5-வது ஒரு நாள்: பாகிஸ்தான் வெற்றி

kumar.jpgஇலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இலங்கை 147 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை தொடரை 3- 2 என்று கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் யூனிஸ்கான் 74 ரன்களும், மிஸ்பா உல்-ஹக் 73 ரன்களும் முகமது யூசுப் 43 ரன்களும், நவீத் உல்-ஹசன் 33 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் சரிவு ஆரம்பமானது. அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்குள் 8 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆமீரும், நவேது உல் ஹஸனும் முறையே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு கண்டம்பி (42 ரன்), பண்டாரா (31 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடியதால் இலங்கை அணியால் மூன்று இலக்க ஸ்கோரை தாண்ட முடிந்தது. முடிவில் 34.2 ஓவர்களில் இலங்கை அணி 147 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி தழுவியது.

132 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர், நவீத் உல்-ஹசன் தலா 4 விக்கெட்டுகளும், அப்ரிடி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தான் வீரர் நவீத் உல்-ஹசன் ஆட்டநாயகன் விருதினையும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா (தொடரில் 9 விக்கெட் எடுத்துள்ளார்) தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *