கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

5-வது ஒரு நாள்: பாகிஸ்தான் வெற்றி

kumar.jpgஇலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இலங்கை 147 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை தொடரை 3- 2 என்று கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் யூனிஸ்கான் 74 ரன்களும், மிஸ்பா உல்-ஹக் 73 ரன்களும் முகமது யூசுப் 43 ரன்களும், நவீத் உல்-ஹசன் 33 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் சரிவு ஆரம்பமானது. அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்குள் 8 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆமீரும், நவேது உல் ஹஸனும் முறையே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு கண்டம்பி (42 ரன்), பண்டாரா (31 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடியதால் இலங்கை அணியால் மூன்று இலக்க ஸ்கோரை தாண்ட முடிந்தது. முடிவில் 34.2 ஓவர்களில் இலங்கை அணி 147 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி தழுவியது.

132 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர், நவீத் உல்-ஹசன் தலா 4 விக்கெட்டுகளும், அப்ரிடி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தான் வீரர் நவீத் உல்-ஹசன் ஆட்டநாயகன் விருதினையும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா (தொடரில் 9 விக்கெட் எடுத்துள்ளார்) தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

ஈஎன்டிஎல்எப் இந்தியப் பிரதமரை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பாக முறையிட்டுள்ளது : வி அருட்செல்வன்

Indiain PM Manmohan Singhஈழம் தேசிய ஜனநாயக முன்னணித் (ஈஎன்டிஎல்எப்) தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓகஸ்ட் 7ல் சந்தித்தார். இந்தச் சந்திப்பினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற செயலருமான இரா. அன்பரசு ஏற்பாடு செய்திருந்தார். அன்பரசு இச்சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

‘இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள வரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும்” என்று ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமரிடம் கோரி உள்ளார்.

இச் சந்திப்பின் போது பின்வரும் கோரிக்கைகளை ஈஎன்டிஎல்எப் முன்வைத்தது.

(01) ‘இந்திய – இலங்கை’ ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) இலங்கை அரசு ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை அனுபவரீதியாக நாங்கள் கண்டுள்ளோம். எனவே இந்தியா அமைதிப் படையை அனுப்புவதன் மூலமாகத்தான் ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியும். இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாதப்பட்சத்தில் இந்தியா ஐ.நா.வின் அமைதிப்படையை அனுப்பும்படி ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும்.

(03) இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோருகிறோம்.

(04) வடக்கு மாகாணத்தில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றரை லட்சம் தமிழர்களை நிபந்தனை எதுவும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் தங்களது பகுதியில் குடியமர இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

(05) தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய கல்வி அறிவு இல்லாமலும்;இ தொழிற்பயிற்சி பெறாமலும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வியும்இ தொழில்; வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

(06) புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தியாவில் ஒரு மகாநாடு நடத்துவதற்கு இந்திய அரசும்இ தமிழக அரசும் அனுமதி வழங்கவேண்டும்.

இதற்க்கு பதிலித்த இந்தியா பிரதமர் ‘வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தாக ஈஎன்டிஎல் தெரிவித்துள்ளது.
ஓகஸட் 7; நடைபெற்ற சந்திப்பின் போது இந்தியப் பிரதமர்இ ஈ.என்.டி.எல்.எப் க்கு கீழ்கண்டவாறு உறுதிமொழியழித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்து உள்ளது.

* இந்திய-இலங்கை ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

* வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாங்கள் 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். மேலும் அதற்கான உதவித் தொகைகளை கொடுப்போம். மீளக்குடியேற்றங்களையும் நேரடியாக அவதானித்து வருகிறோம்.

* தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான கல்வியும்இ தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும்.

* நிச்சயமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமான ஒரு நல்லத் தீர்வினை இந்தியா ஏற்படுத்திக் கொடுக்கும்.

* புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைப்பதற்கான மாநாட்டிற்கு இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களிடம் கலந்து பேசி அதற்கான ஆவணம் செய்யப்படும்
என்ற உறுதிமொழிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்  ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரக்கு வழங்கி உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சங்கரி ஐயா, தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்! : த ஜெயபாலன்

Anandasangaree V._._._._._.
”சங்கரி ஐயாவுக்கு எனது பகிரங்க 75வது பிறந்தநாள் வாழ்த்து மடல்”  என்ற தலைப்பில் யூன் 15 2008ல் எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரையின் சாரம்சத்தின் அடிப்படையில் அதன் தலைப்பு மாற்றப்பட்டு இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது.
._._._._._.

சங்கரி ஐயா வணக்கம்.

இன்று யூன் 15 (2008), உங்கள் 75வது பிறந்த தினத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு என் குடும்பத்தில் எல்லோரும் நலம். உங்களுக்கும் அவ்வாறே என்று நம்புகிறேன். ஐயா நீங்கள் கடிதம் எழுதுவதில் படுபிசியாக இருப்பது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற வாசகர்களையும் படுபிசியாக வைத்திருக்கிறீர்கள். நிற்க.

ஐயா 14 மே 1976 அன்று நீங்களெல்லாம் வட்டுக்கோட்டையில் கூடி ஒரு தீர்மானம் போட்டியல், அது உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். இதுவொரு பகிரங்கக் கடிதம் என்ற படியால மற்றவைக்கும் விளங்குவதற்காக ”….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவால் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.”’ இது தான் ஐயா நீங்களும் உங்கள் கட்சியும் எடுத்த தீர்மானம்.

ஐயா நீங்கள் ”இது ஒரு ரக்ரிகல் மூவ் (tactical move)” என்றும் ”இது ஒரு நியாயமான தீர்வாக உங்களுக்கு படவில்லை” என்றும் தேசம் சஞ்சிகைக்கு 2006 நவம்பரில் அளித்த பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தம்பிக்கு இன்னும் இந்த விசயம் புரியவில்லை. அல்லது புரிந்துகொண்டாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டது, இவ்வளவிற்கும் பிறகு எப்படி மக்கள் முன் வந்து அதை ஒத்துக்கொள்வது.

1980க்களின் நடுப்பகுதியில் பிரபாகரனிடம் இந்திய உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த சந்திரன், ‘தமிழீழத்தை கைவிடலாமே’ என்று கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் ‘என்னை நம்பி 120 பெடியள் உயிரை விட்டுள்ளார்கள்’ என்று பதில் சொல்லியதாக, அண்மையில் லண்டன் வந்திருந்த சந்திரன் தெரிவித்திருந்தார். இன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் மட்டும் 20,000க்கும் அதிகமான போராளிகள் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பல மடங்கு மக்கள் உயிரிழந்து உள்ளனர். உள்நாட்டு யுத்தம் தொடர்கிறது.

1976ல் இந்த தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்ட மாநாட்டை சுற்றியுள்ள மதில்சுவர்களில் ‘தமிழ் முதலாளி தமிழீழம் கேட்கிறான்’ என்பது போன்ற கூட்டணியின் தமிழீழக் கோசத்திற்கு எதிரான சுவரொட்டிகளை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி ஒட்டியது. தமிழீழம் சாத்தியமா? இல்லையா? என்ற வாதம் யாழ்ப்பாணமெங்கும் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டணியின் தமிழீழ கோசத்தை எதிர்த்தவர்கள் மிகச் சிறுபான்மையினரான இடதுசாரிகள். அவர்களது அரசியல் எதிர்வு கூறல் இன்று யதார்த்தமாகிவிட்டது.

ஐயா உங்களுடையதும் உங்கள் கட்சியினதும் அரசியல் தவறுகளுக்கு தமிழ் மக்கள் செலுத்துகின்ற விலை மிக மிக அதிகம். ”நாங்களோ போய் அடிபடச் சொன்னாங்கள், டக்ளஸ் தேவானந்தாவைப் போல் எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை” என்று நீங்கள் சொல்லலாம். ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் உங்கள் முகம் முழுக்க இரத்தக்கறை இருப்பதை நீங்கள் காணவில்லை. தமிழீழக் கோசம் போட்டு உங்களால் உசுப்பி விடப்பட்ட ஆயிரம், ஆயிரம் இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள நாடி, நரம்புகளைக் கீறி இரத்தத் திலகம் இட்டார்களே. அதில் எனது சொந்த சகோதரனும் ஒருவன். 25 வயதிலேயே அவனும் கொல்லப்பட்டு 20 வருடங்கள் கடந்துவிட்டது. அந்த இளைஞர்களின் இரத்தக் கறைகளை நான் உங்கள் முகத்தினில் காண்கிறேன் ஐயா.

ஐயா உங்களுடைய அரசியல் வாழ்க்கை 1950க்களில் இடதுசாரி அரசியலிலேயே ஆரம்பித்தது. 1965ல் தேர்தலில் தோல்வியடையும் வரை நீங்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிர்கள். பிறகு கொங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1970ல் பாராளுமன்றம் சென்றீர்கள் பிற்பாடு சமஸ்டிக்கட்சியில் 1972ல் இணைந்து கொண்டிர்கள். அது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழீழம் கேட்டது வரலாறு. இன்று வளர்த்த கிடாய் மார்பினில் பாய்ந்தது போல் உங்களதும் கூட்டணியினதும் நிலை.

சங்கரி ஐயா, அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்ட’ நீஙகள் இன்று செய்கின்ற அரசியல் என்ன? நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாதது உள்முரண்பாடு. ஒரு விபத்து. சம்பந்தன் ஐயாவின் சதியும். அதற்கு அப்பால் கொள்கை வேறுபாடு எதுவும் இருக்க நியாயம்மில்லை. எழுபதுக்களின் நடுப்பகுதியில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கிய இளைஞர் படையணி அடியாள் குழுக்கள் தான், நீங்கள் இன்று கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் டக்ளஸ், பிரபாகரன் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய இளைஞர் தலைவர்கள். யாழப்பாண மாநகரசபையை அபிவிருத்தி செய்த அல்பேட் துரையப்பாவை கூட்டணி தனது சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் பெயரால் பழிவாங்கியது. இது இன்றும் தொடர்கிறது. இன்னும் தொடரும் நிலையே உள்ளது.

ஐயா கூட்டணி துவக்கு தூக்காத புலி. புலி துவக்கு தூக்கிய கூட்டணி என்றதை மறந்திடாதைங்கோ.

‘காங்கரஸ் காரன் சட்டை போடாமல் இருந்தாலும் இருப்பானே தவிர பதவி இல்லாமல் இருக்க மாட்டான்’ என்பது இந்திய அரசியல் வழக்கு. நீங்கள் ஆடும் அரசியல் சதுரங்கத்தை அரசியலில் அரிவரி தெரிந்தவர்களே புரிந்துகொள்வார்கள். தென்னையில ஏறியாச்சு தேங்காயை (சமஸ்டி) பிடுங்கிறதா? இல்லையா? என்று நீங்கள் விட்ட றீல், பிறகு கிழக்கு தேர்தலில் முக்கூட்டணி. ஆளுநர் பதவிக்கு ஆசையில்லை என்று அறிக்கை விடுற மாதிரி விடுறதும், மற்றையவை கேக்கிற மாதிரி கேக்கிறதும், பிறகு எடுக்கிற மாதிரி எடுக்கிறதும் என்னையா விளையாட்டு. இன்றைக்கு என்ன ஆச்சு உங்கள் அரசியல்?

டக்ளஸ்க்கு கடிதம் எழுதி இருக்கிறீங்கள் ஐயா. டக்ளசை அம்பலப்படுத்துவது சரி. அது அதுக்கு என்று ஒரு நேரகாலம் இருக்கு. உங்களுக்கு பதவி வழங்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் எழுதிய கடிதம் அதில் இருந்த உண்மைகளையும் வலு இல்லாமல் செய்துவிட்டது. ஐயா சின்ன வயதில பள்ளிக் கூடத்தில் பெடியல் வாங்குக்கு சண்டை பிடித்து ரீச்சரிட்டை கோள்மூட்டுவாங்கள் தெரியுமோ? அதுக்கும் நீங்கள் செய்ததுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

ஐயா தமிழ் சமூகத்தில் தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் சராசரியிலும் அதிகம். பரீட்சையில் தோல்வி, காதல் தோல்வி, குடும்பத்தில் தோல்வி என்று பல தோல்விகளுக்காக தமிழர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ஒரு கடித்தையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வார். நான் அறிந்தவரை யாரும் அரசியல் தோல்விக்காக தற்கொலை செய்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதிய கடிதங்கள் உங்கள் அரசியல் வாழ்வின் தற்கொலையாகவே இருக்கிறது.

Anandasangaree_UNESCO_Prizeபெரும்பாலும் ஒருவர் தனது வாழ்வின் உச்சநிலையில் இருக்கும் போதே ஒய்வுபெற விரும்புவார். அப்படிச் செய்வதன் மூலம் அவர்களது அந்த வரலாறு அந்த உச்சநிலையை உறுதியாக பதிவு செய்துகொள்ளும். அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. யுனஸ்கோ விருது வழங்கப்பட்டதும் அதனைப் பெற்றுக்கொண்டு நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்திருக்க வேண்டும். அரசியல் சாராது சமாதானத்திற்கு மட்டும் குரல் கொடுப்பவராக போராடியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள், பலர் கூறியும் அந்த யோசனையைத் தட்டிக்கழித்துவிட்டிர்கள். இன்று நீங்களே உங்கள் மீது சேற்றை வாரியிறைத்து இருக்கிறீர்கள்.

இறுதியாக ஐயா, தயவு செய்து நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நல்லது.

ஐயா, மீண்டும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
த ஜெயபாலன்

15 யூன் 2008

 இக்கட்டுரை தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு :

சங்கரி ஐயாவுக்கு எனது 75வது ஆண்டு பகிரங்க பிறந்தநாள் வாழ்த்து மடல் : த ஜெயபாலன் : http://thesamnet.co.uk/?p=1431

அண்ணன் ஜெயபாலனிற்கு கூட்டணித் தம்பி எழுதும் பதில் : எஸ் அரவிந்தன் (தவிகூ லண்டன் கிளை) : http://thesamnet.co.uk/?p=1491

ஆனந்தசங்கரி – டக்ளஸ் மோதல் புலிகள் மீண்டும் பலம்பெறுவதற்கே உதவும் : குரு : http://thesamnet.co.uk/?p=1430

”வேற்றுமைக்குள் ஒற்றுமைதான் தேவையானது.” அண்ணன் சங்கரிக்கு தம்பி டக்ளஸின் அன்புக் கடிதம் : http://thesamnet.co.uk/?p=1368

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பற்றி ஆனந்தசங்கரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய கடிதங்கள் : http://thesamnet.co.uk/?p=1272

ஆனந்தசங்கரி ஜயா, ஆளுனர் பதவிக்கு அலைவது மெய்யா? : ஆர் புதியவன் : http://thesamnet.co.uk/?p=578

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத கூட்டணியினர் வானம் ஏறி வைகுண்டம் போகினமாம்…….” ரி கொன்ஸ்ரன்ரைன் : http://thesamnet.co.uk/?p=176

பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்

09-thiruvalluvar.jpgபெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார். விழா மேடையில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்கினார்.

முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் விழாவில் பங்கேற்றார். அவருக்கு விநாயகர் சிலையை முதல்வர் எதியூரப்பா பரிசளித்தார். சில கன்னட அமைப்புகள் விடுத்த பந்த் அழைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இயல்பு நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 45 உதவி போலீஸ் கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையி்ல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவை சுற்றியும், விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவையொட்டி எம்.ஜி.ரோடு, அல்சூர், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழர்கள், திமுகவினர் குவிந்தனர். இவர்களது வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிலை திறப்பை எதிர்த்து நகரின் சில இடங்களில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மல்லேஸ்வரம், மூடுல்பாளையா உள்ளிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். மத்திகரே பகுதியில் சிலர் கைகளை பிளேடால் அறுத்து ரத்தத்தை எடுத்து சிலை திறப்புக்கு எதிராக பேப்பரில் எழுதி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஏற்பாடுகளையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு நேரில் வந்து பார்வையிட்டார். சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்த கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்

09-rahman.jpgஎன் மகன் ஆலிம் நிச்சயம் தமிழ்ப் படத்திலும் பாடுவான், என்று இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூறினார்.  சரிகம ஆடியோ நிறுவனம், ‘ஊலலலா’ எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, இந்த ஆல்பத்தில் பாடியவர்களுக்கும், இசையமைத்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒற்றுமையாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள், என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: உங்கள் மகன் ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் பாடியிருக்கிறான். அவனை தமிழ் படத்திலும் பாட வைக்கும் எண்ணம் இருக்கிறதா?

என் மகன் ஆலிம் ரஹ்மானுக்கு ஆறரை வயது ஆகிறது. இப்போதுதான் இசை கற்று வருகிறான். ஹாலிவுட் படத்தில், ஒரு பாட்டு பாடியிருப்பது உண்மைதான். அடுத்து தமிழ் படத்திலும் அவனை பாட வைக்கும் எண்ணம் இருக்கிறது. நிச்சயமாக தமிழ் படத்தில் பாடுவான், என்றார் ரஹ்மான்.

நிகழ்ச்சியில் சரிகம நிறுவனத்தின் பிஆர் விஜயலட்சுமி, கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிகில் முருகன் செய்திருந்தார்

சென்னையில் தமிழர் பிரகடன பேரணி

0-pazha-nedumaran.jpgஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனப் பேரணி சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20-ந்தேதி நடத்தப்படுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை செயல்படுத்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்திருந்தது. நாங்கள் சுவாமிநாதனைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறியபின்னர் அவர் இலங்கை செல்வதை தவிர்த்து விட்டார்.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்றார் நெடுமாறன்.

ஊவா மாகாணத்தில் ஆளும் கட்சிக்கு வரலாற்று வெற்றி : ஆளும் கட்சிக்கு 25ஆசனங்கள் எதிர்கட்சிகளுக்கு 09ஆசனங்கள் மட்டுமே. – அமீன்

upfa-1.jpgஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 814 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 23 கட்சிகளிலும், ஏழு சுயேச்சைக் குழுக்களிலுமாக 600 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இதில் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

பதுளை மாவட்டத்தில் 5,75,814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இந்த மாவட்டத்தில் 14 கட்சிகளும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாக 432 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுள் 21 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர்.

மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். நான்கு கட்சிகளிலும்இ இரண்டு சுயே ச்சைக் குழுக்களிலுமாக 168 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஊவா மாகண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 418,906 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பில் 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 129,144 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகளை பெற்றுள்ளதுடன்,மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது

விரிவான தேர்தல் முடிவு வருமாறு:

Badulla District

Mahiyangana Polling Division

United People’s Freedom Alliance 39909 73.68%
United National Party 12013 22.28%
People’s Liberation Front 1943 3.59%
Sri Lanka Muslim Congress 86 0.16%

Valid 54,168 95.39%
Rejected 2,615 4.61%
Polled 56,783 0.00%
Electors 85,562

Wiyaluwa Polling Division

United People’s Freedom Alliance 20433 70.30%
United National Party 7437 25.59%
People’s Liberation Front 564 1.94%
Up-Country Peoples Front 398 1.37%

Valid 29,065 92.44%
Rejected 2,378 7.56%
Polled 31,443 0.00%
Electors 48,231

Passara Polling Division

United People’s Freedom Alliance 23959 65.06%
United National Party 9736 26.44%
Up-Country Peoples Front 1855 5.04%
People’s Liberation Front 540 1.47%
Sri Lanka Muslim Congress 458 1.24%

Valid 36,825 92.11%
Rejected 3,156 7.89%
Polled 39,981 0.00%
Electors 60,002

Badulla Polling Division

United People’s Freedom Alliance 21386 60.89%
United National Party 12084 34.40%
People’s Liberation Front 628 1.79%
Up-Country Peoples Front 570 1.62%
Sri Lanka Muslim Congress 279 0.79%

Valid 35,125 95.88%
Rejected 1,508 4.12%
Polled 36,633 0.00%
Electors 51,468

Haliela Polling Division

United People’s Freedom Alliance 27088 67.32%
United National Party 10653 26.47%
Up-Country Peoples Front 1206 3.00%
People’s Liberation Front 728 1.81%
Democratic Unity Alliance 204 0.51%
Sri Lanka Muslim Congress 178 0.44%

Valid 40,240 93.05%
Rejected 3,006 6.95%
Polled 43,246 0.00%
Electors 63,124

Uva-Paranagama Polling Division

United People’s Freedom Alliance 24569 63.37%
United National Party 12036 31.50%
People’s Liberation Front 1525 3.93%
Up-Country Peoples Front 346 0.89%
Sri Lanka Muslim Congress 121 0.31%

Valid 38,768 94.31%
Rejected 2,337 5.69%
Polled 41,105 0.00%
Electors 59,472

Welimada Polling Division

United People’s Freedom Alliance 29431 65.93%
United National Party 11862 26.57%
Sri Lanka Muslim Congress 1840 4.12%
People’s Liberation Front 1114 2.50%
Up-Country Peoples Front 204 0.46%

Valid 44,643 94.55%
Rejected 2,572 5.45%
Polled 47,215 0.00%
Electors 68,937

Bandarawela Polling Division

United People’s Freedom Alliance 33702 67.21%
United National Party 12821 25.57%
Up-Country Peoples Front 1759 3.51%
People’s Liberation Front 819 1.63%
Sri Lanka Muslim Congress 766 1.53%

Valid 50,147 93.81%
Rejected 3,311 6.19%
Polled 53,458 0.00%
Electors 77,312

Haputale Polling Division

United People’s Freedom Alliance 26471 69.42%
United National Party 7765 20.36%
Up-Country Peoples Front 2760 7.24%
People’s Liberation Front 603 1.58%
Sri Lanka Muslim Congress 351 0.92%

Valid 38,130 92.11%
Rejected 3,268 7.89%
Polled 41,398 0.00%
Electors 60,706

Postal Votes – Badulla District

United People’s Freedom Alliance 12121 80.54%
United National Party 2228 14.80%
People’s Liberation Front 543 3.61%
Up-Country Peoples Front 107 0.71%
Sri Lanka Muslim Congress 29 0.19%

Valid 15,049 98.02%
Rejected 304 1.98%
Polled 15,353
Electors 16,043

Moneragala District

Bibila Polling Division

United People’s Freedom Alliance 36499 81.37%
United National Party 6503 14.50%
People’s Liberation Front 1699 3.79%

44,857 94.65%
Rejected 2,533 5.35%
Polled 47,390 0.00%
Electors 74,692

Moneragala Polling Division

United People’s Freedom Alliance 49420 82.35%
United National Party 9187 15.31%
People’s Liberation Front 1208 2.01%

Valid 60,015 94.84%
Rejected 3,268 5.16%
Polled 63,283 0.00%
Electors 96,386

Wellawaya Polling Division

United People’s Freedom Alliance 66842 79.98%
United National Party 14026 16.78%
People’s Liberation Front 2491 2.98%

Valid 83,570 95.52%
Rejected 3,922 4.48%
Polled 87,492 0.00%
Electors 129,564

Postal Votes – Moneragala District

United People’s Freedom Alliance 7076 87.28%
United National Party 793 9.78%
People’s Liberation Front 234 2.89%

