கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஈரானில் குண்டுவெடிப்பு : 23 பேர் பலி

iran-bomb.jpgஈரானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாகிதான் நகரில் உள்ள ஷிட்டி மசூதியில் மாலை நேர பிரார்த்தனை நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் சிக்கி பலியாகியவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முகம்மது நபிகளின் மகளான பாத்திமாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரார்த்தனையின் போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் நிலைப்பாட்டை மாற்ற அமெரிக்கா பகிரங்க அழுத்தம்

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்று இஸ்ரேல் மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசியபோது ஒபாமா இந்த அழுத்தத்தைக் கொடுத்தார்.

மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியேற்றங்களை அகற்றல் பலஸ்தீனை தனிநாடாக ஏற்றல் போன்ற விடயங்களை இஸ்ரேல் அவசரமாகச் செய்ய வேண்டும். இவ்விடயத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கத் தயார். சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ள விஜயத்தின்போது இது பற்றி அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசப்படும் என்று ஒபாமா கூறியதாக அப்பாஸின் நெருங்கிய அதிகாரியொருவர் சொன்னார்.

இச்சந்திப்பில் பலஸ்தீன ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் விளக்கினார். இது பேச்சு வார்த்தைக்குரிய முக்கியமான நேரம் இரண்டும் இரண்டு நாடுகள் என்ற அந்தஸ்த்தில் பேசப்பட வேண்டும். இதற்கான ஆவணங்களையும் வரை படங்களையும் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம் என அப்பாஸ் கூறினார். பின்னர் வீதிகளின் வரைபடம்.  அரபு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மாண நகல்கள் என்பன புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டன. அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுயோசனைகளை இத்திட்டம் கொண்டுள் ளதாக அப்பாஸ் நம்பிக்கையும் வெளியிட்டார்.

இஸ்ரேல் தனது நிலைப்பாட்டிலிருந்து விலக மறுத்தால் நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிவருமா என்று ஊடகவியலாளர் கேட்டகேள்விக்கு அப்பாஸ் பதிலளித்தார். அப்பதிலில் அப்பாஸ் கூறியதாவது,

இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமானது உறதி மொழிகளை வழங்குமளவிலில்லை. ஆனால் உறுதி மொழிகள் சிறப்பானவை. நாம் இணைந்து செயற்பட்டு இவ்விடயத்தில் சாதனை புரிய வேண்டுமென்பதையே தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

முஸ்லிம் உலகுடன் நட்பை வளர்க்க விரும்பும் அமெரிக்கா இஸ்ரேல் அரபு பிணக்கு களுக்கு சமாதானத்தைக் காண விழைகின்றது.

மத்திய கிழக்கில் சமாதானம் வந்துவிட்டால் முஸ்லிம் உலகில் அமெரிக்காவின் ஸ்தானம் உயர்ந்துவிடும் ஆனால் இஸ்ரேலின் புதிய நிலைப்பாடுகள் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினைக்கு முடிவுகாணத் தடையாகவுள்ளது. அமெரிக்கா இதனால் கவலையடைந்துள்ளது.

சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

27-saniamirza.jpgடென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.
 
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.  சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
 
சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சானியா மிர்சா  சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.
 
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர். சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.

புதிய ரக ராடர் விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு

iair-force.jpgபுதிய ரக ராடர் விமானம் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. இஸ்ரேலில் வடிவமைக்கப்பட்ட இந்த ரேடர் விமானம், ரஷ்யாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தை கொண்டு 500 கி.மீ., தூரம் வரையில் கண்காணிப்பில் ஈடுபட முடியும் என்று தெரிகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி முறைப்படி விமானப் படைக்கு அர்ப்பணித்தார். 

28 வயதில் மத்திய அமைச்சரான இளம்பெண்

agatha_sangma.jpgமன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகதா சங்மா (28),  மிகக் குறைந்த வயதில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ.சங்மாவின் மகள்தான் இவர். மேகாலாயாவில் உள்ள துரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர் அகதா.

ராணுவ வாகனம் மீது தாக்குதல்: மேலும் 6 பேர் கைது

arrest.jpgகோவை அருகே ராணுவ வாகனம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதாகக் கூறி கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் கடந்த 2-ம் தேதி பயிற்சி முடித்த வீரர்களை ஏற்றி வந்த ராணுவ வாகனங்கள் மீதுசிலர் தாக்குதல் நடத்தினர்.

போலீசார் வழக்கு பதிந்து பெரியார் தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 35 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

ஸ்டாலினு‌க்கு துணை முத‌ல்வ‌ர் பத‌வி கொடு‌த்தது ஏ‌ன்- கருணா‌நி‌தி ‌விள‌‌க்க‌ம்

stalin-karuna.jpgஇது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி கூட்டத்திற்கு சென்றதாலும், வேறு சில மண விழாக்களில் பங்கேற்றதாலும் மீண்டும் உடல் நலிவுற்று, திரும்பவும் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. தேர்தல் பிரசாரக் கூட்டங்களைத் தவிர்க்கவும் ஒரு சூழ்நிலை உருவானதை அனைவரும் அறிவர்.

இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப்பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப்பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

எனவே இந்தப் பணிகளை நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இருவருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்படுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பிரெஞ்ச் ஓபன்-சானியா ஜோடி வெற்றி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங் ஜோடி, துருக்கியின் சேனக்லு, பெல்ஜியத்தின் யானினா ஜோடியை சந்தித்தது.

இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 எனவும், இரண்டாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றியது. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் உறுதி வழங்குகிறார் பிரதிக் கல்வி அமைச்சர்

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மௌலவி ஆசிரியர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமென மீண்டும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், ஓரிரு மாதங்களுக்குள் இந்த நியமனங்களை வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். அமீரின் அழைப்பை ஏற்று பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் கடந்த திங்கட் கிழமை கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அவர் உலமாக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக மௌலவிமார்களினுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மௌலவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மௌலவிகள், மௌலவியாக்கள் பெருமளவில் கலந்துகொண்ட இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான உறுதிமொழியை அவர் வழங்கினார்.

பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த இருவார காலத்திற்கு முன் கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்தியதையடுத்து அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேசிய பாடசாலைகளுக்கான 1500 ஆசிரியர்கள் நியமனமும் தேசிய பாடசாலைத் தொண்டர் ஆசிரியர்கள் 206 பேருக்கான நியமனமும் வழங்கப்படவிருக்கின்றது. இதேவேளை, மௌலவி ஆசிரியர் விண்ணப்பதாரிகள் 460 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலும் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் நிச்சயம் வழங்கப்படும் என்றார்.

பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.சிறீகாந்த், மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோரும் உரையாற்றினர். மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.அமீர், பிரதி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.எம். புஹாருடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஊவா மாகாணசபை இன்று கலைக்கப்படும்

sri-lanka.jpgஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வரையில் ஊவா மாகாணசபையைக் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தி மெத்திகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். இம்மாகாணசபையின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகின்றது.

ஊவா மாகாணசபைக்கான இறுதித் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. இது இம்மாகாணத்துக்கான நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.