நடத்தப்படுகின்ற ஆலயங்கள் பெரும்பாலும் ஆன்மீக நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்களுடைய வேறு தேவைகளுக்கே பயன்பட்டு வருகின்றது என்பதற்கு லாகுர்னே சிவன் கோவிலும் குடும்பி ஜெயந்திரனும் நல்ல உதாரணம். புலம்பெயர் மக்கள் ஆலயங்களில் செலவிடும் பணம் பெரும்பாலும் சட்டவிரோதமாக அல்லது அநியாயமாகவே அழிந்து போவதாக உள்ளது.

மேலும் வெற்றிவேலு ஜெயேந்திரனின் பினாமியும் தற்போதைய ஆலயத் தலைவருமான இரத்தினம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியுடன் வரும்படி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் குடும்பியின் நீண்ட கால பினாமியான கருணா என்றழைக்கப்படும் சிவகுருநாதன் கருணாகரனும் நாளைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இக்கோயிலில் இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலிமிருந்து இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே பிரான்ஸ் அரசாங்கத்தின் வருமான வரி அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணை வளையத்திற்குள் பாரிஸ் சிவன் கோயில் வந்துள்ளது. சமீபத்தில் புரட்டாதி சனி விரதகாலத்தில் மட்டும் ஏமாளி பக்தர்கள் சிவன் கோயிலில் எரித்த எள்எண்ணைய் பொதி மூலம் வாரத்திற்கு 25000 தொடக்கம் 30000 யூரோக்கள் வரை வசூலானதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலின் அறங்காவலர் மற்றும் ஸ்தாபகருமான குடும்பி வெற்றிவேலு ஜெயேந்திரன் 2004 ஆம் ஆண்டில் பிரான்ஸில் இதேமாதிரியான ஒரு வரி ஏய்ப்பு மற்றும் போலி விசாக்கள் மற்றும் ஆவணங்கள் தயாரித்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையலடைக்கப்படிருந்தார். அப்போது குடும்பி ஜெயாவால் நடாத்தப்பட்டு வந்த எக்ஸ்போலி என்ற சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிறுவனமும் பிரான்ஸ் அரசாங்கத்தால் இழுத்து மூடப்பட்டது.

அந்த வழக்குகள் நிலுவையிலிருக்கும் போது பெருந்தொகை பணத்தை நட்ட ஈடூடாக செலுத்தி பிணையில் இலங்கைக்கு வந்த குடும்பி போலி ஆள் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுடன் மக்கள் ஐக்கிய சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என்ற பதவியுடன் அரசியல் பிரமுகராக நடமாடுகிறார். இந்த மோசடிப் பேர்வழியும் பாலியல் குற்றவாளியுமான குடும்பியை அரசியலுக்கு கொண்டு வந்தவர் இவருடைய மைத்துனியான ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண வேட்பாளர் உமாச்சந்திர பிரகாஷ். இவர் குடும்பி ஜெயந்திரனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

யாழ்ப்பாணத்தில் பதின்மவயது பெண் பிள்ளைகளை சீரழித்துவரும் வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு பாரிஸ் சிவன் கோயிலிருந்து வரும் யூரோக்களும் உமாசந்திரப் பிரகாஷ்ஷின் அரசியல் செல்வாக்குமே குடும்பியை சட்டத்தின் முன் தண்டனையிலிருந்து தப்ப வைக்கின்றன.

குடும்பி ஜெயந்திரன் உமா சந்திரபிரகாஷ் தொடர்பில் வெளிவிந்த முன்னைய செய்திகள்:

SJB Jaffna District Chief Organizer Vettivelu Jayanthiran: A Convict with Fake ID

விளிம்புநிலையில், பலவீனமான நிலையில் பணியாளர்களாக உள்ள vulnerable பெண்களை மேய்கின்ற காமுகன்களைப் பாதுகாக்கும் உமா சந்திரபிரகாஸ் – பெண்ணியம் பேசி தமிழ்ப் பெண்களை ஏமாற்ற முடியாது! : க சுதந்திரா

உமாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட குடும்பி என்றழைக்கப்படும் நல்லூரில் இயங்கும் லக்ஸ் விடுதியின் உரிமையாளர் வெற்றிவேலு ஜெயேந்திரன் ஒரு மோசடிப் பேர்வழியும், பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஒரு துர்நடத்தையாளன். ஐக்கிய மக்கள் சக்தியில் குடும்பிக்கு யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் பதவியை வாங்கிக் கொடுத்த உமாசந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தையும் குடும்பியின் காம விடுதியில் அமைத்துக் கொண்டார்.

தன்னை பெண்ணியவாதியாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் காட்டிக் கொண்டு அரசியல் நிகழ்வுகளில் ஓடித் திரியும் சுயலாப அரசியல்வாதியான இவர், தன்னுடைய மைத்துன்னான 66 வயதான குடும்பியுடன் 22 வயதுடைய தந்தையை இழந்த இளம்பெண்ணை இணைத்து வைத்துள்ளார். இத்துணைக்கும் அந்த இளம் பெண் குடும்பியின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகள். தந்தையை விபத்தில் இழந்து, தாயாரின் பாதுகாப்பில் இருந்த பெண். அந்த இளம் பெண்ணின் தகப்பனார் ஒரு முன்னாள் போராளி. அந்த முன்னாள் போராளியின் மரண வீட்டில் பெரியப்பா உறவுமுறை கொண்டாடிக் கொண்டு நுழைந்த குடும்பி தன்னுடைய வழமையான திருவிளையாடலை நடத்தி முடித்துவிட்டான்.

இந்த விவகாரம் சுண்ணாகம் பொலிஸ் நிலையம் வரை சென்றது. சைக்கிள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் சுகாஷ் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம் சார்பில் சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட போதும், சுகாஷ் தானே பொலிஸ் நிலையம் வராமல் தனது பிரதிநிதியாக வேறு ஒரு சட்டத்தரணியை அனுப்பி விட்டு, வழக்கிலிருந்து மெதுவாக கழன்று கொண்டார். பணத்தை வாங்கிய சுகாஷ்சை இது விடயமாக பல தடவை தொடர்பு கொண்டும் எந்தப் பலனும் இல்லை. கடைசியில் உமாசந்திரா பிரகாஷின் அரசியல் செல்வாக்கு மற்றும் தலையீட்டால் குடும்பி தப்பிவிக்கப்பட்டான்.

போனவருடம் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து குடும்பி ஜெயா, தான் தான் அந்த இளம் பெண்ணின் சட்ட பூர்வமான பாதுகாவலன் என்று கையொப்பம் இட்டு கூட்டிச் சென்றான். தற்போது தன்னுடைய பெறாமகளை உமா சந்திரபிரகாஷின் ஆசீர்வாதத்தோடு சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் திருமணம் செய்து அரசியல் கூட்டங்களில் சமூகமளிக்கின்றான்.

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்மாவட்ட அமைப்பாளர் ‘குடும்பி ஜெயா’ யார்?

இந்த காமக் கொடூரன் உமாசந்திரப் பிரகாஷின் மச்சான். பல மோசடி வழக்களில் இருந்து பிரான்ஸ் பாரிஸிலிருந்து இலங்கைக்கு தப்பி வந்தவன். பிரான்ஸ் லாக்கூர்னேயில் இன்றுவரை அடியாட்கள் உதவியுடன் சிவன் கோயில் ஒன்றை நடத்தி வருகிறான். அவனது முதல் மனைவி மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த பெண். அப்பெண்மணியுடன் அவனுக்கு ஒரு மகன் உண்டு.

பிரான்சில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு 2005 இல் இலங்கைக்கு தப்பி வந்து தனது பிறந்த திகதி, பிறந்த ஆண்டு மற்றும் பெயர் என்பவற்றை ஆள் மாறாட்டம் செய்து கொண்டு உமாசந்திர பிரகாஷின் உதவியுடன் சுதந்திரமாக நடமாடுகிறான். முதல் மனைவியையும் பிள்ளையையும் மொரிஸியசிற்கு அனுப்பிவிட்டான்.

இலங்கை வந்த குடும்பியின் காம வலையில் முதலில் சிக்கியது இரட்சண்ய சேனை கன்னியாஸ்திரி. அந்தப் பெண்மணியுடன் ரக்கா லேனில் ஒரு வீட்டை வாங்கி, குடும்பம் நடத்திய குடும்பி, ஒரு கட்டத்தில் அப்பெண்மணியின் சகோதரிகளிடமும் தனது பாலியல் சேட்டையை தொடர, அந்த உறவு முடிவுக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரி குடும்பம் ரக்கா லேனிலிருந்து வீதிக்கு விரட்டப்பட்டார்கள். அந்தக் கன்னியாஸ்திரி குடும்பம் மலையகத்தில் பண்டாரவளையை பூர்வீகமாக கொண்டவர்கள். இனக் கலவரத்தோடு வடக்கில் குடியேறியவர்கள். பொருளாதார ரீதியான பின்தங்கிய விளிம்பு நிலைக் குடும்பம். அவர்களுக்கு குடும்பியை தட்டி கேட்கும் திராணி இருக்கவில்லை. அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அடுத்து, 23 வயதே நிரம்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் உயர்தரத்தை முடித்து விட்டு மேற்படிப்பை தொடர காத்திருந்த பெண்ணை அபகரித்துக் கொண்டான். அந்த இளம்பெண் பெற்றோருடன் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கி இருந்த குடும்பி, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த இளம்பெண்ணுக்கு தான் ‘அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். நீ என்னை அங்கிள் என்று கூப்பிடலாம்’ என அறிமுகமாகிக் கொண்டான். உண்மையிலேயே அப்பெண்ணின் தந்தைக்கும் குடும்பிக்கும் கூட ஒரே வயது தான். அந்தப் பெண்ணின் குடும்பம் முழுமையாக அவனை நம்பியது.

இந்நிலையில், பிரான்ஸில் சிறையிலிருந்த போது எழுதிய ‘கம்பிகள் ஊடாக’ என்ற நூலுக்கு எழுத்துப் பிழை பார்க்க, திருத்த என்று அடிக்கடி அந்த இளம் பெண்ணை தனது குடியிருப்புக்கு அழைத்தான் குடும்பி. அந்தப் பெண் எதிர்பார்க்காத வேளையில் அவளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததோடு, அல்லாமல் இறுதியில் அப்பெண் அவனையே திருமணம் முடிக்க வேண்டியேற்றப்பட்டது. திருமணம் முடித்து நாலு வருடங்களில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் அந்த இளம்பெண்ணும் நடுவீதியில் நிறுத்தப்பட்டார். குடும்பியின் கம்பிகள் ஊடாக என்னும் தன்னுடைய நூலில் தான் எத்தனை பெண்களை இதுவரை காதல் வலையில் விழுத்தி, துஸ்பிரயோகம் செய்துள்ளேன் என சுயதம்பட்டம் அடித்துள்ளான்.

அந்தப் பெண்ணின் பராமரிப்பு வழக்கிற்கு தமிழரசுக் கட்சி வேட்பாளர் எம். ஏ. சுமந்திரனே சட்டத்தரணி ஆவார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த விவாகரத்து வழக்கில் ஈபிடிபி வேட்பாளர் செலெஸ்ரினே சட்டத்தரணி. சமீபத்தில் தான் பத்தாண்டு இழுபறிக்கு பின் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் நிதிப் பிரிப்பு இன்னும் முடியவில்லை. அனுமார் வாலக நீள்கிறது.

உமாசந்திரா பிரகாஷின் மைத்துனனின் லீலைகள் அத்துடன் முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் காம விடுதி நடத்தி வந்த குடும்பியின் அடுத்த வலையில் வந்து சிக்கினார் இன்னுமொரு 27 வயதேயான இளம்பெண். இவர் தந்தையை இழந்தவர். தாயாரின் பாதுகாப்பில் இருந்தவர். அப்பெண் யாழ் சிவில் மையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கு உறவுப் பெண். அந்த இளம் பெண்ணுடன் பத்தாண்டுகள் கொக்குவிலில் வாங்கிய வீட்டில் குடும்பம் நடத்தியதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. கைக் குழந்தையோடு இறுதியாக அவனுடன் வாழ்ந்த பெண்ணையும் கைவிட்டு விட்டு தற்போது பெறாமகளுடன் கொழும்பில் தங்கியுள்ளான்.

விவாவகரத்து முடிந்தவுடன் திருமணம் செய்வதாக கூறி வந்த குடும்பி, வழமை போலவே புதிதாக ஒரு இளம்பெண்ணை கவர்ந்து கொண்டு கூட வாழ்ந்த பெண்ணை நிர்க்கதியாக்கிவிட்டான். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான குடும்பிக்கு நல்லூரிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு பெண்கள் திரண்டு வந்து சாணி அபிஷேகம் செய்ததும் நடந்தேறியது. இச்சம்பவத்தின் போது உமாசந்திரா பிரகாஷ் கட்சி அலுவலகத்தில் இல்லாதமையால் குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்களின் கோபத்திலிருந்து தப்பிக் கொண்டார்.

குடும்பி ஜெயா ஒரு மோசமான பாலியல் குற்றவாளி. அதற்கு பல ஆதாரங்கள். உண்டு. அவன் தனது லக்ஸ் விடுதியில் வைத்து பல இளம்பெண்கள் மீது பாலியல் சீண்டல் மற்றும் சுரண்டலில் ஈடுபட்டுள்ளான். ஆள்மாறாட்டம் செய்து தனது உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்டு காணி அபகரிப்பு, அடி தடி மற்றும் வரி ஏய்ப்பு என அனைத்து குற்றங்களிலும் ஈடுபடும் ஒரு குற்றவாளி. முன்னாள் அமைச்சர் மறைந்த மங்கள முனசிங்கவின் மனைவியிடமிருந்து மோசடியாக அபகரித்த நல்லூர் காணியிலேயே லக்‌ஷ் விடுதி இயங்கி வருகிறமை யாழ் மாநகரசபை அறிந்த பரகசியம். உமாசந்திரப் பிரகாஷ்க்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்படியாக அபகரித்த காணிக்கு யாழ்ப்பாண சட்டத்தரணிகள் கூட கள்ள உறுதி முடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இப்படியான ஒரு குற்றவாளியை தனது அரசியல் சுயலாபத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தது மட்டுமல்லாமல் விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சலம் போன்று அமைப்பாளர் பதவியை வேறு உமாசந்திரா பிரகாஷ் வாங்கி கொடுத்துள்ளார். தரகு வேலை செய்வதில் உமாவை மிஞ்ச யாராலும் முடியாது. மகிந்த ராஜபக்ச குடும்பத்தோடும் நெருங்கிய நட்புடன் இருப்பவரே உமாசந்திரப் பிரகாஷ். இவர்களுடைய இன்னுமொரு நட்பு அங்கஜனுக்கு சகோதரி முறையான பவதாரணி. இவர்களுடைய இன்னுமொரு சகோதரனே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மாட்டிய ராஜன். இவர்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று. இப்போது பவதாரணி தமிழர் விடுதலைக் கூட்டணியை இயக்குகின்றார். அங்கஜனின் தந்தை ராமநாதன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் ரவுடி அரசியல் பங்காளி. அதன் மூலம் பணம்ஈட்டி முகவர் வேலைகள் செய்து வந்தவர். அவர்களுடைய அடுத்த பரம்பரையும் அதனையே செய்கின்றது. ஆனந்தசங்கரியின் ஆயுள் இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்க பவதாரணி மொட்டுக்கட்சி இனி மொட்டை விரிக்காது என்று தெரிந்ததும், ஆனந்தசங்கரியைத் தூக்கிப்பறிக்க வந்து ஒட்டிக்கொண்டுவிட்டார்.

ஒரு மோசமான பாலியல் குற்றவாளிக்கு அரசியலில் முகவரி ஏற்படுத்திக் கொடுத்த உமாசந்திரா பிரகாஷ் போன்ற பெண் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் போய் பெண்கள் உரிமைக்கு என்ன செய்ய முடியும். உமா அரசியலுக்கு வந்த வரலாறை தோண்டத் தோண்ட பல அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் காத்திருந்தன.

சக்தி தொலைக்காட்சி, வானொலி, வீரகேசரி என பல ஊடகங்களில் மாறி மாறி வேலை செய்து வந்த உமா கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் தொடர்பான விடயங்களில் தனது கட்டுரைகளை எழுதியுள்ளாராம். உமாவின் எழுத்துக்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. குடும்பி ஜெயா போன்ற ஒரு பாலியல் மோசடி குற்றவாளியை அரசியலுக்கு கொண்டு வந்து சமூக அங்கீகாரம் வாங்கி கொடுத்து தமிழர் கலாச்சார முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.

உமா அரசியலில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக கொழும்பில் பாமன்கடை தொகுதியில் போட்டியிட்டு தெரிவானார். அப்போது நீலப் புடவையில் தோன்றும் உமா கட்சி தாவியவுடன் இப்போது பச்சை புடவையில் தோன்றி வருகிறார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் சாவகச்சோரி தொகுதி மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உமா சந்திரபிரகாஷ் கட்சி தாவுவதிலும், சேலைநிறத்தை மாற்றி மாற்றி கட்டுவதில் மட்டுமல்ல இளம் பெண்களை காமுகர்களுக்கு இரையாக்குவதிலும் கெட்டிக்காரி. குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவிடமும் உமா சந்திரப்பிரகாஷ் இடமும் நேரடியாக முறையிட்டும் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. மாறாக உமாசந்திரா பிரகாஷ் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தானே குறுக்கு விசாரணையில் இறங்கியதுடன் குடும்பி ஜெயாவுக்கு ஆதரவாக நியாயம் கேட்டதாகவும் அந்தப் பெண்கள் கூறுகிறார்கள். அப் பெண்களிடம் உமாசந்திரா பிரகாஷ் உங்கள் அனைவருக்கும் குடும்பி நகைகள் மற்றும் வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் இதைவிட வேறு என்ன வேண்டும் என்று கேட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் நக்கினோர் நாவிழந்தார் என்பது போல ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தின் மனைவிக்கும், கிருணிக்காவுக்கும் மற்றும் உமாசந்திராவுக்கும் குடும்பி ஜெயா இந்தியாவிலிருந்து சேலைகள் கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இன்னுமொரு பெண் அரசியல்வாதியான கிருணிகா இந்த விடயம் தொடர்பில் தனது நெருங்கிய நண்பர்களோடு அங்கலாயத்த போது கூறியதாவது: ”குடும்பி தொடர்பில் பல முறைப்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்தும் பெண்ணுரிமை அமைப்புகளிடமிருந்தும் வந்த போதும் கட்சி மேலிடம் தொடர்ந்து குடும்பியை கட்சியில் வைத்திருப்பது புரியாத புதிராக உள்ளது” என கூறியுள்ளார். கிருணிகாவே தண்டணை பெற்ற குற்றவாளி. பிறகு மக்கள் ஐக்கிய சக்தி யாரைத் தான் வேட்பாளராக நிறுத்தும்.

பெண்கள் பிரிதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைந்த பட்சம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சாத்தியமாக்க வேண்டுமெனில் நேர்மையான, ஊழலற்ற, தைரியமான மற்றும் அரசியல் அறிவுடைய பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

ஒரு ஆணின் பின்னணியில் பின்கதவால் அரசியலுக்கு வந்த உமாசந்திரா போன்ற யாழ்ப்பாண வெள்ளாளிய மேல்த்தட்டு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கப்போவதில்லை.

உமாசந்திரபிரகாஷின் பின்னணி குடும்பியுடன் முடியவில்லை. இலங்கை நாணய தாள்களை காலில் போட்டு மிதித்த கோமாளி தியாகி அறக்கட்டளை தியாகேந்திரனும் உமாவின் இன்னுமொரு மைத்துனன் ஆகும். தியாகிக்கும் அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தை கொடுங்கோ நான் சொர்க்கபுரியாக்குகிறேன் என ரணிலுக்கு அழைப்பு விடுத்தவர் தான் இவர். உமாசந்திர பிரகாஷ், தியாகி மற்றும் குடும்பி என மூன்று பேரும் குடும்பமாக யாழ்ப்பாண மக்களை ஆட்டையைப் போடவே கங்கனம் கட்டியுள்ளார்கள். தியாகி அறக்கட்டளையால் நடத்தப்பட்ட சிறுமிகள் இல்லம் மூடப்பட்ட கதையும் இவர்களின் அரசியல் செல்வாக்கால் மூடி மறைக்கப்பட்டது.

தியாகி அடித்த கோமாளிக் கூத்தால் நீதிமன்றில் வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். தற்போதைக்கு தியாகி பாம்பு புற்றுக்குள் தலையை இழுத்துக் கொண்டமாதிரி பம்முகிறார். உமாசந்திர பிரகாஷ் தேர்தல் செலவுகள் எல்லாம் குடும்பியின் பாரிஸ் சிவன் கோயில் புரட்டாதி சனிக்கு, ஏமாளி புலம்பெயர் தமிழர்கள் எரித்த எள்எண்ணை வருமானத்திலேயே நடக்கின்றது. சாராசரி ஒவ்வொரு சனிக்கிழமையும் பாரிஸ் சிவன் கோயிலில் 20,000 இலிருந்து 25,000 யூரோக்கள் வருமானம் ஈட்டப்பட்டதாக அறியமுடிகிறது.

குடும்பி ஜெயா பாரிஸ் சிவன் கோயிலில் ஈட்டும் வருமானத்தை இலங்கைக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையான உண்டியல் மூலம் எடுத்து உமாசந்திரப் பிரகாஷ்ஷின் அரசியலுக்கு தண்ணியாக இறைக்கிறார். கைமாறாக உமாசந்திரபிரகாஷ் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குடும்பி மீதான வழக்குகளில் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றி வருகிறார்.

குடும்பியன் ஆள் அடையாள அட்டை மோசடி வழக்கு பல வருடங்களாக மோசடிப் பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் தலையீட்டால் குடும்பி இவ்விசாரணைகளில் இருந்து தப்பி வருகிறான்.

ஊழலுக்கு எதிரான புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தான் இழுபட்டு செல்லும் இந்த மோசடி வழக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

பெண்ணியவாதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறோம் என மார்தட்டும் பெண்கள் அமைப்புகளிடமும் குடும்பியின் பாலியல் சுரண்டல் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவர்கள் கூறிய கருத்து வெட்கக்கேடானது: உமாசந்திர பிரகாஷ் ஒரு பெண் அரசியல்வாதி. பெண்கள் அரசியலில் சாதிப்பது கடினம். இந்த விடயத்தை பெரிதாக்க வேண்டாம். அதன் மூலம் உமாசந்திர பிரகாஷின் அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என கூறி உமாவை காப்பாற்ற முயன்றார்கள்.

இப்படியான போலி பெண்ணியவாதிகள் பெண்களுக்கு மிகப் பெரிய அபாயம். இந்த குடும்பி – உமாசந்திரா விவாகரத்தில், உமாச்சந்திர பிரகாஷ்க்கு வாக்காலத்திற்கு வந்த அங்கயனின் ஒன்றுவிட்ட சகோதரி பவதாரணி, குடும்பியால் கைவிடப்பட்டு கைக்குழந்தையோடு நிர்க்கதியாக நிற்கும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை அணுகி உமாசந்திரபிரகாஷ் தேர்தலில் வெல்லும் வரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பவதாரணியும் ஒரு பெண்ணியவாதி என்ற போர்வையில் நடமாடுகிறார். அவர் முன்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனக்காக தேர்தல் வேலைகளை செய்த கணவனை இழந்த ஒரு பெண்ணை நீச்சல் ஆடையை அணிய வற்புறுத்தியதோடு நிற்காமல் அந்தப் பெண்ணை நீச்சலுடையுடன் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் பயந்து பதறி கதறி அழுது தனது புகைப்படங்களை அழிக்கும் படி மன்றாட அதை அழித்ததாக பாதிக்கப்பட்ட மற்றும் அந்த சம்பத்தில் நேரடி சாட்சிகளாக இருந்தவர்கள் வாக்குமூலம் தந்துள்ளார்கள்.

பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் நடமாடும் போலிகள் கையில் அரசியல் அதிகாரமும் சென்றால் ஆண்களின் அந்தப்புரங்களுக்கு இவர்களே பெண்களை அனுப்பி வைப்பார்கள்.

அப்படியென்றால் ஈழத்தமிழர்களில் அர்ப்பணிப்போடு நேர்மையாக மக்கள் பணி செய்யக் கூடிய பெண்களே இல்லையா? ஏன் இல்லை. தங்கள் இன்னுயிர்களை துச்சமென மதித்து தம் இனத்தின் மண்மீட்புக்கென அர்ப்பணிப்போடு ஆயுதம் ஏந்திப் போராடிய பல பெண்கள் இருக்கிறார்கள். விடுதலை யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் தடுப்புகளில் இருந்து விடுதலையாகி வந்தவர்கள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தின் மூலைகளில் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பதில் ஆணாதிக்க வர்க்கத்திற்கு சேவைகள் புரியும் உமாசந்திரா பிரகாஷ் மற்றும் பவதாரணி போன்ற போலிகள் மேலெழுந்து கண்கட்டி வித்தை காட்டுகிறார்கள்.

தமிழ் மக்களுக்காக போராடிய முன்னாள் பெண் போராளிகளின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் இறுதி யுத்தத்தின் பின் புலம்பெயர்ந்து சென்றுவிட புலம்பெயர முடியாத பெரும்பாலானோர் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தவே பெரிதும் கஸ்டப்படுகிறார்கள். அவர்களைத் தமிழர் அரசியலில் முன்னிறுத்த தமிழ் அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை. சமூக வலைத்தள பதிவுகளில் தமிழ் ஆண் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடித்து இலகுவாக வேட்பாளராக நிற்கும் சமூக வலைத்தள பெண் போராளிகளுக்கு கிடைத்த வாய்ப்பு நிஜ பெண் போராளிகளுக்கு கிடைக்கவில்லை.

பெரும்பாலும் வன்னிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்களே இறுதியுத்த காலத்தில் அதிகளவில் போராட்டத்தில் இருந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோரின் குடும்பபின்னணி உறுதியான பொருளாதாரத்தை கொண்டிருக்கவில்லை.

உமாசந்திரா, பவதாரணி போல தேர்தலில் செலவு செய்ய வசதி கிடையாது. உமாவுக்கு ஒரு குடும்பி மச்சான். பவதாரணிக்கு ஒரு அங்கயன் தம்பி, இராமநாதன் மாமா என யாரும் இல்லை.

அனைத்து தகுதிகளும் உள்ள முன்னாள் பெண் போராளிகள் அரசியலில் ஈடுபட முன்வந்தால் துர்நடத்தையுள்ள ஆண்களுக்கு முதுகு சொறியும் உமாசந்திர பிரகாஷ் போன்ற மேட்டுக்குடி பெண்களை அதிகாரத்திற்கு வராமல் தடுத்து ஆரோக்கியமான மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம். அங்கே பெண்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் சகல உரிமைகளோடும் தலைநிமிர்ந்து வாழலாம்.

இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசு ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என மக்களுக்கு உறுதி அளித்துள்ளனர். அதற்கான துரித நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும் குறிப்பாக தமிழ் மக்களும் தாங்கள் யாரைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புகின்றோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். நல்லூர் கந்தன் அருளோட்சும் நல்லூரில் காமவிடுதியில் கட்சித் தலைமையகத்தைக் கொண்ட சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர். நல்லூரை யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கும் இவர்களுக்கு வாக்களிப்பது எமக்கு நாமே மண் அள்ளிப் போடுவதாகும். சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லேக்க என்பது போல மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் கும்பலின் பரம்பரையாட்சி தமிழ் மக்கள் மத்தியில் தொடர அனுமதிக்கக் கூடாது.

தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளால் இவர்களுக்கு பதிலளிப்பார்கள் என நம்புவோம்.

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்று உத்தரவு! அர்ச்சுனா எஸ்கேப். கௌசல்யா தடுமாற்றம்! : நட்சத்திரன் செவ்விந்தியன்

 

Dr. அர்ச்சுனா கௌசல்யா உறவு ஒரு தொழில்நெறி ஆய்வு

Dr. அர்ச்சுனாவின் குறளிவித்தைகளும் கூத்துக்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக விரிகிறதே தவிர குறையவில்லை. இவ்வாரத்தில் அர்ச்சுனாவின் சட்டத்தரணி கௌசல்யாவின் காதலனும் அர்ச்சானாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் வலைத்தளங்களில் வெளியாகி பெரிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

தொழில்முறையில் சட்டத்தரணி கௌசல்யாவின் வாடிக்கையாளர்(Client) Dr. அர்ச்சுனா. வலைத்தளங்களில் வெளியாகிய உரையாடல்களில் கௌசல்யாவின் காதலன் அவளை விட்டு தன்னால் வாழமுடியாது என்று அழுகிறான். அர்ச்சுனாவோ அவள் இப்போ இரவிலும் என்னோடுதான் இருக்கிறாள். அவளை தான் கல்யாணம் கட்ட தயார் என்கிறார். மேலும் மிக அநாகரீகமாக உன் விதைகளை கவனமாகப் பாதுகார் இல்லாவிடில் நான் உன் விதைகளை பைற் ஆக்கி சாப்பிடுவேன் என்கிறார். தான் நரமாமிசி என்று மிக அசிங்கமாக அறிவிக்கிறார்.

கௌசல்யா இந்த தொலைபேசி உரையாடல்கள் பற்றி எக்கருத்தும் சொல்லவில்லை. இன்று அர்ச்சுனா மன்னார் நீதிமன்றில் ஆஜராகாமல் விட்டபின் அவரை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்பின் மட்டும் ஒரு முகநூல் பதிவு போட்டார். சில நிமிடங்களிலேயே அதனை அழித்து விட்டு இன்னொரு பதிவு போட்டார். அப்பதிவிலும் அர்ச்சுனா அவரைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறார் என்பது பற்றிய போட்ட றெக்காடிங் பற்றி எதுவுமே சொல்லவில்லை. கௌசல்யாவின் மௌனம் மூலம் அர்ச்சுனாவோடு உறவிலிருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ளமுடியும். அர்ச்சுனா கௌசல்யாவின் காதலனுடன் மிகக்குருரமாக உரையாடியதும் இதற்கான ஆதாரங்கள்.

பழமைவாத ஒழுக்கவாத அடிப்படையில் இங்கு உரையாடவில்லை. கௌசல்யாவோ அர்ச்சுனாவோ தங்களது காதலர்களை தெரிவுசெய்ய உரித்துடையவர்கள். இங்கு நமக்கு உதைக்கும் விடையம் காதலர்/உறவு தெரிவில் தொழில்நெறிகள் மீறப்படக்கூடாது என்பதே.

ஒரு சட்டத்தரணியாக தன்னுடைய வாடிக்கையாளரோடு தனிமனித உறவில் ஈடுபட்டால் அது அவரது தொழில் வல்லமையைப் பாதிக்கும். அதேபோல ஒரு வேட்பாளர்/அரசியல்வாதி தன் சட்டத்தரணியோடு உறவிலீடுபட்டால் அவரது தொழில் வல்லமையை பாதிக்கும். தரந்தாழும்.

ஆரம்பத்தில் அர்ச்சுனா மருத்துவர்களுக்கெதிரான போராட்டத்தை ஆரம்பித்தபோது உண்மையில் மருத்துவத்துறையில் பாரிய பிரச்சனைகள் இருந்ததால் மக்கள் அவரை நம்பினார்கள். காலப்போக்கில் அர்ச்சுனா ஒரு உண்மையான கலகக்காரன்(Whistleblower) அல்ல. தனிப்பட்ட காரணங்களுக்காக தனது தனிப்பட்ட எதிரிகளை பழிவாங்க சந்தர்ப்பங்களை சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்ட போலி ஆசாமி என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள். அர்ச்சுனா ஒரு புத்தி சுவாதீனமுடைய மனுசன் அல்ல என்பதும் வெளிப்பட்டது. மோசமான தன்மோக – நாசிசிஸ்ரிக் குறைபாடுடைய ஒருவன் என்பது அவனது நடவடிக்கைகளால் வெளியானது. அர்ச்சுனா வைத்த குற்றச்சாட்டுக்கள் எதற்கும்,அவனிடம் ஆதாரமில்லை என்பது உறுதியானது.

சமூக வலைத்தளங்களில் அநியாயமாகக் கிடைத்த ஆதரவால் தலைகெட்டு ஆடினான். குறைந்த பட்ச தொழில் தர்மத்தோடும் அவனுக்கு உதவவந்த அனைத்து அனைத்து அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், மக்கள், சமூக ஆர்வலர்கள் முதலிய அனைவரையும் புறக்கணித்து தறிகெட்டு ஆடினான்.அவர்களை தனது எதிரியாக்கினான். தன்மோகம் – நாசிசிசம் ஒரு பொல்லாத மனநோய். அது உண்மையிலேயே அதுவாக இருப்பதாக நம்பவைக்கும் பிரமை. இவன் யாழில் ஒரு ஆசனமே வெல்ல வக்கில்லாதவன். ஆனால் ஆறு ஆசனங்களையும் தன் ஊசிக்கட்சிதான் வெல்லும் என்பது வெறும் அடிச்சுவிட்டது அல்ல.

உண்மையிலேயே நோய்காரணமாக நம்பினான். அதுவாக இருப்பதாக நம்பவைக்கும் பிரமை.
அர்சுனாவின் கோளாறு அறிந்து அவனுக்கு உதவ வந்தவர்கள் அனைவருமே அவனைவிட்டு விலகினார்கள். இவன் அவர்களை விலக்கினான். அந்த மன்னார் சம்பவத்தோடு அர்ச்சுனா தேறியிருந்தால் கரை கண்டிருப்பான். அங்கு ஒரு வழக்கறிஞர் குழுவே அவனுக்காக வாதாடியது. மன்னார் விளையாட்டுத்திடலில் விழா எடுத்து அவனை கீரோ ஆக்கியது. அக்கணத்திலிருந்து அவன் அமைதி காத்திருந்தால் இன்று JVP தம் கட்சி சார்பில் அவனை முதன்மை வேட்பாளராக்கியிருக்கும். விதி யாரை விட்டது. அர்ச்சுனாவின் உளக்கோளாறு – நாசிசிசம் தான் அவன் முதல் எதிரி.

பிறகு மன்னாரில் எந்த வழக்கறிஞர்/சட்டத்தரணியுமே அவனுக்காக வாதாட வரவில்லை. அவனே தன் முகநூலில் அழுது தானே தனக்காக வாதாடப்போகிறேன் என்று பதிவிட்டான். அக்கணத்தில் இவனுக்காக வாதாட வந்த மன்னார் சட்டத்தரணிதான் கௌசல்யா நரேன்.

இந்த இடத்தில்,யார் இந்த கௌசல்யா நரேன். இவரது தொழில்நெறி தர்மம் என்ன? Professional Ethics, வல்லமை என்ன என்பன ஆராயப்படவேண்டியது. இவன் அர்ச்னாவுக்கு இலவசமாக வாதாடவே யாரும் வராதபோது இவனது சுயேட்சை கட்சியில் போட்டியிட யாராவது வருவார்களா? கிடைத்த “தங்கம்” கௌசல்யாவை தனக்கு அடுத்த வேட்பாளராக்கினான் அர்ச்சுனா. இந்த இடத்தில் தொழில் நெறிக்கும் தனிப்பட்ட வாழ்வுக்குமான சிக்கல் மேலும் அதிகமாகிறது.

கௌசல்யா நரேன் தன் காதலன் உறவை வரன் முறையாக முறித்து சட்டப்படி செய்தி சொல்லியிருந்தால் அவன் இப்போது சீனில் வந்திருக்கவே மாட்டானே. அர்ச்சுனா இவ்வளவு ரென்சனாகி அக்காதலனின் கொட்டைகளை பைற் ஆக்கி சாப்பிடுவேன் என்று தொலைபேசியில் பேசியிருக்கமாட்டானே.

ஆக தன்னுடைய தனிப்பட்ட வாழ்வுக்கும் தொழில்நெறிசார் – Professional – வாழ்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் அல்லல் பட்ட அபலைப்பெண்ணான கௌசல்யாவை சந்தர்ப் சூழ்நிலைகளை சாதுரியமாகக் கையாண்டு அர்ச்சுனாவால் ஆட்டையைப் போடப்பட்ட பெண்ணாகவே அவர் இப்போதிருக்கிறார். முறையாகச் சட்டம் படித்து வந்த ஒரு பெண்ணின் கதியே இப்படியிருக்கிறதென்றால் சாதாரண ஈழப்பெண்களின் கதையை/கதியை யோசித்துப்பாருங்கள். மண்டையில் களிமண்ணிருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சாத்தான் வேடதாரி அர்ச்சுனா போட்ட நாடகத்திற்கு எடுபட்டுப்போகும் சட்டத்தரணிப் பெண்ணின் கதியே இதுவென்றால் சாதாரண ஈழப்பெண்களின் கதி?

கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் ஏனைய சாதிகளையும் தொடர்ந்தும் நிராகரிக்கும் வெள்ளாளிய தேசியவாதம்! யாருக்கு வாக்களிப்பது? : பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல்

இன்று (26/10/2024) PAFFREL அமைப்பு என்னை பேசவிடாதது:
வழியற்ற தேர்தல் பற்றி: அங்கும், இங்குமான ஒரு விரிவுரை
சாமுவேல் இரத்தினஜீவன் ஹேபேட் ஹூல்

PAFFREL கூட்டமும் அதன் பின்னணியும்:

இன்று மத்திய கல்லூரி தந்தை செல்வா மண்டபத்தில் 9 மணிக்கு செல்வநாயகமும் தமிழ் தேசியமும் என்ற தலைப்பில் ஒரு புத்தக வெளியீடு இருக்க இருந்தது ஆனால் “திட்டமிட்ட தேர்தல் திகதி” என்ற தலைப்பில PAFFREL பேச்சுக்கு பேசச் சொல்லி கடைசி நேரத்தில் என்னை எனது யாழ் பல்கலைக்கழக நண்பன் கலாராஜ் வரக்கேட்டார் ஆனால் நான் ஏற்கனவே செல்வநாயகம் நிகழ்வுக்கு செல்வேன் என்று வாக்குக் கொடுத்தேன் எனச் சொல்ல வேறு இரு பேச்சாளர் இருப்பதாலும் நான் பிந்தி வருவதால் அவர்கள் பேசியதை தவிர்க்க “வழியற்றற்ற தேர்தல் அங்கும் இங்கும் ஒரு பேச்சு” என்ற தலைப்புக்கு சம்மதித்தோம் நானும் மினக்கட்டு பேச்சை தயார் பண்ணினேன்.

10:30 மணிக்கு கட்டாயம்வெளியேற வேண்டும் ஒன்று சம்பவ ஏற்பாட்டாளருக்கு சொல்லி இருந்தேன் அவர்கள் என்னை பத்தரைக்கு முன்பு முதல் வெளியிட்ட புத்தகத்தை பெற்று போகலாம் என்றார்கள் ஆனால் கூட்டத்துக்கு ஒழுங்குபடுத்தி இருந்த ஆளுநர் வேதநாயகன் ஐய்யா வரவில்லை அவருக்கு பதிலாக பிஷப் ஜெபநேசன் தலைமை தாங்கினார் பிரதம விருந்தினர் இந்திய தூதரக துணைத் தூதர் ஸ்ரீ சாயும் வரவில்லை.

பேச்சாளர்களும் கொப்பி அடித்த மாதிரி வேதங்களை பெண்களும் கீழ் சாதியாரும் கேட்கக்கூடாததென்ற சட்டத்திற்கு இசையும் மாதிரி “பெரியோர்களே, தாய்மாரே …” என்று தாய்மார் பெரியோர் இல்லை என்ற மாதிரியும் தாய் ஆகாத பெண்களுக்கும் ஸ்திரிகளுக்கும் அவர்கள் பேச்சு இயக்கப்படவில்லை என்ற மாதிரியும் பேசினர்.

PAFFREL urges to prevent use of public property for LG election campaigning

பத்தரைக்கு புத்தகம் கிடைக்காது வெளிக்கிட்டு; PAFFREL கூட்டத்துக்கு சென்றேன். அங்கு முன்னாள் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர் முகமட் தன் பேச்சை முடித்து, இரண்டாவது பேச்சாளர் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கணேசலிங்கம் தன் பேச்சை முடிக்கும் தறுவாயில் நான் என் பேச்சை ஆரம்பித்தேன். இதோ என் பேச்சு:

ஜனாதிபதி முறைமையை வைத்திருக்கப் போகிறோமா? அல்லது குறித்த நாளில் தேர்தலா?

அமெரிக்காவில் எப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அமெரிக்க யாப்பில் திட்டவட்டமாக உள்ளது. அங்கு அரசாங்க தலைமைக்கானவரின் வாரிசு தெளிவாய் கூறப்பட்டுள்ளது. யாப்பின்படி நொவெம்பர் மாத முதல் திங்களுக்கு அடுத்து வரும் செவ்வாய் இரட்டை வருஷங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கு காரணம் கொங்கிரஸின் கீழ் தளத்தில் உள்ள House of Representatives இற்கு இரண்டு வருஷத்துக்கு ஒருக்கால் அங்கத்தவர்கள் தெரியப்படுவர். ஜனாதிபதி 4 வருஷத்திற்கு ஒருக்கால் தெரிவுசெய்யப்படுவார். கொங்கிரஸின் மேல் தளத்திலுள்ள Senate அங்கத்தவர்கள் 6 வருஷத்திற்கு ஒருமுறை தெரிவு செய்யப்பட்டாளும் Senate அங்கத்தவர்களில் ஒரு பகுதியினரே ஒரு தேர்தல் வருஷத்தில் தெரியப்படுவார்கள்.

இது இரட்டை வருஷம். முதல் திங்கள் 4ம் திகதி. அதற்கடுத்த செவ்வாய் 5ம் திகதி. ஆகவே 5ம் திகதி ஜநாதிபதிக்கும் House of Representatives பிரதிநிதிகளுக்கும் சில Senate பிரதிநிதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.

அமெரிக்காவில் தெரியப்படுபவர்கள் எல்லாரும் இந்த குறித்த செவ்வாயில் தெரியப்படுவார்கள்.

ஜனாதிபதி இறந்தால் அல்லது ஓடினால் அல்லது நிக்கப்பட்டால் யார் அவருடைய வாரிசு என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு 10 பேருக்க மேல்பட்ட பட்டியலில் யாப்பில் காட்டப்பட்டுள்ளது. தேர்தல் இல்ல்லாமலே புதிய ஜனாதிபதி பதவியேற்பார். வேறு நாட்களில் தேர்தலுக்கு இடமில்லை.

எப்போதென்றாலும் தேர்தல் வைக்கும் அமைப்பு பிரதானமாக இங்கிலாந்திலேயே உள்ளது. அங்கு கூட திட்டமிட்ட தேர்தல் நாள் ஒரு விசேஷ சட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்டு அதன் பிறகு அதன் படி 2015 இல் ஒரே ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த காரணம் “இந்த சட்டத்தால் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் அச்சட்டம் பக்க வாதத்தை உண்டாக்கிட்டு” என்று கூறப்பட்டது.

ஆனாலும் அதிகாரம் பரப்பப்பட்ட ஸ்கொட்லன்ட் போன்ற பாராளுமன்றங்களில் அது ரத்து செய்யப்படவில்லை. அமெரிக்க யாப்பில் உள்ளவாறு அதே சொற்களில் பாராளுமன்றம் எப்போது நியமிக்கப்பட வேண்டுமோ அதே சொற்களில் அதிகாரம் பரப்பப்பட்ட ஸ்கொட்லன்ட், வேல்ஸ் போன்ற பாராளுமன்றங்களில் இன்றும் தேர்தல் நடத்தப்படுகிறது.

பிரதம மந்திரி அரசாங்கத் தலைவராக உள்ள அமைப்பில் பிரதமர் இல்லாது போனால் இன்னும் ஒருவரை நியமிப்பது சுலபமே. இலங்கையில் உள்ள அரச தலைவரின் வாரிசு ஏற்பாட்டில் ஜனாதிபதி இல்லாமல் போனால் பிரதமர் தற்காலிகமாக பதவியேற்று பாராளுமன்றம் ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரேயடியாக ஏதாவது விபத்தில் நீக்கப்பட்டால் அல்லது ஏதும் ஒரு விதத்தில் நீக்கினால் என்ன நடக்கும் என்பது தெளிவில்லை.

இன்று ஜனாதிபதி பதவியை நீக்க வேண்டும் என்கிறோம். அதே போல திட்டமான நாளில் தேர்தல் வைக்கப்பட வேண்டும் என்றும் இந்த அவையிலும் வேறு இடங்களிலும் கருத்து முன் வைக்கப்படுகிறது. இது சரிவராது. ஏனென்றால் பிரதமர் பக்கம் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு மாறினால் உடனடியாக தேர்தல் வைக்கப்பட வேண்டும். அதே போல ஒரு கூட்டுக் கட்சிகளுடைய அரசாங்கத்தின் கூட்டு ஒப்பந்தம் பிழைத்தாலும் பெரும்பான்மை இன்றி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். குறித்த நாள் தேர்தல் ஒழுங்கு இருந்தால், அது இதைவிடாது. ஆகவே நாம் ஒன்றில் ஜனாதிபதியை வைத்திருக்க வேண்டும், அல்லது குறித்த தேர்தல் நாளை வைத்திருக்க வேண்டும். இரண்டையும் வைத்திருக்க முடியாது.

அரசியல் நேர்மை:

The March 12 Movement strongly denounces the passage of the Online Safety Bill – Transparency International Sri Lanka

அந்த தலைப்பை முடித்து அரசியல் நேர்மைக்கு வருவோம். PAFFREL முன்வைத்த சிறந்த கொள்கைகள் உடைய மார்ச் 12 அமைப்பைப் பார்ப்போம். இந்த ஒப்பந்தப்படி கையொப்பம் போடும் கட்சிகள் நேர்மையானவர்களை மட்டும் தேர்தல்களுக்கு முன்வைக்க ஒத்துக்கொள்வார்கள்.

இதன் ஸ்தாபனக் கூட்டம் பண்டாரநாயக்கா மண்டபத்தில் இடம்பெற்ற போது நானும் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவராக அழைக்கப்பட்டிருந்தேன்.

அக்கூட்டத்துக்கு கட்சி பிரமுகரகள், இரண்டே இரண்டு பேர்தான் வந்திருந்தனர். ஒன்று UNPல் இருந்து கையொப்ப பிரச்சனையில் ஈடுபட்டு நீக்கப்பட்டவர் திஸ்ஸ அத்தநாயக்க. அதே மாதிரி இரண்டாவது மஹிந்தானந்த அலுத்கமகே என்ற சில குற்றச்சாட்டுகளின் கீழ் இருந்தவர்.

பொங்கு தமிழ் கணேசலிங்கமும் – யோகேஸ்வரி மீதான பாலியல் வல்லுறவும்:

இன்று PAFFREL ஒரு சிறுபிள்ளை வேலைக்காரியை துஷ்பிரயோகம் பண்ணி பொலிஸ் பிடித்தபோது புலிகளினால் காப்பாற்றப்பட்டவரென்று பெண்கள் இயக்கங்களால் குற்றம் சாட்டப்படும் பொங்கு தமிழ் புலிப்பிரமுகரை மேடையில் ஏற்றியுள்ளது. இதை தெரிந்தும் சிறு பிள்ளைகளுக்கெதிராக PAFFREL செய்த வன்செயல்.

இவற்றிலிருந்து PAFFREL இன் மார்ச் 12 இயக்கம் ஏன் வேர் ஊன்றவில்லை என்பதை நாம் கணிக்கலாம்.

எமது மத்தியில் ஜனநாயகம் ஒரு போலி ஆட்டம். 1990 இல் முஸ்லிம் காரரை வடக்கிலிருந்து இன அழிப்பு செய்தும் அச்செயல் பிழை என்பவருக்கு தமிழர் மத்தியில் பெரிதாக வாக்கு கிடையாது.

2005 இல் புலிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் கொடுத்து அந்தத் தேர்தலில் இருந்து எம்மை நிறுத்தி வாக்களிக்க தடை செய்தனர். அப்படி ராஜபக்சாவை ஜனாதிபதி ஆக்கி முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு வழி வகுத்தவர்களுக்கு இன்றும் எம்மத்தியில் ஆதரவு உள்ளது.

 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் ஒரே தலைவர் - News View

அந்த ராஜபக்சவோடு சேர்ந்து வாக்குகள் இல்லாமல் டக்லஸ் தேவானந்தா மந்திரி ஆகினார். காலப்போக்கில் இப்போது வாக்குகளை பள்ளிக்கூட சப்பாத்தும் கொடுத்து பெற்றுவருகிறார். குப்பை அள்ளுவதற்க்கும் சில வேலை வாய்ப்புகளுக்கும் தமது உரிமைகளை வித்து வாழ்பவர்கள் உள்ளார்கள். உண்மை பிரதிநிதிகள் உள்ள போது டக்ளஸ் போன்றவர்கள் ஊடாக அரசாங்கம் நிவாரனங்கள் கொடுப்பது ஜனநாயக விரோதம். டக்ளஸ் இந்தியாவில் பொலீசாரால் வேண்டப்பட்டவராய் உள்ளபோது அவர் இங்கு மந்திரியாக இருப்பது எப்படி? எம்மத்தியில் அவரை தடைசெய்ய எமக்கு வழியே இல்லை. இன்று. கொப்பிக்கும் சப்பாத்துக்கும் எமது ஜனநாயகத்தை கெடுத்தவர்கள் பலர்.

ஒரு வாத்தியார் மாதிரி எமது ஜனநாயகத்திற்கு புள்ளிகள் போடுவதென்றால் ஒரு பெரிய F (Fail) தான் கொடுக்கலாம்.

ஏன்? எம் சமுதாயத்தில் என்ன குற்றம் செய்தவர்களிடமிருந்தும் கை நீட்டி சலுகைகளை எடுப்போம். இதனால் வால் பிடிக்க பலர் உள்ளனர் என்பதை காட்டுகிறது. வெட்கம் என்று ஒன்று எமது மத்தியில் இல்லை. களவெடுத்து பணக்காரராய் வந்தவர்களுக்கு எம்மத்தியில் மரியாதை உண்டு. அவர்களை எம் சடங்குகளுக்கு கூப்பிட்டால், களவெடுத்ததின் ஒரு சிறிய பகுதியை கூப்பிட்ட கோவிலுக்கோ பள்ளிக்கூடத்திற்கோ தருவார்.

பல பெண்சாதிகள் உள்ள கடவுள்களை கும்பிடுவோம். புருஷன் தவம் இருக்க பெண்சாதி அனுஷியாவை மயக்கினவரை எமது, மிகப் பெரிய கடவுள் ஆக்கியுள்ளோம். ஏங்கிருந்து எம் குணங்கள் வருகின்றன என்பது தெளிவு.

ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்:

Dr. Aaruthirumurugan – My WordPress Blog

அனாதை இல்லத்திலுள்ள பெண் பிள்ளைகளை அவர்கள் குளிக்கும் போது படம் எடுத்தாலும் தலைமை விருந்தினராக எம் பல்கலைக்கழகம் கூப்பிடும். இன்றும் தமிழ்நாட்டில் 9-10 வயதுப் பிளளைகளை பிராமணர் பிடித்து ஏறி நசித்து இடுப்பை உடைத்து பிள்ளை தாச்சி ஆக்கிற விவரங்கள் பல. தமிழ் நாட்டு ஒடுக்கப்படும் சாதிகள் விழிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நேர்மை அரசியலுக்கு எங்கே இடம்? எமது வெட்கம் எங்கே?

இதற்கு விடை நாம் என்ன காரணங்களுக்கு வாக்களிக்கிறோம் என்பதிலும் உள்ளது. அடையாளம் பார்த்தே வாக்களிக்கிறோம். மேல் சாதியினருக்கு பயம்.

 

சாதி பார்த்து அருண் சித்தார்த்தை ஒதுக்குகின்றார்கள்:

அருண் சித்தார்த் – தேசம்

இன்று (26/10/2024) இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிகளை அழைத்து எமது எம்பி எமது குரல் என்ற தலைப்பில் வேட்பாளர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தேர்தலில் பதக்கம் சின்னத்தில் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் என்ற கட்சி இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. என்ன காரணம். அதன் தலைவர் அருண் சித்தார்த் ஒரு நளவர் சமூகத்தவர் என்பதையும் தாங்கள் இந்த வெள்ளாளியர்களால் நூற்றாண்டு காலமாக இன்றும் எவ்வாறு ஒடுக்கப்பட்டு வருகின்றோம் என்பதையும் சொல்லி வருகின்றார். அவருடைய குரலை அடைப்பதற்கு அவரை அப்புறப்படுத்துவதற்கு இந்த வெள்ளாளிய தமிழ் தேசியம் எல்லாம் செய்கின்றது. வெள்ளாளியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் ஊடக மையமும் கூட அருண் சித்தார்த்தை கூட்டி அள்ளி குப்பையில் போடவே வேலை செய்கின்றன. நீங்கள் ஒற்றுமை பற்றிப் பேசுவது வெள்ளாளர் எல்லாம் ஒற்றுமையாக வாங்கோ என்றா? கஜேந்திரகுமாரின் விக்கினேஸ்வரனின் சித்தார்த்தனின் தமிழ் தேசியத்துக்குள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை. முஸ்லீம் களுக்கு இடமில்லை. கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை. செல்வம் அடைக்கலநாதன் சைவ வெள்ளாளியர்களுக்கு சேவகம் செய்யாவிட்டால் கிறிஸ்தவர்களுக்கு குரல் கொடுத்தால் அவரும் விரட்டப்பட்டு விடுவார்.

நாம் எவ்வாறு வாக்களிக்கின்றோம்:

நான் என் பொறியியல் மாணவர்களுக்கு நெறிமுறைகள் பற்றியும் படிபிப்பது உண்டு. தேர்தல் பிரச்சாரம் மாதிரியே எமது சேவைகளை விற்கும் பிரச்சாரமும். நான் உபயோகிக்கும் புஸ்தகங்களில் ஒன்று North, Shaw, Grossmann, Lipsitz ஆகியவர்களால் எழுதப்பட்டது. பல பல்கலைக்கழகங்களாலும் உபயோகிக்கப்படும் புஸ்தகம். அவர்கள் சொல்வது நாம் வாக்களிக்கும் போது ஐந்து பிரதானமான காரணங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று. இவற்றில் மிக பிரதானமானதிலிருந்து வரிசைப்படுத்தினால்:

முதலாவது சமூக அடையாளம்: இதனுள் இனம், சொந்தம் சாதி, அந்தஸ்து, ஊர் அடங்கும். தமிழனும் சிங்களவனும் எம் வாக்கை கேட்டால் தமிழனுக்கே போடுவோம். மச்சான் அல்லது ஊர்க்காரன் கேட்டால் அவருக்கே வாக்கைப் போடுவோம்.

இரண்டாவது கட்சி அடையாளம்: வழக்கமாக எமது குடும்பங்களுடன் ஒரு கட்சி அடையாளப்படுத்தப்படும். அப்பா யாருக்கு போட்டாரோ, அதே கட்சிக்கு நாமும் போடுவோம்.

மூன்றாவதாக தேசிய பொருளாதார நிலை: இதுதான் காரணங்களில் நல்லதொன்று.

நான்காவதாக கொள்கைகள்: இதுவும் அடையாளத்துடன் நன்றாக சம்பந்தப்படும் அதிகாரப் பரவலாக்கல் செய்வாரா? தொழிற்ச்சாலைகள் எங்கள் ஊரில் போடுவார்களா? எங்கள் ரோட்டை திருத்துவாரா?

ஐந்தாவதாக தோற்றம், பழக்கவழக்கம் போன்றவை: இதுதான் அழகான நடிகர்களை கட்சிகள் முன்வைப்பது. ஆனால் இதுவும் ஒரு விதத்தில் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது. உதாரணமாக காகத்துக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்றுமாதிரி பொதுவாக நம்மை போன்றவர்களையே அழகு என்று நாம் கருதுகிறோம். வெற்றிலை சப்பி காறித் துப்புகிறவர்களுக்கு எமது வாக்கை கொடுக்க தயங்குவோம்.

எனது அனுபவத்திலிருந்து:

எனது சொந்த அனுபவத்தில் இருந்து ஒரு சில காரியங்களை சொல்ல விடுங்கள். எனது அடையாளம் என்ன? தமிழரசு கட்சியிலிருந்தும் எனது குடும்பத்திலிருநதும் என் அடையாளம் வருகின்றது. எனது. பாட்டன் பெயர் சாமுவேல் சங்கரப்பிள்ளை சோமசுந்தரம். இவர் பட்டப்பெயர் மாவிட்டபுரம் கோயில் கொடிமர சங்கரர். இவர் கிறிஸ்தவனாக மாற முன்பு கோவிலில் கொடியேற்றம் உரிமை உடையவர்.

தந்தை செல்வாவினுடைய பெண்சாதிப் பக்க அளவெட்டி மருமகளை முடித்தது எனது தமிழரசு கட்சியைச் சேர்ந்த மாமா பீட்டர் சோமசுந்தரம். கதிரவேற்பிள்ளை, வன்னியசிங்கம், தர்மலிங்கம், தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் ஆகிய MP மாரும் சோமசுந்தரத்தின் ஊடான என் சொந்தக்காரர். இதே போலவே நல்லூர் MP இரும்பு மனிதன் நாகநாதனின் உண்மையான பெயர் ஹென்ஸ்மன். ஹென்ஸ்மன் என்பவர் 1865 இல் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்ட முதல் தமிழ் அங்கிலிக்கன் போதகர் (பாரம்பரியம் தெரியாமல் குரங்கின் கையில் பூமாலை என்றமாதிரி நல்லூர் பரி. யாக்கோபு ஆலயத்தை நடத்துபவர்கள் சவக்காளையில் இடமில்லை என்று சொல்லி அங்குள்ள 5-6 ஹென்ஸ்மன் பெயரிலுள்ள கல்லறைகளை இடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்). அரசியலுக்காக வேண்டி பாரம்பரியமுள்ள அப்பெயரை கைவிட்டவர் MP நாகநாதன். அவர் குடும்பமும் இரண்டாவதாக 1866 இல் அபிஷேகம் பண்ணப்பட்ட எலைஜா ஹூல் இன் குடும்பமும் ஒன்றிற்குள் ஒன்று கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள்.

இப்படி அடையாளம் இருக்கிறபோது வாலிபனாக நான் என் மாமா மறியலுக்கு போய் தேர்தல் கேட்ட போது “வீட்டுக்கு நேரே புள்ளடி” என்று கத்தி திரிந்தது எனது ஒரு காலப் பழக்கம்.

அதே போலவே சத்தியாக்கிரக காலத்தில் வவுனியாவிக்கு சிங்களவர் வந்து எம்மை அடிக்கப் போகிறார்கள் என்று கதை வர நாங்கள் “தமிழருக்கு ஜே“ என்று கத்திக்கொண்று எமது வாலிபச் சங்கத் தலைவர் யோகேந்திரன் அரசரட்ணத்தின் பின் செம்மணி ரோட்டால் லொரி லொரியாக வவுனியா செல்பவர்களை பின்தொடர்ந்த காலம் அது. அந்த வேர்கள் அழிந்துபோயினது ஏப்படி?

நான் பெரிய உற்சாகத்துடன், ஊக்கத்துடன், அமெரிக்காவிலிருந்து என் பிளைளைகளுக்கு வேர் கொடுக்க வேண்டும், ஏதும் சேவை செய்யலாம், என்று திரும்பி வந்தேன். எனக்கோ என் மனைவிக்கோ யாழ்ப்பாணத்தில் இடம் கிடைக்கவில்லை.

இறுதியில் பேராதனையில் சிரேஷ்ட மின் பொறியியல் பேராசிரியராக இருந்த போது எனக்கு பேரவை வாக்களித்து யாழ் துணைவேந்தராகினேன். அப்போதும் எனக்கு வாக்களித்த இருவர் நான் பரமேஸ்வரா கோவிலில் கும்பிட்டு மேள தாளங்களுடன் வந்தே VC கதிரையில் உட்கார வேணடும். ஏனென்றால் அதுவே பாரம்பரியம் என்றனர். அதனுடன் என் உச்சாகம் குறைந்தது. சம்மதித்திருந்தால் என் சரித்திரம் மாறி இருக்கலாம். அந்த யோசனையே பாவம்.

துரோகி என்றார்கள். கிறிஸ்தவன் என்றார்கள். பல்கலைகழக வாசலில் என் கொடும்பாவியை எரித்தார்கள். கொலை மிரட்டு வந்தபோது விட்டு ஓடினேன். துணை வேந்தராக இருந்ந சின்னக்காலததையும் துணை வேந்தர் பலகையில் போட மறுத்தனர். நீதி மன்றம் (USAB) கட்ளையிட பலகையை திருத்த வேணடும் என்று சொல்லி வசந்தி அரசரட்ணம் இறக்கிவிட்டார். (இப்போதைய துணைவேந்தர் சிறிசற்குணராஜா வந்து தான் என் பெயருடன் அப்பலகை திரும்பவும் ஏற்றப்பட்டது.)

உரிமைகளின் உண்மைநிலை விளங்கியது. எனினும் திரும்பி வந்தேன். தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்த சி. யோகேஸ்வரன் சைவர்கள் மட்டும் தான் தமிழர். கிறிஸ்தவர்கள் தமிழ் பேசுகிறவர்கள் மட்டுமே என்று ஒரு சைவ மகாநாட்டில் கதறினார். கிறிஸ்தவர்கள் தமிழ் பேசுகிறவர்களே ஒழிய தமிழர் இல்லை என்றார். அவருடன் தமிழரசுக் கட்சியின் வடமாகாண முதலமைச்சர் விக்நேஸ்வரன் மேடையில் துணை நிற்க யோகேஸ்வரன் தந்தை செல்வா தமிழன் இல்லையாம், தமிழ் பேசியவர் மட்டும் தானாம் என்ற மாதிரி கூறியது பத்திரிகைகளிலும் 2018 இல் வந்தது. அப்படிப்பட்ட மனிதனுக்கு 2020 இல் கட்சியின் வேட்புமனு கொடுக்கப்பட்டது. ஆனால் கட்சி அடிச்சு துரத்த வேண்டியவரை தம் வாக்கு மூலத்தை உபயோகித்து கிழக்கு மாகாண மக்கள் துரத்திவிட்டார்கள்.

தமிழரசு – மதம் – சாதி:

இதே போலவே, இம்மானுவேல் ஆர்னோல்டை யாழ்ப்பாண மேயராக்கும் போது இங்கே எம்முடன் இருக்கும் சீ வீ கே சிவஞானம் ஐயா அவர்கள் ஆர்னோல்டை கிரிஸ்தவறென்று சொல்லி எதிர்த்தாராம். ஐயா, இது தவறென்றால் சொல்லுங்கள்.

கட்சி கூட்டமொன்றில் ஆர்னோல்டை கிறிஸ்தவ சக்கிலி என்று ஒருவர் பேசினாராம். ஆர்னோல்ட் அவரை எழும்பி அடித்தாராம் பொலீஸ் ஆர்னோல்டை பிடித்துச் சென்றது பத்திரிகைகளில் வந்தது. அதை தொடர்ந்து கட்சி ஒரு குற்ற நடவடிக்கையும் எடுத்தது எனக்கு தெரியாது. ராஜபக்சாக்கலின் வழிகாட்டலில் கட்சி ஒரு குற்றத்திற்கும் தண்டனை கொடுக்காத இன்றுள்ள ஒரு காவாலிக் கூட்டம் ஆகிவிட்டது.

தமிழரசுக் கட்சியில் அகிம்சை கேள்விக்குள்ளானது:

தமிழரசுக் கட்சி வழக்கு ஜூலை 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு... - Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

இப்படியெல்லாம் சக்கிலி என்று கட்சியில் மக்கள் பேசும் போது சில கடுமையான வார்த்தைகள் உபயோகித்தால் தான் சில காரியங்களை விளக்கலாம். அகிம்சை கட்சி என்று நாம் சொன்னாலும் இந்த சண்டித்தனம் செல்வநாயகத்தின் காலத்திலேயே இருந்தது. சத்தியாக்கிரக மூட்டம் கச்சேரி-நலலூர் ரோட்டால் கச்சேரியை நோக்கி சில வல்வெட்டித்துறையார் பீரங்கி ஒன்றை தள்ளிக்கொண்று போவதை நான் கண்டிருக்கிறேன் (அது சுடப்பட்டதை பற்றி ஒன்றும் நான் கேள்ளவிப்படவில்லை).

மேலும் நடு-அறுபதாம் ஆண்டுகளில் மாநகர சபை தேர்தலின் போது அரியாலையில் வாக்கு தமிழரசு கட்சிக்குத்தான் கிடைக்கிறது. அங்கு பலர் பறையர் சாதியை அல்லது சிவ்விய சாதியை சேர்ந்தவர்கள். ஆனால் அந்த நேரம் தமிழ் கொங்கிரஸ்காரராக இருக்க வேண்டும், படித்த பறையர் சாதி வாத்தியாரை நிலைநிறுத்த தமிழரசுக் கட்சியின் நிலை அபாயம் ஆகியது. உடனடியாக காவாலிகளை பிடித்து அந்த வாத்தியாரை ரோட்டில் வைத்து அடித்து வேட்டியை உரித்து நிர்வாணமாக்கினார்கள். அந்த வாத்தியாரும் மாணவராகிய எம்மை கண்ட பாட்டுக்கு அடிக்கிறதாலும், பெண்சாதியை அடிக்க அந்த அம்மையார் தனது சபைக் குருவானவரின் வீடடிற்கு ஓடியிருந்ததாலும் அந்த நேரத்தில் அந்த வாத்தியாரககு எதிரான காட்டுமிராண்டிச் செயல் பிழையாகப் படவில்லை. சந்தோஷப்படுத்தியதென்று கூடச் சொல்லலாம். தமிழரசுக் கட்சி ஜெயித்தது. ஆனால் ஜெயித்ததில் அதன் அஹிம்சை கொள்கைகள் தோல்வி கண்டன.

இந்தக் கட்சி அடையாளத்தை அழித்த இன்னும் ஒன்று, வன்முறைகளுக்கு ஆதரவாக கட்சியில் பலர் உள்ளது. முஸ்லிம்களை பகைக்கிற பலர் முஸ்லிம்களுக்கு நாம் செய்தது பிழை என்று கூறியதற்கு சுமந்திரனின் ஆதரவு குறைகிறது. சுமந்திரனுக்கு எதிராக இன்று வன்முறை மொழி பாவிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் உள்ளவர்களும் அதனைச் செய்கிறார்கள்.

அடையாளம் புடுங்கி எறியப்படுகிறது. என் கொடும்பாவியை பல்கலைக்கழக வாசலில் 2006 இல் எரித்தார்கள். என் பிள்ளைகள் ஊருக்கு கொஞ்சம் என்றாலும் பாசம் உண்டாக்கலாம் என்று கொண்டு வந்தேன். அவர்களோ இப்போது யாழ்ப்பாணம் வருவதற்கு மறுக்கிறார்கள்: “அப்பா அவர்கள் உங்களை வேண்டாம் என்று கூறும்போது ஏன் அங்கே நிற்கிறீர்கள்?” என்று என்னைக் கேட்கிறார்கள். நானும் என் பெண்சாதியும் தனித்துப்போனோம்.

யாருக்கு வாக்களிப்பது?

அடுத்த தலைப்பாக வாக்கு போடும் விதம். முதல் விரும்பிய கட்சிக்கும் பின் அந்தக் கட்சியில் விரும்பும் ஓருவருக்கோ, இருவருக்கோ, மூவருக்கோ உங்களது தெரிவை போட வேண்டும். ஒருவருக்கும் போடாமலும் விடலாம். மூவருக்கும் கூட போடப்படாது. பிரச்சனை என்னவென்றால் சிலருக்கு பிரியமானவர்கள் இப்போ வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். ஆனால் எம்மை எமக்கு விருப்பமில்லதவர்களுக்கு எம் வாக்கை போட வில்லங்கப்படுத்துவது ஜனநாயக் கொலை. இது ஜனநாயகம் இல்லை.

வீணை / சைக்கிள் / மான் / மாம்பழம் / ஊசி / வெங்காயங்களுக்கு வாக்களிப்பதா?

எந்த ஒரு கட்சிக்கு எமது வாக்கை போடுவது என்பது ஒரு பெரிய கேள்வி. இன்று தெரிந்தெடுக்க பெரிய திறமையான தெரிவுகள் இல்லை. பல கட்சிகள் இரத்தக் கைகள் உடையன. இவற்றில் EPDP ஒரு மோசமானது. கொலை காரக் கும்பல் என்கிறேன்.

ஜூலாய் 2000 ஆம் ஆண்டு இரு TNA ஊழியர்களை வாளால் வெட்டி கொலை செய்தார்கள் இவர்களில் நெப்போலியன் என்ற செபஸ்டியான் ரமேஷ் மோசமானவன். அவன் உடன் சேர்ந்தவர்கள் நடராஜா மதனராஜா EPDP MP. மற்றும் ஜீவன் தியாகராஜா நவசியாயம், கருணாமூர்த்தி என்பவர்களும் பொலீசாரால் பிடிக்கப்பட்டார்கள். நூதனமானது என்னவென்றால் இது கொலைகார வழக்காக இருந்தும் வவுனியா நீதிமன்றத்திற்கு கொண்டு போய் அங்கு பிணை கொடுக்கப்பட்டது. அதில் நெப்போலியன் உடனடியாக லண்டனுக்கு ஓடி விட்டார். அங்கு அதிக பணத்தோடு கடை போட்டிருக்கிறாராம். அச்சம்பவத்தில் சிவாஜிலிங்கம் மாவை சேனாதிராஜா இருவரும் படுகாயப்பட்டனர்.

எனது பாட்டன் சோமசுந்தரம் ஊடாக சொந்தக்காரராகிய போஜன் குடும்பத்தினர் மற்றும் BBC நிருபர் நிமலராஜன் ஆகியவர்களின் கொலைகளிலும் EPDP குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நான் பொறியியல் பீடத்தை பொறுப்பாளராக இருந்து கட்டிக்கொண்டிருந்த நாட்களில் 2011 ஆம் ஆண்டு என்மேல் பொய்க் குற்றங்கள் சாட்டி கூலிக்கார போலீஸ்காரரையும் பிடித்து என் மேல் வழக்கு தொடர்ந்தனர். நாட்டை விட்டு ஓடினேன். அப்போதைய EPDP கட்சியின் தேர்தல்பிரச்சார கூட்டங்களில் டக்ளஸ் தேவானந்தாவுடன் மேடை ஏறும் ஊர்காவல்துறை மஜிஸ்ட்ரேட் மேடையில் தோன்றுவதை நான் கண்டுள்ளேன். அந்த மஜிஸ்ட்ரேட்டே எனக்கு ஒரு பிடி ஆணை விடுத்திருந்தார். அப்படி நீதித்துறையை கெடுத்தவர்.

நான் ஓடி அமெரிக்காவில், இருந்தபோது டக்ளஸ் என் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்துக்கு உங்கள் பேராசிரியர் இலங்கையில் பொலீசாரிடம் இருந்து தப்பி உங்ககள் பல்கலைக்கழகத்தில் ஒளித்திருப்பது தெரியுமா எனக் கேட்டார். அதற்குப் பதிலாக பல்கலைக்கழகம் நாம் அமெரிக்காவில் கருத்து வேறுபாடுகளை கொண்டாடுவது உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், இந்தியாவில் பொலீசாரால் வேண்டப்படும் நீங்களும் கருத்து வேறுபாடுகளின் அருமையை ஏற்பீர்கள் என்றும் கூறினர். தமது கடிதத்தை பல்கலைக்கழகம் எனக்கு கொப்பியிட்ட போதே எனக்கு தெரிய வந்தது.

பின்பு ஓகஸ்ட் 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் வர நான் உடனடியாக திரும்பினேன். புதிய அரசாங்கத்தின் கீழ் டக்ளசிற்கு மஜிஸ்ட்ரேட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை. பிடி ஆணை எனக்கெதிராக இருந்ததால், விமானத்துறையில் இருந்து நேரடியாக புதிய மஜிஸ்ட்ரேட் முன் சரணடைந்து பிணையில் வெளி வந்தேன். இதை தொடர்ந்து பொலீசார் திரும்பத் திரும்ப 2, 3 வருஷங்களாக மாதத்திற்கு ஒருமுறை போல் தாங்கள் விசாரிக்கிறார்கள், தாங்கள் விசாரிக்கிறார்கள் என்று கூறிக் கடத்த, மஜிஸ்ட்ரேட் களைத்துப்போய் தான் விசாரணை நடக்கிறது என்று நம்பவில்லை என்று சொல்லி வழக்கை தள்ளி விட்டார். ஆதாரம் கிடைத்தால் திரும்பி வழக்கை போடுங்கள் என்றார். ஆறு வருஷங்கள் ஆகிவிட்டன, EPDP இன் முறைப்பாட்டிற்கு கூலிக்கார பொலீசாரிடம் ஆதாரங்கள் இன்றும் கிடைத்ததாக தெரியவில்லை. பொலீசாரை தனது சொந்த கூலிக்காரராக்கிய குற்றம் EPDP உடையது. இந்த டக்ளஸ்க்கு ஏன் மரியாதை? ஏன் எமதுவாக்கு?

அப்படி என்றால் எந்த கட்சிக்கு எமது வாக்கு? என்னை பொறுத்தவரையில் மலைநாட்டுத் தமிழரை அறுத்துவர்கள், தமிழர்க்கு பொட்டு போட்டவர்கள், அவர்களை எதிர்த்தவர்களை தமது இந்திய முகாம்களில் வைத்து எண்ணையில் பொரித்தவர்கள் ராஜபக்சா-ரணிலுடன் சேர்ந்து துரோகிகளாக எமது ஜனநாயக உரிமைகளையும் உயிர்களையும் பறித்தவர்கள் எமக்கு வேண்டாம்.

திசைகாட்டி அல்லது வீடு தான் எமது தெரிவாக அமைய வேண்டும்:

Anura meets Northern leaders

ஜனாதிபதி தேர்தலில் எனது வாக்கு அனுர குமார திசாநாயக்கவுக்கே போனது. அந்த நேரத்தில் அவர் ஒரு தனியாள். இப்போது கட்சிக்கு வாக்கு போட வேண்டும். அது மட்டும் இல்லை, அக்கட்சியில் கூடியது மூவருக்கு போட வேண்டும். அப்படி பார்த்தால் தமிழரசு கட்சியில் இளங்கோவன், சுமந்திரன், சயந்தன் போன்றவர்கள் இருக்கிறார்கள். கட்சி பிழையான வழியில் போனாலும் காப்பாற்ற தந்தை செல்வாவின் பெயர் உள்ளது. அவரது பேரன் இளங்கோவன் கட்சியை மன்னித்தால் நாங்களும் மன்னிக்கலாம்.

அதே வேளையில் NPP க்கு வாக்கை செலுத்தினால் புதிய அரசியலை உண்டாக்க, ஆரம்பிக்க, ஒரு நல்ல சந்தர்ப்பம். அவர்கள் கள்ளரையும் கெட்டவர்களையும் வேட்பாளராக போடாதது NPP ஐ பற்றிய ஒரு நல்லதொரு அறிகுறி.

கட்சி தெரிவை பொறுத்தவரை தமிழரசு கட்சியும் NPP மட்டுமே எமக்குள்ளன. இவற்றிற்கிடையில் ஒன்றை தெரிந்து பின்பு தெரியப்பட்ட கட்சியின் வேட்பாளர் மூவருக்கு உங்கள் வாக்கை போடுங்கள்.

தேர்வு உங்கள் கையில். நன்றி.

 

 

இறந்தவனுக்கு ஏது தேசியம் ? வளமற்றவனது உயிரிலும் உழைப்பிலேயுமே தேசியம் ! : ரவி சுந்தரலிங்கம்

இறந்தவனுக்கு ஏது தேசியம் ? வளமற்றவனது உயிரிலும் உழைப்பிலேயுமே தேசியம்

இலங்கையில் தமிழ் சிங்கள தேசிய வாதங்களின் போரில் சார்பாகவும் எதிராகவும் ஈடுபட்டு . போராளிகள் சிப்பாய்கள் துரோகிகள் என சமகாலப் பட்டப் பெயர்களையும் தாங்கி மாண்டு போனவர்கள் தொகை என்ன என்பதை முற்றாகச் சொல்லக் கூடிய ஞானிகள் யாரும் whatapps தளங்களில் கூட உள்ளார்களா எனத் தெரியவில்லை . ” பயன் இல்லை என்றால் மறந்திடுவதே விதி ” , என இறந்தவர்கள் யாரென நினைவு கூருவதை சொந்த பந்தங்களே மறந்து கொண்டு போகும் நிலைதான் இன்று நிஜமானது .

 

இந்நிலைக்கு தமிழீழத்தலைவர் என இன்றும் சிலரால் கொண்டாடப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூட விதிவிலக்கல்ல . ஆயுதப் போர்கள் முடிந்த மறுநாளிலிருந்தே

1. மற்றவருக்காக தம்மை அர்ப்பணிக்க முன்வந்தவர் யாவரையும் , ஒரே கண்ணுடன் நிலை கொள்ள வேண்டும் .

2. இறந்தவர் பட்டியல் ஒன்றினை தயாரிக்க வேண்டும் . 3.பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றினை நடத்த வேண்டும் .

4. இவர்கள் அனைவர் பேரிலும் ஒரேஒரு நாளினை தமிழ் பேசுவோரது இலங்கைத் தினமாக நடைமுகப் படுத்த வேண்டும் .

5. அமைப்புகள் பட்டப் பெயர்களைத் கடந்து , இறந்தவர்களை நினைவு கூரும் தலம் ஒன்றினை , முதலில் தற்காலமாக ஏதாவது ஒரு புகலிடத்திலும் , காலப் போக்கில் நிரந்தரமாக இலங்கையிலும் உருவாக்கிட வேண்டும் .

6.அவனை அல்லது இவனை மனித உரிமைக் கூண்டில் நிறுத்தப் போகிறோம் என்றபடி இலங்கையரது உழைப்பையும் , சொத்துகளையும் விரையம் செய்வதைத் தவிர்த்து , தென் ஆபிரிக்காவில் இடம் பெற்றது போல Truth and Reconciliation Commission ( TRC ) என்ற நடைமுறையாகக்கூடிய ஆணைக்குழுவை சட்ட பூர்வமாக நிலைநாட்ட வேண்டும் . என்ற ஆறு கோரிக்கைகளை பிரசுரமான ஆய்வுக் கட்டுரைகளிலும் , நேர்காணல்கள் போதும் . சகல விடுதலை அமைப்புகளது பிரதிநிகளுடன் நேரடியாகவும் , 2009 இல் இருந்தே குரல் கொடுத்து வந்ததால் பயன் எதுவும் இன்றும் இல்லை . ( Re : South Asia Research Group . Tamilview , Thesamnet , etc. , numerous meetings . } தேர்தல்களில் வாக்காளரது பட்டியல்களுடன் கதவுகள் தட்டும் தேசியம் பேசும் அரசில்வாதிகள் , கதவுகள் தட்டும் போது வீடுகளில் இறந்தவர்கள் உள்ளார்களா என விசாரித்து பட்டியல் செய்யக் கூடிய நிலமையை சாதகமாக்கியதோ கிடையாது.

சிங்கள சிப்பாய்களுக்கு இந்நிலை வேற்றுமையானதா ? இல்லை . ஆனால் , கைவசம் உள்ள அரசின் பணத்தை , தாமும் எடுத்து , அதேவேளை இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு சில சலுகைகளையும் வழங்கி அரசியல்வாதிகள் கொண்டாடி இருக்கலாம் . “ இறந்தவன் நினைவுகளில் மறைந்து போபவன் ” ” இறந்தவனுக்கே இறுதி நஸ்டம் ” என்ற நியதிகளையே சமூக நிலைப்பாடுகள் மீள் உணர்துகின்றன . இவ்விடத்தில் தமது வாழ்வின் இளமையை , பொருள் பண்டம் சேகரிக்கும் காலங்களை அதே தேசியவாங்களின் பெயரில் விரையம் செய்தவர்களை இங்கு நினைவுக்கு கொண்டுவந்து அவர்களது விரக்தியை மேலும் தூண்டிடும் நோக்கோ இங்கு இல்லை . ஆனால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமது விரக்திகளை உள்ளடக்கி , சுய அறிவாக்கி ஆக்க பூர்வமாக தம்மை ஈடுபடுத்துபவர்கள் , இன்றும் தேசியவாத போலிக் கர்ச்சனைகளை தமது சொகுசான வீடுகளிலிருந்து கீச்சிடும் போது எப்படி கணிப்பது ?

” முதலாளிகள் மட்டுமல்ல , தேசியம் பேசும் போலிகளும் , வண்டி வளர்க்கும் மனிதப் பண்டிகள்தான் . அதுமட்டுமல்ல , இவர்கள் யாவரும் bloody bores . ” என்று ஆங்கிலம் பேசி முடித்து தன்னை அறிவித்தாரே அந்த whatsapp ஞானி , அவர் பெயர் ஞாபகம் இல்லை . ஆயினும் அவரது குரல் சில வேளைகளில் சுயஅறிவை மேவிடுவது தவிர்க்க முடியாமலே உள்ளது . தமிழுக்காக தீ குளிப்போர் இன்று தமிழகத்தில் இல்லை . அங்கு சாதிகள் அற்றுப் போவதற்கான சான்றுகள் உள்ளன என்று வேறு தகவல்கள் . இலங்கையிலோ , சிங்களவரது ‘ அறகலையா ‘ முடிந்து ஏதோ NPP என்ற பெயரில் ஒரு மாற்றம் நடப்பதாக தகவல்கள் . தமிழ் பேசுவோர்கள் யாவரும் தொப்பிரட்டிகளாக மாறி சிங்கள தேசியவாத தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தமையும் ஊர்ஜிதம் . தமிழ் பேசுவோரை அடிமைப்படுத்த போதைப் பொருட்களை விற்கும் கடைகளை சிங்கள தேசியவாதிகள் எல்லா இடங்களிலும் உருவாக்குகிறார்கள் என்ற கூக்குரலுடனேயே போதைவஸ்து கடைகள் நடத்தும் தமிழீழ வாதிகள் , தேசியம் பேசும் அரசில்வாதிகள் , அவர்களது அடிவருடிகள் , மதவாதிகள் , சாதியவாதிகள் , பொருட்களை பதுக்கி தமிழ் மக்களை சூறையாடும் தேசியக் கடைக்கார்கள் , chattering monkeys , என்ற யாவரும் ஏதோ கெட்டவர்கள் என அடையாளம் காணும் காலம் கூட தமிழ் பேசுவோரிடையே பரவுகிறது என்ற வதந்தியும்தான் எட்டுகிறது . அப்படியானால் , இன்றும் அதே வார்தைகளுடன் அதே உருவங்களுடன் தேசியம் பேசும் அந்தப் பிராணிகள் எங்கே அதிகளவில் உள்ளார்கள் ? என்ற கேள்வியே எஞ்சுவது , தற்காலிகமானதாக இருந்தாலும் ஏதோ மனச் சுகத்தையும் தான் தருகிறது .

தேசிய மக்கள் சக்தி எதிர் நோக்கும் சவால்கள் !

எழுத்து – இதயச்சந்திரன்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பலராலும் பார்க்கப்படுகிறது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி.

‘முறைமை மாற்றம்’ என்பதை நோக்கி இத் திருப்பு முனை நகர்கிறது என்கின்றனர் சில அரசறிவியலாளர்.

‘சிஸ்டம் செஞ்’ என்பதை பலவிதமாக அர்த்தப்படுத்தினாலும் அரசியலமைப்பிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் இருப்பதை மேம்படுத்தும் சீர்திருத்தங்களாகவே அமையும்.

ஊழல் அற்ற ,ஏற்ற தாழ்வு இல்லாத நிர்வாகம் அடிப்படை மாற்றத்திற்கான ஆரம்பமாக இதனைக் கொள்ளலாம். அதுவே ஒரு கட்டமைப்புக் கோட்பாடாக மாறாது.

தே.ம. சக்தி சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் , இந்திய-மேற்குலகின் மைய நீரோட்ட ஊடகங்கள், ‘இடதுசாரிகள் மார்க்சிசவாதிகள் வெற்றி பெற்று விட்டனர்’ என்று தலைப்புச் செய்திகளை வெளியிட்டனர்.

ஆயுதக் கிளர்ச்சி ஊடாக புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் , முதலாளித்துவ தேர்தல் முறைமை ஊடாக அடிப்படை சோஷலிஸக் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று இவ் வல்லரசுகள் அச்சப்படுகின்றன.

இதுவரை ஆண்ட நவ தாராண்மைவாத தரகர்கள் , தேசிய இன முரண்பாட்டினை ஊக்குவித்து நாட்டினை அழிவுப் பாதையில் இட்டுச் சென்று , இறுதியில் வங்குரோத்து நிலைமையில் அனைத்து மக்களின் இறைமையை அடகு வைத்துள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட ஆழமான பாதிப்பினை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமது பிராந்திய பூகோள நலனை அடைந்திட முயலும் போது , அதற்கு இசைந்து போகாத ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டதென இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதுவே இந்த மார்க்சிச முலாம் பூசலின் வெளிப்பாடு எனக் கொள்ளலாம்.

இந்த பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட அரச கட்டமைப்பின் பலவீனம் , திடமான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க முடியாததொரு இக்கட்டான நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் காமினி கீரவேல அவர்கள் கூறுகின்றார்.

இலங்கைக்காக இருதரப்பு , பலதரப்பு மற்றும் சர்வதேச கடன் முறித்தரப்பு என்போருடன் பேசும் சர்வதேச நாணய நிதியமும் மறைமுகமாக மேற்குலகத்தின் உடனான வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்துகிறது.

கடன்களை செலுத்த முடியாதென கூறினால் , எந்த முதலீடுகளும் நாட்டுக்குள் வராது.

‘முதலையும் வட்டியையும் நீண்ட காலத்திற்குப் பிறகு தருகிறோம்'[Reprofiling] என்று ரணில் உடன்பாடு காணவில்லை.

மாறாக முறிகளின் ‘முதல்’ குறைப்பையும் [Haircut]வட்டிக் குறைப்பையும் முன்வைத்துள்ளார்.

 

இந்த நிலையில் புதிய அதிபர் அநுரகுமார திசாநாயக்க அவர்கள் , நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும் , அவருக்கு முன்னால் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

நாடு பெற்ற கடன்களை வைத்தே அடுத்த பூகோள அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும்.

 

அண்மைய நேர்காணல் ஒன்றில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்திய முதலீடுகள் குறித்து கூறியது கவனிப்புக்குரியது.

ஊழலற்ற. வெளிப்படைத்தன்மை உள்ள , தமது பொருளாதாரக் கொள்கைக்கு இசைந்து பயணிக்கக்கூடிய முதலீடுகளை நாம் வரவேற்போம் என்றார்.

 

இதற்கிடையே அனுராவிற்கு வாழ்த்துச் சொல்ல ஓடோடி வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறித்தும் பேச வேண்டும்.

 

இந்த சந்திப்புதான் என்பிபி என்று அழைக்கப்படும் ஜேவிபி யானது அதிகார நாற்காலியில் இருந்தவாறு ஒரு வல்லரசு நாட்டினை எதிர்கொண்ட முக்கிய நிகழ்வாகும்.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்தார்.

அவர் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசியது தமிழர் தரப்பிற்கு மகிழ்ச்சி.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நினைவுபடுத்தவே பதின்மூன்றை ஜெய்சங்கர் குறிப்பிட்டார் என்பது சிங்கள தரப்பிற்கு தெளிவாகப் புரியும்.

அநேகமாக சர்ச்சைக்குரிய தென்கடல் அடியில் உள்ள கனிமவள பாறைகள் குறித்தும் பேசியிருக்க வேண்டும்.

 

இரண்டாவது நிகழ்வாக சீனாவின் பாய்மர போர்க்கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகிறது.

வழமை போல் இந்தியத் தரப்பிலிருந்து அச்சுறுத்தலைக் காணவில்லை. அமைச்சர் விஜித ஹேரத்தின் கப்பல் குறித்த விளக்கங்களும் தெளிவாக வித்தியாசமாக இருக்கிறது. ‘எல்லோரையும் சமமாகப் பார்க்கிறோம்’ என்கிறார்.

 

ஆனாலும் தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கில் , எல்லோரையும் சமமாக நண்பர்களாக பார்ப்பதென்பது யதார்த்தபூர்வமானதல்ல.

 

பிரிக்சில் இணைவதற்கு இந்தியாவை அணுகுவது யதார்த்த அரசியல். அது தென் உலகத்தின்[Global South] முக்கிய அணி என்பதை இடதுசாரிகள் புரிந்து கொள்வர்.

ஆகவே இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியின் முழுமையான தோற்றம் புலப்படாது.

நாட்டின் பொருளாதாரம் நிமிரும் வரை , நிர்வாகக் கட்டமைப்பை சீர் செய்வதிலும் மக்களின் நன்மதிப்பினைப் பெறுவதிலும் அரசு அதிக கவனம் செலுத்துமென எதிர்பார்க்கலாம்.

 

இருப்பினும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் தீவிரவடையுமாயின் முன்னேற்றம் தடைப்படும் வாய்ப்புகள் அதிகம்.

The Political Tsunami in Sri Lanka! From Fall to Power! By T Jeyabalan

On September 21, 2024, the political tsunami that occurred in Sri Lanka caught the attention of Western leaders, causing their eyebrows to be raised, as stated by Erik Solheim, an international diplomat and Norwegian politician, in a post on his social media platform X (formerly Twitter). He also emphasised that Western countries should learn from Sri Lanka on how to gracefully conduct elections and power transitions. Moreover, he highlighted that this election was held without giving space to racism, religious extremism, or terrorism, something Sri Lanka hadn’t seen in a long time.

Solheim further pointed out that the United States and other Western powers led by America would not act against the newly elected president, Anura Kumara Dissanayake, in the near future. Erik Solheim, who is regarded as a soft face of American imperialism, mentioned in his post that during the election period, AKD (Anura Kumara Dissanayake) maintained ties with India, China, and the West. He also expressed the need for international cooperation, stating, “We must help AKD succeed as a leader and transform Sri Lanka into a prosperous, peaceful, and green nation.”

Erik Solheim, known for mediating the peace talks between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) after the 9/11 attacks in 2001, frequently shuttled between Colombo, Wanni, and Delhi during that period.

In the political history of independent Sri Lanka, 9/21 marks a political tsunami of sorts. However, how did this become possible? This is the culmination of over six decades of struggle.

The Janatha Vimukthi Peramuna (JVP), a Marxist-Leninist political movement, was founded in the mid-1960s. During British colonial rule, Sri Lanka, primarily an agricultural land, was plundered and exploited, leading to the country’s impoverishment. When independence was granted in 1948, the ruling powers were handed over to a Sinhala-Tamil elite class loyal to British imperialism. Meanwhile, rural farmers in Sri Lanka suffered immense hardships, with high unemployment rates affecting the youth. It was in this climate that the JVP was conceived.

The JVP was inspired by the Cuban Revolution, and its leader, Rohana Wijeweera, was drawn to the struggle of Che Guevara, who fought alongside Fidel Castro during the Cuban Revolution. This led the JVP to be commonly referred to as the “Che Guevara Movement.”

In March 1971, as I was born in Anuradhapura—Sri Lanka’s cultural capital for the Sinhalese—the revolution was already brewing. Though my family’s roots were in Jaffna, we lived in Anuradhapura due to my grandfather’s occupation. My father, influenced by the principles of E. V. Ramasamy Periyar, a Dravidian leader from India, had a deep interest in the JVP but did not actively participate in its armed struggle. Nonetheless, he supported the JVP ideologically.

On April 5, 1971, the revolution, later known as the “Che Guevara Uprising,” was planned to seize control of the Sri Lankan government (Sri Lanka Freedom Party – SLFP + Left Coalition), with coordinated attacks on over 100 police stations. However, an early attack on the Wellawaya police station in Monaragala district mistakenly on the morning of April 5 instead of the evening,alerted the government forces. Due to several missteps and other challenges, the revolution was quickly crushed, and many young JVP activists were arrested or killed.

The Sri Lankan government responded with extreme violence, not only targeting JVP members but also their families and supporters. Among the most infamous killings was that of Premawathi Manamperi, a 22-year-old woman from Katharagama who was brutally raped, paraded naked, shot multiple times, and burned alive by the Sri Lankan military on April 16, 1971. She could have been the sister of Krishanthi, who was burned in Jaffna’s Chemmany, and Isaipriya, who was killed in Mullivaikkal. Many such incidents occurred first in the south and later in the north.

Following independence, the ruling Sinhalese and Tamil political coalitions, such as the United National Party (UNP), the Sri Lanka Freedom Party (SLFP), the Tamil Arasu Katchi (Federal Party), and the Tamil Congress, stoked ethnic divisions for political gain. These parties, especially the Tamil Arasu Katchi, exploited racial politics to protect their vote banks, even though their original goal was equality, as reflected in the party’s true name.

In response to the growing influence of leftist politics in the 1970 election, the Tamil Arasu Katchi and Tamil Congress merged in 1976 to form the Tamil United Liberation Front (TULF). Their demand for a separate Tamil state, as outlined in the Vaddukoddai Resolution, was primarily intended to weaken the rising leftist movement, though it failed to address the fundamental socio-economic issues facing the Tamil people. While Appukamy, Ponnaiya, and Saleem Bai were fighting in the streets for a morsel to fill their stomachs, J.R. Mahattaya, Ponnambalam Mahattaya, Hakim MuthiasMahattaya, and Thondaman Mahattaya dined together joyfully. This disparity has continued in Sri Lanka from that day to this.

From the ashes of its 1971 failure, the JVP gradually rebuilt itself, transitioning from armed struggle to mainstream politics. In 1979, the JVP contested the Colombo Municipal Council elections but did not win. However, by the 1981 District Development Council elections, it had gained traction, winning 13 seats nationally. Rohana Wijeweera even contested the 1982 presidential election, earning significant support and positioning the JVP as Sri Lanka’s third-largest political force. My father’s vote also went to him. In 1982, we were living in the quarters at a place called ‘Kadathaya’ in Anuradhapura, in my father’s younger brother’s house. I still remember listening to the election results on the radio and writing them down in a notebook. At that time, the JVP (Janatha Vimukthi Peramuna) emerged as the third largest party in Sri Lanka.

But President J. R. Jayewardene of the United National Party, who came to power in 1977, stoked ethnic violence to weaken the JVP’s influence. This culminated in the anti-Tamil riots of 1983, during which the government blamed the JVP for the violence and banned the party.

During this period, the JVP once again went underground. In 1987, the Indo-Sri Lanka Agreement was formed, and the Indian Army entered Sri Lanka under the guise of a peacekeeping force, but in reality as an occupying force. The JVP, which had already studied Indian expansionism, took up arms once more. The great irony here is that Ranasinghe Premadasa, who became President under the United National Party, was elected on the platform of opposing India, with the slogan “I will expel the Indian Army from the country.’’ At the same time, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had already started a war against the Indian Army in the North and East. The JVP, too, took up arms against India. President Premadasa, in a speech to the nation, referred to LTTE leader Prabhakaran as his ‘sakotharaya’.

Taking advantage of President Premadasa’s conciliatory approach, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) assassinated Appapillai Amirthalingam and Vettivelu Yogeswaran, leaders of the Tamil United Liberation Front (TULF), which always held a pro-India stance, at their home in Colombo on July 13, 1989. Within 48 hours of this assassination, on July 16, 1989, Uma Maheswaran, leader of the People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), the only Tamil organisation with close ties to the JVP, was shot dead by his bodyguard. Those involved in Uma Maheswaran’s murder fled to Tamil Nadu before the incident became known to the outside world and sought refuge with the Indian intelligence agency, RAW. The arrangements for this were made by RAW agent Vettriechelvan. At that time, I was also staying with them in India, preparing to go abroad. On November 13, 1989, the JVP leader Rohana Wijeweera was captured and shot dead by the Sri Lankan army.

In the 1990s, both the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan government forced the Indian army to return to India in disgrace. On May 21, 1991, the LTTE assassinated former Indian Prime Minister Rajiv Gandhi, as retribution for pressuring them to accept the Indo-Sri Lanka Accord and for the Indian peacekeeping force’s attacks on them. On May 1, 1993, they also assassinated Sri Lankan President Premadasa. On May 18, 2009, the Sri Lankan government killed LTTE leader V. Prabhakaran, along with his family. There are serious allegations that India’s intelligence agencies were involved in the background. None of the key leaders involved in the 1987 Indo-Sri Lanka Accord is alive today—except J.R. Jayewardene, sho is no more, died of natural causes. The Indo-Sri Lanka Accord was a failure for all the three parties involved. It did not provide any solution to the Tamil national question. India had neither the desire to resolve it nor to implement the 13th Amendment. However, India continues to use it as a strategic tool to control the Sri Lankan government for its own interests.