Valid 8,107 97.05%
Rejected 246 2.95%
Polled 8,353
Electors 8,899

Final District Result – Moneragala District

United People’s Freedom Alliance 159837 81.32% 9
United National Party 30509 15.52% 2
People’s Liberation Front 5632 2.87% 0
Jathika Sangwardena Peramuna 226 0.11% 0
United Socialist Party 153 0.08% 0
Eksath Lanka Maha Sabha 62 0.03% 0
Independent Group 3 55 0.03% 0
Independent Group 1 22 0.01% 0
Patriotic National Front 20 0.01% 0
Independent Group 2 13 0.01% 0
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya 10 0.01% 0
Sri Lanka Progressive Front 10 0.01% 0

Valid 196,549 95.17%
Rejected 9,969 4.83%
Polled 206,518 0.00%
Electors 300,642

Elections to Provincial Councils in Uva Province Council Results
Badulla & Moneragala

Party Name Votes % Seats
United People’s Freedom Alliance 418906 72.39%25*
United National Party 129144 22.32%7
People’s Liberation Front 14639 2.53% 1
Up-Country Peoples Front 9227 1.59% 1
Sri Lanka Muslim Congress 4150 0.72% 0
United National Alliance 503 0.09% 0
Democratic Unity Alliance 481 0.08% 0
Jathika Sangwardena Peramuna 473 0.08% 0
United Socialist Party 429 0.07% 0
Independent Group 4 – Badulla 158 0.03% 0
Eksath Lanka Maha Sabha 118 0.02% 0
Independent Group 3 – Badulla 89 0.02% 0
Jana Setha Peramuna 67 0.01% 0
Patriotic National Front 64 0.01% 0
Independent Group 3 – Moneragala 55 0.01% 0
Independent Group 2 – Badulla 51 0.01% 0
Sri Lanka Progressive Front 41 0.01% 0
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya 40 0.01% 0
Independent Group 1 – Badulla 39 0.00% 0
Independent Group 1 – Moneragala 22 0.00% 0
Independent Group 2 – Moneragala 13 0.00% 0

Valid 578,709 94.39%
Rejected 34,424 5.61%
Polled 613,133 0.00%
Electors 875,456

 

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியும் வவுனியாவில் ரிஎன்எயும் வெற்றி

election000.jpg யாழ்ப்பாணத்தில் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியாகவும் தேர்தல் நடைபெற்ற போதிலும் வாக்களித்தவர்களின் பங்களிப்பு குறைவானதாகவே காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியினர் முழுமையான வெற்றி பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படியும் அமைதியாகவும் நடைபெற்றதாகவும் வவுனியாவில் ரிஎன்ஏ 148 வாக்குகளால் 7ஆசனங்களையும், புளொட் 3 ஆசனங்களையும், இதர கட்சிகள் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

வவுனியாவில் அளிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளில் ரிஎன்ஏ 86 வாக்குகளையும், புளொட் 65 வாக்குகளையும், அரசஆதரவு கட்சிகளின் கூட்டணி 25 வாக்குகளையும், முஸ்லீம் காங்கிரஸ் 2 வாக்குகளையும் பெற்றிருந்தது தெரிந்ததே. இதே விகிதாசாரத்தில் மக்கள் வாக்களித்துள்ளதும்; மக்கள் அரசை திட்டவட்டமாக புறம்தள்ளியே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளததுமாக மக்கள் பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

Jaffna Municipal Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     United People’s Freedom Alliance  10602      50.67%      13
 
     Ilankai Tamil Arasu Kachchi  8008      38.28%     8
 
     Independent Group 1  1175       5.62%      1
 
     Tamil United Liberation Front  1007       4.81%     1
 
     United National Party  83       0.40%      0
 
     Independent Group 2     47   0.22%      0
 
Valid 20,922     93.90%
Rejected 1,358        6.10%
Polled 22,280        0.00%
Electors      100,417

Vavuniya Urban Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     Ilankai Tamil Arasu Kachchi    4279     34.81%      5 *
 