During the continuous rule of the United National Party (UNP) from 1977 to 1993, rivers of blood flowed in Sri Lanka. It began in the south and continued unabated to the north. President Premadasa massacred JVP members and had their bodies floated down the Kelani River. It is estimated that 60,000 Sinhala JVP youths were killed during the 1989 period. In comparison, 5,000 were killed in the 1971 JVP uprising. Similarly, the number of people killed in clashes in the North and East up until the Indo-Sri Lanka Accord, across all sides, was estimated at 5,000 (this does not include the statistics of clashes with the Indian military).

Due to this, hatred towards the UNP led, for the first time, to both Sinhala and Tamil people coming together to elect Chandrika Kumaratunga, the heir of the Sri Lanka Freedom Party (SLFP), as President. It is no exaggeration to say that at the time, she was seen as a leader who respected the rights of the Tamil people. She also showed a more lenient approach towards the JVP. In the 1995 parliamentary elections, the JVP won one seat in the Hambantota district, marking their first parliamentary seat. However, in the 2001 parliamentary elections, the JVP won 16 seats and formed a coalition with the SLFP, creating the United People’s Freedom Alliance (UPFA). But due to policy disagreements, this alliance did not last long. In 2020, the JVP, under the newly formed National People’s Power (NPP) alliance, contested and won three seats.

For over seven decades, the alternating rule of the United National Party (UNP) and the Sri Lanka Freedom Party (SLFP) governing elites gradually pushed the country towards bankruptcy due to their irresponsible governance. Innocent people, regardless of race or religion—Sinhala, Tamil, Muslim, and Hill Country—were sacrificed for the growth of the ruling families of these communities. While the people struggled in their daily lives, leaders from all ethnic groups enjoyed economic prosperity. The resulting moral outrage sparked the people’s uprising known as the ‘Aragalaya.’ However, even before the people could take ownership of this movement, the West turned it to its advantage. The pro-China Rajapaksa regime was dismantled, and Ranil Wickremesinghe, a close friend of the Rajapaksas and highly trusted by the West and India, was made President. In contrast, the West gave full support to President Wickremesinghe to suppress those who led the ‘Aragalaya’ protests. The people became even more furious. September 2024 became a decisive moment for the Sri Lankan people. Whether the Tamil, Muslim, and Hill Country leaderships realized this or not, India was acutely aware of it, as mentioned by former Indian Army Chief Harikaran in an interview with Sri Lanka Radio on September 28, 2024.

To prevent the JVP from gaining votes in the North and East, a plan was devised by M. Thirunavukarasu, a former advisor to the LTTE and favoured by Indian intelligence, to introduce a Tamil common candidate. Tamil media, controlled by the Indian embassy in Colombo and Jaffna, painted this plan as a Tamil national agenda and fielded a politically neutral candidate, P. Ariyanendran, as the Tamil common candidate in the presidential election. This strategy was designed to divert votes that could go to either Ranil Wickremesinghe or the JVP, instead steering them towards Sajith Premadasa. In a similar fashion, during the 2005 elections, the LTTE called for a boycott to block votes that could have gone to Ranil Wickremesinghe. For this, Mahinda Rajapaksa paid 200 million Sri Lankan rupees to the LTTE, a fact widely reported in all Sri Lankan media. History has recorded what happened after Mahinda Rajapaksa became President in 2006.

In this election, based on the number of votes cast, in the North-East among Tamil and Muslim communities and in the hill country among Tamils; Sajith Premadasa, the son of former President Ranasinghe Premadasa of the United National Party, and Ranil Wickremesinghe of the same party, who contested independently, have received additional votes. The Tamil people completely rejected the call of the Tamil National Parties in the North-East. In any district in the North-East, the Tamil common candidate, Pakiyaselvam Ariyanethran, could not secure the first position. He only managed to maintain second place in the Jaffna district. In the Vanni district, he was pushed to third place. In his own district of Batticaloa and in Trincomalee, he was pushed to fourth place. This verdict from the Tamil people reflects their decision regarding a Tamil common candidate deployed under the guise of being the protector of Tamil nationalism.

When comparing the votes cast, the Tamil people have participated in voting in proportions equal to those in Sinhalese areas. This completely rejects the announcement by the Tamil National People’s Front – Gaja group, which promoted Tamil nationalism. Ananthi Sasitharan pointed out in a text message that the Tamil people have rejected the Tamil National People’s Front call for boycotting the election. Furthermore, the trend observed in previous election results in Sri Lanka is evident in this election outcome as well. Except for the elections in which Chandrika Bandaranaike was elected in 1994 and thereafter Maithripala Sirisena was elected, in other elections, the choice of the Sinhalese people has been contrary to that of the Tamil people.

There is a growing trend against the ruling systems – status quo in the United States and Europe. This is also noticeable in Sri Lanka. Political parties and the media had failed to recognize this shift. The youth have voted for a change towards a corruption-free governance. In this election, ethnic and religious biases have been pushed aside compared to past elections in independent Sri Lanka. A major reason for this is the National People’s Power. As a result, they have significantly increased their voting base among minority communities for the first time.

Similar to the Southern Province, people in the North, East, and hill country have rallied to vote for the front organisation of the JVP. In the Southern Province, ten times more people voted for the JVP than in previous years. However, in the Tamil regions of the North-East, people voted for the JVP at rates even fifteen times higher. Compared to the elections held in Sri Lanka in 2019, the JVP received on average thirteen times more votes in this election. However, in the Jaffna district, people voted for the JVP twenty times more than in the last election. In Sri Lanka, the Jaffna district has the biggest swing towards the JVP compared to previous elections. In 2019, the JVP received 1,375 votes in Jaffna. In this election, the JVP received 27,086 votes. This indicates a shift among the Tamil people, away from the JVP fear factor to moving towards the JVP. This voting trend is likely to resonate in the parliamentary election which is scheduled for November. It can be anticipated that the JVP, which has never secured a parliamentary seat in the North, will capture at least 5 seats in the November 2024 parliamentary elections. This parliamentary election will expose the fraudulent Tamil nationalists.

Tamil and Muslim parties and Tamil parties advocating for nationalism have failed to understand the people. In the last elections of 2019, they supported Sajith Premadasa based on their usual weak strategies, as he secured substantial votes against Gotabaya Rajapaksa. Now, they are facing a backlash. They have lost their credibility as leaders to the Tamil people. It is essential to remove the current leadership, which has expired, in favour of a politically rejuvenated younger generation emerging from Tamil, Muslim, and hill country communities.

The majority Sinhala people in Sri Lanka are ready to move the country towards change. This election has clearly shown that other communities are also progressing along this path. Even though Anura Kumara Dissanayake is elected president, the country will not run on a smooth course. Changes will not come easily. The upcoming phases of the National People’s Power will be severe and challenging.

In the upcoming parliamentary elections in November, the Sinhala, Tamil, Muslim, and hill country people in Sri Lanka should vote in a manner that secures a majority in parliament, reinforcing the mandate given to the JVP. The JVP will prove its majority in the parliamentary election. However, maintaining a two-thirds majority is exceedingly difficult in the Sri Lankan electoral system. Yet, only with a two-thirds majority can the JVP fully implement its electoral manifesto.

To secure that two-thirds majority in the upcoming November parliamentary elections, the JVP must demonstrate its distinct governance model to the people. It must show a decline in prices in the economy, particularly in goods. It should also maintain relations with India and the West and the International Monetary Fund, avoiding turbulence. This can only be made possible if the people stand behind the JVP. For the JVP, securing the presidency and parliament is easy, but providing solutions to the broad expectations of the people is extremely complicated and challenging. The JVP will need two parliamentary terms to bring about fundamental political and economic change in Sri Lanka. The next months will reveal whether the taste of power changes the JVP or whether it will alter the political and economic structure of the country.

The political tsunami of September 21, 2024, is a testament to the power of perseverance, resilience, and the will of the people to bring about meaningful change. It is the culmination of a long and difficult journey that began in the dusty villages and remote jungles of Sri Lanka in 1971, with a group of idealistic young revolutionaries fighting for justice and equality. Today, that dream is closer to becoming a reality than ever before.

About the Author:
Thambiraja Jayabalan:
BA (Hon) University of Sunderland, PGCE in Business with Economics (University of Worcester)
The author is a teacher and lecturer at a high school in London, originally from the Northern Province of Sri Lanka. He is also a writer and a journalist, contributing to Thesam, ThesamNet, and ThesamTube. In 2009, he founded the charity Little Aid in Killinochi, Sri Lanka. He has authored and edited several books, including Vaddukkoddayil Irunthu Mullivaaykkaal Varai (about the 2009 war in Wanni).

உலக யுத்தத்திற்கு மத்திய கிழக்கு தயாராகின்றது! : த ஜெயபாலன்

கிரிமினல் மோசடிக் குற்றவாளியான இஸ்ரேலின் ஆட்சித் தலைவர் பென்ஜமின் நெத்தன்யாகு தன்னுடைய பதவியைத் தக்க வைக்க, ஆரம்பித்த காஸாவுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் உலக யுத்தமாக மாறுகின்றது. யுத்தம் நிறுத்தப்பட்டால், தான் ஆட்சியில் இருக்க முடியாது; என்பதை நன்கு உணர்ந்த மேற்கின் நண்பனான பென்ஜமின் நெத்தன்யாகு லெபனானோடும் ஈரானோடும் வலிந்த மோதல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அரசின் முழு ஆதரவையும் பெற்றுள்ள, இஸ்ரேலுடைய இராணுவ பலம் மத்திய கிழக்கில் யாரையும் அடித்து வீழ்த்தும் அசுரபலம் கொண்டது. ஆனால் ஒரே காலகட்டத்தில் இஸ்ரேல் பல யுத்த முனைகளை ஆரம்பித்து இருப்பதும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவைத் தவிர ஏனைய நாடுகளிடம் இருந்து இஸ்ரேல் அந்நியப்பட்டு நிற்பதும் இஸ்ரேலுக்குப் பாதகமான அம்சங்கள்.

மத்திய கிழக்கில் தங்களுடைய நலன் பேண, இஸ்ரேல் 1948 இல் உருவாக்கப்பட்டதையடுத்து பலஸ்தீன மண் திறந்த வெளிச்சிறைச்சாலையாகியது. இஸ்ரேலுடைய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக ஹமாஸ் மற்றும் ஈரானின் முழுமையான ஆதரவோடு இயங்கும் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல், இப்பிரச்சினை மத்திய கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தி, மத்திய கிழக்கை ஒரு யுத்தப் பிரதேசமாக வைத்ததுள்ளது. காலத்துக்குக் காலம் யுத்த மேகங்கள் கூடுவதும், கலைவதும் வழமையாகிவிட்டது. அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த கொண்டாட்டம்.

ஹமாஸ் – ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தாக்குதலைத் தொடுத்து 1,200 பேர் வரையானவர்களை ஓக்ரோபர் 7, 2023 தாக்குதலில் படுகொலை செய்தது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய ஆங்கிலிக்கன், மற்றும் கத்தோலிக்க நாடுகள் தீவிர முனைப்புடன் முஸ்லீம்களான பலஸ்தீனியர்களை கடந்த ஓராண்டாக இனப்படுகொலை செய்து வருகின்றது. இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை என தென்னாபிரிக்க அரசு இஸ்ரேலுக்கு எதிரா சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து, கணிசமான வெற்றியையும் பெற்றது.

இஸ்ரேலின் முஸ்லீம் மக்களுக்கு குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் விரிந்து, பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

ஈரானின் நெருக்கத்துடன் இயங்கும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நன்கு திட்டமிட்ட பேஜர் தாக்குதலைத் தொடுத்து ஹிஸ்புல்லாவின் தலைமையை பலீனப்படுத்தியது. அடுத்த சில தினங்களில் கடந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவுக்கு தலைமை தாங்கிய ஹஸ்ஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். காஸாவில் கடந்த ஒரு வருடத்தில் சிறுவர், பெண்கள் உட்பட அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவுடன் இயங்கும் இஸ்ரேல், நூறாயிரம் பேர்வரை படுகொலை செய்தது. தற்போது இஸ்ரேல் ஈரானையும் யுத்தத்திற்குள் இழுத்துவிட்டுள்ளது. ஒக்ரோபர் முதல்நாள் ஈரான், தனது நண்பனான ஹசன் நஸ்ரல்லாவின் இழப்புக்கு பழிவாங்கும் வகையில் ஈராக் மீது 200 வரையான ஏவுகணைகளை எய்து தாக்குதலை நடத்தியுள்ளது.

இச்சம்பவமானது, மத்திய கிழக்கில் 3வது யுத்தம் ஆரம்பிக்கப் போகின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் நேற்றைய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி வழங்கும் என பென்ஜமின் நெத்தன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. அதே போல் பாலஸ்தீனத்தில் குழந்தைகளையும் பெண்களையும் ஹிட்லரிலும் மோசமாகப் படுகொலை செய்து ஹொலக்கோஸ்டை நடத்தும் இஸ்ரேலும் அதற்கு முழு ஆதரவு வழங்கும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கும் இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் நிலைமைகள் பாரதூரமாக அமையும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய அரசுக்கு மிக நெருக்கமான பல்கலைக்கழகக் கலாநிதியொருவர் குறிப்பிடுகையில், ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்காவும் அதில் ஈடுபட்டால் இஸ்ரேல் தாக்கப்படுவதுடன் மத்திய தரைக்கடலால் நடைபெறும் பெற்றோலியம் உட்பட்ட வர்த்தகங்கள் நிகழமாட்டாது என்றும் மேற்கினதும் உலகினதும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலக யுத்தமொன்றை நோக்கி உலகம் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இதனால் உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியொன்றைச் சந்திக்கக வாய்ப்புள்ளது.