     Democratic People’s Liberation Front     4136     33.65%     3
 
     United People’s Freedom Alliance     3045    24.77%      2
 
     Sri Lanka Muslim Congress      587     4.78%         1
 
     United National Party     228     1.85% 0
 
     Sri Lanka Progressive Front  10     0.08%     0
 
     Independent Group 1      6        0.05% 0
 
     Independent Group 3     1       0.01% 0
 
     Independent Group 2      0     0.00% 0
 
Valid 12,292       95.66%
Rejected 558       4.34%
Polled 12,850      0.00%
Electors 24,626

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பு

election000.jpgவவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், நண்பகல் வரையில் 35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காலை முதல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சீராக நடைபெற்றதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், பட்டாணிச்சூர், புளியங்குளம், தாண்டிக்குளம், கற்குழி உட்பட்ட சில பகுதிகளில் மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்களிடையே சிறுசிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், சில கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஒன்றில் தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் ரீ.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலகு வெற்றி

cricket1.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய 4 வது போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பமானது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார்.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் மற்றும் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடி விலக்கப்பட்டிருந்த இம்ரான் நமர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக அழைக்கப்பட்டு விளையாடினார். இம்ரான் நமர் 29 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி உட்பட 23 ஓட்டங்கள் பெற்றிருந்த போது துஷாரவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.

மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கம்ரான் அக்மல் 64 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி உட்பட 57 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மாலிங்க பண்டாரவின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்து சென்றார். பின்னர் வந்த முகம்மது யூசுப் 12 பந்துகளை எதிர்கொண்டு 6 ஓட்டங்களைப் பெற்று இருந்தபோது மென்டிஸின் பந்து வீச்சில் ஜயவர்த்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார். இப்போட்டியில் உமர் அக்மால் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் தனது கன்னி சதத்தைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

322 வெற்றி இழக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி  36.1 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தரங்க 80 ஓட்டங்களையும், சங்கக்கார  39 ஓட்டங்களையும் பெற்றனர்.

PAKISTAN
Kamran Akmal b Bandara     57
Imran Nazir b Thushara    23
Younus Khan c Kapugedera b Thushara                  89
Mohammad Yousuf c Jayawardene b Mendis   6
Misbah-ul Haq lbw b Bandara                    9
Umar Akmal not out                  102
Shahid Afridi not out                     2
Extras: (b4, w29)                    33
Total (for 5 wkts, 50 overs)                  321

Did not bat: Rana Naved, Mohammad Aamer, Rao Iftikhar, Saeed Ajmal.
Fall of wickets: 1-61 (Nazir), 2-106 (Kamran Akmal), 3-115 (Yousuf),
4-130 (Misbah), 5-306 (Younus).

Bowling: Malinga 10-0-79-0 (w22), Thushara 10-0-74-2 (w7), Mathews 8-0-48-0,
Bandara 10-0-44-2, Mendis 10-0-56-1, Kandamby 2-0-16-0.

SRI LANKA
U. Tharanga c Kamran b Iftikhar                  80
M. Jayawardene c Aamer b Naved     19
K. Sangakkara c Nazir b Iftikhar                 39
T. Kandamby c Younus b Ajmal     15
C. Kapugedera c Naved b Ajmal     8
T. Samaraweera c Kamran b Iftikhar    2
A. Mathews st Kamran b Afrid   8
M. Bandara c Misbah b Afridi    0
T. Thushara b Iftikhar    0
L. Malinga c Misbah b Iftikhar   0
A. Mendis not out     0
Extras: (lb1, w3)    4
Total(all out, 36.1 overs)  175

Fall of wickets: 1-36 (Jayawardene), 2-101 (Sangakkara), 3-130 (Kandamby),
4-157 (Kapugedera), 5-159 (Samaraweera), 6-166 (Tharanga),
7-167 (Bandara), 8-171 (Thushara), 9-175 (Mathews), 10-175 (Malinga).

Bowling: Aamer 5-0-34-0 (w1), Naved 7-0-46-1, Iftikhar 8.1-0-30-5,
Afridi 9-0-40-2 (w1), Ajmal 7-0-24-2 (w1).